என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Memorial"

    • 1914-ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை ஆட்சி செய்ததாக வரலாறுகள் கூறுகின்றன.
    • சமாதியில் பிரந்தா எ டியர் டாக் 26 நவம்பர் 1914 என்ற தேதியையும் ஆங்கிலத்தில் பொறித்து வைத்துள்ளனர்.

    செஞ்சி:

    செஞ்சியில் பிரெஞ்சுகாரர்கள் வளர்ப்பு நாய்க்கு நினைவிடம் கட்டி வைத்துள்ளனர்.

    1914-ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை ஆட்சி செய்ததாக வரலாறுகள் கூறுகின்றன. அப்போது அவர்கள் தங்குவதற்காக செஞ்சி-திண்டிவனம் சாலையில் சங்கரபரணி ஆற்றின் அருகே தாழ்வாரம் உள்ள ஒரு அடுக்கு கொண்ட வீட்டினை செங்கற்களால் மிக அழகாக கட்டியுள்ளனர்.

    பிரெஞ்சுக்காரர்கள் தங்களுடைய பாதுகாப்பு கருதியும் கவுரவமான வாழ்க்கை நடத்துவதில் ஆசை கொண்ட இவர்கள் மிகச் செல்லமாக வளர்த்து வந்த பிரந்தா என்ற பெயரிட்டுள்ள நாய் இறந்து விட்டதை இந்த பங்களாவுக்கு அருகிலேயே புதைத்து அதற்கு சமாதியும் அமைத்துள்ளனர்.

    அவர்கள் வசித்த வீடு 110 வருடங்களுக்குப் பிறகும் இதுவரை நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்பட்டு அந்த இடத்தில் நெடுஞ்சாலைத்துறை பங்களாவாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன் அருகில் உள்ள நாய்க்கு கட்டப்பட்ட சமாதியும் இன்று வரை பராமரிக்கப்பட்டு வருகிறது.

    சமாதியில் பிரந்தா எ டியர் டாக் 26 நவம்பர் 1914 என்ற தேதியையும் ஆங்கிலத்தில் பொறித்து வைத்துள்ளனர். இது பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளது. நூறாண்டுகளைக் கடந்த பங்களாவும் தற்போது பழமை மாறாமல் நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்பட்டு அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் வந்தால் தங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

    • என்.ஏ.ராமச்சந்திர ராஜா 30-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.
    • சக்தி கண் மருத்துவமனை இணைந்து ராஜபாளையத்தில் இலவச கண் மருத்துவ முகாமை நடத்தியது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் என்.ஏ.ராமச்சந்திர ராஜா அறக்கட்டளையின் நிறுவனர் அமரர் என்.ஏ.ராமச்சந்திர ராஜா 30-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.

    அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளிக்கு வடபுறம் அமைந்துள்ள சாந்தி ஸ்தல் பூங்காவில் அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி வழிபாடு நடந்தது. அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார்.

    என்.ஏ.ராமச்சந்திரராஜா குருகுல தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்திராஜா முன்னிலை வகித்தார். அறக்கட்டளை உறுப்பினர், குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டு என்.ஏ.ராமச்சந்திர ராஜாவின் சீரிய குணங்களையும், சேவைகளையும் நினைவு கூர்ந்தனர்.

    நினைவு தினத்தை முன்னிட்டு என்.ஏ.ராமச்சந்திர ராஜா அறக்கட்டளை, பழையபாளையம் மகுமை பொதுப்பண்டு, சக்தி கண் மருத்துவமனை இணைந்து ராஜபாளையத்தில் இலவச கண் மருத்துவ முகாமை நடத்தியது.

    • நினைவரங்கம் அமைக்க தமிழக அரசு ரூ.4.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
    • பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் ஆய்வு செய்தார்.

    கோவை,

    கோவை பொள்ளாச்சி அடுத்த சின்னாம்பாளையத்தில் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டம் நிறைவேற காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் எம்.எல்.ஏ. வி.கே.பழனிச்சாமி, முன்னாள் மத்திய மந்திரி சி.சுப்பிரமணியம், தொழில் அதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகிய முன்னோடிகளுக்கு உருவச்சிலை மற்றும் நினைவரங்கம் அமைப்பது என்று தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ.4.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    இதனை தொடர்ந்து சின்னாம்பாளையம் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் உருவச்சிலைகள் மற்றும் நினைவரங்கம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழக செய்தி மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பொள்ளாச்சிக்கு வந்திருந்தார். அப்போது அவர் சின்னாம்பாளையம் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் உருவச்சிலைகள் மற்றும் நினைவரங்கம் அமைக்கும் பணிகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் விடுதலை போராட்ட வீரர்கள் மற்றும் மாநில வளர்ச்சிக்கு பாடுபட்ட முக்கிய தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவர்களுக்கு அரசு சார்பில் மணி மண்டபம் மற்றும் சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டம் உருவாக காரணமாக இருந்த தலைவர்களுக்கு உருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கம், ரூ.4.30 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இது 2 அடுக்கு மாடிகள் உடைய கட்டிடமாக அமையும். அங்கு உள்ள கீழ்த்தளத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் கருத்தரங்கு நடத்து வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

