search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழில் நிறுவனங்களின் 721 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல்
    X

    மதுரை தனியார் ஓட்டலில் நடந்த இணையவழி ஒற்றை சாரள முனையம் விழிப்புணர்வு கருத்தரங்கில் கலெக்டர் அனீஷ்சேகர் பேசியபோது எடுத்த படம். 

    தொழில் நிறுவனங்களின் 721 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல்

    • தொழில் நிறுவனங்களின் 721 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.
    • இறுதி ஒப்புதல் இணைய வழியிலேயே பதிவிறக்கம் செய்யலாம்.

    மதுரை

    மதுரை கோர்ட்யாட் மேரியாட் விடுதியில் இன்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில், தொழில் மற்றும் வர்த்த கத்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ் முன்னி லையில் மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங் களைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் பிரிதிநிதி கள் பங்கேற்ற தொழில் நிறுவ னங்களுக்கான இணையவழி ஒற்றை சாளர முனையம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலெக்டர் அனீஷ்சேகர் பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதற்காகவும், தொழில் நிறுவனங்களின் வணிக மேம்பாட்டிற்காகவும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் தொழில் தொடங்குவதை எளிமையாக்க இணையவழி ஒற்றை சாளர முனையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஒற்றை சாளர முனையத்தில் 200-க்கும் மேற்பட்ட அனுமதிகள் 25-க்கும் மேற்பட்ட அரசுத்து றை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப் பட்டு வருகிறது. இந்த ஒற்றை சாளர முனையத்தின் மூலம் விண்ணப்பத்தில் உள்ள குறைகளை களைய ஒரே முறை குறைநிவர்த்தி வினவல் அனுப்பப்பட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

    இறுதி ஒப்புதல் இணைய வழியிலேயே பதிவிறக்கம் செய்யலாம். உரிய கால வரம்பிற்குள் வழங்க ப்படாத ஒப்புதல்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட கால அளவிற்கு பிறகு ஒப்புதல் வழங்கப்பட்டதாக கருதப் படும்.

    ஒற்றை சாளர முனை யத்தின் செயலாக்கத்திற்கு பிறகு தமிழ்நாட்டின் வணிக வசதியாக்கல் எளிமைப் படுத்தப்பட்டுள்ளது. அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையே ஒப்புதல் பெறும் நடைமுறை கள் தெளிவுபடுத்த ப்பட்டுள் ளது. இணைய வழியில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதால் கால விரையம் தவிர்க்கப்படு கிறது.

    ஒற்றை சாளர முனை யத்தின் மூலம் தமிழ்நாட்டில் 18 ஆயிரம் விண்ணப்பங்கள் துரிதமாக பரிசீலிக்கப்பட்டு 15 ஆயிரம் விண்ணப்பங் களுக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் 865 விண்ணப்பங்கள் துரிதமாக பரிசீலிக்கப்பட்டு 771 விண்ணப்பங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள் ளன. தொழில் நிறுவனங்கள் வசதிக்காக செயல்படுத்தப் பட்டு வரும் இந்தத் திட்டத்தை தொழில் முனை வோர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கள் கணேசன் (மதுரை) மாரிமுத்து (ராமநாதபுரம்) உள்பட அரசு அலுவலர்கள், மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சார்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×