என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மணல் கடத்தலை தடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி- 3 பேர் கைது
Byமாலை மலர்9 Jun 2018 3:58 AM GMT
செஞ்சி அருகே மணல் கடத்தலை தடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அனந்தபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் மட்டப்பாறை கூட்ரோட்டில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று வேகமாக வந்தது. அந்த டிராக்டரை போலீசார் வழிமறித்தனர். இதை பார்த்த டிரைவர் டிராக்டரை நிறுத்தாமல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது ஏற்றுவது போல் வேகமாக வந்தார்.
அவருக்கு பின்னால் மணல் ஏற்றிக்கொண்டு வந்த மேலும் 2 டிராக்டர் டிரைவர்களும் அதேபோல் வந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் பெரியதச்சூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் (வயது 45), விஜயரங்கன் (25), வரிக்கல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் (38) ஆகிய 3 பேர் என்றும், மணல் கடத்தி வந்ததை தடுத்ததால் அவர்கள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்றதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மணல் கடத்தி வந்த 3 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர். #Tamilnews
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அனந்தபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் மட்டப்பாறை கூட்ரோட்டில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று வேகமாக வந்தது. அந்த டிராக்டரை போலீசார் வழிமறித்தனர். இதை பார்த்த டிரைவர் டிராக்டரை நிறுத்தாமல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது ஏற்றுவது போல் வேகமாக வந்தார்.
அவருக்கு பின்னால் மணல் ஏற்றிக்கொண்டு வந்த மேலும் 2 டிராக்டர் டிரைவர்களும் அதேபோல் வந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் பெரியதச்சூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் (வயது 45), விஜயரங்கன் (25), வரிக்கல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் (38) ஆகிய 3 பேர் என்றும், மணல் கடத்தி வந்ததை தடுத்ததால் அவர்கள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்றதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மணல் கடத்தி வந்த 3 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X