    மேல்த ளத்தில் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனம் குறித்து இன்றைய தலைமுறையினர் அறியும்வகையில் திட்டப்பணிகள் அடங்கிய மாதிரி வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன்பிறகு உருவச்சிலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கும்.

    இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் கூறி உள்ளார்.

    • பெண் ஊழியர்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் சமூகப் பயன் அளிக்கும் திட்டங்களும் வரைய றுக்கப்பட்டன.
    • பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் இயங்கிய பஞ்சாலைகளில் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டார்கள்.

    குறைந்த கூலிக்கு தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய நிலைமை இருந்தது. இதனை எதிர்த்தும் 8 மணி நேர வேலையை அமல்படுத்த வலியுறுத்தி வ.சுப்பையா தலைமையில் சவானா பஞ்சாலையில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர் 84 நாள்கள் நடை பெற்ற போராட்டத்திற்கு பின் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் அமலாகவில்லை.

    1936 ஜூலை 23-ந் தேதியிலிருந்து உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தைத் தொழிலாளர்கள் தொடங்கினார்கள். 1936 ஜூலை 30-ந் நாள் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 12 தொழிலாளர்கள் பலியாகினர்.

    அதன் விளைவாக 1937 ஏப்ரல் 6-ந் தேதி பிரஞ்சிந்தி யாவிற்கான தொழிற்சங்கச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி தொழிலா ளர்களுக்கு 8மணிநேர வேலையும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையும் வழங்கப்பட்டது. ஆசிய நாடுகளிலேயே 8 மணி நேர வேலை என்பது புதுவையில் தான் முதன்முதலில் அமு லாக்கப்பட்டது. அத்துடன் தொழிலாளர்களு க்கான கூட்டு ஒப்பந்தம், ஓய்வுக்கால ஊதியம், பெண் ஊழியர்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் சமூகப் பயன் அளிக்கும் திட்டங்களும் வரைய றுக்கப்பட்டன.

    8 மணி நேர வேலையை வலியுறுத்தி தியாகிகள் உயிர்தியாகம் செய்த ஜூலை 30-ம் நாள் தியாகி கள் தினமாக கடைபிடிக்கப் பட்டு வருகிறது. அதன்படி 87-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தியாகிகள் தினம்  அனுசரிக்கப்பட்டது.

    புதுவை பஞ்சாலை தொழிலாளர்கள் சங்க செயலாளர் மூர்த்தி தலைமையில் மறைமலை அடிகள் சாலை சுதேசி மில் அருகே இருந்து புறப்பட்ட ஊர்வலம் தியாகிகள் சதுக்கத்தை அடைந்தது. அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    சங்க தலைவர் அபிஷே கம் உறுதி மொழி வாசித்தார். இதனை தாடர்ந்து முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் தியாகிகள் கொடியை ஏற்றினார். கன்னியப்பன் ஏ.ஐ.டி.யூ.சி. கொடியை ஏற்றினார். இந்திய கம்யூனிஸ்டு மாநில ெசயலாளர் சலீம், ஏ.ஐ.டி.யூ.சி. தினேஷ்பொன்னையா, முன்னாள் எம்.எல்.ஏ. நாரா கலைநாதன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொது செயலாளர் சேதுசெல்வம், நிர்வரிகள் அந்தோணி, ராமமூர்த்தி, சுப்பையா, எல்லை சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏரளமான தொழிலாளர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இதேபோல் சி.ஐ.டி.யூ சார்பிலும் தியாகிகள் சதுக்கம் அருகே மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. சி.ஐ.டி.யூ. செயலாளர் சீனுவாசன்,பெருமாள்.கலியமூர்த்தி. பிரபுராஜ், வடிவேலு, கொளஞ்சியப்பன் ரவிச்சந்திரன், பச்சைமுத்து, மதிவாணன், மணிபாலன், மது,

