search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Admission of students"

    • நாளை கடைசி நாள்
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், 330

    தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில்

    தற்போது 2023-24-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடை பெற்று வருகிறது. தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீடு சேர்க் கைக்கான விவரங்கள் www.skilltraining. tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப தாரர்கள் தற்காலிக ஒதுக்கீடு ஆணையை மேற்குறிப்பிட்ட இணை யதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

    அதன் பிறகு சம்பந்தப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அசல் சான்றிதழுடன் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி சேர்க்கையினை உறுதி செய்ய வேண்டும். இதற்கான கடைசி நாள் நாளை (புதன்கிழமை) ஆகும். இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • கிராமம் முழுைமயாக பள்ளி மாணவர்களுடன் மாபெரும் பேரணி நடைபெற்றது.
    • கிராமப்புற அரசு பள்ளியில் பயில்வதினால் அரசு வழங்கும் சலுகைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    திண்டிவனம், மயிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெலாகுப்பம் ஊராட்சி, வேம்பூண்டி கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைய பள்ளியில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆலோசனையுடன், "நம் பள்ளி நம் பெருமை" மற்றும் பள்ளி வயது நிரம்பிய குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பது குறித்தும், கிராமப்புற அரசு பள்ளியில் பயில்வதினால் அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைத்து கிராமம் முழுைமயாக பள்ளி மாணவர்களுடன் மாபெரும் பேரணி நடைபெற்றது.

    பேரணியை ஊராட்சிமன்ற தலைவர், உயர்நீதி மன்ற வக்கீல் பூங்கா பாக்யராஜ் கலந்துகொண்டார், நடுநிலைய பள்ளியின் தலைமை ஆசிரியர் அப்பண்டராஜ் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    • அரசு, தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா்.
    • ஜூன் 7 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:-

    தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு இணையதளம் வாயிலாக ஜூன் 7 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இந்த விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், மாணவா்களுக்கு உதவும் வகையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகத்தில் சோ்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பள்ளி மாற்றுசான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், 8 அல்லது 10 அல்லது 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ் (மாற்று திறனாளிகள், விதவை, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் முதன்மையானவா், தாய், தந்தை இழந்த ஆதரவற்ற மாணவா்கள்) ஆகியவற்றுடன் 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள், ஆதாா் அட்டை ஆகிய அசல் ஆவணங்கள் மற்றும் விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

    மேலும், விவரங்களுக்கு தஞ்சாவூா் அரசு தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குநா் / முதல்வா் அல்லது அருகிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொடா்பு கொள்ளலாம். தொடா்பு எண்கள்: 9994043023, 7708709988, 9840950504, 9442220049 ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவர் சேர்க்கைக்கு www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் (தூத்துக்குடி, திருச்செந்தூர், வேப்பலோடை, நாகலாபுரம்) ஆகஸ்ட் 2023 -ம் ஆண்டுக்கான சேர்க்கை வருகிற 7-ந் தேதி வரை நடக்கிறது. மாணவர் சேர்க்கைக்கு www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த படிப்பில் சேர விரும்புவோர் 8-ஆம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பாஸ்போட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் அசல், நகல்களுடன், தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரில் வந்தும் விண்ணப்பிக்கலாம்.

    அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. அதன்படி மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750, கட்டணமில்லா பஸ் சலுகை, இலவச சைக்கிள், பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், சீருடை, காலனி, பயிற்சிக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி நிலைய துணை இயக்குநர், முதல்வரை 94990 55810 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூா் எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கல்லூரியில் நிகழாண்டு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.
    • கணினி பயன்பாட்டியல், வணிக நிா்வாகவியல், வரலாறு ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கல்லூரியில் நிகழாண்டு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகற 30-ந் தேதி தொடங்குகிறது. திருப்பூா் பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2023-24 ம் ஆண்டுக்கான மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த கலந்தாய்வின் முதல் நாளில் சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு (அனைத்து இளநிலை பாடப் பிரிவுகள்) மாற்றுத் திறனாளிகள், மாவட்ட அளவில் விளையாட்டு வீராங்கனைகள், ராணுவ வீரா்களின் வாரிசுகள் பங்கேற்கலாம்.

    இதைத்தொடா்ந்து, ஜூன் 1 மற்றும் 2 ந் தேதிகளில் கணிதம், இயற்பியல், இயற்பியல் சிஏ., வேதியியல், தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், கணினி அறிவியல், மின்னணுவியல் பாடப் பிரிவுகளுக்கும், ஜூன் 3 ஆம் தேதி வணிகவியல், வணிகவியல் மற்றும் .தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம் ஆகிய பாடப் பிரிவுகளில் சேர ஜூன் 6 -ந் தேதி நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்
    • தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரி முதல்வர் கோ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    2023-2024-ம் கல்வியாண்டிற்க்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு கீழ்காணும் தேதிகளில் இணையவழியில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

    30-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் சிறப்பு பிரிவு மாணவர்கள் கலந்தாய்வு. இதில் விளையாட்டு, என்சிசி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மூன்றாம் பாலினத்தவர்

    ஜூன் மாதம் 1-ந் தேதி காலை 9 மணி அளவில் முதற்கட்ட பொது கலந்தாய்வு அறிவியல் பாடப் பிரிவுகள்-

    கணிதம், வேதியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல்.

