search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
    X

    குடியாத்தம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

    • இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்
    • தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரி முதல்வர் கோ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    2023-2024-ம் கல்வியாண்டிற்க்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு கீழ்காணும் தேதிகளில் இணையவழியில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

    30-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் சிறப்பு பிரிவு மாணவர்கள் கலந்தாய்வு. இதில் விளையாட்டு, என்சிசி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மூன்றாம் பாலினத்தவர்

    ஜூன் மாதம் 1-ந் தேதி காலை 9 மணி அளவில் முதற்கட்ட பொது கலந்தாய்வு அறிவியல் பாடப் பிரிவுகள்-

    கணிதம், வேதியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல்.

    ஜூன் மாதம் 5-ந்தேதி காலை 9 மணி அளவில் மொழி பாடப்பிரிவு கலந்தாய்வு- தமிழ் மற்றும் ஆங்கிலம்.

    7-ந்தேதி காலை 9 மணி அளவில் கலை பாடப்பிரிவுகள்-

    வரலாறு மற்றும் பொருளியல்.

    ஜூன் மாதம் 8-ந் தேதி காலை 9 மணி அளவில் வணிகவியல் பிகாம் மற்றும் வணிக நிர்வாகவியல் பிபிஏ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

    மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கு மின்னஞ்சல் (மெயில்) குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மற்றும் தொலைபேசி வாயிலாக சேர்க்கை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×