    புதுவை மில் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் குணசேகரன், ராமகிருஷ்ணன், சுப்பிரமணியன், ராமலிங்கம், மால் ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்கள், மினி லாரி ஓட்டுநர், சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் இணைக்கப்பட்ட சங்க நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • 100 வருடங்களுக்கு மேலான பழமையான நினைவு சின்னங்களை பாதுகாக்க வேண்டும்.
    • தொல்லியல் ஆய்வாளர் வலியுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே புதுக்கோவில் அரசு உயர்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றத் துவக்க விழா மற்றும் கண்காட்சி பள்ளித் தலை மையாசிரியர் மலைப் பாண்டி தலைமையில் நடைபெற்றது. 8-ம் வகுப்பு மாணவி மகாஸ்ரீ வர வேற்றார். தொன்மை பாதுகாப்பு மன்ற செயலர் ராமச்சந்திரன் பழமையை பாதுகாப்பதில் மன்றத்தின் செயல்பாடுகள் பற்றி கூறினார்.

    ராமநாதபுரம் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கி ணைப்பாளரும், தொல்லி யல் ஆய்வாளருமான ராஜகுரு சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான வர லாற்றைக் கொண்டிருக்கும் கட்டிடங்கள், அரண்மனை கள், கோட்டைகள், கோ வில்கள், பள்ளி வாசல்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், மண்டபங்கள், சத்திரங்கள், மடங்கள், தொல்பொ ருட்கள் பரவி கிடக்கும் தொல்லியல் மேடுகள், அகழாய்வுத் தளங்கள், கல்வெட்டுகள், கல்தூண்கள், நடுகற்கள், பழமையான சிற்பங்கள், மரங்கள் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்றுச் சின்னங்கள் ஆகும்.

    வெறும் இலக்கிய சான்று கள் நம் தொன்மையைச் சொல்லிடாது. அதனுடன் தொல்லியல் தடயங்களும் இருந்தால் தான் அதன் பழமை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும். பழமையான தொல்லியல் சின்னங்களை பாது காக்காமல் விட்டு விட்டால் அவை அழிந்து, இடிந்து போகும்.

    வரலாறு தெரிந்த மாண வர்களை அதிகமாக உரு வாக்குவதற்கு தொன்மை பாதுகாப்பு மன்றம் உதவு கிறது

    இவ்வாறு அவர் கூறினார்.

    7-ம் வகுப்பு மாணவன் வால்மீகநாதன் நன்றி கூறி னார். பின்பு நடந்த கண்காட்சியில் கல்வெட்டு களின் அச்சுப்படிகள், பழைய, புதிய, நுண் கற்கால, பெருங்கற்கால தொல் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவ மாணவிகள் நேரில் பார்த்து அறிந்து கொண்ட னர்.

    • ராணுவம் அந்த கிராமத்தை தத்தெடுத்து நிவாரண பொருட்கள் வழங்கியது.
    • ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் 2 டன்கள் எடையில் பளிங்கு கற்களால் ஆன நினைவு சின்னம் அமைக்கப்பட்டு வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த நஞ்சப்பன் சத்திரம் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது. இதில் அந்த விமானத்தில் பயணித்த ராணுவ முப்படை தளபதி பிபன்ராவ், அவரது மனைவி உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் ராணுவ முப்படை தளபதி பிபின்ராவத் விபத்தில் உயிர் நீத்த நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி அங்கு நினைவுச்சின்னம் அமைப்பது என ராணுவ அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இதுகுறித்து வெலிங்டன் ராணுவ பயிற்சி மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்திய முப்படை ராணுவ தளபதி பிபின்ராவத் பயணித்த ஹெலிகாப்டர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் விபத்துக்கு உள்ளானது.

    அப்போது அங்கு வசிக்கும் பொதுமக்கள் மீட்புபணியில் ராணுவத்துக்கு பெரிதும் உதவியாக இருந்தனர். எனவே ராணுவம் அந்த கிராமத்தை தத்தெடுத்து நிவாரண பொருட்கள் வழங்கியது. மேலும் அங்கு ஓராண்டுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

    இந்த நிலையில் நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்நீத்த ராணுவ அதிகாரிகளை நினைவுகூறும் வகையில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் ராணுவம் சார்பில் நினைவுச்சின்னம் அமைக்கப்படுகிறது. ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் 2 டன்கள் எடையில் பளிங்கு கற்களால் ஆன நினைவு சின்னம் அமைக்கப்பட்டு வருகிறது.

