என் மலர்
நீங்கள் தேடியது "Karthik Subbaraj"
- ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
- கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 'ரெட்ரோ' படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது.
சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் ஒரு காதல் திரைப்படம் அதில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறினார். திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 'ரெட்ரோ' படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. கோடை விடுமுறையை ஒட்டி படம் வெளியாகும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் ரெட்ரோ படம் மே 1 அன்று தொழிலாளர் தினத்தன்று திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான கங்குவா படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்றாலும், ஆஸ்கர் பட்டியலில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதுமற்றுமின்றி அடுத்ததாக சூர்யா 45 படம் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதற்கு பேட்டைக்காரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
The One from May One !!#Retro in Cinemas Worldwide from May 1st 2025#LoveLaughterWar#TheOneMayOne pic.twitter.com/f6kDAp5cod
— karthik subbaraj (@karthiksubbaraj) January 8, 2025
- கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 'ரெட்ரோ' படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது.
- இப்படம் இந்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
சூர்யாவின் 44வது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் ஒரு காதல் திரைப்படம் அதில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறினார். திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 'ரெட்ரோ' படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. படத்தின் டைட்டில் டீசர் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் இந்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டு தினமான இன்று படத்தின் போஸ்டரை வெளியிட்டு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Happy #Retro New Year 2025 ?❤️ pic.twitter.com/RZqhrBsECC
— karthik subbaraj (@karthiksubbaraj) January 1, 2025
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- காதலிப்பது பெண்களின் தனிப்பட்ட சுதந்திரம் என்று நீதிபதி தெரிவித்தார்.
- ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மட்டும்தான் குற்றவாளி என போலீஸ் தரப்பிலும், அரசு தரப்பிலும் கூறப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, "பெண்கள் ஆண்களுடன் பேசக்கூடாது, அவர் அங்கு சென்றிருக்க கூடாது என பேசக்கூடாது. பெண்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது, காதலிப்பது பெண்களின் தனிப்பட்ட சுதந்திரம்" என்று நீதிபதி தெரிவித்தார்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "பெண்களுக்கு அதிக சக்தியும் பலமும் கிடைக்கட்டும். இதில் சம்பந்தப்பட்ட அனைத்து ஆண்களும் நரகத்தில் அழுகட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
More Power n Strength to the Girls...Make all The Men involved to Rot in Hell!!#AnnaUniversityCase
— karthik subbaraj (@karthiksubbaraj) December 27, 2024
- முன்பை விட இப்போது தமிழ் சினிமா அதிக வளர்ச்சி அடைந்துள்ளது.
- திறமையானவர்கள் சினிமாவிற்கு வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தந்தையும், நடிகருமான கஜராஜ் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ் சினிமா இன்று நல்ல நிலைமையில் உள்ளது. படித்தவர்கள் அதிகம் வருகிறார்கள். முன்பை விட இப்போது தமிழ் சினிமா அதிக வளர்ச்சி அடைந்துள்ளது.
சிறிய பட்ஜெட்டில் அதிகளவில் படங்கள் வெளியாகிறது. திறமையானவர்கள் சினிமாவிற்கு வருகிறார்கள். இதை பெரிய வாய்ப்பாக கருதுகிறேன்.
நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் இன்று கதைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது பெரிய மாறுதலாக கருதுகிறேன்.
முன்பு கதாநாயகர்களின் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று நல்ல கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனக்கான வாய்ப்பு என் மகன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மூலம் வந்தது.
எனது தாய், தந்தை புண்ணியத்தில் 100 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். என் மகனை பற்றி நான் சொல்வதை காட்டிலும் மக்கள் அதிகம் பேசுகிறார்கள். இதுவே எனக்கு பெருமையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
- கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" மற்றும் 'ரா மச்சா மச்சா' பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண் கடைசியாக ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாகத் தமிழின் முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் ராம் சரண் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளைத் திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார்.
கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" மற்றும் 'ரா மச்சா மச்சா' பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நவம்பர் 9 ஆம் தேதி கேம் சேஞ்சர் படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்நிலையில் பான் இந்தியா படம் என்பதால் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் வைத்து படத்தின் டீசர் வெளியீட்டை வரும் நவம்பர் 9 ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அதை உறுதி செய்யும் வகையில் புதிய போஸ்டர் ஒன்றை தற்போது கேம் சேஞ்சர் படக்குழு வெளியிட்டுள்ளது.
The Command Begins From Nov 9th in the heartland of India ❤️??#GameChangerTeaser Grand Launch In Lucknow, UP ?#GameChanger In Cinemas From 10th Jan, 2025 ✊? pic.twitter.com/rKwvxIHuzh
— Game Changer (@GameChangerOffl) November 5, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- லப்பர் பந்து படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
- இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான படம் லப்பர் பந்து. இந்த படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக லப்பர் பந்து திரைப்படம் பல வாரங்களை கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
திரைப்படம் இதுவரை 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. லப்பர் பந்து திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் லப்பர் பந்து படத்திற்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "லப்பர் பந்து திரைப்படம் அழகான நடிப்பு திறனால் உருவாக்கப்பட்ட, மகிழ்ச்சி அடைய செய்த சிறப்பான திரைப்படம். கெத்து மற்றும் மைதானத்தில் அவருக்கு உருவாக்கப்பட்ட பில்டு-அப்களை ரசித்தேன். அறிமுக படத்தை சிறப்பாக வழங்கிய தமிழரசன் பச்சமுத்துவுக்கு வாழ்த்துக்கள்."
