search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "memorial"

    • நினைவிடத்தில் விஜயகாந்த் புகைப்படம் மலர் தூவி அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
    • தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். உடல் நலக்குறைவால் உயிரிழந்த அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    விஜயகாந்த் மரணம் அடைந்து ஒரு மாதத்தை கடந்துவிட்ட நிலையிலும் அவரது நினைவிடத்தில் தினமும் பொதுமக்களும் தே.மு.தி.க. தொண்டர்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    குறிப்பாக வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் தே.மு.தி.க. அலுவலகத்திற்கு சென்று விலை உயர்ந்த மாலைகளை வாங்கி வைத்து விஜயகாந்த் நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    நினைவிடத்தில் விஜயகாந்த் புகைப்படம் மலர் தூவி அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அங்கு வருபவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி அஞ்சலி செலுத்த வரும் பொது மக்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு அதனை தங்களது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவதையும் வழக்கமாகக் கொண்டு உள்ளனர்.

    இதன் மூலம் விஜயகாந்த் உயிரிழந்த பிறகும் அவரது நினைவை போற்றும் வகையில் பொதுமக்கள் அவருக்கு தொடர்ச்சியாக மரியாதை செய்து வருவது தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, "எந்த தலைவருக்கும் இல்லாத அளவுக்கு உயிரிழந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் தொடர்ச்சியாக பொதுமக்கள் நேரில் வந்து விஜயாந்த்துக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இது எங்களுக்கு நெகழ்ச்சியாகவே உள்ளது" என்று தெரிவித்தார்.

    விஜயகாந்தை பொருத்தவரையில் எல்லோருக்கும் உதவும் எண்ணம் கொண்டவராகவும் தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் செய்துள்ளார். இது போன்ற நல்ல உள்ளம் கொண்டவராக அவர் திகழ்ந்ததன் காரணமாகவே விஜயகாந்த் மீது பொதுமக்கள் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதாகவும் அதுதான் தற்போது வெளிப்பட்டு வருவதாகவும் தே.மு.தி.க. நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

    • அடக்கம் முடிந்ததும் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த தொண்டர்களுக்கு கண்ணீர் மல்க பிரேமலதா நன்றி தெரிவித்தார்.
    • அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் சுமார் 1000 சதுர அடி பரப்பளவு கொண்டதுதான்.

    சென்னை:

    மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. அடக்கம் முடிந்ததும் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த தொண்டர்களுக்கு கண்ணீர் மல்க பிரேமலதா நன்றி தெரிவித்தார்.

    அப்போது, அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் தொண்டர்கள் வழிபடும் நினைவிடமாக மாற்றப்படும். அந்த நினைவிடத்தில் அணையா தீபம் ஏற்றி வைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை பிரேமலதா மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் சுமார் 1000 சதுர அடி பரப்பளவு கொண்டதுதான்.

    அந்த இடத்தில் மணி மண்டபம் அமைத்து எம்.ஜி.ஆர்., அண்ணா நினைவிடங்களில் வைக்கப்பட்டு உள்ளது போல் அணையா ஜோதி வைக்கப்படுகிறது, விஜயகாந்த் உருவப்படமும் அதில் இடம் பெறுகிறது.

    நினைவிடத்துக்கு வரும் தொண்டர்கள் மணிமண்டபத்தை சுற்றி வந்து விஜயகாந்த் உருவப் படத்தை வணங்கி செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. இறந்து 5-வது நாளில் செய்யப்படும் சடங்குகள் நாளை மறுநாள் (திங்கள்) செய்யப்படுகிறது. அதன் பிறகு பணிகள் தொடங்க உள்ளது. இதற்கிடையில் நினைவிட வரைபடமும் தயாராகிவிடும் என்றனர்.

    பணிகளை தொடங்கி ஒரு மாதத்துக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நினைவிடம் கோயம்பேடு ரோட்டில் இருந்து பார்த்தாலே தெரியும் வகையிலும் அமைக்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • ராணுவம் அந்த கிராமத்தை தத்தெடுத்து நிவாரண பொருட்கள் வழங்கியது.
    • ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் 2 டன்கள் எடையில் பளிங்கு கற்களால் ஆன நினைவு சின்னம் அமைக்கப்பட்டு வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த நஞ்சப்பன் சத்திரம் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது. இதில் அந்த விமானத்தில் பயணித்த ராணுவ முப்படை தளபதி பிபன்ராவ், அவரது மனைவி உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் ராணுவ முப்படை தளபதி பிபின்ராவத் விபத்தில் உயிர் நீத்த நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி அங்கு நினைவுச்சின்னம் அமைப்பது என ராணுவ அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இதுகுறித்து வெலிங்டன் ராணுவ பயிற்சி மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்திய முப்படை ராணுவ தளபதி பிபின்ராவத் பயணித்த ஹெலிகாப்டர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் விபத்துக்கு உள்ளானது.

