என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபய்குமார் சிங்"

    • பத்து நாட்களுக்கும் மேலான தொடர்விடுப்பால், ஊழல் தடுப்பு பிரிவு டிஜிபி அபய்குமார் சிங் பொறுப்பு டிஜிபிக்கான பணிகளை கவனிப்பார்
    • கூடுதலாகத்தான் டிஜிபி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணிபுரிந்து வந்தவர் சங்கர் ஜிவால். இவர் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து டி.ஜி.பி அலுவலகத்தில் நிர்வாகப்பிரிவு டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த வெங்கட்ராமன் பொறுப்பு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார். 

    இந்நிலையில் நேற்று திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெங்கட்ராமனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

    இந்த உடல்நிலை குறைவு காரணமாக அவர் 15 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார். பொறுப்பு டிஜிபி மருத்துவ விடுப்பில் இருப்பதால் அபய்குமார் சிங்-க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பத்து நாட்களுக்கும் மேலான தொடர்விடுப்பால், ஊழல் தடுப்பு பிரிவு டிஜிபி அபய்குமார் சிங் பொறுப்பு டிஜிபிக்கான பணிகளை கவனிப்பார் என அரசு தெரிவித்துள்ளது. 

    அபய்குமார் சிங்கிற்கு கூடுதலாகத்தான் இந்த டிஜிபி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஊழல் தடுப்பு பிரிவையும் அவர் கவனித்துக்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெங்கட்ராமன் விடுமுறை முடிந்து திரும்பும்போது பணிகள் அவரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஐ.ஜி பொன் மாணிக்கவேல் இன்று பணி ஓய்வு பெறுவதால் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அபய்குமார் சிங்கை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. #IdolSmuggling #IGPonManickavel #AbhaykumarSingh
    சென்னை:

    சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பொன் மாணிக்கவேல் பணிபுரிந்து வந்தார். அவருடைய பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.

    சிலை கடத்தல் தொடர்பான பல வழக்குகளை சிறப்பாக விசாரித்து வருவதால் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர்.


    இந்நிலையில் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் இன்று பணி ஓய்வு பெறுவதால் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அபய்குமார் சிங்கை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அபய்குமார் சிங் தமிழ்நாடு நிறுவனத்தின் ஊழல் கண்காணிப்பு ஒழிப்பு அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #IdolSmuggling #IGPonManickavel #AbhaykumarSingh
    ×