search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Subhash Kapoor"

    • இந்த சிற்பங்கள் கிமு 1ஆம் நூற்றாண்டு முதல் கிபி 11 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்தவை.
    • சிலை கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுபாஷ் கபூருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    நியூயார்க்:

    இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டு சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரால் விற்பனை செய்யப்பட்ட 15 சிற்பங்களை அமெரிக்க அருங்காட்சியகம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப உள்ளது. சுபாஷ் கபூர் மீதான குற்றவியல் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த சிற்பங்களை திருப்பி அனுப்புகிறத-

    இந்த சிற்பங்கள் அனைத்தும் கிமு 1ஆம் நூற்றாண்டு முதல் கிபி 11 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்தவை. டெரகோட்டா, செம்பு மற்றும் கற்சிற்பம் ஆகியவை அடங்கும்.

    இதுதொடர்பாக நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற பெருநகர கலை அருங்காட்சியகம் (மெட்) வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சந்தேகத்திற்குரிய வியாபாரிகளிடமிருந்து பெறப்பட்ட பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க பொருட்களை அருங்காட்சியம் தீவிரமாக மதிப்பாய்வு செய்கிறது. மேலும், இந்திய அரசாங்கத்துடனான நீண்டகால உறவுகளை மிகவும் மதிப்பதுடன், இந்த பிரச்சனையை தீர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிலை கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டு 10 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சுபாஷ் கபூர் திருச்சி மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    அமீர்கான் தயாரிக்கவிருந்த ‘மொகுல்’ திரைப்படத்தின் இயக்குநர் மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ள நிலையில், இத்தகைய ஆட்களுடன் பணிபுரிய விருப்பமில்லாமல் வெளியேறுவதாக அமீர்கான் தெரிவித்துள்ளார். #AamirKhan #Mogul
    இந்திப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் உறுப்பினராக இருந்த பேன்டம் பிலிம்ஸின் நிர்வாகி விகாஷ் பாகல் மீதும், ஆமீர்கான் தயாரிக்கவிருந்த ‘மொகுல்’ திரைப்படத்தின் இயக்குனர் சுபாஷ் கபூர் மீதும் செக்ஸ் புகார்கள் கூறப்பட்டன.

    நடிகர் அலோக்நாத், பாடகர் கைலாஷ்கேர் பெயர்களும் இந்த விவகாரத்தில் அடிப்படுகிறது.

    இதனால் அமீர்கான் தயாரிக்கும் படத்தில் இருந்து டைரக்டர் சுபாஷ்கபூர் நீக்கப்பட்டுள்ளார்.

    இதுபற்றி அமீர்கான் மற்றும் அவரின் மனைவி கிரன் ராவ் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



    ‘திரைப்படத் துறையை அனைவருக்கும் பாதுகாப்பான ஒரு வேலை இடமாய் மாற்றும் குறிக்கோளாகக் கொண்டுள்ளது எங்கள் நிறுவனம். பாலியல் குற்றங்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். அடுத்து நாங்கள் தயாரிக்கவிருந்த படத்தின் இயக்குனர் சுபாஷ் கபூருடன் பணிபுரிய விருப்பமில்லை. அவரது வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும், இத்தகைய ஆள்களுடன் பணிபுரிய வேண்டாம் என முடிவெடுத்து, அந்தப் படத்திலிருந்து வெளியேறுகிறோம். திரைப் படத்துறையைப் பாதுகாப்பான வேலையிடமாக மாற்ற நாங்கள் எந்த ஒரு நல்ல முடிவையும் எடுப்போம்.

    இவ்வாறு தெரிவித்துள்ளனர். #AamirKhan #Mogul

    ×