search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trichy Srirangam"

    • உத்தரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 4-ம் திருநாளான 19-ந்தேதி தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்தரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருவிழாவின் 8-ம் நாளான நேற்று முன்தினம் மாலை தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்திரவீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளுளினார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 5 மணிக்கு வந்தார்.

    காலை 5.15 மணிமுதல் காலை 6 மணிவரை ரதரோஹணம் (மகர லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6.30 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் நான்கு உத்திர வீதிகளில் வழியாக காலை 9.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர்.

    நாளை (25-ந்தேதி) சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 26-ந்தேதி மாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு மாலை 4 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வருகிறார். அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடை கிறார். வாகன மண்ட பத்தில் இருந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும்ப ல்லக்கில் புறப்பட்டு நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார்.

    திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் சிலை கடத்தல் புகார் தொடர்பாக 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #IdolSmugglingCases
    சென்னை:

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயில் மூலவர் சிலை திருடப்பட்டிருப்பதாகவும், உற்சவர் சிலை, கோயிலின் பழங்கால பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்க ராஜன் நரசிம்மன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், 2012-ம் ஆண்டில் ஆகம விதிகளுக்குட்பட்டு ஸ்ரீரங்கம் கோவில் சீரமைப்பு பணிகளின் போது சிலைகள் சீரமைக்கப்பட்டது. ஆனால் சிலைகள் மாயமானதாக கூறும் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை. அனைத்து சிலைகளும் கோவிலில் தான் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    அதேபோல, பாரம்பரிய கட்டிடத்தை சிறப்பாக புதுப்பித்தற்காக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 2017-ம் ‘யுனஸ்கோ’ விருது வழங்கியிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், ஆகம விதிகளுக்குட்பட்டு தான் அதிகாரிகள் கோவிலுக்குள் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் கடவுகளுக்கும் தனி மனித சுதந்திரம் இருப்பதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து, ஸ்ரீரங்கம் கோவிலில் சிலை கடத்தல் புகார் தொடர்பாகவும், ஆயிரம் கால் மண்டபத்தையும் ஆய்வு செய்து 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். #IdolSmugglingCases

    சமயபுரம் கோவில் முறைகேடு புகார் உரிய விசாரணை நடத்தாத ஸ்ரீரங்கம் கோவில் உதவி ஆணையர் ரத்தினவேலை சஸ்பெண்டு செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. #TrichySrirangam
    திருச்சி:

    தமிழகம் முழுவதும் சாமி சிலைகள் செய்ததில் பல கோடி மோசடி நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே கோவில் மோசடி புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தவில்லை என்று இந்த சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். அதுகுறித்த விபரம் வருமாறு:-

    108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலாகும். இங்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையராக பணியாற்றி வருபவர் ரத்தினவேல்.

    இதேபோல் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சியை அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டின் அனைத்து நாட்களிலும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு பக்தர்களில் பெரும்பாலானோர் தங்களது வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்தி கடனாகவும் முடி காணிக்கை செலுத்துகிறார்கள்.

    அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் முடி உரிய காலத்தில் டெண்டர் விடப்படும். அதேபோல் சமீபத்தில் நடந்து முடிந்த கும்பாபிஷேக பணிக்காக ஏராளமான மின்சாதன பொருட்கள் வாங்கப்பட்டன.

    மேலும் கட்டுமான பொருட்கள் வாங்கியதிலும் இந்து சமய அறநிலையத்துறைக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதில் அரசு உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    இந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஸ்ரீரங்கம் கோவில் உதவி ஆணையர் ரத்தின வேலை விசாரணை அதிகாரியாக அரசு நியமனம் செய்தது. இதற்காக விசாரணையை கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரத்தினவேல் தொடங்கினார்.

    அவர் பல்வேறு கட்டங்களாக கோவில் ஊழியர்கள், முடி காணிக்கை செலுத்தியதன் மூலம் பெறப்படும் வருவாய் எவ்வளவு, அந்த முடி யாருக்கு கொடுக்கப்படும், கோவிலில் பயன்படுத்தப்படும் மின் சாதன பொருட்கள் எங்கு, யாரின் பரிந்துரையின் பேரில் வாங்கப்பட்டன, கட்டுமான பொருட்கள் விநியோகம் செய்தது யார்? என விசாரணை நடத்தினார்.

    அதேபோல் இதற்கான டெண்டர் யார், யாருக்கு எந்த கால கட்டத்தில் வழங்கப்பட்டது என விசாரித்தார். ஆனால் இந்த விசாரணை எதுவுமே முறையாக நடத்தப்படவில்லை என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு தகவல் கிடைத்தது.

    மேலும் லாப நோக்குடனும், சுய நலத்துடனும், மோசடி பேர்வழிகளுக்கு உடந்தையாக விசாரணை நடத்தியதாகவும் ரத்தினவேல் மீது அடுக்கடுக்கான பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. மேலும் சில புகார்கள் உரிய ஆதாரத்துடன் பக்தர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் மூலம் இந்து சமய அறநிலையத்துறைக்கு அனுப்பப்பட்டன.

    அத்துடன் விசாரணை தொடர்பான உண்மை நிலையினை அரசுக்கு அறிக்கையாக அளிப்பதிலும் தன்னிச்சையாகவும், இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராகவும் அவர் செயல்பட்டுள்ளார்.

    இதன் எதிரொலியாக ரத்தினவேல் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவினை இந்த சமய அறநிலையத்துறை பிறப்பித்துள்ளது.

    ரத்தினவேலின் பணிக்காலம் நேற்று முன்தினம், அதாவது 31.7.2018 தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் அவர் அன்றைய தினத்தில் இருந்தே சஸ்பெண்டு செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    ×