search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GO"

    • 900 மீ நீளத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்க ரூ.195 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
    • பாம்குரோவ் ஓட்டலில் தொடங்கும் மேம்பாலம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் முடியும் வகையில் அமைய உள்ளது.

    சென்னை:

    சென்னையில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்புகளில் ஒன்று வள்ளுவர் கோட்டம் சந்திப்பு. ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தச் சந்திப்பை தினமும் கடந்து செல்கின்றது.

    இந்த சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 900 மீ நீளத்திற்கு புதிய மேம்பாலம் அமைக்க ரூ.195 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    பாம்குரோவ் ஓட்டலில் தொடங்கும் மேம்பாலம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் முடியும் வகையில் அமைய உள்ளது. வடபழனி, கோயம்பேடு மேம்பாலம் போன்று நான்கு வழிகள் கொண்ட மேம்பாலமாக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பவானிசாகர் அருகே வெற்றிலை வாங்க சென்று மாயமான மூதாட்டி பிணமாக மீட்கப்பட்டார்.
    • இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் அடுத்த கறி தொட்டம்பாளையம், ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (30). இவர் தனது பாட்டி ரங்கம்மாள் (73) உடன் வசித்து வருகிறார். ரங்கம்மாள் தினமும் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நால் ரோடு பகுதிக்கு சென்று தனக்கு தேவையான வெற்றிலை பாக்கு வாங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    இந்நிலையில் கடந்த 4-ந் தேதி வெற்றிலை பாக்கு வாங்க சென்ற மூதாட்டி ரங்கம்மாள் பின்னர் வீடு திரும்பவில்லை.

    அவரை பல்வேறு இடங்களில் தேடினர் எனினும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் பவானிசாகர் அடுத்த தொப்பம்பாளையம், மாங்கள் மொக்கைக்கு கீழ்புறம் உள்ள காய்ந்த குட்டை பக்கமாக மூதாட்டி உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தேவராஜிக்கும் தகவல் கிடைத்தது. அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது இறந்து கிடந்தது தனது பாட்டி என உறுதிப்படுத்தினார்.

    இதையடுத்து பவானிசாகர் போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதற்கான அரசாணையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #PollachiCase #PollachiAbuseCase
    சென்னை:

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.

    அதில் மாணவியின் பெயர், அவர் படிக்கும் கல்லூரி உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருந்தன. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் வெளிவராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

    இந்த நிலையில் தமிழக அரசின் கெஜட்டில் மாணவியின் பெயர் இடம் பெற்றிருப்பது சரியா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

    இதுபற்றி மாறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. வழக்கு பதிவு செய்யும் போது முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்படுவதைப் போல அரசாணையில் பெயர் விவரங்கள் இடம் பெறுவதில் தவறு இல்லை என்றும் அது பத்திரிகைகளில் வெளியாகிவிடக் கூடாது என்கிற கருத்தும் நிலவுகிறது.

    இந்த நிலையில் அரசாரணையில் மாணவியின் பெயர் வெளியான சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டிருப்பது அப்பட்டமான விதி மீறலாகும். இதன் மூலம் குற்றவாளிகளை காப்பாற்ற ஆளும் கட்சி கபட நாடகத்தை செய்து வருகிறது என்று கூறியுள்ளார்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மாணவியின் பெயரை கெஜட்டில் வெளியிட்டு பாதிக்கப்பட்டவர்களை எடப்பாடி பழனிசாமி அரசு மிரட்டுகிறது என்று கூறியுள்ளார். #PollachiCase #PollachiAbuseCase
    சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். #IdolSmugglingCases #CBIProbe #MadrasHC #IGPonManickavel
    சென்னை:

    தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்து வந்தது. அந்த விசாரணையில் திருப்தி இல்லை என்று கூறி இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

    அதில், தமிழகத்தில் தொடரப்பட்டுள்ள சிலைக் கடத்தல் வழக்குகளில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் சிபிஐ விசாரிக்கும்படி தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது.
     
    இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்தனர்.

    இதற்கிடையே, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.  ஐஜி பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிவடைந்து அவர் இன்று பணி ஓய்வுபெறுகிறார்.


    இந்நிலையில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனு  மீது இன்று  நீதிபதிகள் மகாதேவன், ஆதீகேசவலு அடங்கிய அமர்வு விசாரித்தது.

    சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்தும்  இன்றுடன் ஓய்வு பெறும் பொன் மாணிக்கவேலுவின் பதவிக்காலத்தை ஒரு ஆண்டுக்கு நீட்டித்து அவரை சிலை கடத்தல் வழக்கு விசாரணையின் சிறப்பு அதிகாரியாக நியமித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். #IdolSmugglingCases #CBIProbe #MadrasHC #IGPonManickavel
    தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த 2019, ஜனவரி 1-ந்தேதி முதல் தடை பிறப்பிக்கப்படும் என்று முதலமைச்சர் சட்டசபையில் அறிவித்தார். இதற்கான அரசாணை இன்று அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிடப்பட்டது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த 2019, ஜனவரி 1-ந்தேதி முதல் தடை பிறப்பிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 5-ந்தேதி சட்டசபையில் அறிவித்தார். இதற்கான அரசாணை இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிடப்பட்டது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் இந்த அரசாணை வெளியிடப்பட்டது.

    அதில், மக்கள் தினமும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் உடலுக்கு மிகுந்த ஆபத்து விளைவிக்க கூடியவையாகும். இந்திய அரசியலமைப்பு சட்டம் 48(ஏ) பிரிவின்படி மக்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்து, மேம்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும்.

    எனவே தினமும் மக்கள் பயன்படுத்தும் கேரி பேக்குகள், உணவுப் பொருட்கள் சுற்றி வழங்கப்படும் பிளாஸ்டிக் அட்டைகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் ஸ்டிராக்கள், பிளாஸ்டிக் கொடிகள் போன்றவற்றை தடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பிளாஸ்டிக் பொருட்கள் கழிவு நீர் வடிகால் பகுதிகளிலும் அடைத்து பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதிக்கிறது. இந்த தடை ஜனவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.


    அதன்பிறகு பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கக் கூடாது. பயன்படுத்த கூடாது. விற்க கூடாது. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்து செல்லக் கூடாது பிளாஸ்டிக் பொருட்களை கடைகளில் மொத்தமாகவோ, சில்லரையாகவோ விற்பனை செய்யக் கூடாது.

    மக்கும் தன்மை உடைய பிளாஸ்டிக் உள்பட அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்ட பிளாஸ்டிக் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. #PlasticBan #TNCM #EdappadiPalaniswami
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்ட நிலையில், ஆலைக்கு மாவட்ட கலெக்டர் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். #SterliteProtest #ThoothukudiShooting
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்தில் கடந்த 22 மற்றும் 23-ம் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதில் காயமடைந்தவர்களை நேற்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு சந்திக்கும் போது, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரசாரமாக கூறினர்.

    இன்று காலை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அரசு மருத்துமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போதும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து இதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்தார்.

    இதனை அடுத்து, பிற்பகலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் உயரதிகாரிகள் உடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினனார். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு இன்று மாலை அரசாணை வெளியிட்டுள்ளது.

    பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளித்து இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக, இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அரசாணை வெளியிடப்பட்ட சிலமணி நேரங்களில் ஆலைக்கு சீல் வைக்க மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அங்கு சென்றார். ஆலை நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அவர் ஆலைக்கு சீல் வைத்து, அரசின் நோட்டீஸை வாயில் கதவில் ஒட்டினார்.

    இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த கலெக்டர் சந்தீப் நந்தூரி, “ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது. இனி ஆலை இயங்காது. அரசாணையின் படி சீல் வைக்கப்பட்டது. ஆலைக்குள் இருக்கும் பொருட்களை சீல் வைப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்” என கூறினார்.

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
    ×