search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pooja Hegde"

    • இப்படத்தை ராகவேந்திரா புரொடக்சன் மற்றும் கோல்டன் மைன் நிறுவனம் தயாரிக்கிறது.
    • இப்படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த 2011ம் ஆண்டு வெளியான 'காஞ்சனா' திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக 2015-ல் 'காஞ்சனா 2' மற்றும் 2019-ல் 'காஞ்சனா 3' என அடுத்தடுத்த பாகங்களை ராகவா லாரன்ஸ் இயக்கினார். இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாகம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு 'காஞ்சனா 4' என பெயரிடப்பட்டுள்ளது.

    இப்படத்தை ராகவேந்திரா புரொடக்சன் மற்றும் கோல்டன் மைன் நிறுவனம் தயாரிக்கிறது. ராகவா லாரன்ஸ் இப்படத்தை எழுதி இயக்குகிறார். பூஜா ஹெக்டே நடிக்க உள்ள நிலையில், பாலிவுட் நடிகை நோரா பதேகியும் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், 'காஞ்சனா 4' படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. பான் இந்திய படமாக உருவாகும் இப்படத்தை, ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் ஜன நாயகன்
    • இதுவே விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் விஜய் நடிக்கும் 69 படமான ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர்.

    அனிருத் இசையமைக்கும் இந்தப் படம் அக்டோபர் மாத வாக்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் இதுவே விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் படத்தின் கதாநாயகியான பூஜா ஹெக்டே சமீபத்தில் கலந்துக் கொண்ட நேர்காணலில் ஜனநாயகன் திரைப்படத்தை குறித்த சுவாரசிய விஷயங்களை பகிர்ந்தா அதில் அவர் கூறியதாவது. " மக்கள் நானும் அவரும் நடித்த பீஸ்ட் திரைப்படத்தை மிகவும் விரும்பினர். அதைத்தொடர்ந்து அடுத்ததாக எப்பொழுது மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்க போகிறீர்கள் என்ற கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தனர். மக்களின் அன்பிற்காக மட்டுமே இப்படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்த படத்திலும் எங்களை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன். அதுமட்டும் இல்லாமல் இது விஜய் சாரின் கடைசி திரைப்படம் என கூறுகிறார்கள் ஆனால் அப்படி இருக்கக் கூடாது என ஆசைப்படுகிறேன். இந்த வாய்ப்பை தவறவிட்டால் என்னால் மீண்டும் பெற இயலுமா என்று தெரியவில்லை." என கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் விஜய், இயக்குநர் எச். வினோத் இயக்கும் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.
    • பூஜா ஹெக்டே இப்படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரேவற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் தனது அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாடு, கட்சி சார்ந்த கூட்டங்களில் கலந்து கொண்டார்.

    இதனிடையே நடிகர் விஜய், இயக்குநர் எச். வினோத் இயக்கும் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்தப் படத்தின் பூஜை தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படமே இவர் நடிக்கும் கடைசி திரைப்படம் என கூறப்பட்டு வருகிறது. அதற்கு பிறகு முழு நேர அரசியல் பணிகளில் ஈடுப்படவுள்ளார்.

     

    இந்நிலையில் படத்தின் கதாநாயகியான பூஜா ஹெக்டே சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் இந்தாண்டு தளபதி 69 படத்திற்கான கடைசி ஷாட் என பதிவிட்டுள்ளார். அதில் பூஜா ஹெக்டே மற்றும் விஜயின் கால்கள் இடம் பெற்றுள்ளன. இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பூஜா ஹெக்டே நடிப்பில் திரைக்கு வந்த சில படங்கள் எதிர்பார்த்த வசூலை பெறாமல் தோல்வி அடைந்தன.
    • நல்ல நேரத்தை எதிர்பார்த்து பொறுமையாக காத்திருந்தேன்.

    தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் விஜய் ஜோடியாக நடித்து இருந்தார். இந்தி, தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.

    பூஜா ஹெக்டே நடிப்பில் திரைக்கு வந்த சில படங்கள் எதிர்பார்த்த வசூலை பெறாமல் தோல்வி அடைந்தன. இதை வைத்து அவருடைய சினிமா வாழ்க்கை முடிந்து விட்டது என்று சிலர் பேசத் தொடங்கினர்.

    அதற்கேற்ப ஒரு ஆண்டுக்கும் மேலாக பூஜா ஹெக்டேவிடம் இருந்து எந்த புது பட அறிவிப்பும் வெளியாகவில்லை. சினிமாவை விட்டு விலகி விட்டார் என்றும் கிசுகிசுத்தனர்.

    ஆனால் இப்போது மீண்டும் அனைத்து மொழிகளிலும் வாய்ப்புகளை பெற்று பிசியாக நடிக்க தொடங்கி உள்ளார்.

    இதுகுறித்து பூஜா ஹெக்டே கூறும்போது, "நான் தோல்விகளை பார்த்து எப்போதும் கவலைப்பட்டது இல்லை. பயப்படவும் இல்லை. என்னை பொறுத்தவரை எனக்கு கொடுத்த கதாபாத்திரங்களில் நூறுசதவீதம் திறமையை வெளிப்படுத்தினேன்.

