search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rae bareli"

    • முதுமை மற்றும் உடல்நல பிரச்சினைகளால் வருகிற மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன்.
    • உங்களுக்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு இருக்காது. இருப்பினும், எனது இதயமும், ஆன்மாவும் எப்போதும் உங்களுடனே இருக்கும்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, கடந்த 2004-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.

    கடைசியாக, கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலிலும் ரேபரேலியில் வெற்றி பெற்று எம்.பி.யாக பணியாற்றி வருகிறார். இதற்கிடையே, இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் மக்களவை தேர்தல் வரும் நிலையில், சோனியாகாந்தி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் காலியாகும் மாநிலங்களவை இடத்துக்கு அவர் போட்டியிடுகிறார். இதனால், மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட மாட்டார் என்பது உறுதியானது.

    இந்நிலையில், தனது ரேபரேலி தொகுதி வாக்காளர்களுக்கு சோனியாகாந்தி இந்தியில் எழுதப்பட்ட ஒரு உருக்கமான செய்தியை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் இன்று அடைந்திருக்கும் நிலைக்கு காரணம் நீங்கள்தான் என்பதை பெருமையாக தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் நம்பிக்கையை கவுரவிக்க என்னால் இயன்ற அளவுக்கு செயல்பட்டுள்ளேன்.

    தற்போது முதுமை மற்றும் உடல்நல பிரச்சினைகளால் வருகிற மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன். இந்த முடிவால், உங்களுக்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு இருக்காது. இருப்பினும், எனது இதயமும், ஆன்மாவும் எப்போதும் உங்களுடனே இருக்கும்.

    கடந்த காலத்தை போலவே எதிர்காலத்தில் எனக்கும், என் குடும்பத்துக்கும் ஆதரவாக இருப்பீர்கள் என்று எனக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ரேபரேலி தொகுதியில் சோனியாகாந்தியின் மகளும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோர் நாளை தேர்தல் பிரசாரம் மேற்கொள்கின்றனர். #LokSabhaElections2019 #SoniaGandhi #RahulGandhi
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி தொடங்கி முதல் கட்டமாக நடைபெற்று வருகிறது. மே 19ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் போட்டியிடுகின்றனர். 

    உபியின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் மே 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கு தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நாளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    ரேபரேலியில் சோனியாவை எதிர்த்து பாஜக சார்பில் தினேஷ் பிரதாப் சிங்கும், அமேதியில் ராகுலை எதிர்த்து பாஜக சார்பில் ஸ்மிருதி இரானியும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #SoniaGandhi #RahulGandhi
    “தாயும், மகளும் கஷ்டமான தருணங்களில் ரேபரேலிக்கு வருவதே இல்லை. ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டும் வருகின்றனர்” என ரேபரேலியில் பிரியங்காவை குறித்து சுவரொட்டியில் விமர்சனம் செய்யப்பட்டு இருந்தது. #PriyankaGandhi #RaeBareli
    ரேபரேலி:

    காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சோனியாகாந்தியின் மகள் பிரியங்கா, உத்தரபிரதேசத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று தனது தாயாரின் சொந்த தொகுதியான ரேபரேலிக்கு சென்றார்.அதே சமயத்தில், அவரை விமர்சித்து ஏராளமான சுவரொட்டிகள் ரேபரேலி நகரில் ஒட்டப்பட்டு இருந்தன. சில சுவரொட்டிகள், காங்கிரஸ் அலுவலகத்துக்கு அருகிலேயே காணப்பட்டன. அதில், சோனியா-பிரியங்கா ஆகிய இருவரின் புகைப்படங்களும் இருந்தன. ஒரு சுவரொட்டியில், “தாயும், மகளும் கஷ்டமான தருணங்களில் ரேபரேலிக்கு வருவதே இல்லை. ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டும் வருகின்றனர்” என்று கூறப்பட்டு இருந்தது.

