search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gingee"

    • வருடா வருடம் ஆடி முதல் வெள்ளிக்கிழமை திருவிழா நடக்கும் .
    • கருவறை முன்பு 8 திருகரங்களுடன் ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் மல்லாந்து படுத்து இருக்கும் காட்சி கண் கொள்ளா காட்சி.

    தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா

    மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா

    இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே

    க்னம் தரும் பூங்குழலாள் (அபிராமி) ஸ்ரீ கமலக்கண்ணியம்மன் கடைக்கண்களே!

    கருவறை முன்பு ஸ்ரீ கமலக்கண்ணி அம்மனின் விஸ்வரூப தரிசனம்

    ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் திருக்கோவில்,

    கலவை, ஆற்காடு மாவட்டம்,

    வேலூர் - 632 506.

    ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் அருள் மகிமை

    ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் மூலவர் --நின்று கொண்டு

    சாந்த சொரூபமாக காட்சி அளிக்கிறாங்க!

    கருவறை முன்பு 8 திருகரங்களுடன் ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் மல்லாந்து படுத்து இருக்கும் காட்சி கண் கொள்ளா காட்சி.

    ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் பெருமாளின் தங்கையாகவும் (நெய்வேத்தியமும் பெருமாளை போலவே சைவம்), சக்தியின் வடிவமாகவும், அளவற்ற சக்தியும் கருணையும் உடையவங்க! மனக்கவலை, குடும்ப கஷ்டங்கள், உடல் நல குறைவு, முதலான எந்த குறை என்றாலும் கோவிலில் சென்று கமலக்கண்ணி அம்மனை தரிசித்தால் குறைகள் நீங்கும், நலம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வர். குடும்பத்தில் சிக்கல்கள், குடும்பத்தில் குழப்பம், பில்லி, சூனியம், ஏவேல், உடல் நல குறைவு முதலியவை இருப்பின் கோவிலில் சென்று கமலக்கண்ணி அம்மனை வழிபட்டு அங்கிருக்கும் சுவாமிகளை சந்தித்து குறைகளை வெள்ளை தாளில் எழதி தர ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் அருளால் சுவாமிகள் அக்குறைகள் நீங்கி நலம் பெரும் வழியை எழுதி கொடுப்பார்.

    தேவைபட்டால் ஒரு சில நாட்கள் கோயிலில் தங்க சொல்வார். கோவிலில் தங்கிய ஒரு சில நாட்களில் அம்மன் அருள் நமக்கு வந்து கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா! என்று அம்மன் குரல் கொடுக்க நம் குறைகள் அனைத்தும் நீங்கி விடும் . பிறகு எந்த நேரமும் அம்மன் நமக்கு துணை புரிந்து குறைகள் இல்லாமல் பார்த்து கொள்வார். அங்கு சென்று அம்மன் அருள் பெற்ற பல்லாயிரகணக்கான மக்கள் வாழ்வில் குறைகள் இல்லாமல் வாழ்வில் மகிழ்ச்சியுடன் பல நன்மைகள் உண்டாவதை அறிவார்கள். அனுபவபூர்வமான உண்மை!!! வருடா வருடம் ஆடி முதல் வெள்ளிக்கிழமை திருவிழா நடக்கும் .

    திருக்கோவில் வரலாறு

    அகில உலகங்களுக்கும் தாயாகி நின்று காத்து அருளுகின்ற பராசக்தியானவள் பல்வேறு திருநாமங்களோடு பல ஷேத்திரங்களில் அருள் பாலித்து வருகின்றாள். அவற்றுள் கலவை கமலக்கண்ணியம்மன் ஆலயத்துள் நின்று கமல - தாமரை) தாமரையை ஓட்ட தனது கடைக்கண் பார்வையினால் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை எல்லாம் தருவதுடன் பக்தர்களின் குறைகளை தீர்த்தும், துஸ்த சக்திகளைப் போக்கி அருள்பவளாக விளங்குபவள், காமாட்சி பாங்கஜாட்சி மஹாகாளி என்று போற்றப்படும் ஸ்ரீ கமலக்கண்ணித் தாயாவாள். இந்த கம்லக்கண்ணி அம்மன் தேவிதான் செஞ்சிக் கோட்டையை ஆண்ட மன்னர் பரம்பரையின் குலதெய்வமாகவும் செஞ்சிக் கோட்டையைக் காத்து வருகின்ற காவல் தெய்வமாகவும் விளங்குபவள்.

