search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Vocational Training Institute"

    • மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படுவதால் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்தோடு சேர்ந்து படித்து வருகின்றனர்.
    • உடுமலை நகர மன்றத்தலைவர் மு.மத்தீன், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி நாகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்கள்.

    உடுமலை:

    தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உடுமலை அருகே எலையமுத்தூர் சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு மின்சார பணியாளர், பொருத்துனர், கம்மியார் மோட்டார் வாகனம், கம்பியாள், பற்றவைப்பவர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் நடப்பாண்டில் புதிதாக இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் - டிஜிட்டல் மேணுபேக்ச்சரிங் டெக்னீசியன், மேணுபேக்ச்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் - ஆட்டோமேஷன், அட்வான்ஸ் சி.என்.சி. மெஷின் - டெக்னீசியன் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி அரசு உதவிகளுடன் பயிற்சியின் போதே தொழில் நிறுவனங்களில் உதவித்தொகையுடன் பயிற்சி, பயிற்சி முடித்தவுடன் மத்திய-மாநில அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படுவதால் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்தோடு சேர்ந்து படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் நடப்பாண்டில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கு உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் என்.வி.நதிச்சந்திரன் தலைமை தாங்கினார். வால்பாறை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் குணசேகரன் முன்னிலை வகித்தார். பயிற்சி அலுவலர் ரமேஷ்குமார் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக உடுமலை நகர மன்றத்தலைவர் மு.மத்தீன், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி நாகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்கள். இதில் அதிகாரிகள், பணியாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் உதவி பயிற்சி அலுவலர் மாரிமுத்து நன்றி கூறினார்.

    • 2023-ம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • பயி்ற்சியின் போது பிரபல தொழிற் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் ட்ரெய்னிங் உதவித்தொகையுடன் வழங்க ப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புர மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

    திண்டிவனம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை 2023-ம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு தொழிற்பயிற்சி நிலையம் திண்டிவனத்தில் 2023-ம் ஆண்டு சேர்க்கையில் சேர்ந்திட எஸ்.எஸ்.எல்.சி, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இதற்கான ேசர்க்கை 31.7.2023-ந்தேதி வரை நடைபெறும். விழுப்புரம் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் திண்டிவனம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வரும்போது தங்கள் அசல் ஆவணங்களான மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் ஆகியவற்றை நேரில் கொண்டு வர வேண்டும்.

    தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750- உதவித்தொகை மற்றும் விலையில்லா லேப்டாப், சைக்கிள், பாடப் புத்தகம், மூடு காலணி, சீருடை, சீருடைக்கான தையற்கூலி, வரைபடக்கருவிகள், இலவச பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும், பயி்ற்சியின் போது பிரபல தொழிற் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் ட்ரெய்னிங் உதவித்தொகையுடன் வழங்க ப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழிற் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்துதரப்படும். இந்த இணையதள வழியிலான கலந்தாய்வில் கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ.50 விண்ணப்பதாரர் நேரடியாக செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு முதல்-அமைச்சர் தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார்.
    • 22 அரசுதொழிற்பயிற்சி நிலையங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    தாராபுரம் :

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாகதொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் 22 அரசுதொழிற்பயிற்சி நிலையங்களில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்துஅமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார்.

    திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையவளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

    அப்போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:- தமிழ்நாட்டில் உள்ள 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 என்றநவீன தொழிற்சாலைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக டாடா குழுமத்துடன் தமிழக அரசு தொழில் 4.0 என்ற தொழில் பயிற்சியின் மூலம் அதிநவீன தொழில்நுட்ப அறிவினை அடித்தட்டு சமுதாயத்திலிருந்து வரும் பயிற்சியாளர்களும் பயிற்சி பெறவேண்டும் என்ற உன்னத தொலை நோக்கோடு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசானது ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் 22 அரசுதொழிற்பயிற்சி நிலையங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    அதன்படி, தாராபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும்பயிற்சியாளர்கள் பயனடையும் வகையில், ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் தொழில்4.0 டெக்னாலஜி சென்டர் அதிநவீன கணனிமயமாக்கப்பட்ட தொழிற் பிரிவுகள் அட்வான்ஸ் சி.என்.சி., மிஷினிங் டெக்னீசியன்,இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் ,டிஜிட்டல் மேனுபாட்சரிங் டெக்னீசியன், பேசிக்டிசைனர் ,விர்ச்சுவல் வெரிபையர் (மெக்கானிக்), மேனுபேச்சரிங் பிராசசஸ்கண்ட்ரோலர், ஆட்டோ மேஷன் துவக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

    இதன் மூலம் இப்பகுதியிலுள்ள உள்ள ஏழை, எளிய மாணவர்கள் , மாணவிகள் நவீன தொழில்நுட்ப பயிற்சி பெறுவதை உறுதி செய்யப்படுவதுடன், அவர்களது வாழ்வின் தரம் உயர்ந்து சமுதாயத்திற்கு பெரும் பயனாக இத்திட்டம் வழிவகை செய்கிறது. தற்போது இப்பயிற்சி நிலையம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான திருப்பூர் மற்றும் உடுமலைப்பேட்டையில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 8-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார்.

    அதனைத்தொடர்ந்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தாராபுரம் பொள்ளாச்சி மெயின்ரோடு, அம்மா பேட்டை பகுதியில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் முத்தமிழறிஞர்டாக்டர்.கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும்பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் , மண்டல இணை இயக்குநர் முஸ்தபா, திருப்பூர் மாநகராட்சி 4-ம்மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் நகர்மன்றத் தலைவர் பாப்புகண்ணன், முதல்வர் (தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையம்) பிரபு,தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் செந்தில்குமார், மாணவ, மாணவிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொ

    • மாணவர் சேர்க்கைக்கு www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் (தூத்துக்குடி, திருச்செந்தூர், வேப்பலோடை, நாகலாபுரம்) ஆகஸ்ட் 2023 -ம் ஆண்டுக்கான சேர்க்கை வருகிற 7-ந் தேதி வரை நடக்கிறது. மாணவர் சேர்க்கைக்கு www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த படிப்பில் சேர விரும்புவோர் 8-ஆம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பாஸ்போட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் அசல், நகல்களுடன், தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரில் வந்தும் விண்ணப்பிக்கலாம்.

    அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. அதன்படி மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750, கட்டணமில்லா பஸ் சலுகை, இலவச சைக்கிள், பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், சீருடை, காலனி, பயிற்சிக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி நிலைய துணை இயக்குநர், முதல்வரை 94990 55810 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×