search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ranveer shah"

    சிலை கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா மற்றும் பெண் தொழில் அதிபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. #IdolTheft #RanvirShah

    சென்னை:

    சைதாப்பேட்டையைச் சேர்ந்த தொழில் அதிபர் ரன்வீர்ஷா வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலை தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக் நடராஜ், டி.எஸ்.பி. சுந்தரம் ஆகியோர் நடத்திய சோதனையில் பழங்கால கற்சிலைகள், கல்தூண்கள் உள்ளிட்ட 91 வகையான கலைப்பொருட்கள் மீட்கப்பட்டன.

    ரன்வீர்ஷாவின் பண்ணை வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. அங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சிலைகள் அனைத்தும் கிண்டியில் உள்ள சிலை தடுப்பு அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

    ரன்வீர்ஷா வெளிநாடு தப்பி சென்று விடக்கூடாது என்பதற்காக விமான நிலையங்களிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இதற்கிடையில் ரன்வீர் ஷாவின் நண்பரான பெண் தொழில் அதிபர் கிரண்ராவின் வீட்டிலும் சிலைகள் புதைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. கடந்த 2 நாட்களாக வீட்டில் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி போலீசார் அங்கிருந்து 23 சிலைகளையும் மீட்டுள்ளனர்.


    இதுவரையில் ரன்வீர்ஷா மற்றும் பெண் தொழில் அதிபர் வீடுகளில் இருந்து மொத்தம் 247 சிலைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

    சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் இருந்து திருட்டு சிலைகளை ரன்வீர்ஷா வாங்கி இருப்பதாக போலீசார் கூறி வருகிறார்கள். ஆனால் ரன்வீர்ஷா தரப்பிலோ சிலைகளுக்கு உரிய ஆவணங்கள் உள்ளன என்று கூறி வருகிறார்கள். இதனை சிலை தடுப்பு பிரிவு போலீசார் மறுத்து வருகிறார்கள்.

    ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவ் வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகள் திருட்டு சிலைகள்தான் என்று அவர்கள் கூறி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ரன்வீர்ஷா சென்னையில் இல்லை. அவர் வெளி மாநிலத்தில் இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    எனவே ரன்வீர்ஷா தப்பி சென்று விட முடியாது. தீனதயாளன் மீது போடப்பட்டுள்ள வழக்கில் ரன்வீர்ஷா சேர்க்கப்படுவார். அதன்பின்னர் அவர் மீது கைது நடவடிக்கை பாயும். இதே போல பெண் தொழில் அதிபரான கிரண்ராவ் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

    பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் அனைத்தையும் கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்க சிலை தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    ஆனால் அனைத்து சிலைகளையும் அங்கு கொண்டு செல்ல முடியாது என்பதால் கோர்ட்டு அனுமதியுடன் ஊழியர் ஒருவரை சிலைகள் இருக்கும் இடத்துக்கு வந்து ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கிரண்ராவ் பிரபலமான சிமெண்டு கம்பெனி நடத்தி வருகிறார். அதில் அவர் இயக்குனராக உள்ளார். ரன் வீர்ஷாவும் இந்த நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்பில் இருக்கிறார்.

    இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் நட்பின் அடிப்படையில் கிரண்ராவ், ரன்வீர்ஷாவுக்கு அந்த பொறுப்பை வழங்கியதாக கூறப்படுகிறது. #IdolTheft #RanvirShah

    பண்ணை வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட 132 சிலைகளும் கோவில்களில் திருடப்பட்டவையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக ரன்வீர் ஷாவிடம் விளக்கம் கேட்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் முடிவு செய்துள்ளனர். #PonManickavel
    சென்னை:

    சைதாப்பேட்டையில் உள்ள தொழில் அதிபர் ரன்வீர்ஷாவின் வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சோதனை நடத்தி கற்சிலைகள், தூண்கள் உள்ளிட்ட 91 வகையான கலைப் பொருட்களை பறிமுதல் செய்தார்.

    இதன் பின்னர் திருவாரூர், திருவையாறில் உள்ள ரன்வீர்ஷாவின் அரண்மனைகளிலும் சோதனை நடந்தது.

    இந்த நிலையில் மேல்மருவத்தூர் அருகே மோகல்வாடியில் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    30-க்கும் மேற்பட்ட போலீசார் நடத்திய சோதனையில் 89 சிலைகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. முருகன், பெருமாள், அம்மன், நந்தி உள்ளிட்ட கற்சிலைகளும், அலங்காரம் மிக்க பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைப்பற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் 2 லாரிகளில் ஏற்றப்பட்டு கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதேபோல் தாம்பரம் அருகே கூழாங்கல்சேரியில் உள்ள ரன்வீர்ஷாவின் இன்னொரு பண்ணை வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் 43 சிலைகள் சிக்கியது. 2 வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட 132 சிலைகளும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்த சிலைகள் அனைத்தும் பழமை வாய்ந்த கோவில்களில் திருடப்பட்டவையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக ரன்வீர் ஷாவிடம் விளக்கம் கேட்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக அவருக்கு விரைவில் சம்மன் அனுப்புகிறார்கள். இதனை ஏற்று ரன்வீர்ஷா ஆஜராகும்போது 132 சிலைகளின் பின்னணியை குறித்தும் முழுமையாக விசாரணை நடத்தப்பட உள்ளது. #IdolSmuggling #PonManickavel #IdolTheft #RanveerShah 
    பழமை வாய்ந்த சிலைகளை யாராக இருந்தாலும் சரி, இன்னும் 15 நாட்களில் சிலைகளை தங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். #PonManickavel #IdolSmuggling
    மேல்மருவத்தூர்:-

    ரன்வீர்ஷாவின் பண்ணை வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கு பின்னர் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிலை கடத்தல் தொடர்பாக தவறு செய்யாத யாரையும் நாங்கள் கைது செய்வது இல்லை. குற்றம் சாட்டப்பட்டு அது நிரூபணம் ஆனால் மட்டுமே கைது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    எனவே தவறு செய்யாதவர்கள் அச்சப்பட தேவையில்லை.

