ஆந்திராவில் மகனுக்கு ரூ.45 லட்சத்தில் நினைவிடம் கட்டிய பெற்றோர்

விவசாய நிலத்தில் மகனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் கட்டினார்.மாதந்தோறும் 5-ம் மற்றும் 19-ந் தேதிகளில் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
ஆந்திராவில் மகனுக்கு ரூ.45 லட்சத்தில் நினைவிடம் கட்டிய பெற்றோர்
Published on

ஆந்திர மாநிலம், ராஜ மகேந்திரவரத்தை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மனைவி ஸ்ரீதேவி. மகன் வேத சாய் தத்தா (வயது 13).

வேத சாய் தத்தா கடந்த 2016-ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு இறந்தார். பாசத்துடன் வளர்த்த மகன் இறந்துவிட்டதால் பெற்றோர்களால் வலியில் இருந்து மீள முடியவில்லை. மகன் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக கோவில் கட்ட முடிவு செய்தனர்.

அதன்படி கிழக்கு கோவதாரி மாவட்டம், கொருக்கொண்டா அடுத்த கனுப்பூரில் உள்ள விவசாய நிலத்தில் மகனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் கட்டினார்.

ரூ.45 லட்சம் செலவில் பளிங்கு கற்களால் நினைவிடம் கட்டப்பட்டது. அதற்கு வேத சாய் தத்த மந்திர் என பெயரிட்டனர். சுற்றிலும் பூந்தோட்டம் அமைத்தனர்.

மகனின் நினைவாக ஓம்காரேஸ்வரர் அறக்கட்டளை நிறுவி ரூ.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளனர். மாதந்தோறும் 5-ம் மற்றும் 19-ந் தேதிகளில் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com