    அப்போது அங்கு வசிக்கும் பொதுமக்கள் மீட்புபணியில் ராணுவத்துக்கு பெரிதும் உதவியாக இருந்தனர். எனவே ராணுவம் அந்த கிராமத்தை தத்தெடுத்து நிவாரண பொருட்கள் வழங்கியது. மேலும் அங்கு ஓராண்டுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

    இந்த நிலையில் நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்நீத்த ராணுவ அதிகாரிகளை நினைவுகூறும் வகையில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி நஞ்சப்பன்சத்திரம் பகுதியில் ராணுவம் சார்பில் நினைவுச்சின்னம் அமைக்கப்படுகிறது. ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் 2 டன்கள் எடையில் பளிங்கு கற்களால் ஆன நினைவு சின்னம் அமைக்கப்பட்டு வருகிறது.

    அதில் உயிர்நீத்த வீரர்கள் பற்றிய விவரங்கள் தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இடம்பெற்று உள்ளது. இந்த நினைவுச் சின்னம் வருகிற டிசம்பர் 8-ந்தேதி திறந்து வைக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 100 வருடங்களுக்கு மேலான பழமையான நினைவு சின்னங்களை பாதுகாக்க வேண்டும்.
    • தொல்லியல் ஆய்வாளர் வலியுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே புதுக்கோவில் அரசு உயர்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றத் துவக்க விழா மற்றும் கண்காட்சி பள்ளித் தலை மையாசிரியர் மலைப் பாண்டி தலைமையில் நடைபெற்றது. 8-ம் வகுப்பு மாணவி மகாஸ்ரீ வர வேற்றார். தொன்மை பாதுகாப்பு மன்ற செயலர் ராமச்சந்திரன் பழமையை பாதுகாப்பதில் மன்றத்தின் செயல்பாடுகள் பற்றி கூறினார்.

    ராமநாதபுரம் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கி ணைப்பாளரும், தொல்லி யல் ஆய்வாளருமான ராஜகுரு சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான வர லாற்றைக் கொண்டிருக்கும் கட்டிடங்கள், அரண்மனை கள், கோட்டைகள், கோ வில்கள், பள்ளி வாசல்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், மண்டபங்கள், சத்திரங்கள், மடங்கள், தொல்பொ ருட்கள் பரவி கிடக்கும் தொல்லியல் மேடுகள், அகழாய்வுத் தளங்கள், கல்வெட்டுகள், கல்தூண்கள், நடுகற்கள், பழமையான சிற்பங்கள், மரங்கள் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்றுச் சின்னங்கள் ஆகும்.

    வெறும் இலக்கிய சான்று கள் நம் தொன்மையைச் சொல்லிடாது. அதனுடன் தொல்லியல் தடயங்களும் இருந்தால் தான் அதன் பழமை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும். பழமையான தொல்லியல் சின்னங்களை பாது காக்காமல் விட்டு விட்டால் அவை அழிந்து, இடிந்து போகும்.

    வரலாறு தெரிந்த மாண வர்களை அதிகமாக உரு வாக்குவதற்கு தொன்மை பாதுகாப்பு மன்றம் உதவு கிறது

    இவ்வாறு அவர் கூறினார்.

    7-ம் வகுப்பு மாணவன் வால்மீகநாதன் நன்றி கூறி னார். பின்பு நடந்த கண்காட்சியில் கல்வெட்டு களின் அச்சுப்படிகள், பழைய, புதிய, நுண் கற்கால, பெருங்கற்கால தொல் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவ மாணவிகள் நேரில் பார்த்து அறிந்து கொண்ட னர்.

    • பெண் ஊழியர்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் சமூகப் பயன் அளிக்கும் திட்டங்களும் வரைய றுக்கப்பட்டன.
    • பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் இயங்கிய பஞ்சாலைகளில் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டார்கள்.

