search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Posters"

    • 23-வது வார்டு பகுதியில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தூய்மை பணிகள் நடைபெற்றது
    • பஸ் நிறுத்தம் பகுதியில் ஒட்டப்பட்ட விளம்பர போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தை செயல்படுத்தும் விதமாக கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவின் பேரில் பல்வேறு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் படி இன்று மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படியும் உதவி கமிஷனர் வாசுதேவன் ஆலோசனையின் பேரிலும் நெல்லை மண்டலம் அலகு எண் 3-க்கு உட்பட்ட 23-வது வார்டு பகுதியில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தூய்மை பணிகள் நடைபெற்றது. அதன்படி டவுன் காட்சி மண்டபம் பஸ் நிறுத்தம் பகுதியில் அனுமதியின்றி ஒட்டப்பட்டுள்ள விளம்பர போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது பஸ் நிறுத்தம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.

    • ஊர் பெயர் பலகையில் திருமண வாழ்த்து உள்ளிட்ட பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்படுகிறது.
    • வெளியூர் வாகன ஓட்டிகள், ஊர் பெயர் தெரியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெளியூரில் இருந்து வருபவர்கள் பாபநாசம் வழியை அடையாளம் காணும் வகையில் நகரின் முக்கிய சாலைகளில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    பெயர் பலகையை மறைத்து கண்ணீர் அஞ்சலி, திருமண வாழ்த்து ஆகிய போஸ்டர்கள் ஒட்டப்படு வதால்அந்த வழியாக புதிதாக வரும் வாகன ஓட்டிகள், ஊர் பெயர் தெரியாமல் திண்டாடு கின்றனர்.

    மேலும் ஒரு சில இடங்களில் ஊர் பெயர் எழுத்துக்கள் அழிந்து காணப்படுவதோடுபெயர் பலகை கீழே விழுந்து கேட்பார் இன்றி காணப்படுகிறது.

    மேலும் இரவில் வரும் வெளியூர் வாகன ஓட்டிகள், ஊர் பெயர் தெரியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

    தொடர்ந்து ஒட்டப்படும் சுவரொட்டிகளால் ஊர் பெயர் பலகை விளம்பர பலகையாக மாறிவருகிறது.

    உடனடியாக விளம்பர சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுத்து அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நெல்லை மாநகரப் பகுதியில் சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டது.

    நெல்லை:

    நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவின் பேரில் நெல்லை மாநகரப் பகுதியில் ஒவ்வொரு மாதமும் இரண்டு மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரிலும் உதவி கமிஷனர் வெங்கட்ராமன், நகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலும் நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தீவிர தூய்மை பணி நடைபெற்றது.

    அதன்படி டவுன் காட்சி மண்டபம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சி போஸ்டர்கள் கிழித்து சுத்தப்படுத்தப்பட்டது. தொடர்ந்து வழுக்கோடை சாலை, சேரன்மகாதேவி சாலை மற்றும் காட்சி மண்டபம் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டது.

    இந்த பணியில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார் வையாளர் மனோஜ், பரப்புரை யாளர்கள் முத்துராஜ், ஷேக், மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்்.

    • அ.தி.மு.க.வின் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீ ர்செல்வத்தை நீக்கியதற்கு பிறகும் அவர் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடியை பயன்படுத்தி வருகிறார்.
    • இதை கண்டித்து உளுந்தூர்பேட்டையில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    கள்ளக்குறிச்சி:

    அ.தி.மு.க.வில் அடிப்ப டை உறுப்பினர் பதவியில் இருந்து முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீ ர்செல்வத்தை நீக்கியதற்கு பிறகும் அவர் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடியை பயன்படுத்தி வருகிறார். அ.தி.மு.க.வின் சின்ன மான இரட்டை இலை சின்னத்தை பற்றி பேசி வருவதை கண்டித்து உளுந்தூ ர்பேட்டையில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்ட ப்பட்டுள்ளன.கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீ ர்செல்வத்தை கோமாளி போல சித்தரித்து அவரை கண்டித்து வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரை பொது மக்கள் நின்று கவனித்து சென்று வருகின்றனர். இதனால் இன்று அதிகாலை முதலே உளுந்தூர்பேட்டை பகுதி மக்கள் இது குறித்து பரபரப்பாக பேசி வருகின்றனர்.

    • மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • நெல்லை மாநகராட்சியை கலைக்க கோரி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் கடந்த சில மாதங்களாக மன்ற கூட்டங்களில் மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சமீபத்தில் நடைபெற்ற மன்ற கூட்டத்தில் கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது. இதனால் மக்களுக்கு தேவை யான திட்டப் பணிகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்ட தாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வந்தனர்.