    மேலும், ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் ஒட்டப்பட்டு இருந்த ஒரு சுவரொட்டியில், “5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஏன் அமேதிக்கு வருகிறீர்கள்? எங்களை முட்டாள் ஆக்காதீர்கள்” என்று பிரியங்கா படம் போட்டு விமர்சனம் செய்யப்பட்டு இருந்தது.
    ரேபரேலியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி 5-வது முறையாக களமிறங்க உள்ளார். #SoniaGanthi #LokSabha #RaeBareli
    புதுடெல்லி:

    உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதி தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கி வருகிறது. இங்கு 1971-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட தேர்தல்களில் 1977-ல் இந்திரா காந்தி தோல்வியடைந்ததை தவிர, பிற தேர்தல்கள் அனைத்திலும் அந்தக்கட்சி வெற்றிக்கனியை பறித்து இருக்கிறது.

    இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ரேபரேலியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கடந்த 2004-ம் ஆண்டு முதல் போட்டியிட்டு வருகிறார். 2006-ல் நடந்த இடைத்தேர்தல் உள்ளிட்ட 4 தேர்தல்களில் அந்த தொகுதியில் போட்டியிட்டு அவர் வென்றிருந்தார். 2004-ம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதியில் 2.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்று இருந்தார்.இதைத்தொடர்ந்து வருகிற தேர்தலுக்கும் ரேபரேலி தொகுதி சோனியாவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

    சமீபத்தில் வெளியிடப்பட்ட கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இந்த தகவல் இடம்பெற்று இருந்தது. இதன் மூலம் 5-வது முறையாக ரேபரேலி தொகுதியில் அவர் களமிறங்க உள்ளார்.முன்னதாக சோனியாவின் உடல்நலக்குறைவு காரணமாக அவர் போட்டியிடுவது குறித்து சந்தேகங்கள் கிளம்பி இருந்த நிலையில், அவர் போட்டியிடுவதை கட்சித்தலைமை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.  SoniaGanthi #LokSabha #RaeBareli
    உ.பி.யில் ரேபரேலி தொகுதி பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ரத்துசெய்துள்ளார். ஆனால், திட்டமிட்டபடி ராகுல் காந்தி அமேதி தொகுதிக்கு நாளை சுற்றுப்பயணம் செல்கிறார். #Congress #SoniaGandhi #RahulGandhi #RaeBareli #Amethi
    லக்னோ: 

    வரும் பாராளுமன்ற தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த வேலைகளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி சோனியா காந்தியின் பாராளுமன்ற தொகுதி ஆகும். இதேபோல், உ.பி.யில் உள்ள அமேதி தொகுதி ராகுல் காந்தியின் பாராளுமன்ற தொகுதி ஆகும்.

    இதற்கிடையே, காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய தலைவரான ராகுல் காந்தி ஆகியோர் தங்களது பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஜனவரி 23, 24-ம் தேதிகளில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.



    இந்நிலையில், உ.பி.யின் ரேபரேலி தொகுதி பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ரத்துசெய்துள்ளார். ஆனால், திட்டமிட்டபடி ராகுல் காந்தி அமேதி தொகுதிக்கு நாளை முதல் சுற்றுப்பயணம் செல்கிறார்.

    இதுதொடர்பாக, உ.பி. மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜிஷான் ஹைடர் கூறுகையில், தவிர்க்க முடியாத காரணங்களால் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டபடி அமேதி தொகுதியில் நாளை முதல் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார், அங்கு பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி பணிகளை முடுக்கி விடும் பணிகளில் ஈடுபடவுள்ளார் என தெரிவித்துள்ளார். #Congress #SoniaGandhi #RahulGandhi #RaeBareli #Amethi
    சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தங்களது தொகுதிகளுக்கு ஜனவரி 23, 24-ம் தேதிகளில் சுற்றுப்பயணம் செல்ல உள்ளனர் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. #Congress #SoniaGandhi #RahulGandhi #RaeBareli #Amethi
    லக்னோ: 

    வரும் பாராளுமன்ற தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த வேலைகளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி சோனியா காந்தியின் பாராளுமன்ற தொகுதி ஆகும். இதேபோல், உ.பி.யில் உள்ள அமேதி தொகுதி ராகுல் காந்தியின் பாராளுமன்ற தொகுதி ஆகும்.