    குறைந்த கூலிக்கு தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய நிலைமை இருந்தது. இதனை எதிர்த்தும் 8 மணி நேர வேலையை அமல்படுத்த வலியுறுத்தி வ.சுப்பையா தலைமையில் சவானா பஞ்சாலையில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர் 84 நாள்கள் நடை பெற்ற போராட்டத்திற்கு பின் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் அமலாகவில்லை.

    1936 ஜூலை 23-ந் தேதியிலிருந்து உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தைத் தொழிலாளர்கள் தொடங்கினார்கள். 1936 ஜூலை 30-ந் நாள் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 12 தொழிலாளர்கள் பலியாகினர்.

    அதன் விளைவாக 1937 ஏப்ரல் 6-ந் தேதி பிரஞ்சிந்தி யாவிற்கான தொழிற்சங்கச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி தொழிலா ளர்களுக்கு 8மணிநேர வேலையும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையும் வழங்கப்பட்டது. ஆசிய நாடுகளிலேயே 8 மணி நேர வேலை என்பது புதுவையில் தான் முதன்முதலில் அமு லாக்கப்பட்டது. அத்துடன் தொழிலாளர்களு க்கான கூட்டு ஒப்பந்தம், ஓய்வுக்கால ஊதியம், பெண் ஊழியர்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் சமூகப் பயன் அளிக்கும் திட்டங்களும் வரைய றுக்கப்பட்டன.

    8 மணி நேர வேலையை வலியுறுத்தி தியாகிகள் உயிர்தியாகம் செய்த ஜூலை 30-ம் நாள் தியாகி கள் தினமாக கடைபிடிக்கப் பட்டு வருகிறது. அதன்படி 87-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தியாகிகள் தினம்  அனுசரிக்கப்பட்டது.

    புதுவை பஞ்சாலை தொழிலாளர்கள் சங்க செயலாளர் மூர்த்தி தலைமையில் மறைமலை அடிகள் சாலை சுதேசி மில் அருகே இருந்து புறப்பட்ட ஊர்வலம் தியாகிகள் சதுக்கத்தை அடைந்தது. அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    சங்க தலைவர் அபிஷே கம் உறுதி மொழி வாசித்தார். இதனை தாடர்ந்து முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் தியாகிகள் கொடியை ஏற்றினார். கன்னியப்பன் ஏ.ஐ.டி.யூ.சி. கொடியை ஏற்றினார். இந்திய கம்யூனிஸ்டு மாநில ெசயலாளர் சலீம், ஏ.ஐ.டி.யூ.சி. தினேஷ்பொன்னையா, முன்னாள் எம்.எல்.ஏ. நாரா கலைநாதன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொது செயலாளர் சேதுசெல்வம், நிர்வரிகள் அந்தோணி, ராமமூர்த்தி, சுப்பையா, எல்லை சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏரளமான தொழிலாளர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இதேபோல் சி.ஐ.டி.யூ சார்பிலும் தியாகிகள் சதுக்கம் அருகே மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. சி.ஐ.டி.யூ. செயலாளர் சீனுவாசன்,பெருமாள்.கலியமூர்த்தி. பிரபுராஜ், வடிவேலு, கொளஞ்சியப்பன் ரவிச்சந்திரன், பச்சைமுத்து, மதிவாணன், மணிபாலன், மது,

    புதுவை மில் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் குணசேகரன், ராமகிருஷ்ணன், சுப்பிரமணியன், ராமலிங்கம், மால் ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்கள், மினி லாரி ஓட்டுநர், சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் இணைக்கப்பட்ட சங்க நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • நினைவரங்கம் அமைக்க தமிழக அரசு ரூ.4.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
    • பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் ஆய்வு செய்தார்.