    பற்றற்ற யோகியாக துறவு வாழ்க்கையை மேற்கொண்டு இமயமலைச் சாரலிலும் வட இந்தியாவில் பல இடங்களிலும் பாத யாத்திரையாகச் சென்று பல தத்துவ ஞானிகளின் ஞான உபதேசங்களினால் தியானம், யோகம், இவற்றில் மேன்மையை அடைந்த சிறந்த தவயோகியாக விளங்குபவர்கள் தவத்திரு. சச்சிதானந்த சுவாமிகள் என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். "சும்மாயிரு சொல்லற" என்ற அருணகிரியாரின் வாக்குக்கேற்ப மௌன விரதத்தை கடைபிடித்து வருகின்ற மகானாக விளங்குகின்ற சுவாமிகள் இன்றும் தன்னை நாடி வரும் பக்தர்களின் துன்பங்களை தனது அருட்பார்வையினாலேயே போக்கி அருளும் சித்த புருஷராக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

    சுவாமிகள் ஏப்ரல் 6-ஆம் தேதி 1979-ஆம் ஆண்டு கலவை வந்தபோது சுவாமிகளை வரவேற்று ஆதரித்தவர்கள். முன்னாள் மணியம் கிருஷ்ணஸ்வாமி முதலியார் அவர் துணைவியார் திருமதி. சரோஜாம்மாள் அம்மையார் . அப்போது அவர்கள் கலவையில் கட்டிக் கொண்டிருந்த அருள்மிகு கமலக்கண்ணி அம்மன் திருக்கோவில் திருப்பணி முடியும் தருவாயில் இருந்தது. இதன் பூர்வீக கோவில் செஞ்சி மலையில் உள்ள கோட்டையில் இருப்பதாக சொல்லி சுவாமிகளை அழைத்து போனார்கள். திருக்கோவில் ஸ்தாபகர் அமரர். கிருஷ்ணஸ்வாமி முதலியார் அமரர். திருமதி. சரோஜாம்மாள் இருவரும் சுவாமிகளை தங்கள் இறுதிகாலம் வரை சுவாமிகளை கண்ணைப்போல் கவனித்து வந்தார்கள் .

    செஞ்சி மலையில் கமலக்கண்ணி அம்மன் கோவில் மிகவும் சிறிய கோவில். அம்மன் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது . பூஜைகளும், பராமரிப்பும் இல்லாமல் அம்மன் இருப்பதை அறிந்து சுவாமிகள் மனம் நெகிழ்ந்து போனார்கள். அம்மனை சுவாமிகள் தன் கரங்களால் அபிஷேகம் செய்து வழிபட்டபோது உன்னோடு வந்து விடுகிறேன் மகனே என்ற செஞ்சி கமலக்கண்ணித் தாயின் தெய்வீக அருள்வாக்கினால் ஈர்க்கபட்டு அவளது அருளானையின் வண்ணம் செஞ்சியில் இருக்கிற அம்மனைப் போலவே தான் வாழும் கலவையில்

    கமலக்கண்ணியம்மனுக்கு ஆலயம் எழுப்பி உலகம் உய்ய வழிபாடு செய்து வந்தார்கள் .

    கலவையில் கோவிலை சுவாமிகள் விரிவு செய்து கொண்டு போனபோதும் கோவில் அமைப்பு சுவாமிகளுக்கு மன நிறைவு தரவில்லை இரத்தினகிரி தவத்திரு . பாலமுகனடிமை சுவாமிகள் தனது 39 ஆண்டு மலைவாசத்தை முடித்து கலவைக்கு வருகை தந்த போது கோவிலை புதுபித்து கட்ட வேண்டும் என்ற தனது வேட்கையை தெரிவித்தார்கள் .

    பழைய கோவிலை முழுவதும் அகற்றி விட்டு அதே இடத்தில் புதிய கோவிலை பொலிவுடன் நிர்மாணிக்க திருப்பணிகளை தவத்திரு. பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னின்று நடத்தினார்கள். இரத்தினகிரி சுவாமிகளின் வெகு முயற்சியாலும், சீரிய வழிக்காட்டியிலும் அடிக்கடி திருப்பணிகளை நேரில் பார்வையிட்டும் வழங்கிய ஆலோசனைகளாலும், இன்று கோவில் கம்பீரமும், கலையழகும் ததும்பி நிற்கிறது .

    திருப்பணிகளை பார்வையிடகலவைக்கும் , சிற்ப வேலைகளைப் பார்வையிட மகாபலிபுறத்திற்கும் சுவாமிகள் இருவரும் சலிக்காமல் பயணம் மேற்கொண்டார்கள். "இதற்கு எப்படி நான் என்ன கைம்மாறு செய்ய போகிறேன்" என்று கலவை சுவாமிகள் அடிக்கடி நெகிழ்ந்து சொல்வார்கள் .

    பழைய ஆலயத்தை புதுப்பித்து மண்டபம் பிரகாரம், கோபுரம், தூண்கள் இவைகளையெல்லாம் சிற்ப வேலைப்பாடுகள் மிளிர அழகுடன் அமைந்திருக்க வேண்டும் என்ற தன்னலமற்ற நோக்கத்தோடு ஆர்வத்தோடும் திருப்பணியைத் தொடங்கினார்கள் ஸ்ரீ கமலக்கண்ணிதாயின் திருவருள் துணையோடு பக்தர்களின் பாத காணிக்கைகளை கொண்டும் எண்ணியவண்ணம திருப்பணிகலை நிறைவேற்றி உள்ளார்கள்.

