என் மலர்
நீங்கள் தேடியது "Karthik Subbaraj"
- ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது.
- பல ஆண்டுகளாக புதுமையான மற்றும் விருதுகளுக்கு தகுதியான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றது சீக்யா என்டர்டெயின்மென்ட்.
ஆஸ்கார் விருது பெற்ற இந்திய தயாரிப்பு நிறுவனம் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குநருடன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்குகிறது.
குனீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோரின் ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக புகழ்பெற்ற இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது. எளிமையான பூஜைக்கு பிறகு மதுரையில் படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
பல ஆண்டுகளாக புதுமையான மற்றும் விருதுகளுக்கு தகுதியான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றது சீக்யா என்டர்டெயின்மென்ட். இந்தியாவின் முதல் ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படமான 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்', 'தி லஞ்ச்பாக்ஸ்', 'மசான்', 'பாக்லைட்' மற்றும் சமீபத்தில் தேசிய விருது பெற்ற 'காதல்' போன்ற உலகளவில் பாராட்டப்பட்ட பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளது இந்நிறுவனம். தனித்துவமான கண்ணோட்டத்துடன், புதிய திறமையாளர்களை வளர்த்து உலகளவில் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் நற்பெயரை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் சமகால இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருகிறார். இது அவருடைய பத்தாவது திரைப்படமாகும். கடந்த பத்தாண்டுகளில் 'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'பேட்ட', 'இறைவி', 'மெர்குரி', 'ஜகமே தந்திரம்', 'மகான்', 'ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்' மற்றும் 'ரெட்ரோ' என விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பாராட்டப்பட்ட பல படைப்புகளை அவர் கொடுத்திருக்கிறார்.
இந்தப் படம் குறித்து சீக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் குனீத் மோங்கா கபூர் பகிர்ந்து கொண்டதாவது, "பல்வேறு கலாச்சாரங்களை கடந்து பார்வையாளர்களை சென்றடையும் மண்சார்ந்த கதைகளை சொல்வதில்தான் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். அந்த நம்பிக்கையை நிச்சயம் கார்த்திக் சுப்பராஜ் காப்பாற்றுவார். அவரது கதைகள் புதுமையாகவும் உலகளவில் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாகவும் அமையும். கார்த்திக்குடன் இந்தப் பயணத்தில் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டதாவது, "சீக்யா தயாரித்திருக்கும் படங்கள் அனைத்தையும் நான் ரசித்திருக்கிறேன். நான் திரைக்கு கொண்டு வர வேண்டும் என விரும்பும் கலையுடன் சீக்யாவின் ரசனையும் ஒத்துப்போகிறது. விருதுகளுக்கு அர்த்தமுள்ள, தகுதியான படங்களைத் தயாரித்த குனீத் மற்றும் அச்சினுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. நான் எழுதியிருக்கும் இந்தக் கதை என் மனதுக்கு நெருக்கமானது. அந்தக் கதைக்கான சரியான தயாரிப்பாளர்கள் கிடைத்துள்ளனர்" என்றார்.
சீக்யா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் அச்சின் ஜெயின் பகிர்ந்து கொண்டதாவது, "கல்ட் மற்றும் கமர்ஷியல் என்ற இரண்டு விஷயங்களையும் சரியாகக் கையாளத் தெரிந்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். அவரது கதைகள் எதிர்பாராத திருப்பங்களையும் அதே சமயம் ஆழமான உணர்வுகளையும் கொண்டிருக்கும். பார்வையாளர்களின் எதிர்பார்ப்பையும் சரியான கதை சொல்லல் திறமையும் கொண்ட இயக்குநருடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம். கார்த்திக் சுப்பராஜூடன் இணைந்திருப்பது சக்திவாய்ந்த வேரூன்றிய கதைகளை, உலகளாவிய சினிமா மொழி மூலம் வெளிப்படுத்தும் சீக்கியாவின் நோக்கத்தை பிரதிபலிக்கிறது" என்றார்.
- ரெட்ரோ திரைப்படம் கடந்த மே 1 வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- ரெட்ரோ படம் உலக அளவில் ரூ.235 கோடி வசூலில் கடந்துள்ளது.
நடிகர் சூர்யாவின் 44-வது படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்தார். திரைப்படம் கடந்த மே 1 வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
சூர்யா நடித்த திரைப்படங்களில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்த திரைப்படமாக ரெட்ரோ உருமாறியது. ரெட்ரோ படம் உலக அளவில் ரூ.235 கோடி வசூலில் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, நடிகர் சூர்யா இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில், 'ரெட்ரோ' படத்தின் Unseen லுக் டெஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுவாழ்த்து தெரிவித்துள்ளார்.
- அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி.
- இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி. இப்படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஒரு மிடில் கிளாஸ் மனிதனின் வாழ்க்கையில் சந்தோஷம் மற்றும் சுவாரசியம் எங்கே இருக்கிறது என்ற கேள்வியுடன் நம் அனைவரின் கதையை பிரதிபலிக்கும் வகையில் ஒரு எதார்த்த கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் படத்தை பார்த்த கார்த்திக் சுப்பராஜ் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் படம் குறித்து அவர் " இப்படம் மனதிற்கு இதம் தரும் திரைப்படமாக உருவாகியுள்ளது, காளி வெங்கடின் நடிப்பு பிரமாதம். இந்த அற்புதமான திரைப்படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள்" என கூறியுள்ளார்.
இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தின் ஒளிப்பதிவை ஆனந்த் ஜி.கே, இசை கே.சி பாலசரங்கன், படத்தொகுப்பு சதீஷ் குமார், கலை வடிவத்தை ஜாக்கி மேற்கொண்டுள்ளனர்.
- திரைப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- சூர்யா மற்றும் பூஜா ஹெக்டேவிற்கும் இடையே திருமணம் நடக்கும் போது அமைந்துள்ள பாடலாகும்.
நடிகர் சூர்யாவின் 44ஆவது படம் ரெட்ரோ. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். திரைப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
முதல் நாள் வசூலாக திரைப்படம் உலகளவில் 46 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. சூர்யா நடித்த திரைப்படங்களில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்த திரைப்படமாக ரெட்ரோ உருமாறியுள்ளது.
இதற்கிடையே, இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கனிமா பாடல், ரிலீஸ் ஆன நாள் முதல் பட்டித்தொட்டி எங்கும் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
சூர்யா மற்றும் பூஜா ஹெக்டேவிற்கும் இடையே திருமணம் நடக்கும் போது அமைந்துள்ள பாடலாகும். இப்பாடலின் வரிகளை விவேக் எழுத சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார்.
இந்த பாடலின் நடன அசைவுகளும் சமூக வலைத்தளங்களில் ரீக்ரியேட் செய்யப்படுகிறது.
இந்நிலையில், கனிமா பாடலின் புதிய வெர்ஷனை ரெட்ரோ படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதன் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
- கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
- முதல் நாள் வசூலாக திரைப்படம் உலகளவில் 46 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
நடிகர் சூர்யாவின் 44-வது படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். திரைப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
முதல் நாள் வசூலாக திரைப்படம் உலகளவில் 46 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. சூர்யா நடித்த திரைப்படங்களில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்த திரைப்படமாக ரெட்ரோ உருமாறியுள்ளது.
இன்று பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது.ஆனால் திரைப்படத்திற்கு சில எதிர்மறை விமர்சனங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதற்கு பதிலாக கார்த்திக் சுப்பராஜ் " ஆன்லைன் விமர்சனங்களை பார்த்து ஒரு படத்தின் வெற்றியை முடிவு செய்யக்கூடாது என கற்றுக் கொண்டேன். அனைவருக்கும் படத்தின் மீது ஒவ்வொரு கருத்து இருக்கும். திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது, நான் திரையரங்கில் பார்த்த அனைத்து மக்களும் மிக பாசிடிவாக படத்தை கொண்டாடினர்." என கூறியுள்ளார்.
- நடிகர் சூர்யாவின் 44ஆவது படம் ரெட்ரோ.
- ரெட்ரோ திரைப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகர் சூர்யாவின் 44ஆவது படம் ரெட்ரோ. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். திரைப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
முதல் நாள் வசூலாக திரைப்படம் உலகளவில் 46 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. சூர்யா நடித்த திரைப்படங்களில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்த திரைப்படமாக ரெட்ரோ உருமாறியுள்ளது.

இந்நிலையில் இதற்கு காரணமாக இருந்த ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கார்த்திக் சுப்பராஜ் அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் " ரெட்ரோ படக்குழு சார்பாக அனைத்து ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு, திரையரங்கிள் ஆரவாரம் செய்து உங்கள் அன்பை பொழிந்ததற்காக மிக்க நன்றி. இது நல்ல நேர தொடக்கத்தின் ஒரு ஆரம்ப புள்ளியாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், சதோஷத்தையும் தருகிறது." என கூறியுள்ளார்.
- கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படம் மே1ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
- சிவகார்த்திகேயன் மதராஸி, பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.
சூர்யாவின் 44ஆவது படமான ரெட்ரோவை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படம் மே-1ஆம் தேதி வெளியாகிறது.
சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு டான் பட இயக்குனருடன் கைக்கோர்க்கிறார். அதேவேளையில் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். பாராசக்தி சிவகார்த்திகேயனின் 25ஆவது படமாகும்.
இந்த நிலையில் புதிய படத்தில் இணைவது தொடர்பாக கார்த்திக் சுப்பராஜ்- சிவகார்த்திகேயன் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவேளை சிவகார்த்திகேயன்- கார்த்திக் சுப்பராஜ் இணைந்து பணியாற்ற முடிவு செய்தால், அது சிவகார்த்திகேயனின் 26ஆவது படமாக இருக்கும். ஏற்கனவே, ஏஜிஎஸ் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
- அகரம் பவுண்டேஷனை ஆரம்பிக்க உத்வேகம் கொடுத்தது நீங்கள் தான்.
