என் மலர்
நீங்கள் தேடியது "மல்லிகார்ஜூனா கார்கே"
- தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நாளை மறுநாள் நடப்பதாக இருந்த ஆலோசனை கூட்டம் நாளைக்கு மாற்றப்பட்டுள்ளது.
- தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மல்லிகார்ஜூனா கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் நாளை ஆலோசனை நடத்துகின்றனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தேசிய தலைமை நாளை ஆலோசனை நடத்த உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நாளை மறுநாள் நடப்பதாக இருந்த ஆலோசனை கூட்டம் நாளைக்கு மாற்றப்பட்டுள்ளது.
வரும் சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் நாளை ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மல்லிகார்ஜூனா கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் நாளை ஆலோசனை நடத்துகின்றனர்.
ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- ராஜஸ்தானில் பாஜக சார்பில் நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து நேற்று ராஜஸ்தானில் பாஜக சார்பில் நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு பேசினார். அப்போது அவர், "காங்கிரஸ் அளிக்கும் புதிய வாக்குறுதிகளில் சூத்திரம் உள்ளது. அவர்களின் உத்தரவாதங்கள் நாட்டை திவாலாக தான் ஆக்கும்" என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், " பிரதமர் மோடி பெரிய தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்குவார். ஆனால், ஏழை எளிய மக்களுக்கு நாங்கள் வாக்குறுதிகள் அளித்தால் அது பிரதமருக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது" என்றார்.
- ஹேமந்த் சோரனை கைது செய்தீர்கள், ஏன் அதானியையும் அம்பானியையும் கைது செய்யவில்லை?
- தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு நன்கொடை அளித்தவர்கள் பெரிய ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் மல்லிகார்ஜூனா கார்கே கலந்துக் கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அரசியலமைப்பும் ஜனநாயகமும் ஆபத்தில் உள்ளன. மக்களும் ஆபத்தில் உள்ளனர். உங்களுக்கு அடிப்படை உரிமைகள் இல்லையென்றால், நீங்கள் அடிமைகளாக இருப்பீர்கள். மோடி இந்த முறை வெற்றி பெற்றால் எதிர்காலத்தில் எந்தத் தேர்தலும் நடக்காது.
ஹேமந்த் சோரனை கைது செய்தீர்கள், ஏன் அதானியையும் அம்பானியையும் கைது செய்யவில்லை?
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்களை "துஷ்பிரயோகம்" செய்வதை நிறுத்துவதற்காக இரு தொழிலதிபர்களிடமிருந்து "டெம்போ லோடு" பணத்தை பெற்றதாக பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மத்தியில் பாஜக தலைமையிலான அரசால் கைது செய்யப்பட்ட இந்திய அணி தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்.
இந்த முறை மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது சாத்தியமில்லை.
பிரதமர் மோடி சர்வாதிகாரத்தை நம்புகிறார். எதிர்க்கட்சிகள் அவருக்கு தேர்தலில் பாடம் கற்பிக்கும்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு நன்கொடை அளித்தவர்கள் பெரிய ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் இந்திய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்லாததற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது நடிகர்கள் மற்றும் தொழிலதிபர்களை அழைக்க பிரதமர் மறக்கவில்லை, ஆனால் ஜனாதிபதி திரௌபதி முர்முவை அழைக்க தவறிவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று நான் விரும்பினேன்.
- ராகுல் காந்தி இளைஞர்களையும், நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடித்தால், நரேந்திர மோடிக்குப் பிறகு ராகுல் காந்தி தான் நாட்டின் பிரதமராக பதவியேற்பார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்," தேர்தலுக்கு முன் இரண்டு 'பாரத் நீதி யாத்திரையை வழிநடத்தியவர் ராகுல் காந்தி. யாத்திரையின்போது விரிவான பிரச்சாரம் செய்தவர். பிரதமர் மோடியை நேரடியாகத் தாக்கியவர் ராகுல் காந்தி. அவரே உயர் பதவிக்கான பொறுத்தமான தேர்வு.
ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பது எனது விருப்பம். அவர் இளைஞர்களையும், நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
பலரால் உயர் பதவிக்கான யதார்த்தமான ஒருமித்த வேட்பாளராக ராகுல் காந்தி பார்க்கப்படுகிறார்" என்றார்.
இதேபோல், " பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் ராகுலுக்கு தனது பிரச்சார மேலாளராக ஒருவர் தேவைப்பட்டார். அதனால் அவர் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார்" என்றார்.
- ராகுல்காந்தி ரேபரேலி எம்.பியாக ராகுல் காந்தி தொடருவார் என அறிவிப்பு.
- வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார்.
கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி 6,47,445 வாக்குகள் பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆன்னி ராஜா 2,83,023 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 3,64,422 ஆகும்.
இந்த சூழலில், ராகுல் காந்தி இந்த இரு தொகுதிகளில் எந்த தொகுதியில் எம்பியாக தொடருவார் என்ற குழப்பம் நீடித்து வந்தது.
சட்டப்படி, ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே ஒருவர் தொடர முடியும் என்பதால் ராகுல் காந்தி எந்த தொகுதியை தியாகம் செய்வார் என்ற கேள்வி தேர்தல் முடிவுகள் வெளியான கடந்த ஜூன் 4 முதலே எழத் தொடங்கியது. இதற்கிடையில் கேரளா வந்த ராகுல் காந்தி, தான் எந்த தோகுதி எம்.பியாக தொடர வேண்டும் என்பதை மக்களைக் கேட்டே முடிவெடுப்பேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ராகுல்காந்தி ரேபரேலி எம்.பியாக ராகுல் காந்தி தொடருவார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே அறிவித்துள்ளார்.
இதனால், வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்கிறார். இதைதொடர்ந்து, வயநாடு தொகுதியில் காங்கிரஸ் பொதுசு் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம், பிரியங்கா காந்தி முதல்முறையாக கேரளாவில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக வயநாடு மக்கள் எனக்கு கொடுத்த ஆதரவு, அன்பு என்றும் மறக்க முடியாது என வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
- டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படுகிறது.
- காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது மன்மோகன் சிங்கின் உடல், அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் 27/12/24 அன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 7 நாட்களுக்கு துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், இன்று காலை 11 மணியளவில் மத்திய மந்திரிசபை கூடியது. டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் என காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை காலை 8.30 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவிடம் அமைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், " மன்மோகன் சிங்கை தகனம் செய்யும் இடத்திலே அவருக்கு நினைவிடம் அமைப்பதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
ஒரு எளிய பின்னணியில் இருந்து வந்து, பிரிவினையின் வலிகளையும் துன்பங்களையும் அனுபவித்து, தனது முழு மன உறுதியினாலும், உறுதியினாலும் உலகின் முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவராக உயர்ந்தார்.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, டாக்டர் மன்மோகன் சிங்கின் அந்தஸ்துக்கு ஏற்றவாறு, டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடத்திலே அவருக்கு கட்டக்கூடிய நினைவிடம் இருக்கவேண்டும் என்ற மேற்கண்ட கோரிக்கை ஏற்கப்படும் என்று நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், மன்மோகன் சிங் நினைவிடத்திற்கு டெல்லியில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை.
காங்கிரஸ் உடன் கலந்தாலோசிக்காமல் நிகம்போத் காட்டில் தகனம் செய்யப்படும் என உள்துறை அறிவித்துள்ளது.
இதற்கிடையில், நினைவிடம் அமைப்பது அவருக்கு அளிக்கும் அஞ்சலி என மோடிக்கு கார்கே கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