"படத்தில் நடித்த தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாசிகா, சஞ்சனா, காளி வெங்கட், பால சரவணன், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், ஒளிப்பதிவாளர் தினேஷ்குமார் புருஷோத்தமன், பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
#LubberPandhu was Super fun film, well made with Nice performances.... Loved Gethu & his build ups on ground ??
— karthik subbaraj (@karthiksubbaraj) October 28, 2024
Congratulations @tamizh018 for delivering an awesome debut film ??
Great job #Diinesh @iamharishkalyan #swasika @isanjkayy @kaaliactor @Bala_actor @RSeanRoldan… pic.twitter.com/hP2dcBTBYJ
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இணைய தொடரின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
- இணைய தொடரை கமல் அல்கெமிஸ் மற்றும் திவாகர் கமல் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ள புதிய இணைய தொடர் ஸ்னேக்ஸ் அண்டு லேடர்ஸ். பரத் முரளிதரன், அசோக் வீரப்பன், கமலா அல்கிமிஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த இணைய தொடர் அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் வருகிற 18 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ஸ்னேக் அண்டு லேடர்ஸ் இணைய தொடரின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. பள்ளி மாணவர்கள் நான்கு பேரின் சாகச பயணத்தில் நடைபெறும் விபரீதம், அதன் பின்னணியில் உள்ள மனிதர்கள் மற்றும் அதன் பின் நடைபெறும் பிரச்சினைகள் இந்த இணைய தொடரின் கதை ஆகும்.
திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் ஸ்னேக் அண்டு லேடர்ஸ் இணைய தொடரை கமல் அல்கெமிஸ் மற்றும் திவாகர் கமல் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜெயம் ரவி தற்பொழுது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- பிரதர் திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஜெயம் ரவி தற்பொழுது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரதர் திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
பிரதர் திரைப்படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார். இவருடன் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது.
அதைத்தொடர்ந்து காதலிக்க நேரமில்லை மற்றும் ஜீனி ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜெயம் ரவிக்கு, பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர் நடித்த படங்களின் அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. அடுத்ததாக ஜெயம் ரவி , கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் படம் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தற்பொழுது சூர்யா 44 திரைப்படத்தை இயக்கி வருகிறார் கார்த்தி சுப்பராஜ். அதை முடித்துவிட்டு ஜெயம் ரவி திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை கார்த்தி சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார்.
- இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கியது. ஊட்டியில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.
அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொச்சியில் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. இன்று படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட சூர்யாவை ரசிகர்கள் சூர்யாவை சூழ்ந்துக் கொண்டனர். அப்பொழுது சூர்யா அவர்களிடம் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதுமட்டுமில்லாமல் மலையாளத்தில் சிறப்பாக ஓடிய ஆர்.டி.எக்ஸ் திரைப்படத்தின் இயக்குனரான நஹாஸ் சூர்யாவை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.
சூர்யா தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. நவம்பர் மாதம் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இயக்கி வருகிறார்.
- இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இயக்கி வருகிறார்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கியது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைப்பெற்று வருகிறது.
படத்தில் சூர்யாவின் தோற்றம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் சூர்யா திரைத்துறையில் பணியாற்றி 27 வருடங்கள் முடிவடைந்த நிலையில் அதைப் கொண்டாடும் விதமாக ஒரு வீடியோவும். சூர்யா 44 படக்குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இப்போஸ்டர் சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.
சூர்யா அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் ரிலீசுக்கு தயாரகவுள்ளது. நவம்பர் மாதம் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- காதல்.. சிரிப்பு.. யுத்தம் உள்ளிட்ட வாசகங்களுடன் தொடங்கும் இந்த வீடியோவில் கழுத்தில் ரத்தத்துடன் சூர்யா
- இந்த கிலிம்ஸ் வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிரச் செய்துள்ளது
இன்று [ஜூலை 23] நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், 'சூர்யா 44' படத்தின் அப்டேட் நேற்று நள்ளிரவு 12.12 மணிக்கு வெளியாகும் என இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார் .
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கியது.
இந்நிலையில் நேற்று கார்த்திக் சுப்புராஜ் அறிவித்திருந்தபடி சூர்யா 44 படத்தின் அதிரடியான கிலிம்ஸ் வீடியோ நாளிரவு 12.12 மணிக்கு வெளியாகியுள்ளது. காதல்.. சிரிப்பு.. யுத்தம் உள்ளிட்ட வாசகங்களுடன் தொடங்கும் INTHவீடியோவில் ரத்தத்துடன் கேங்ஸ்டர் தோற்றத்தில் துப்பாக்கியேந்தி மாஸ் காட்டும் லுக்கில் சூர்யா நடந்துவருவது விக்ரம் படத்தில் வரும் ரோலக்ஸ் கதாபாத்திரம் தந்த வைபை மீண்டும் தருவதாக உள்ளது. துப்பாக்கியை கேமராவின் முன் நீட்டி சூர்யாவின் சிக்நேச்சர் சிரிப்புடன் முடியும் இந்த கிலிம்ஸ் வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிரச் செய்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
- இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற உள்ளது.
நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கியது.
நாளை நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், 'சூர்யா 44' படத்தின் அப்டேட் இன்று நள்ளிரவு 12.12 மணிக்கு வெளியாகும் என இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.