    ஜூன் மாதம் 5-ந்தேதி காலை 9 மணி அளவில் மொழி பாடப்பிரிவு கலந்தாய்வு- தமிழ் மற்றும் ஆங்கிலம்.

    7-ந்தேதி காலை 9 மணி அளவில் கலை பாடப்பிரிவுகள்-

    வரலாறு மற்றும் பொருளியல்.

    ஜூன் மாதம் 8-ந் தேதி காலை 9 மணி அளவில் வணிகவியல் பிகாம் மற்றும் வணிக நிர்வாகவியல் பிபிஏ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

    மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கு மின்னஞ்சல் (மெயில்) குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மற்றும் தொலைபேசி வாயிலாக சேர்க்கை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
    • மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பள்ளிக்கு வந்திருந்தனர்.

    கோவை,மே.22-

    எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளி யானது. இதனையடுத்து இன்று முதல் பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கை தமிழ்நாடு முழுவதும் தொடங்கி உள்ளது.

    கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று காலை 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை தொடங்கியது.

    கோவையில் உள்ள அனைத்து அரசு பள்ளி களிலும் இன்று காலை முதலே மாணவ, மாண விகள் ஏராளமானோர் தங்களது பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்திருந்தனர்.

    அவர்கள் பள்ளியில் தாங்கள் படிக்க விரும்பும் பாடப்பிரிவினை தேர்வு செய்து கொண்டனர். 10-ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான பாடப்பிரிவில் பயின்று வந்த மாணவர்கள் தற்போது பிளஸ் 1 வகுப்பில் பல்வேறு பாடப்பிரிவுகள் இருப்பதால் சில மாணவர்கள் எந்த பாடப்பிரிவை தேர்வு செய்வது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

    அப்படி குழப்பமாக இருக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்கள் எந்த பிரிவை எடுத்து படிக்கலாம் என்பது குறித்து அறிவுரை வழங்கி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலுமே மாணவர் சேர்க்கையானது விறு,விறுப்பாக நடைபெற்று வருகிறது.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் www.aditanarcollege.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    திருச்செந்தூர்:

    'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் கிராமப்புற மாணவர்கள் தரமான உயர்கல்வி பெற்று தன்னிறைவோடு வாழவும், வளமான இந்திய குடிமக்களாக திகழவும், திருச்செந்தூரில் கடந்த 1965-ம் ஆண்டு ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கினார்.

    ஒழுக்கம், கல்வி, மேம்பாடு ஆகியவற்றை குறிக்கோளாக கொண்டு செயல்படும் இக்கல்லூரியானது தேசிய தர மதிப்பீட்டு குழுவினரால் ஆராயப்பட்டு 3-ம் சுழற்சியிலும் 'ஏ' தரச்சான்றிதழை பெற்றுள்ளது.

    பாடப்பிரிவுகள்

    இக்கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளாக ஆங்கிலம், பொருளியல், இளம் அறிவியல் பாடப்பிரிவுகளாக கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல், இளம் வணிகவியல், இளநிலை வணிக நிர்வாகவியல் என 9 பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

    முதுநிலை பாடப்பிரிவுகளாக ஆங்கிலம், பொருளியல், கணிதம், வேதியியல், விலங்கியல், ஆய்வியல் படிப்புகளாக (எம்.பில்.) பொருளியல், ஆங்கிலம், கணிதம், விலங்கியல், பிஎச்.டி. படிப்புகளாக பொருளியல், ஆங்கிலம், வேதியியல், விலங்கியல், கணிதம் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகின்றன.

    மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

    கல்லூரியில் அனுபவமிக்க பேராசிரியர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் பல்கலைக்கழக அளவில் தொடர்ந்து சாதனை புரிந்து வருகின்றனர். மேலும் மாணவர்களுக்கு மாலை நேரங்களில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், இளையோர் செஞ்சிலுவை சங்கம், விளையாட்டு போட்டிகள், சமுதாய வானொலி போன்றவற்றில் சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இங்கு சிறந்த நூலக வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது. வளாகத்தேர்வு மூலம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தரப்படுகிறது. மாணவர்களுக்கு தங்கும் வசதியும் உள்ளது.