    கோவை,

    கோவை பொள்ளாச்சி அடுத்த சின்னாம்பாளையத்தில் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டம் நிறைவேற காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் எம்.எல்.ஏ. வி.கே.பழனிச்சாமி, முன்னாள் மத்திய மந்திரி சி.சுப்பிரமணியம், தொழில் அதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகிய முன்னோடிகளுக்கு உருவச்சிலை மற்றும் நினைவரங்கம் அமைப்பது என்று தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ.4.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    இதனை தொடர்ந்து சின்னாம்பாளையம் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் உருவச்சிலைகள் மற்றும் நினைவரங்கம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழக செய்தி மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பொள்ளாச்சிக்கு வந்திருந்தார். அப்போது அவர் சின்னாம்பாளையம் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் உருவச்சிலைகள் மற்றும் நினைவரங்கம் அமைக்கும் பணிகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் விடுதலை போராட்ட வீரர்கள் மற்றும் மாநில வளர்ச்சிக்கு பாடுபட்ட முக்கிய தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவர்களுக்கு அரசு சார்பில் மணி மண்டபம் மற்றும் சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டம் உருவாக காரணமாக இருந்த தலைவர்களுக்கு உருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கம், ரூ.4.30 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இது 2 அடுக்கு மாடிகள் உடைய கட்டிடமாக அமையும். அங்கு உள்ள கீழ்த்தளத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் கருத்தரங்கு நடத்து வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

    மேல்த ளத்தில் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனம் குறித்து இன்றைய தலைமுறையினர் அறியும்வகையில் திட்டப்பணிகள் அடங்கிய மாதிரி வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன்பிறகு உருவச்சிலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கும்.

    இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் கூறி உள்ளார்.

    • என்.ஏ.ராமச்சந்திர ராஜா 30-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.
    • சக்தி கண் மருத்துவமனை இணைந்து ராஜபாளையத்தில் இலவச கண் மருத்துவ முகாமை நடத்தியது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் என்.ஏ.ராமச்சந்திர ராஜா அறக்கட்டளையின் நிறுவனர் அமரர் என்.ஏ.ராமச்சந்திர ராஜா 30-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.

    அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளிக்கு வடபுறம் அமைந்துள்ள சாந்தி ஸ்தல் பூங்காவில் அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி வழிபாடு நடந்தது. அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார்.

    என்.ஏ.ராமச்சந்திரராஜா குருகுல தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்திராஜா முன்னிலை வகித்தார். அறக்கட்டளை உறுப்பினர், குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டு என்.ஏ.ராமச்சந்திர ராஜாவின் சீரிய குணங்களையும், சேவைகளையும் நினைவு கூர்ந்தனர்.

    நினைவு தினத்தை முன்னிட்டு என்.ஏ.ராமச்சந்திர ராஜா அறக்கட்டளை, பழையபாளையம் மகுமை பொதுப்பண்டு, சக்தி கண் மருத்துவமனை இணைந்து ராஜபாளையத்தில் இலவச கண் மருத்துவ முகாமை நடத்தியது.

    • 75-வது சுதந்திர தினம் அமுத பெருவிழாவாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • இதையொட்டி பள்ளிகளில் ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி நடத்தி பா.ஜ.க.வினர் கொண்டாடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    75-வது சுதந்திர தினம் அமுத பெருவிழாவாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பள்ளிகளில் ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி நடத்தி பா.ஜ.க.வினர் கொண்டாடி வருகின்றனர்.

    புதுவையில் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட தியாகிகளின் இல்லத்திற்கு சென்று கவுரவித்தல், நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்ட பாரதமாதா சிலையினை மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் அலங்கரிக்கப்பட்ட வாகனம் மூலம் செல்லக்கூடிய ரத யாத்திரை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

    இந்த நிலையில் கீழூர் நினைவு சின்னத்தை பாரதீய ஜனதா கட்சியினர் சுத்தம் செய்தனர். மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் மாநில துணைத்தலைவர் முருகன், மாநில செயலாளர் ஜெயக்குமார், வில்லியனூர் மாவட்ட தலைவர் ஆனந்தன் உள்ளிட்ட 20- ற்கும் மேற்பட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் பாரதப் பிரதமரின் ஸ்வச் பாரத் திட்டத்தினை அனைவரும் செயல்படுத்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய வகையில் கீழூர் கிராமத்தில் அமைந்துள்ள நினைவு சின்னத்தை சுத்தம் செய்து அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டனர்.

    • பஞ்சாலை தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது.
    • கம்யூனிஸ்டு கட்சியினர் சுதேசி மில் அருகிலிருந்து ஊர்வலமாக வந்து புதுவை-கடலூர் சாலையில் உள்ள தியாகிகள் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.

