search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில்நுட்ப மையம் திறப்பு
    X

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொழிற்பயிற்சி நிலையத்தை பார்வையிட்ட காட்சி.

    தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில்நுட்ப மையம் திறப்பு

    • தமிழ்நாடு முதல்-அமைச்சர் தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார்.
    • 22 அரசுதொழிற்பயிற்சி நிலையங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    தாராபுரம் :

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாகதொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் 22 அரசுதொழிற்பயிற்சி நிலையங்களில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்துஅமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார்.

    திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையவளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

    அப்போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:- தமிழ்நாட்டில் உள்ள 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 என்றநவீன தொழிற்சாலைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக டாடா குழுமத்துடன் தமிழக அரசு தொழில் 4.0 என்ற தொழில் பயிற்சியின் மூலம் அதிநவீன தொழில்நுட்ப அறிவினை அடித்தட்டு சமுதாயத்திலிருந்து வரும் பயிற்சியாளர்களும் பயிற்சி பெறவேண்டும் என்ற உன்னத தொலை நோக்கோடு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசானது ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் 22 அரசுதொழிற்பயிற்சி நிலையங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    அதன்படி, தாராபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும்பயிற்சியாளர்கள் பயனடையும் வகையில், ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் தொழில்4.0 டெக்னாலஜி சென்டர் அதிநவீன கணனிமயமாக்கப்பட்ட தொழிற் பிரிவுகள் அட்வான்ஸ் சி.என்.சி., மிஷினிங் டெக்னீசியன்,இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் ,டிஜிட்டல் மேனுபாட்சரிங் டெக்னீசியன், பேசிக்டிசைனர் ,விர்ச்சுவல் வெரிபையர் (மெக்கானிக்), மேனுபேச்சரிங் பிராசசஸ்கண்ட்ரோலர், ஆட்டோ மேஷன் துவக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

    இதன் மூலம் இப்பகுதியிலுள்ள உள்ள ஏழை, எளிய மாணவர்கள் , மாணவிகள் நவீன தொழில்நுட்ப பயிற்சி பெறுவதை உறுதி செய்யப்படுவதுடன், அவர்களது வாழ்வின் தரம் உயர்ந்து சமுதாயத்திற்கு பெரும் பயனாக இத்திட்டம் வழிவகை செய்கிறது. தற்போது இப்பயிற்சி நிலையம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான திருப்பூர் மற்றும் உடுமலைப்பேட்டையில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 8-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார்.

    அதனைத்தொடர்ந்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தாராபுரம் பொள்ளாச்சி மெயின்ரோடு, அம்மா பேட்டை பகுதியில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் முத்தமிழறிஞர்டாக்டர்.கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும்பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் , மண்டல இணை இயக்குநர் முஸ்தபா, திருப்பூர் மாநகராட்சி 4-ம்மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் நகர்மன்றத் தலைவர் பாப்புகண்ணன், முதல்வர் (தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையம்) பிரபு,தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் செந்தில்குமார், மாணவ, மாணவிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொ

    Next Story
    ×