    மாணவர் சேர்க்கை

    கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் www.aditanarcollege.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். சுயநிதி பிரிவுக்கு தனி விண்ணப்பமும், அரசு உதவிபெறும் பிரிவுக்கு தனி விண்ணப்பமும் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு 04639-220625, 220632 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த தகவலை ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    • அரசின் கல்வி சார் நலத்திட்டம் குறித்தும் வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
    • விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே அரசு பள்ளியில் மாண வர்கள் சேர்க்கை மற்றும் அரசின் கல்வி சார் நலத்திட்டம் குறித்தும் வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) ராஜு தலைமை தாங்கி பிரச்சார வாகனத்தை கொடி யசைத்து தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் ராதா கிருஷ்ணன், செலின்மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் பாரதி வரவேற் றார். பிரச்சார வாகனம் விருகாவூர், பொரசக் குறிச்சி, ஒகையூர், ஈயனூர், அசகளத்தூர், முடியனுர் வழியாக சென்று குரூரில் முடிவடைந்தது. இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் பலரும் கலந்து கொண்டு சேர்ப்போம், சேர்ப்போம், மாணவர்களை அரசு பள்ளியில் சேர்ப்போம். ஒழிப்போம், ஒழிப்போம், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம். பெண்கள் நாட்டின் இரு கண்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் மூலம் 7 ஊராட்சிகளில் நேற்று ஒரே நாளில் 54 மாணவ- மாணவிகள் அரசு பள்ளி யில் சேர்க்கப்பட்டனர். இதில் எண்ணும் எழுத்தும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வண்ணத் தமிழன், வட்டாரவள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) அன்பழகன், இல்லம் தேடி கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் கண்ணன், இல்லம் தேடி கல்வி தன்னார் வலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள மாநகராட்சிப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார்.

    மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி , மாநகராட்சி கவுன்சிலர் மம்தா குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    பள்ளியில் மாணவர்கள் அதிக அளவு சேர வேண்டுமென பள்ளி மாணவர்களுக்கு புத்தக பைகள், புத்தகங்கள், எழுதுகோல் போன்றவைகளும் வழங்கப்பட்டது. இதில் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் அதிக அளவு பள்ளிகளில் சேர்கிறார்கள்.

    தற்போது விரிவுப்படுத்தப்பட்ட காலை உணவு திட்டம் 85 பள்ளிகளில் செயல்படுத்தபடுகிறது. காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் இடைநிற்றல் குறைந்துள்ளது.

    இதுகுறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில்:-

    தமிழக முதல் - அமைச்சரின் முயற்சியால் மாணவர்களை அதிகம் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு பள்ளிகளில் சேர்த்து வருகிறோம். காலை உணவு திட்டத்தால் ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

    தற்போது இரண்டாம் கட்டமாக விரிவுப்படுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தின் மூலம் மாணவர்கள் இடைநிற்றல் இல்லாத நிலையை உருவாக்குவோம்.இடைநிற்றல் இதன் மூலம் குறைந்துள்ளது என்றார்.

    இதையடுத்து அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சலுகைகள் குறித்த விழிப்புணர்வு வாகனங்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    • நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • இந்த தகவலை விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சாத்தூர் தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23 -ம் கல்வியாண்டில் பகுதி நேர நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் பயிற்சிக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியில் உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தைப் பற்றிய விவரம், தங்கத்தினை உரசியும், உரசாமலும் தரம் அறியும் முறை, வங்கிகளில் நகைக்கடன் வழங்கும் முறை, ஹால்மார்க் முத்திரை, அடகு பிடிப்போர் நடைமுறைச் சட்டம் மற்றும் விதிகள் போன்ற பாடங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    பயிற்சியின் முடிவில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம தேர்வு நடத்தி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய ஏதுவாக சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சியினை முடித்தவர்கள் தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றவும், அடகு மற்றும் ஆபரணக் கடை மற்றும் நகை வணிகம் செய்யவும் வாய்ப்புகள் உள்ளன.

    இந்த பயிற்சியில் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களும் பயிலும் வகையில் இந்த பயிற்சியானது சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.

    பயிற்சியின் கால அளவு 100 மணி நேரம் (10 வாரம்) பயிற்சியில் சேருவதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது வரம்பு இல்லை. ஆண், பெண் இருபாலரும் பயிற்சியில் சேரலாம். பயிற்சி கட்டணம் ரூ.4 ஆயிரத்து 543 ஆகும். பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.500 மதிப்புள்ள கிட் பாக்ஸ் (நகை மதிப்பீட்டு பெட்டி) இலவசமாக வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு முதல்வர் தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையம், சிவசக்தி திருமண மண்டபம். எஸ்.ஆர்.நாயுடு நகர், பி.ஆர்.சி. டிப்பே எதிர்புறம், சாத்தூர் என்ற முகவரியிலோ அல்லது 04562-260293, 88071 59088 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆங்கில வழிக் கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது.
    • பெற்றோர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பனப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் உங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து பயன்பெறுமாறு பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கி வலியுறுத்தினர்.

    ஆங்கில வழிக் கல்வியும் இலவசமாக தமிழக அரசு வழங்குவதாக மற்றும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் கொடுத்து மாணவர்கள் படிப்பில் தங்குதடையின்றி படிக்க வழிவகை செய்வதாகும் எனவே தமிழக அரசு திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தி வீதி வீதியாக சென்று பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் நெமிலி சேர்மன் வடிவேலு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×