    அறநிலையத்துறை அதிகாரிகள் 9 பேரை கைது செய்ய வேண்டி உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.


    ஐகோர்ட்டில் அதிகாரி ஒருவர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்து அது தள்ளுபடியாகி விட்டது. இருந்தாலும் அவரை கைது செய்வதில் தீவிரம் காட்டாமல் உள்ளோம். பொறுமையாகவே நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    ஒரு சில பணக்காரர்கள் வீட்டிலும் சிலைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளோம். அவர்கள் யாராக இருந்தாலும் சரி, இன்னும் 15 நாட்களில் சிலைகளை எங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonManickavel #IdolSmuggling
    மேல்மருவத்தூர் அருகே மோகல்வாடியில் தொழில் அதிபர் ரன்வீர் ஷாவிற்கு சொந்தமான பண்ணை வீட்டில் பழமையான 100 கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. #Idols #RanveerShah #PonManickavel
    மேல்மருவத்தூர்:

    சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் தொழில் அதிபர் ரன்வீர்ஷா வீட்டில் கடந்த வாரம் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு குவியல் குவியலாக பழமை வாய்ந்த கற்சிலைகள், தூண்கள், பிரமாண்டமான சாமி சிலைகள் உள்ளிட்டவை இருந்தது. மொத்தம் 91 கலைப் பொருட்கள் மீட்கப்பட்டன.

    இவை அனைத்தும் கிண்டியில் உள்ள சிலை தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து ரன்வீர்ஷாவுக்கு சொந்தமாக எங்கெல்லாம் வீடுகள், பங்களாக்கள் உள்ளன என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் திருவாரூர் மற்றும் திருவையாறில் அவருக்கு 2 அரண்மனைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கும் சோதனை நடத்தி சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் தொழில் அதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமாக மேல்மருவத்தூர் மற்றும் படப்பை பகுதிகளில் பண்ணை வீடுகள் இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து இன்று ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் டி.எஸ்.பி. சுந்தரம் மற்றும் போலீஸ் படையினர் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான இடங்களில் 3-வது முறையாக இன்று நடத்தப்பட்ட அதிரடி சோதனையிலும் ஏராளமான சிலைகள் சிக்கி உள்ளது மேலும் பர பரப்பை ஏற்படுத்தி இருக் கிறது.

    மேல்மருவத்தூரை அடுத்த ராமாவரம் அருகே உள்ள மோகல்வாடி கிராமத்தில் இயற்கை சூழலில் அமைந்துள்ள ரன்வீர்ஷாவின் பண்ணை வீட்டில் இன்று காலை 11 மணி அளவில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் போலீஸ் படையுடன் புகுந்தார்.

    அங்கு ஏராளமான அறைகள் இருந்தன. அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சைதாப்பேட்டை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது போல பழமை வாய்ந்த கற்சிலைகள் இருந்தன.

    பண்ணை வீடு முழுவதும் 89 சிலைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்தது. அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சிலைகளை கிண்டியில் உள்ள சிலை தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சைதாப்பேட்டை வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் பாதுகாப்புடன் அங்கு வைக்கப்பட்டுள்ளது. அதனுடன் இந்த சிலைகளையும் வைத்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் பாதுகாக்க முடிவு செய்துள்ளனர்.


    மேல்மருவத்தூர் வீட்டில் மதியம் 12.45 மணி அளவில் சோதனை நிறைவடைந்தது. அதன் பின்னர் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் படப்பை வீட்டுக்கு சென்று சோதனை நடத்துகிறார்.

    படப்பையில் உள்ள வீட்டில் ரன்வீர்ஷா சிலைகளை பதுக்கி வைத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அங்கு நடத்தப்படும் சோதனை நிறைவடைந்த பின்னரே எத்தனை சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வரும்.

    ரன்வீர்ஷாவின் பின்னணியில் யார்-யார்? உள்ளனர் என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சைதாப்பேட்டை வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளில் 75 சதவீதத்திற்கு மேற்பட்ட சிலைகளை சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் இருந்து ரன்வீர்ஷா வாங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதே போல கேரளாவைச் சேர்ந்த சிலை கடத்தல் ஆசாமி ஒருவரும் ரன்வீர்ஷாவுக்கு சிலைகளை விற்றுள்ளார். அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    சைதாப்பேட்டை வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகளில் பெரும்பாலானவை திருவாரூர் பகுதிகளில் உள்ள கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்டவை என்று ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

    தற்போது கைப்பற்றப்பட்டுள்ள சிலைகளும் அந்த பகுதியைச் சேர்ந்த கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்டதா? இல்லை வேறு பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்டதா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    எனவே ரன்வீர்ஷாவின் பின்னணியில் இருக்கும் அனைவரும் விரைவில் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Idols #RanveerShah #PonManickavel
    ×