search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் காங்கிரஸ் இப்தார் விருந்து - முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் துணை ஜனாதிபதி பங்கேற்பு
    X

    டெல்லியில் காங்கிரஸ் இப்தார் விருந்து - முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் துணை ஜனாதிபதி பங்கேற்பு

    டெல்லியில் காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்ட இப்தார் விருந்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி உள்பட பலர் பங்கேற்றனர். #Congress #IftarParty #RahulGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருபவர் ராகுல் காந்தி. இவர் கட்சி தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு, முதல் முறையாக இன்று இப்தார் விருந்து அளித்தார். டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஓட்டலில் இப்தார் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



    இந்த இப்தார்  விருந்தில் முன்னாள் ஜனாதிபதிகள் பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல்  மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

    இந்த விருந்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஷீலா தீட்சித், அகமது படேல்,  சீதாராம் யெச்சூரி, கனிமொழி, சரத் யாதவ் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.



    மேலும், ரஷ்யா நாட்டு தூதர் நிகோலய் குகஷேவ் உள்பட பல வெளிநாட்டு பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டனர். #Congress  #Congress #IftarParty #RahulGandhi 
    Next Story
    ×