    அழகும் பொலிவும் பெற்றுள்ள ஸ்ரீகமலக்கண்ணி அம்மன் திருகோவிலில் கருவறை வாசல் கதவு வெள்ளியிலும் முன் வாசல் கதவுகள் தஞ்சாவூர் பாணியிலும் வடிவமைக்க பட்டுள்ளது.

    ஓம் நமோ நாராயணாய! 

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கோதண்டராமர் கோவிலில் திருப்பணிக்காக பள்ளம் தோண்டியபோது நரசிம்மர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி-திண்டிவனம் சாலையில் சங்கராபரணி ஆற்றங்கரையில் பழமைவாய்ந்த கோதண்டராமர் கோவில் உள்ளது. சிதிலமடைந்து காணப்படும் இந்த கோவிலை புதுப்பிப்பதற்காக திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்அடிப்படையில் கோவிலின் முன்பு மண்டபம் அமைப்பதற்காக நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.

    அப்போது 2 கைகளில் சங்கு, சக்கரம் ஏந்திய 2 அடி உயரமுள்ள பழமைவாய்ந்த நரசிம்மர் கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதைபார்த்த திருப்பணிக்குழு நிர்வாகி துரைபாரதிராஜா, அருணகிரி ஆகியோர் நரசிம்மர் சிலையை எடுத்து கோவில் வளாகத்தில் வைத்தனர். அதன்பிறகு அந்த சிலைக்கு சிறப்பு பூஜை செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிலை கண்டெடுக்கப்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள் கோவிலுக்கு வந்து நரசிம்மர் சிலையை பார்வையிட்டு வணங்கி சென்றனர். இந்த சம்பத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
    செஞ்சி அருகே மணல் கடத்தலை தடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அனந்தபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் மட்டப்பாறை கூட்ரோட்டில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று வேகமாக வந்தது. அந்த டிராக்டரை போலீசார் வழிமறித்தனர். இதை பார்த்த டிரைவர் டிராக்டரை நிறுத்தாமல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது ஏற்றுவது போல் வேகமாக வந்தார்.

    அவருக்கு பின்னால் மணல் ஏற்றிக்கொண்டு வந்த மேலும் 2 டிராக்டர் டிரைவர்களும் அதேபோல் வந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் பெரியதச்சூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் (வயது 45), விஜயரங்கன் (25), வரிக்கல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் (38) ஆகிய 3 பேர் என்றும், மணல் கடத்தி வந்ததை தடுத்ததால் அவர்கள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்றதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மணல் கடத்தி வந்த 3 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர். #Tamilnews
    செஞ்சி அருகே கடித்து குதறிய காயங்களுடன் இறந்து கிடந்த 6 ஆடுகளை கொன்றது சிறுத்தையாக இருக்கலாம் என்று பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மலைப்பகுதியின் அடிவாரத்தில் இல்லோடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 2 ஆயிரம் பொதுமக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆடு-மாடுகளையும் வளர்த்து பராமரித்து வருகிறார்கள்.

    இல்லோடு கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 37). இவர் 11 ஆடுகளை வளர்த்து வந்தார். தினமும் மேய்ச்சலுக்கு சென்று வந்ததும், அந்த ஆடுகளை விவசாய நிலத்தில் உள்ள கொட்டகையில் அடைத்து வைப்பார்.

    நேற்று முன்தினம் மாலையில் 11 ஆடுகளையும் கொட்டகையில் அடைத்து விட்டு, சேகர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் சேகர் வந்து பார்த்தபோது 6 ஆடுகள் கழுத்து, வயிறு, கால் பகுதியில் விலங்கு கடித்து குதறியதற்கான காயங்களுடன் இறந்து கிடந்தன. மேலும் 2 ஆடுகள் காணாமல் போய் இருந்தன. இதைப்பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதற்கிடையே இந்த தகவல் காட்டுத்தீ போல அந்த கிராமம் முழுவதும் பரவியது. இதையடுத்து ஆண்களும்-பெண்களும் திரண்டு மலை அடிவாரப்பகுதிக்கு வந்தனர். இறந்து கிடந்த ஆடுகளை பார்த்தனர்.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் முத்துகுமார் மற்றும் வனச்சரகர் பாபு ஆகியோர் அங்கு விரைந்து வந்து இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர். மேலும் நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்ம விலங்குகளின் கால் தடத்தை ஆய்வு செய்தனர். வந்து சென்றது எந்த வகையை சேர்ந்த விலங்கின் கால்தடம் என்பதை ஆராய்ந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த மலைப் பகுதி அடிவாரத்தில் 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. வனச்சரகர்களும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்துக்குள் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. தற்போது கோடை காலம் என்பதாலும், மலைப்பகுதியில் உணவு இல்லாததாலும் விலங்குகள் மலை அடிவாரத்துக்கு வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன. நள்ளிரவில் வந்தது சிறுத்தையாக இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. இந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த கிராம பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
    ×