search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "idol smuggling case"

    • சிலைகள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கினர்.
    • 7 பேரை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கும்பகோணம்:

    அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு 20 சாமி சிலைகள் மாயமானது. இந்த சிலைகள் மாயமானது குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் எந்தவித தகவலும் கிடைக்காததால் இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மாயமான சிலைகள் குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையில் சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்த சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டது தெரிய வந்தது.

    இந்த சிலைகள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கினர்.

    இதனைத்தொடர்ந்து இந்த சிலைகள் கடத்தலில் ஈடுபட்டதாக சிலை கடத்தல் மன்னன் அமெரிக்காவில் வசித்து வந்த சுபாஷ் சந்திர கபூர் (வயது 73), சென்னையை சேர்ந்த சஞ்சீவி அசோகன் (60), பாக்கியகுமார் (50), மதுரையை சேர்ந்த மாரிச்சாமி (65), ஸ்ரீராம் என்கிற சுலோகு (52), பார்த்திபன் (55), சிதம்பரத்தை சேர்ந்த பிச்சுமணி (60) ஆகிய 7 பேரை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதில் பிச்சுமணி அப்ரூவரானார். மீதம் உள்ள சுபாஷ் சந்திரகபூர், சஞ்சீவிஅசோகன், மாரிச்சாமி, பாக்கியகுமார், ஸ்ரீராம் (என்கிற) சுலோகு, பார்த்திபன் ஆகிய 6 பேர் மீதான வழக்கு கும்பகோணம் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இதில் ஒவ்வொரு கட்ட விசாரணையின்போதும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சர்வதேச சிலை கடத்தல் மன்னனான சுபாஷ் சந்திர கபூரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் இறுதிகட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

    இதற்காக சுபாஷ்சந்திரகபூர் உள்பட 6 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் நேற்று கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். மாலையில் நீதிபதி சண்முகப்பிரியா தீர்ப்பை வாசித்தார்.

    இதில் குற்றம் நிரூபிக்கப்பட்ட சுபாஷ்சந்திரகபூர், சஞ்சீவி அசோகன், பாக்கியகுமார், மாரிச்சாமி, ஸ்ரீராம் என்கிற சுலோகு, பார்த்திபன் ஆகிய 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், சுபாஷ்சந்திரகபூருக்கு ரூ.4 ஆயிரமும், மீதமுள்ள 5 பேருக்கு தலா ரூ.8 ஆயிரமும் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி, சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #PonManickavel #IdolWing
    புதுடெல்லி:

    தமிழகத்தில் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் ஓய்வுபெறும் நேரத்தில், அவரை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது. இந்த உத்தரவை எதிர்த்தும், சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ததை எதிர்த்தும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிராக எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி. உள்ளிட்ட 66 போலீசார் உச்சநீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்தனர். 


    இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது, பொன் மாணிக்கவேல் எந்த சிறப்பான வேலையும் செய்யவில்லை என்றும், அவர் தன்னைத் தானே புகழ்ந்துகொண்டு இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்தது. மேலும், 2018ம் ஆண்டு நவம்பர் 30-ல் ஓய்வுபெற்ற பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் வழக்கை எவ்வாறு விசாரிக்க முடியுமா? என்றும் தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    பொன்.மாணிக்கவேல் தங்களது விசாரணையில் தலையிட்டு, கொடுமைப்படுத்துவதாக போலீசார் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிலைக் கடத்தல் வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையை பொன் மாணிக்கவேல் பிப்ரவரி 19-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், இந்த தமிழக அரசு மற்றும் போலீசார் தொடர்ந்த வழக்குகளின் விசாரணையையும் பிப்ரவரி 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #PonManickavel #IdolWing
    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பணி நீடிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. #SC #PonManickavel
    புதுடெல்லி:

    தமிழக அரசின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பொன்.மாணிக்கவேல் தனது பணிக்காலத்தில் நூற்றுக்கணக்கான கோவில்களில் திருடு போன ஆயிரக்கணக்கான சிலைகளை மீட்டார்.