    இந்நிலையில் நெல்லை மாநகராட்சியை கலைக்க கோரி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா சார்பில் மாநகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டப் பட்டுள்ளது. அந்த போஸ்டரில், மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காதே. நெல்லை மாநகராட்சியை கலைத்திடு என்று குறிப்பிட்டுள்ளனர்.

    மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி அலுவலகத்தின் அருகிலும், மாநகரத்தின் பல்வேறு இடங்களிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
    • தூய்மை பணியாளர்கள் போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்தினர்.

    நெல்லை:

    சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா மற்றும் நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உத்தரவின் பேரில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    தன்னார்வ அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் நடத்தப்படும் இந்த மெகா தூய்மை பணியில் இந்த மாதத்தில் 2-வது சனிக்கிழமையான இன்று வானகரம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை கிழித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.

    டவுன் மண்டலத்துக்கு உட்பட்ட கீழரத வீதி, மேல ரதவீதி மற்றும் குற்றாலம் ரோடுகளில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில், உதவி கமிஷனர் வெங்கட் ராமன் மேற்பார்வையில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில், தூய்மை பணியாளர்கள் பொதுஇடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்தினர்.

    இதேபோல் பாளை பகுதியில் சுகாதார அலுவலர் முருகேசன் தலைமையில் சுகாதார ஆய்வா ளர்கள் சங்கரநா ராயணன், பெருமாள், அந்தோணி மேற்பார் வையில் தூய்மை பணியா ளர்கள் போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்தும் பணியை தொடர்ந்தனர்.

    • மதுரை நகரில் மேம்பாலங்கள்-பொது கட்டிடங்களை போஸ்டர்கள் அலங்கோலமாக்குகிறது.
    • விதிகளை மீறி போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



    காளவாசல் மேம்பாலத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.

     மதுரை

    தமிழகத்தில் 2-வது பெரிய மாநகராட்சியான மதுரை நகரம் காலத்திற்கு ஏற்ப நாள்தோறும் பல்வேறு மாற்றங்களை அடைந்து வருகிறது. தென் மாவட்டங்களின் தலைநகரமாக விளங்கும் மதுரையில் அரசியல் கட்சியினர் மாநாடு, பொதுக் கூட்டங்கள் போன்றவற்றை நடத்துவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். அதுமட்டுமின்றி சினிமா ஆர்வம்மிக்க மக்கள் அதிகம் வசிக்கும் மதுரை நகரில் பல்வேறு நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள், நற்பணி இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதன் காரணமாக மதுரையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஏதேனும் ஒரு நிகழ்ச்சி நடப்பது வாடிக்கையாக உள்ளது. அரசியல் கட்சியினர் நடத்தும் மாநாடு, பொதுக்கூட்டங்கள், பேரணிகள் போன்றவற்றை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். கம்ப்யூட்டர் காலமாக மாறினாலும் போஸ்டர் கலாச்சாரம் மட்டும் தமிழகத்தில் இன்னும் மாறவே இல்லை.

    குறிப்பாக மதுரையில் சினிமா ரசிகர்கள், அரசியல்வாதிகள், பல்வேறு அமைப்பினர் பிரச்சினைக்குரிய வாசகங்களை இடம்பெற செய்து போஸ்டர் யுத்தம் நடத்தி வருகின்றனர்.இதனை அதிகாரிகளோ, போலீசாரோ கண்டு கொள்வதில்லை. மதுரை நகரில் தற்போது எங்கு பார்த்தாலும் பெரிய அளவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. அரசு பொது கட்டிடங்கள், மேம்பாலங்கள், பஸ் நிலையங்கள் என மக்கள் கூடும் இடங்களில் போஸ்டர்களை ஒட்டி அலங்கோலப்படுத்தும் நிலை அதிகரித்துள்ளது.

    அரசு பல கோடி மதிப்பில் பொது கட்டிடங் களையும், மேம்பாலங்களையும் கட்டுகிறது. அவைகள் திறப்பு விழா காண்பதற்குள் அரசியல் கட்சியினரோ அல்லது மற்ற அமைப்புகளோ போஸ்டர்களை ஒட்டி அலங்கோலப்படுத்தி விடுகின்றனர்.

    இதற்கு உதாரணமாக மதுரை தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பறக்கும் மேம்பாலத்தை கூறலாம். இந்த பாலத்தின் தூண்களின் அரசியல் கட்சியினர், தனியார் நிகழ்ச்சி அமைப்பாளர்கள், திறப்பு விழா நடத்துபவர்கள் என பல தரப்பினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அழகாக கட்டப்பட்டுள்ள பாலத்தின் தூண்களில் இவ்வாறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பார்ப்பதற்கு முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. புதிய மேம்பாலம் போஸ்டர்கள் ஒட்டுவதற்காக கட்டப்பட்டுள்ளது போல் காட்சியளிக்கிறது.

