search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் பிளஸ்-1 படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்
    X

    கோவையில் பிளஸ்-1 படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்

    • எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
    • மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பள்ளிக்கு வந்திருந்தனர்.

    கோவை,மே.22-

    எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளி யானது. இதனையடுத்து இன்று முதல் பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கை தமிழ்நாடு முழுவதும் தொடங்கி உள்ளது.

    கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று காலை 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை தொடங்கியது.

    கோவையில் உள்ள அனைத்து அரசு பள்ளி களிலும் இன்று காலை முதலே மாணவ, மாண விகள் ஏராளமானோர் தங்களது பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்திருந்தனர்.

    அவர்கள் பள்ளியில் தாங்கள் படிக்க விரும்பும் பாடப்பிரிவினை தேர்வு செய்து கொண்டனர். 10-ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான பாடப்பிரிவில் பயின்று வந்த மாணவர்கள் தற்போது பிளஸ் 1 வகுப்பில் பல்வேறு பாடப்பிரிவுகள் இருப்பதால் சில மாணவர்கள் எந்த பாடப்பிரிவை தேர்வு செய்வது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

    அப்படி குழப்பமாக இருக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்கள் எந்த பிரிவை எடுத்து படிக்கலாம் என்பது குறித்து அறிவுரை வழங்கி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலுமே மாணவர் சேர்க்கையானது விறு,விறுப்பாக நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×