    குறிப்பாக ராஜராஜ சோழன் சிலையை மீட்டதும், சென்னையில் தொழில் அதிபர்கள் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட சிலைகளை மீட்டதும் சாதனையாக கருதப்படுகிறது. அவரது நடவடிக்கைக்கு சமூக வலைதளங்கள் மூலம் ஆன்மீக வாதிகள் ஆதரவு அளித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதியுடன் பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து அவருக்கு பதில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக அபய்குமார்சிங் நியமிக்கப்பட்டார்.


    இதற்கிடையே சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. மேலும் பொன்.மாணிக்கவேலின் சிறப்பான பணியை பாராட்டிய ஐகோர்ட்டு அவருக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு பணி நீடிப்பு வழங்கி உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது பொன்.மாணிக்கவேல் பணி நீடிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. ஏற்கனவே ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த யானை ராஜேந்திரன் பதில் அளிக்குமாறு கூறி விசாரணையை ஜனவரி மாதத்துக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். #SC #PonManickavel
    கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் இன்று காலை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #IGPonManickavel
    கும்பகோணம்:

    தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் பழமை வாய்ந்த சிலைகள் மாயமானதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மாயமான சிலைகளை கண்டு பிடிக்கவும், சிலைகளின் தன்மைகள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து சிலைகள் கடத்தல் பிரிவு ஐ.ஜி.பொன். மாணிக்கவேல் தலைமையில் போலீசார் தஞ்சை பெரிய கோவிலில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மாமன்னன் ராஜராஜ சோழன் சிலை, அவரது மனைவி லோகமாதேவி சிலைகள் மீட்கப்பட்டன. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த சிலைகள் குஜராத் மாநில அருட்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டது.

    கோப்புப்படம்

    தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். சிலைகள் கடத்தலில் தீனதயாளன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட 10 பேரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னை தொழில் அதிபர் ரன்வீர்ஷா பங்களா வீட்டில் பூமிக்கடியில் புதைக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த சிலைகளை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து கடந்த மாதம் தஞ்சை பெரிய கோவில் மற்றும் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தொல்லியல் துறையினர் உதவியுடன் சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். இந்த கோவில்களில் இருந்த சிலைகளின் உலோக தன்மை, உயரம், எடை ஆகியவை ஆவணங்கள் படி சரியாக உள்ளதா? என்று நவீன கருவிகள் மூலம் சோதித்தனர். போலி சிலைகள் ஏதும் வைக்கப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் பொன். மாணிக்கவேல் இந்த மாதத்துடன் பணியில் இருந்து ஓய்வுபெறுகிறார். இதனால் அவர் இதுவரை சிலைகள் கடத்தல் வழக்கில் மேற்கொண்ட விசாரணை என்னவாகும்? என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொன். மாணிக்கவேலுக்கு , பதவியை நீடித்து ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கையும் விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு இன்று காலை 7.30 மணியளவில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருடன் வந்தார்.

    பின்னர் தன்னுடன் வந்த போலீசாரை வெளியே நிற்குமாறு கூறிவிட்டு அவர் மட்டும் தனியாக கோவிலுக்கு சென்றார். பின்னர் கோவிலில் இருந்த ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை சிலை, மற்றும் நாயன்மார்கள் சிலை, விநாயகர்சிலை, பஞ்சமூர்த்தி சிலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கோவில் ஊழியர்களிடமும் சிலைகள் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார்.

    சுமார் ஒருமணிநேரம் கோவில்களில் உள்ள சிலைகளை அவர் ஆய்வு செய்து விட்டு வெளியே வந்தார்.