    அது மட்டுமின்றி பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய தொழில்கள் நடத்துபவர்கள் வரை பொருட்களை விளம்பரப்படுத்துவதற்காக நோட்டீசுகளை பொது இடங்கள், மின் கம்பங்கள், பஸ் நிறுத்த நிழற்குடைகள் அரசு கட்டிடத்தின் சுற்றுச்சுவர்கள், பொதுக் கழிப்பறைகள், அரசு வைத்திருக்கும் தெரு மற்றும் ஊர் பெயர் பலகைகளில் கூட ஒட்டி மறைத்து விடுகின்றனர். நகரின் அழகை கெடுக்கும் வகையில் ஒட்டப்படும் போஸ்டர் கலாச்சாரத்தை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் கண்டுகொள்ளாததால் இந்த நிலை தொடருகிறது.

    ஆகவே இதனை தடுக்க மதுரை நகரில் விதிகளை மீறி போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அபராதமும் விதிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.


    • கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை அமைக்கப்படுகிறது.
    • சுவர் விளம்பரங்களை தடுக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

    கோவை,

    கோவை அவினாசி ரோடு மிக முக்கியமான சாலையாகும். இந்த சாலையில் ஏராளமான கல்லூரிகள், ஓட்டல்கள், நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் இந்த சாலையில் எப்போது போக்குவரத்து அதிகமாக காணப்படும்.

    இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டே கடந்த பல வருடம் முன்பு 6 வழி சாலையாக மாற்றப்பட்டது. இருந்த போதும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.

    இதையடுத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் போக்குவரத்து வசதிக்காகவும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. 10.10 கி.மீ நீளத்தில் ரூ.1,621.30 கோடி மதிப்பில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

    தற்போது பாலத்தி ற்கான தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோல்டு வின்சிலிருந்து விமான நிலையம் வரை தாங்கு தூண்களில் ஓடுதளம் அமைக்கும் பணி விரைந்து நடைபெற்ற வருகிறது.

    இந்த நிலையில் மாநகராட்சி சுவர் விளம்பரங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக காந்திபுரத்தில் உயர்மட்ட மேம்பால சுவரொட்டிகள் அகற்றப்பட்டு தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது.

    இதன் அடுத்தப்படியாக அவினாசி மேம்பால தூண்களிலும் சுவரொட்டிகள் அகற்றும் பணியில் மாநகராட்சி தீவிரமாக செய்து வருகிறது. மேலும் வருகிற 18-ந் தேதி ஜனாதிபதி கோவை வர உள்ளார். இதனால் தூண்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்து வருகின்றனர்.

    சாலையின் நடுவே உள்ள தடுப்புகள், அவினாசி மேம்பாலம் ரவுண்டானா ஆகிய இடங்களில் வண்ணம் பூசப்பட்டு கோவை புதுப்பொலிவு அடைந்து வருகிறது. 

    • பொதுப்பணித்துறை சார்பில் தடுப்புச் சுவற்றில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டு சில வாரங்களுக்கு முன்பு அதில் கருப்பு-வெள்ளையில் இரு வர்ணங்கள் பல லட்சம் செலவில் பூசப்பட்டு அழகுற காணப்பட்டது.
    • அதனால் மீண்டும் போஸ்டர் சில காலம் யாரும் சுவற்ரின் மேல் போஸ்டர் ஒட்டாமல் இருந்தனர்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் கடைவீதியில் இரு புறங்களுக்கும் நடுவில் தடுப்புச் சுவர் 1 உள்ளது.

    இதனை அழகுப்படுத்தும் விதத்தில் புதுவை அரசின் பொதுப்பணித்துறை சார்பில் தடுப்புச் சுவற்றில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டு சில வாரங்களுக்கு முன்பு அதில் கருப்பு-வெள்ளையில் இரு வர்ணங்கள் பல லட்சம் செலவில் பூசப்பட்டு அழகுற காணப்பட்டது.

    அழகாக காணப்படும் தடுப்பு சுவற்றின் மீது போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என பொதுமக்களுக்கு பொது ப்பணித்துறை–யினரும் அறிவுறுத்தி இருந்தனர்.

    அதனால் மீண்டும் போஸ்டர் சில காலம் யாரும் சுவற்ரின் மேல் போஸ்டர் ஒட்டாமல் இருந்தனர். இதனால் கடைவீதி தடுப்புச் சுவர் அழகாக காணப்பட்டது. ஆனால் கடந்த இரு தினங்களாக அழகாக காணப்பட்ட தடுப்புச் சுவற்றின் மேல் சிலர் பல்வேறு விதமான போஸ்டர்களை ஒட்ட தொடங்கியுள்ளனர்.

