என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கூட்டணி, தொகுதி பங்கீடு - தமிழக நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைமை நாளை ஆலோசனை
    X

    கூட்டணி, தொகுதி பங்கீடு - தமிழக நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைமை நாளை ஆலோசனை

    • தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நாளை மறுநாள் நடப்பதாக இருந்த ஆலோசனை கூட்டம் நாளைக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மல்லிகார்ஜூனா கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் நாளை ஆலோசனை நடத்துகின்றனர்.

    தமிழகத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.

    இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தேசிய தலைமை நாளை ஆலோசனை நடத்த உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நாளை மறுநாள் நடப்பதாக இருந்த ஆலோசனை கூட்டம் நாளைக்கு மாற்றப்பட்டுள்ளது.

    வரும் சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் நாளை ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மல்லிகார்ஜூனா கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் நாளை ஆலோசனை நடத்துகின்றனர்.

    ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×