    கும்பகோணம் கோவிலில் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #IGPonManickavel
    திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் சிலை கடத்தல் புகார் தொடர்பாக 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #IdolSmugglingCases
    சென்னை:

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயில் மூலவர் சிலை திருடப்பட்டிருப்பதாகவும், உற்சவர் சிலை, கோயிலின் பழங்கால பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்க ராஜன் நரசிம்மன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், 2012-ம் ஆண்டில் ஆகம விதிகளுக்குட்பட்டு ஸ்ரீரங்கம் கோவில் சீரமைப்பு பணிகளின் போது சிலைகள் சீரமைக்கப்பட்டது. ஆனால் சிலைகள் மாயமானதாக கூறும் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை. அனைத்து சிலைகளும் கோவிலில் தான் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    அதேபோல, பாரம்பரிய கட்டிடத்தை சிறப்பாக புதுப்பித்தற்காக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 2017-ம் ‘யுனஸ்கோ’ விருது வழங்கியிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், ஆகம விதிகளுக்குட்பட்டு தான் அதிகாரிகள் கோவிலுக்குள் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் கடவுகளுக்கும் தனி மனித சுதந்திரம் இருப்பதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து, ஸ்ரீரங்கம் கோவிலில் சிலை கடத்தல் புகார் தொடர்பாகவும், ஆயிரம் கால் மண்டபத்தையும் ஆய்வு செய்து 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். #IdolSmugglingCases

    அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை காப்பாற்றவே சிலை கடத்தல் வழக்கை அரசு சிபிஐக்கு மாற்றம் செய்துள்ளது என்று முத்தரசன் கூறியுள்ளார். #Idolsmuggling

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் திருத்துறைப்பூண்டியில் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காவிரி பாசன மாவட்டங்களை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் வாயு, ஷேல் கேஸ் அதிகம் இருப்பதாகவும், அதனை எடுப்பதில் அரசு கொள்கையில் தங்களை மாற்றிக் கொள்ளாது என்றும் மத்திய அமைச்சர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    இதில் மாநில அரசு தனது எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவிக்காமல் மவுனம் சாதிப்பது கடும் கண்டனத்திற்குரியது. கோவில்களில் சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தலையிட்டு ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் தலைமையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. வெளிநாடுகளில் இருந்த சிலைகள் மீட்கப்பட்டது. அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் கடத்தலில் ஈடுட்டுள்ளதை கண்டுபிடித்து பலர் கைது செய்யப்ப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் அவரை செயல் படவிடாமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதில் அதிகாரிகளையும், அரசியல் வாதிகளையும் காப்பாற்றுவதற்கான நடவடிக்கையே.

    மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில் தூர் வாரும் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. இதனால் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ள அரசு நடவடிக்கை எடுக்காததால் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    சேலம் 8 வழிச்சாலையால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். எனவே உள்ளாட்சி தேர்தலை உடன் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று ஜெயக்குமார் கூறியுள்ளார். #Jayakumar #Idolsmuggling

    சென்னை:

    கிண்டியில் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்த பின் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. குற்றத்தை வெளிக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சிலை கடத்தல் விசாரிப்பு உள்நாடு முதல் வெளிநாடு வரை தொடர்பு இருப்பதால் சி.பி.ஐ.க்கு மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Jayakumar #Idolsmuggling

    தமிழக கோவில் சிலைகளை கடத்தும் கும்பலை பிடிக்கின்ற குழுவிற்கு தலைவரான ஐ.ஜி.பொன்மாணிக்கவேலிடமிருந்து வழக்கினை சி.பி.ஐ.க்கு மாற்றியிருப்பது துரதிஷ்டமானது என்று என்.ஆ.தனபாலன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கோவில் சிலைகளை கடத்தும் கும்பலை பிடிக்கின்ற குழுவிற்கு தலைவரான ஐ.ஜி.பொன்மாணிக்கவேலிடமிருந்து வழக்கினை சி.பி.ஐ.க்கு மாற்றியிருப்பது துரதிஷ்டமானது.

