search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Communist of India"

    • வயநாடு தொகுதி முடிவு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    • கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுமா?

    திருவனந்தபுரம்:

    தேசிய அளவில் இந்தியா என்ற கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள், கேரள மாநில மக்களவை தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டன. ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகிய இரு கூட்டணிகளின் வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் களம் கண்டனர்.

    அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் இரு கூட்டணி கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்ட னர்.

    அதிலும் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டுகள் கட்சியினருக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டது.

    ஏனென்றால் அந்த தொகுதியில தற்போதைய எம்.பி.யான ராகுல்காந்தியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும் களம் கண்டனர். தேசிய அளவில் ஒரே கூட்டணியில் இருக்கும் இரு கட்சிகள் எதிரும் புதிருமாக இருந்து தேர்தலில் களம் கண்டது அந்த கட்சிக்காரர்களுக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

    மேலும் பாரதிய ஜனதா உள்ளிட்ட பிற கட்சியினரின் மத்தியில் பேசும் பொருளாக மாறியது. கேரளாவில் தேர்தல் பிரசாரம் செய்த பாரதிய ஜனதா கட்சி தவைர்கள், தங்களின் பிரசாரத்தில் அந்த பிரச்சினையை பற்றி பேசினார்கள். இது இந்தியா கூட்டணிகளுக்கிடையே மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இந்த சலசலப்புகளுக்கு மத்தியில் மக்களவை தேர்தலும் கேரளாவில் நடந்து முடிந்துவிட்டது. தற்போது அனைவரும் தேர்தல் முடிவுக்காக காத்திருக்கின்றனர். அதிலும் வயநாடு தொகுதி முடிவு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த சூழலில் தான் ராகுல்காந்தி ரேபரேலி மக்களவை தொகுதியிலும் போட்டியிடப்போவதாக அறிவிப்பு வெளியானது. மேலும் ராகுல்காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிட நேற்று வேட்புமனுவும் தாக்கல் செய்தார்.

    வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிடுகிறார் என்றதும் கேரள மாநில காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக தேர்தல் பணியில் ஈடுபட்டனர். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் 4 லட்சத்துக்கும் அதிகமாக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், இந்த தேர்தலிலும் அவருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று அவர்கள் கருதியதே அதற்கு காரணமாகும்.

    அந்த உற்சாகத்தில் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்கள். அவர்கள் மட்டுமுன்றி ஐக்கிய ஜன நாயக முன்னணியில் இடம்பெற்றிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர பிற கட்சிகளை சேர்ந்தவர்களும் உற்சாகமாக தேர்தல் பணி யாற்றினார்கள்.

    ஆனால் தற்போது ரேபரேலி தொகுதியிலும் ராகுல்காந்தி போட்டியிடுவதால் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றி ருக்கும் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரேபரேலி காங்கிரஸ் கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ள தொகுதியாகும்.

    சோனியா காந்தி கடந்த 5 முறை நடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற தொகுதி. அந்த தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவதன் மூலம், அங்கு அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

    ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் ராகுல்காந்தி வெற்றி பெற்றால் அவர் எந்த தொகுதியில் பணி யாற்றுவார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் இருந்து வெளியேறுவாரா? என்ற கேள்வி வயநாடு தொகுதியில் ராகுல்காந்திக்காக ஓட்டு கேட்ட காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மத்தியில் ஏற்பட்டு இருக்கிறது.

    அப்படி அவர் வெளியேறி வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால் தங்களது கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுமா? என்ற அச்சமும் அவர்களுக்குள் உருவாகி உள்ளது.

    • கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • நாங்கள் ஏற்கனவே வென்ற தொகுதிகளுடன் கூடுதலாக ஒரு தொகுதி கேட்டிருக்கிறோம்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுக்கு தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி உடன்பாடு செய்துகொள்ள முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளன.

    இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன் இன்று 2-வது கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. குழு தலைவர் டி.ஆர்.பாலு முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுப்பராயன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டனர்.

    20 நிமிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு சுப்பராயன் எம்.பி., நிருபர்களை சந்தித்தார்.

    40 தொகுதிகளிலும் தி.மு.க. அணி வெற்றி பெறும் என்பதை தமிழ்நாட்டின் கிராமப்புற நகர்ப்புற கள நிலவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

    அதன் அடிப்படையில் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தைக்கு 2-வது கட்டமாக நாங்கள் வந்தோம். பேச்சுவார்த்தை மிகமிக சுமூகமாக நடைபெற்றது. நல்ல முறையில் திருப்தி அளிக்கிற வகையில் பேச்சு வார்த்தை நடந்தது.

    நாங்கள் ஏற்கனவே வென்ற தொகுதிகளுடன் கூடுதலாக ஒரு தொகுதி கேட்டிருக்கிறோம். அவர்கள் பரிசீலிப்பதாக கூறி உள்ளனர். 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருகிற 3-ந் தேதி வர உள்ளேம். அப்போது தொகுதி உடன் பாடு ஏற்பட்டுவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஏற்கனவே திருப்பூர் மற்றும் நாகை தொகுதிகள் தருவதாக கூறப்பட்டிருந்த நிலையில் இப்போது கூடுதலாக ஒரு தொகுதி கேட்பதால் இன்று தொகுதி பங்கீடு கையெழுத்தாக வில்லை.

    • நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும்.
    • இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஜுன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா அரசு உடனடியாக வழங்க வேண்டும். தண்ணீர் இன்றி கருகி பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். குறுவை சாகுபடிக்கான பயிர் காப்பீடு திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி தலைமை வகித்தார். இதில் மாவட்ட நிர்வாகிகள் சேவையா ,விஜயலட்சுமி, பிரபாகர் , முத்துக்குமார், செல்வகுமார் ,கல்யாணி, விஜயலட்சுமி, ராமச்சந்திரன், முகில், ராமலிங்கம் ,மூத்த தலைவர் கிருஷ்ணன், ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கர்நாடகா அரசு, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    அப்போது அவர்கள் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதேப்போல் அம்மாபேட்டை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற முற்றுகை போராட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு காவிரி நீரை வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதேப்போல் மாவட்டத்தில் மொத்தம் 9 இடங்களில் முற்றுகை போராட்டம் நடந்தது.

    போராட்டத்தில் ஈடுபட்டவ ர்களை அந்தந்த போலீசார் கைது செய்தனர்.

    ×