    அதில் உயிர்நீத்த வீரர்கள் பற்றிய விவரங்கள் தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இடம்பெற்று உள்ளது. இந்த நினைவுச் சின்னம் வருகிற டிசம்பர் 8-ந்தேதி திறந்து வைக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அடக்கம் முடிந்ததும் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த தொண்டர்களுக்கு கண்ணீர் மல்க பிரேமலதா நன்றி தெரிவித்தார்.
    • அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் சுமார் 1000 சதுர அடி பரப்பளவு கொண்டதுதான்.

    சென்னை:

    மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. அடக்கம் முடிந்ததும் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த தொண்டர்களுக்கு கண்ணீர் மல்க பிரேமலதா நன்றி தெரிவித்தார்.

    அப்போது, அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் தொண்டர்கள் வழிபடும் நினைவிடமாக மாற்றப்படும். அந்த நினைவிடத்தில் அணையா தீபம் ஏற்றி வைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை பிரேமலதா மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் சுமார் 1000 சதுர அடி பரப்பளவு கொண்டதுதான்.

    அந்த இடத்தில் மணி மண்டபம் அமைத்து எம்.ஜி.ஆர்., அண்ணா நினைவிடங்களில் வைக்கப்பட்டு உள்ளது போல் அணையா ஜோதி வைக்கப்படுகிறது, விஜயகாந்த் உருவப்படமும் அதில் இடம் பெறுகிறது.

    நினைவிடத்துக்கு வரும் தொண்டர்கள் மணிமண்டபத்தை சுற்றி வந்து விஜயகாந்த் உருவப் படத்தை வணங்கி செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. இறந்து 5-வது நாளில் செய்யப்படும் சடங்குகள் நாளை மறுநாள் (திங்கள்) செய்யப்படுகிறது. அதன் பிறகு பணிகள் தொடங்க உள்ளது. இதற்கிடையில் நினைவிட வரைபடமும் தயாராகிவிடும் என்றனர்.

    பணிகளை தொடங்கி ஒரு மாதத்துக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நினைவிடம் கோயம்பேடு ரோட்டில் இருந்து பார்த்தாலே தெரியும் வகையிலும் அமைக்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • நினைவிடத்தில் விஜயகாந்த் புகைப்படம் மலர் தூவி அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
    • தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். உடல் நலக்குறைவால் உயிரிழந்த அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    விஜயகாந்த் மரணம் அடைந்து ஒரு மாதத்தை கடந்துவிட்ட நிலையிலும் அவரது நினைவிடத்தில் தினமும் பொதுமக்களும் தே.மு.தி.க. தொண்டர்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    குறிப்பாக வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் தே.மு.தி.க. அலுவலகத்திற்கு சென்று விலை உயர்ந்த மாலைகளை வாங்கி வைத்து விஜயகாந்த் நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    நினைவிடத்தில் விஜயகாந்த் புகைப்படம் மலர் தூவி அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அங்கு வருபவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி அஞ்சலி செலுத்த வரும் பொது மக்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு அதனை தங்களது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவதையும் வழக்கமாகக் கொண்டு உள்ளனர்.

    இதன் மூலம் விஜயகாந்த் உயிரிழந்த பிறகும் அவரது நினைவை போற்றும் வகையில் பொதுமக்கள் அவருக்கு தொடர்ச்சியாக மரியாதை செய்து வருவது தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, "எந்த தலைவருக்கும் இல்லாத அளவுக்கு உயிரிழந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் தொடர்ச்சியாக பொதுமக்கள் நேரில் வந்து விஜயாந்த்துக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இது எங்களுக்கு நெகழ்ச்சியாகவே உள்ளது" என்று தெரிவித்தார்.

    விஜயகாந்தை பொருத்தவரையில் எல்லோருக்கும் உதவும் எண்ணம் கொண்டவராகவும் தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் செய்துள்ளார். இது போன்ற நல்ல உள்ளம் கொண்டவராக அவர் திகழ்ந்ததன் காரணமாகவே விஜயகாந்த் மீது பொதுமக்கள் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதாகவும் அதுதான் தற்போது வெளிப்பட்டு வருவதாகவும் தே.மு.தி.க. நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

    • மோடியுடன் முக்கிய இலாக்காக்களை உள்ளடக்கிய 30 அமைச்சர்கள் முதற்கட்டமாக பதவியேற்க உள்ளனர்.
    • காந்தியின் நினைவிடமான ராஜ்கத்திற்கு சென்ற மோடி அங்கு மரியாதை செலுத்தினார்.

