search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழமை வாய்ந்த சிலைகளை 15 நாளில் ஒப்படைக்க வேண்டும்- ஐஜி பொன் மாணிக்கவேல்
    X

    பழமை வாய்ந்த சிலைகளை 15 நாளில் ஒப்படைக்க வேண்டும்- ஐஜி பொன் மாணிக்கவேல்

    பழமை வாய்ந்த சிலைகளை யாராக இருந்தாலும் சரி, இன்னும் 15 நாட்களில் சிலைகளை தங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். #PonManickavel #IdolSmuggling
    மேல்மருவத்தூர்:-

    ரன்வீர்ஷாவின் பண்ணை வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கு பின்னர் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிலை கடத்தல் தொடர்பாக தவறு செய்யாத யாரையும் நாங்கள் கைது செய்வது இல்லை. குற்றம் சாட்டப்பட்டு அது நிரூபணம் ஆனால் மட்டுமே கைது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    எனவே தவறு செய்யாதவர்கள் அச்சப்பட தேவையில்லை.

    அறநிலையத்துறை அதிகாரிகள் 9 பேரை கைது செய்ய வேண்டி உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.


    ஐகோர்ட்டில் அதிகாரி ஒருவர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்து அது தள்ளுபடியாகி விட்டது. இருந்தாலும் அவரை கைது செய்வதில் தீவிரம் காட்டாமல் உள்ளோம். பொறுமையாகவே நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    ஒரு சில பணக்காரர்கள் வீட்டிலும் சிலைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளோம். அவர்கள் யாராக இருந்தாலும் சரி, இன்னும் 15 நாட்களில் சிலைகளை எங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonManickavel #IdolSmuggling
    Next Story
    ×