    அதனால் பல லட்சம் செலவு செய்து வர்ணம் பூசப்பட்ட தடுப்புச் சுவர் அதன் அழகை இழக்கும் நிலை உள்ளது.

    மேலும் அரசின் பணம் வீணாகும் சூழ்நிலையும் ஏற்பட்டு உள்ளது. இதனைப் போக்க கடை வீதியின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் போஸ்டர்களை ஒட்டுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வியாபாரிகளும் பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுவரொட்டிகள், நோட்டீஸ்கள், பதாகைகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
    • சுவர் ஓவியங்களும், மேம்பாலத்தின் தூண்களில் சுவர்களில் தேச தலைவர்களின் படங்கள் ஒட்டப்பட்டும் வருகிறது.

    கோவை:

    கோவை மாநகரில் அரசு கட்டிடங்களின் சுவர்கள், மேம்பாலத்தின் தூண்கள், சுரங்கப் பாதைகள், சாலைகளின் மையத்தடுப்பான்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அரசியல் கட்சியினர், தனி நபர் மற்றும் நிறுவனங்களால் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.

    மேலும் விளம்பரங்கள், வாழ்த்துச் செய்தி, அறிவி ப்புகள் எழுதப்படுகின்றன. தவிர, மின்கம்பங்களில் கயிறுகளை கட்டியும், மரங்களில் ஆணியால் அடித்தும் விளம்பரப்பதாகைகளை தொங்க விடுகின்றனர். சில சுவரொட்டிகள், நோட்டீஸ்கள், பதாகைகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், வாகன ஓட்டுநர்களின் கவனத்தை திசை திருப்பி விபத்துக்கு வழிவகுக்கும் வகையிலும், முகம் சுளிக்கும் வகையிலும் உள்ளதாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

    இதனை தடுக்க சுவர் ஓவியங்களும், மேம்பாலத்தின் தூண்களில் சுவர்களில் தேச தலைவர்களின் படங்கள் ஒட்டப்பட்டும் வருகிறது. காந்திபுரம் மேம்பாலத்தின் துண்களில் ஓவியங்கள் வரையும் திட்டத்தையும் கடந்த சில நாட்கள் முன்பு மாநகராட்சி கமிஷனர் தொடங்கி வைத்தார். ஆனாலும் சுவரொ ட்டிகள் ஒட்டப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பொது இடங்கள், அரசு கட்டிடங்கள், சுவர்கள், தெரு விளக்கு கம்பங்கள், சாலை மையத்திட்டுகள், பாலங்கள், இயற்கை வளங்களில் விளம்பரங்கள் எழுதவோ, சுவரொட்டிகள் ஒட்டவோ கூடாது. இதை மீறினால், தொடர்புடைய வர்த்தக நிறுவனம், விளம்பர நிறுவனம், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள், பொது நிகழ்ச்சி, குடும்ப நிகழ்ச்சிக்காக போர்டு வைப்பவர்கள் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அ.தி.மு.க. அமைய வேண்டும்.
    • தென்காசி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    கடையம்:

    அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதர வாளர்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் தென்காசி மாவட்ட அ.தி.மு.க.வக்கீல் பிரிவு துணைச் செயலாளர் புங்கம்பட்டி ராஜசேகர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அ.தி.மு.க. அமைய வேண்டும் என ஒட்டிய சுவரொட்டிகளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கடையம், ஆழ்வார்குறிச்சி, பாவூர்சத்திரம், பூலாங்குளம், பொட்டல்புதூர் உள்பட தென்காசி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    தேர்தலை புறக்கணிக்குமாறு முண்டக்கையில் உள்ள விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு மாவோயிஸ்டுகள் சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். #LokSabhaElection #Maoist #BoycottElection
    வயநாடு:

    கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். 23-ந் தேதி, அங்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில், அந்த தொகுதிக்கு உட்பட்ட முண்டக்கை நகரில் மாவோயிஸ்டுகள் ஒட்டிய சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் நேற்று காணப்பட்டன.

    அதில், தேர்தலை புறக்கணிக்குமாறு முண்டக்கையில் உள்ள விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. இதையடுத்து, அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக துணை ராணுவப்படைகள் வரவழைக்கப்பட்டன. நிலைமையை கண்காணித்து வருவதாகவும், விசாரணையை தொடங்கி உள்ளதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருப்பசாமி தெரிவித்தார்.

    கடந்த மாதம் 6-ந் தேதி, மாவோயிஸ்டு தலைவர் ஜலீல், துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டதில் இருந்தே வயநாட்டில் போலீசார் உஷார்நிலையில் இருந்து வருகிறார்கள். #LokSabhaElection #Maoist #BoycottElection 
    ×