search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல்
    X

    செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல்

    • செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனுவில், நீதிமன்ற காவல் சட்டப்படியானது என தீர்ப்பு.
    • உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதால் அமலாக்கத்துறை நடவடிக்கை.

    அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டபோது, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அறுவை சிகிச்சை முடிந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நேற்று 3-வது நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது அவரது நீதிமன்ற காவல் சட்டப்படியானது எனத் தெரிவித்தார்.

    தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜியின் மனை மேல்முறையீடு மனுதாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

    அதில் தங்களுடைய கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளது.

    Next Story
    ×