    மக்களின் சந்தேகங்களை போக்குவதற்காகவும், தமிழக அரசு மீதுள்ள களங்கத்தை போக்கிடவும், குற்றவாளிகளை அடையாளம் கண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் சாமி சிலைகளை மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வருவதற்காகவும் மீண்டும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு முழுமையான விசாரணையை தொடர்ந்திட அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க இரு நீதிபதிகள் கொண்ட தனி அமர்வை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Idolsmuggling #Highcourt
    சென்னை:

    தமிழகத்தில் புராதன மற்றும் பழமையான கோவில்களில் உள்ள சிலைகள் கடத்தப்பட்டது. இவற்றை, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கடத்தி, சர்வதேச கடத்தல் கும்பலிடம் விற்பனை செய்துள்ளது.

    இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன், ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்பு படையை உருவாக்கினார். பின்னர் கும்பகோணம் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை சிறப்பு கோர்ட்டாக அறிவித்தார். தமிழகம் முழுவதும் காணாமல் போன சிலைகள் குறித்து இந்த தனிப்படை விசாரிக்க உத்தரவிட்டார்.

    இந்நிலையில், சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க இரு நீதிபதிகள் கொண்ட அமர்வை நியமித்து உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோரை கொண்ட அமர்வை நியமித்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். 

    மேலும், சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் ஜூலை 25-ல் பட்டியலிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
    #IdolSmuggling | #HighCourt
    பழனி கோவில் சிலை மோசடியில் முன்னாள் இணை, துணை ஆணையர்களிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் வந்துள்ளதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    பழனி:

    பழனி முருகன் கோவிலில் உள்ள நவபாஷாண சிலை சேதம் அடைந்ததாக கூறி ஐம்பொன்னால் ஆன புதிய சிலை வைக்கப்பட்டது. இந்த சிலை அமைத்ததில் மோசடி நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் ஸ்தபதி முத்தையா, 2004-ம் ஆண்டு கோவில் இணை ஆணையராக இருந்த ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் இந்த சிலை மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக நகை மதிப்பீட்டாளர் உள்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தினர்.

    மேலும் டி.எஸ்.பி. கருணாகரன் தலைமையிலான போலீசார் கடந்த 2004-ம் ஆண்டு முதல் கோவிலில் பணியாற்றிய பல்வேறு அதிகாரிகள், ஊழியர்கள், குருக்கள், பணியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    மேலும் பழனி மலைக்கோவில், பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் உள்ள சிலைகள், அவற்றின் உண்மை தன்மை குறித்தும் சோதனை நடத்தப்பட்டது.

    சிலை மோசடியில் தொடர்புடைய முன்னாள் ஆணையர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க மதுரை ஐகோர்ட்டில் தடை ஆணை பெற்றுள்ளார். இந்நிலையில் டி.எஸ்.பி. கருணாகரன் தலைமையிலான போலீசார் இன்று மீண்டும் பழனி கோவிலுக்கு வந்தனர்.

    அவர்கள் இதற்கு முன் கோவில் இணை மற்றும் துணை ஆணையர்களாக பணியாற்றி வந்த அசோக், பாஸ்கரன், ராஜமாணிக்கம், சுதர்சன், மங்கையற்கரசி, மேனகா ஆகியோரிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.

    இதில் முன்னாள் உதவி ஆணையர் மேனகா கோவையிலும், மங்கையற்கரசி ராமேஸ்வரம் கோவிலிலும் பணிபுரிந்து வருகின்றனர். மற்ற அனைவரும் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர்.

    இவர்கள் பணிபுரிந்த காலங்களில் எந்தெந்த சிலைகள் புனரமைக்கப்பட்டது. புதிதாக வரவழைக்கப்பட்டதா? கும்பாபிஷேக விழா குறித்து நடந்த சர்ச்சை, சிலைகள் ஒப்படைப்பு செய்யப்பட்டபோது அதன் உறுதி தன்மை ஆராயப்பட்டதா? என கிடுக்கிபிடி கேள்விகள் கேட்கப்பட்டது. விசாரணை குறித்து அவர்கள் அனைவருக்கும் முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டதால் இன்று பழனி வந்திருந்தனர்.

    பழனி விருந்தினர் மாளிகையில் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதனால் சிலை மோசடியில் அடுத்து சிக்கப்போவது யார்? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



    ×