- நீங்கள் கொடுத்த உத்வேகத்தால் தான் பண்ண முடிந்தது என சூர்யா தெரிவித்தார்.
சென்னை:
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் ரெட்ரோ. இதில் பூஜா ஹெக்டே, நாசர், கருணாகரன், ஸ்வாசிகா, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா பேசியதாவது:
நான் சினிமாவிற்கு வந்து 25 வருடங்களுக்கு மேலாகிறது. உங்களின் இந்த அன்பு இருந்தால் போதும் எப்பொழுதுமே நான் நன்றாக இருப்பேன்.
வாழ்க்கை எப்போதுமே அழகானது. வாழ்க்கையை நம்புங்கள். வாழ்க்கையை நம்பினால் நிறைய அழகான விஷயங்கள் நடக்கும். வாய்ப்பு வரும்போது அதை தவற விட்டு விடாதீர்கள்.
அனைவருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் தான் வாய்ப்பு வரும். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அந்த வாய்ப்பை சரியான பயன்படுத்திக் கொண்டால் எல்லாருமே ஜெயிக்கலாம். அனைவருக்குமே அழகான வாழ்க்கை இருக்கும்.
நடிகராக இருந்த என்னை ஜெயிக்க வைத்து அகரம் என்ற பவுண்டேஷனை ஆரம்பிக்க உத்வேகம் கொடுத்தது நீங்கள் தான். நான் தனி ஆளாக செய்யவில்லை.
நீங்கள் கொடுத்த உத்வேகத்தால் தான் பண்ண முடிந்தது. தற்போது அகரம் பவுண்டேஷன் மூலம் 10 ஆயிரம் தம்பிகள், தங்களை பட்டதாரி ஆகி இருக்கிறார்கள். இன்னும் பல பேர் இதன்மூலம் பயனடைவார்கள் என தெரிவித்தார்.
ரெட்ரோ திரைப்படம் மே 1-ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
- இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
நடிகர் சூர்யா நடிக்கும் 44-வது திரைப்படம் 'ரெட்ரோ.' இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்திற்கான டப்பிங் பணிகளை சூர்யா முழுவதுமாக முடித்துள்ளார். இது குறித்து படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எக்ஸ் தளத்தில் சூர்யாவுடன் இருக்கும் வீடியோ ஒன்றை பதிவு செய்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
- படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
- படம் ஆகஸ்ட் மாதம் அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பூஜா ஹெக்டே இந்த படத்தில் குத்து பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத், சென்னை மற்றும் பாங்காக் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. தற்போது இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படமானது ஆகஸ்ட் மாதம் அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குநர் சுப்பராஜ் புகைப்படத்தை பகிர்ந்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், இப்புகைப்படத்தை எடுப்பதற்கு முன்பு, தலைவர் எங்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே தனது பாணியில் 'பேட்ட கூலி ஜெயிலர்' என்றார்.. லவ் யூ தலைவா என்று கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பேட்ட, நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்', தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படம் என இளைய தலைமுறை இயக்குநர்களுடன் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விஜய் சேதுபதியின் 46-வது படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார்.
- இப்படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
2010-ல் வெளியான 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விஜய்சேதுபதி தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பீட்சா, சூது கவ்வும், நானும் ரவுடிதான், சேதுபதி, தர்மதுரை, விக்ரம் வேதா, 96 உள்ளிட்ட படங்கள் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தின.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதியின் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்சேதுபதி மீண்டும் போலீஸ் அதிகாரியாகவும், அவருக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார்.

விஜேஎஸ்46
இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று இரவு 7.40 மணிக்கு வெளியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
- விஜய் சேதுபதியின் 46-வது படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார்.
- இப்படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
2010-ல் வெளியான 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விஜய்சேதுபதி தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பீட்சா, சூது கவ்வும், நானும் ரவுடிதான், சேதுபதி, தர்மதுரை, விக்ரம் வேதா, 96 உள்ளிட்ட படங்கள் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தின.

விஜேஎஸ்46
விஜய் சேதுபதியின் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்சேதுபதி மீண்டும் போலீஸ் அதிகாரியாகவும், அவருக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார்.

டிஎஸ்பி
இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு டிஎஸ்பி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி பைக்கில் அமர்ந்துக் கொண்டு வருவது போன்று இடம்பெற்றுள்ள அந்த போஸ்டர் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Happy to share #DSP first look.
— VijaySethupathi (@VijaySethuOffl) November 10, 2022
Thank you ☺️@ponramvvs @karthiksubbaraj@immancomposer @kaarthekeyens@kalyanshankar @anukreethy_vas @stonebenchers @vivekharshan @Venkatesh7888 @dineshkrishnanb @veerasamar @kumar_gangappan @sherif_choreo @Dineshsubbaraya1 @radhikassiva pic.twitter.com/FtosXTDvyx