    மக்களவைத் தேர்தலில் 292 இடங்களை கைப்பற்றி பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இன்று இரவு 7.15 மணிக்கு மோடி 3 வது முறையாக மீண்டும் பதவியேற்க உள்ளார். அவருடன் முக்கிய இலாக்காக்களை உள்ளடக்கிய 30 அமைச்சர்கள் முதற்கட்டமாக பதவியேற்க உள்ளனர். கடந்த தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் யாரையும் எதிர்பார்க்காமல் ஆட்சியமைத்த பாஜக இந்த முறை ஆர்.ஜே.டி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் தயவை எதிர்நோக்கியுள்ளது.

    இது மோடியின் உலகத் தலைவர் பிம்பத்துக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. நேற்று முன் தினம் நடந்த என்.டி.ஏ கூட்டத்திலும் மோடி இறுக்கமான முகத்துடனேயே காணப்பட்டார்.

    இந்நிலையில் இன்று [ஜூன் 9] இரவு 7.15 மணி அளவில் மோடி 3 வது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில் தற்போது டெல்லியில் உள்ள முக்கிய தலைவர்களின் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்.

    அந்த வகையில், மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்கத்திற்கு சென்ற மோடி அங்கு மரியாதை செலுத்தினார். வாஜ்பாயின் நினைவிடமாக சதைவ் அடலுக்கு சென்று அதன்பின்னர் தேசிய போர் நினைவுச்சின்னம் அமைத்துள்ள இடத்துக்கும் சென்று மரியாதை செலுத்தியுள்ளார். 

    • டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படுகிறது.
    • காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார்.

    அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    தற்போது மன்மோகன் சிங்கின் உடல், அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் 27/12/24 அன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 7 நாட்களுக்கு துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்த சூழலில், இன்று காலை 11 மணியளவில் மத்திய மந்திரிசபை கூடியது. டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் என காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நாளை காலை 8.30 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

    இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவிடம் அமைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், " மன்மோகன் சிங்கை தகனம் செய்யும் இடத்திலே அவருக்கு நினைவிடம் அமைப்பதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

    ஒரு எளிய பின்னணியில் இருந்து வந்து, பிரிவினையின் வலிகளையும் துன்பங்களையும் அனுபவித்து, தனது முழு மன உறுதியினாலும், உறுதியினாலும் உலகின் முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவராக உயர்ந்தார்.

    மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, டாக்டர் மன்மோகன் சிங்கின் அந்தஸ்துக்கு ஏற்றவாறு, டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடத்திலே அவருக்கு கட்டக்கூடிய நினைவிடம் இருக்கவேண்டும் என்ற மேற்கண்ட கோரிக்கை ஏற்கப்படும் என்று நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால், மன்மோகன் சிங் நினைவிடத்திற்கு டெல்லியில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை.

    காங்கிரஸ் உடன் கலந்தாலோசிக்காமல் நிகம்போத் காட்டில் தகனம் செய்யப்படும் என உள்துறை அறிவித்துள்ளது.

    இதற்கிடையில், நினைவிடம் அமைப்பது அவருக்கு அளிக்கும் அஞ்சலி என மோடிக்கு கார்கே கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கும் என்றது மத்திய அரசு.
    • மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படுகிறது.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

    மன்மோகன் சிங்கின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. நாடு முழுவதும் 7 நாட்களுக்கு துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் 28ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும் என காங்கிரஸ் தெரிவித்தது.

    இதற்கிடையே, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். நினைவிடம் அமைப்பது அவருக்கு அளிக்கும் அஞ்சலி என அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவிடம் அமைக்க அரசு இடம் ஒதுக்கும். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
    • முன்னாள் ஜனாதிபதி மகள் சர்மிஸ்தா முகர்ஜி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் மகளான சர்மிஸ்தா முகர்ஜி, நினைவிடம் கட்ட ஒப்புதல் அளித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, முன்னாள் ஜனாதிபதியின் மகள் சர்மிஸ்தா முகர்ஜி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தி:

    இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியான மறைந்த பிரணாப் முகர்ஜியின் சமாதி அமைப்பதற்காக ராஷ்ட்ரிய ஸ்மிருதி வளாகத்திற்குள் (ராஜ்காட் வளாகத்தின் ஒரு பகுதி) ஒரு நியமிக்கப்பட்ட இடத்தை ஒதுக்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    பாபாவுக்கு ஒரு நினைவிடத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் முடிவிற்கு எனது இதயத்தின் மையத்தில் இருந்து நன்றி. பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க சென்றேன்.

    இது மிகவும் நேசத்துக்கு உரியது. பிரதமரின் இந்த எதிர்பாராத செயலால் மிகவும் மகிழ்ந்தேன் என பதிவிட்டுள்ளார்.

    ×