    புதுச்சேரி:

    ஜூலை 30 தியாகிகள் நினைவு தின நிகழ்ச்சி ஏ.ஐ.டி.யூ.சி. புதுவை பஞ்சாலை தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி, பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தினர்,இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சுதேசி மில் அருகிலிருந்து ஊர்வலமாக வந்து புதுவை-கடலூர் சாலையில் உள்ள தியாகிகள் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.

    நிகழ்ச்சிக்கு பஞ்சாலை தொழிலாளர் சங்க தலைவர் ரவி தலைமை வகித்தார். செயலாளர் அபிஷேகம், 8 மணி வேலை நேரம் கேட்டு நடந்த போராட்டத்தில் உயிர்நீத்த 12 தியாகிகள் பெயரால் உறுதிமொழி வாசிக்க, மற்றவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

    தியாகிகள் கொடியை முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் ஏற்றினார். ஏ.ஐ.டி.யூ.சி. கொடியை பஞ்சாலை தொழிலாளர் சங்கம் கன்னியப்பன் ஏற்றினார். இந்தியகம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், தேசியக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில தலைவர் தினேஷ்பொன்னையா, பொதுச்செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் கலியபெருமாள், சந்திரசேகரன், முருகன், செல்வராசு, சேகர், தயாளன், ரவிச்சந்திரன், முத்துராமன், நளவேந்தன், செந்தில்முருகன், பஞ்சாலை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தேசிகன், பூபதி, மூர்த்தி, சுப்பையா, கல்யாணசுந்தரம், இளங்கோ, திருஞானமூர்த்தி, ராஜி, ஏழுமலை, சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதுபோல் தியாகிகள் சிலைக்கு சி.ஐ.டி.யூ. பிரதேச செயலாளர் சீனிவாசன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், சி.ஐ.டி.யூ. பிரதேச தலைவர் முருகன், நிர்வாகிகள் ராமசாமி, குணசேகரன், பிரபுராஜ், கொளஞ்சியப்பன், மதிவாணன், ரவிச்சந்திரன், கலியமூர்த்தி, ராஜ்குமார் உட்பட பலர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இதேபோல் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் தியாகிகளின் நினைவு சின்னத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    • மேலூர் அருகே மேலவளவில் கொலை செய்யப்பட்ட 7 பேர் நினைவிடத்தில் திருமாவளவன் மரியாதை செலுத்தினர்.
    • மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது மேலவளவு. இங்கு ஊராட்சி மன்ற தலைவராக இருந்த முருகேசன் உட்பட 7 பேர் கடந்த 1997ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் நாள் படுகொலை செய்யப்பட்டனர்.

    அதனை அடுத்து மேலவளவில் விடுதலை களம் அமைக்கப்பட்டு அங்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசனுக்கு சிலை மற்றும் அவருடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    இன்று அவர்களுடைய 25-வது நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. நேரில் வந்து நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    இதில் மேலூர் தொகுதி செயலாளர் அய்யாவு, நிர்வாகி ஆற்றல் அரசு மதுரை கிழக்கு தொகுதி செயலாளர் கார்வண்ணன், வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மாதவன், மாவட்ட அமைப்பாளர் இ.எ.பாசறை, அரச. முத்துப்பாண்டியன், கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் மணிகண்டன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நகராட்சி தலைவர் ஹபிபுர் ரஹ்மான் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
    • வாஞ்சிநாதன் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் நகராட்சி அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு நாளை முன்னிட்டு நகராட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ள அவரின் உருவப் படத்திற்கு நகராட்சி தலைவர் ஹபிபுர் ரஹ்மான் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கண்ணன், முகைதீன் கனி, முருகன், தலைமை ஆசிரியர் மணிமாறன், ம.தி.மு.க. நகர செயலாளர் முருகன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடம் நோக்கி முதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. #Jayalalithaa #JayaMemorial #PeaceMarch
    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தில் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

    ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று காலையில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.



    இந்நிலையில் இன்று காலை வாலாஜா சாலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அதிமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில், கட்சியின் அனைத்து எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என  ஏராளமானோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

    இந்த ஊர்வலம் மெரினா கடற்கரையில் நிறைவடைகிறது. பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அனைவரும் அஞ்சலி செலுத்தவுள்ளனர். இது தவிர ஏராளமான மக்களும் திரண்டுள்ளதால் மெரினா சாலை மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #Jayalalithaa #JayaMemorial #PeaceMarch
    ×