    இந்நிலையில், காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய தலைவரான ராகுல் காந்தி ஆகியோர் தங்களது பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஜனவரி 23, 24-ம் தேதிகளில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர் என காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அமேதி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அனில் சிங் கூறுகையில், உ.பி. செல்லும் சோனியா மற்றும் ராகுல் காந்தி பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி பணிகளை முடுக்கி விடும் பணிகளில் ஈடுபட உள்ளனர் என தெரிவித்துள்ளார். #Congress #SoniaGandhi #RahulGandhi #RaeBareli #Amethi
    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் சோனியா காந்தியின் எம்.பி. தொகுதியான ரேபரேலியில் பிரதமர் மோடி நாளை தனது பிரசாரத்தை தொடங்குகிறார். #Modi #Congressstronghold #Modivisit #ModivisitRaeBareli
    லக்னோ:

    இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 80 பாராளுமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. எனவே, பாராளுமன்ற தேர்தலின்போது தனித்துவமாக கவனிக்கப்படும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உத்தரபிரதேசம் இருந்து வருகிறது. இங்கு அதிக அளவிலான தொகுதிகளை கைப்பற்றும் கட்சியே மத்தியில் ஆட்சி அமைத்து வருகிறது.

     கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில்உத்தரபிரதேசத்தில் மட்டும் பா.ஜ.க. 75 தொகுதிகளை கைப்பற்றியது. அவ்வகையில் அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலும் அதிக தொகுதிகளில் வெற்றிபெற அக்கட்சியின் தலைமை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்  சோனியா காந்தியின் எம்.பி. தொகுதியான ரேபரேலியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தனது பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    கோப்புப்படம்

    டெல்லியில் இருந்து விமானம் மூலம் ரேபரேலி நகருக்கு வரும் அவர், ரேபரேலி-பான்டா நான்குவழி நெடுஞ்சாலையை திறந்து வைப்பதுடன் 1100 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்

    ரேபரேலியில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் மோடி, அங்கிருந்து  பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகருக்கு சென்று கும்பமேளா விழாவுக்கான முன்னேற்பாடுகளை பார்வையிடுகிறார். இங்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பின்னர், இங்குள்ள ஜுன்சி பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார். இந்நிகழ்ச்சிகளில் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கலந்து கொள்கிறார்.

    ரேபரேலி நகரில் மோடி உரையாற்றும் ரெயில் பெட்டி தொழிற்சாலை மைதானத்தில் நாளை சுமார் 3 லட்சம் பேர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் இப்பகுதியை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. #Modi #Congressstronghold #Modivisit #ModivisitRaeBareli 
    ரேபரேலி தொகுதியில் ‘பிரியங்காவை காணவில்லை’ என பல இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ள சம்பவம் காங்கிரஸ் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #PriyankaGandhi #RaeBareli #Missing
    ரேபரேலி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதி எம்.பி. ஆவார். அங்கு சோனியா காந்திக்கு பதிலாக அவரது மகள் பிரியங்காதான் கட்சி நடவடிக்கைகளை கவனித்து வருகிறார். ஆனால் சமீப காலமாக அவர் தொகுதிக்கு செல்லவில்லை என தெரிகிறது.



    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த தொகுதிவாசிகள் ‘பிரியங்காவை காணவில்லை’ என பல இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். ரேபரேலி தொகுதி மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினர் எனக்கூறும் சோனியா குடும்பத்தினர், தற்போது அதை மறந்துவிட்டனர் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த சுவரொட்டிகளால் தொகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் மாநில காங்கிரசிலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #PriyankaGandhi #RaeBareli #Missing 
    ×