என் மலர்
செய்திகள்

கூவம்- அடையாற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத தமிழக அரசுக்கு ரூ.2 கோடிஅபராதம்
சென்னை அடையாறு மற்றும் கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத தமிழக அரசுக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #TNGovt #NationalGreenTribunal
சென்னை:
சென்னை அடையாறு, கூவம் ஆற்றிலும் பக்கிங்காம் கால்வாயிலும் ஏராளமான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் மழை காலங்களில் வெள்ள நீர் வீதிகளுக்கு வந்து விடுகிறது.
இதனால் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும், தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதை தடுக்க கோரியும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு நீதிபதி ஆகாஸ்குமார் கோயல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அடையார் கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தமிழக அரசு மெத்தனமாக நடந்து கொள்வதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் அளித்துள்ள அறிக்கை தெளிவற்று உள்ளதாக நீதிபதிகள் கூறினர். இதில், பிரச்சனைகளை குறைப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பதையும் அறிய முடிகிறது என்று தெரிவித்தனர்.
பருவமழை முன்னேற்பாடு பணிகளுக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.603 கோடி நிதியில் ரூ.80 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும் அந்த தொகையில் கூட ஆற்றில் மிதக்கும் கழிவுகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
25,892 ஆக்கிரமிப்புகள் இன்னும் அகற்றப்படாததை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், வழக்குகள் இருப்பதால்தான் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்படுவதாக தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது என்றனர்.
எனவே ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நேரடியாக பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிபடுத்த வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டனர்.
இந்த விவகாரத்தில் மெத்தனமாக இருந்த தமிழக அரசுக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்த நீதிபதிகள் இந்த தொகையை பொதுப்பணித்துறை அடுத்த 15 நாட்களுக்குள் தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் கட்ட வேண்டும் என்று ஆணையிட்டனர். #TNGovt #NationalGreenTribunal
சென்னை அடையாறு, கூவம் ஆற்றிலும் பக்கிங்காம் கால்வாயிலும் ஏராளமான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் மழை காலங்களில் வெள்ள நீர் வீதிகளுக்கு வந்து விடுகிறது.
இதனால் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும், தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதை தடுக்க கோரியும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு நீதிபதி ஆகாஸ்குமார் கோயல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அடையார் கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தமிழக அரசு மெத்தனமாக நடந்து கொள்வதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் அளித்துள்ள அறிக்கை தெளிவற்று உள்ளதாக நீதிபதிகள் கூறினர். இதில், பிரச்சனைகளை குறைப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பதையும் அறிய முடிகிறது என்று தெரிவித்தனர்.
பருவமழை முன்னேற்பாடு பணிகளுக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.603 கோடி நிதியில் ரூ.80 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும் அந்த தொகையில் கூட ஆற்றில் மிதக்கும் கழிவுகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
25,892 ஆக்கிரமிப்புகள் இன்னும் அகற்றப்படாததை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், வழக்குகள் இருப்பதால்தான் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்படுவதாக தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது என்றனர்.
எனவே ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நேரடியாக பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிபடுத்த வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டனர்.
இந்த விவகாரத்தில் மெத்தனமாக இருந்த தமிழக அரசுக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்த நீதிபதிகள் இந்த தொகையை பொதுப்பணித்துறை அடுத்த 15 நாட்களுக்குள் தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் கட்ட வேண்டும் என்று ஆணையிட்டனர். #TNGovt #NationalGreenTribunal
Next Story