    நல்ல நேரத்தை எதிர்பார்த்து பொறுமையாக காத்திருந்தேன். இப்போது ஐந்து படங்கள் கைவசம் வைத்து நடிக்கிறேன். தமிழில் விஜய்யின் 69-வது படம், சூர்யா படம் போன்றவற்றிலும் இந்தியில் ஷாகித் கபூர் ஜோடியாக தேவா படத்திலும் நடிக்கிறேன். மேலும் இரண்டு படங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும்'' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • தளபதி 69 படத்தில் பாபி தியோல் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
    • பூஜா ஹெக்டே ஏற்கனவே பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள கோட் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

    அடுத்ததாக தளபதி 69 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படமே விஜய் நடிக்கும் கடைசி படம் என கூறி வருகின்றனர். அதற்கடுத்து முழுவதுமாக அரசியல் பணியில் ஈடுப்படவுள்ளதாக கூறியிருந்தார்.

    தளபதி 69 படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

    இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும்.

    அனிமல் படத்தில் வில்லனாக நடித்து அசத்திய பாபி தியோல் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று படக்குழு நேற்று அறிவித்துள்ளது.

    இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார் என்று படக்குழு இன்று அறிவித்துள்ளது. பூஜா ஹெக்டே ஏற்கனவே பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • காஞ்சனா 4 கதையை எழுதி முடித்துவிட்டதாக சமீபத்தில் ராகவா பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.
    • ரூ.100 கோடி பட்ஜட்டில் கோல்டுமைன் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

    ஹாரர் ஜானர் படங்களுக்குப் பெயர்போன ராகவா லாரன்ஸ் தனது பிரபல காஞ்சனா திரைப்பட சீரிஸில் 5 வது படத்தை இயக்க உள்ளார். அதாவது, கடந்த 2007 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி திரைப்படம் மற்ற பேய் படங்களிலிருந்து மாறுபட்டு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போன நிலையில் அதைத்தொடர்ந்து முற்றிலும் காமெடி ஹாரர் ஜானரில் அவர் இயக்கிய காஞ்சனா திரைப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியாகியது.

    அதுவரை ஹாரர் படங்களுக்கு இருந்த டெம்ப்லேட் கதைகளை மாற்றி தனது பாணியில் காஞ்சனா படத்தை இயக்கி அதில் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து 2015 இல் காஞ்சனா 2, 2019 இல் காஞ்சனா 3 என இயக்கி வெளியிட்டார். குழந்தைகளைக் கவரும் வகையில் இந்த படங்கள் அமைந்த நிலையில் தற்போது காஞ்சனா 4 திரைப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்க உள்ளார். காஞ்சனா ஜானரை பின்பற்றி எடுக்கப்பட்ட சுந்தர் சி யின் அரண்மனை திரைப்படங்களில் சமீபத்தில் அரண்மனை 4 வரை வெளியாகியிருந்தது. இடையே பி.வாசு இயக்கத்தில் ஹாரர் ஜானரில் ராகவா லாரன்ஸ் நடித்த சிவலிங்கா, சந்திரமுகி 2 ஆகியவை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மீண்டும் இயக்குனராக மாறி எடுக்க உள்ள காஞ்சனா 4 படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    காஞ்சனா 4 கதையை எழுதி முடித்துவிட்டதாக சமீபத்தில் ராகவா பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படமானது ரூ.100 கோடி பட்ஜட்டில் கோல்டுமைன் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தனது படத்திற்கான ஹீரோயின் தேர்வில் அதிக கவனம் செலுத்தும் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 4 படத்தில் விஜய்யின் பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டேவை ஒப்பந்தம் செய்ய உள்ளாராம். அவரை படத்தின் ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முனதாக இந்த படத்தில் மிர்னால் தாக்கூர் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தகக்து.

     உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இயக்கி வருகிறார்.
    • இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

    சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இயக்கி வருகிறார்.

    இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கியது.

    சில நாட்களுக்கு முன் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியானது.

    காதல்.. சிரிப்பு.. யுத்தம் உள்ளிட்ட வாசகங்களுடன் தொடங்கும் வீடியோவில் ரத்தத்துடன் கேங்ஸ்டர் தோற்றத்தில் துப்பாக்கியேந்தி மாஸ் காட்டும் லுக்கில் சூர்யா நடந்துவருவது விக்ரம் படத்தில் வரும் ரோலக்ஸ் கதாபாத்திரம் தந்த வைபை மீண்டும் தருவதாக உள்ளது.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது ஊட்டியில் தொடங்கியுள்ளது. அங்கு 15 நாட்கள் படப்பிடிப்பு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
    • இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற உள்ளது.

    நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கியது.

    நாளை நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், 'சூர்யா 44' படத்தின் அப்டேட் இன்று நள்ளிரவு 12.12 மணிக்கு வெளியாகும் என இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அந்தமானில் வைத்து சூர்யா - பூஜா ஹெக்டேவின் இரண்டு டூயட் பாடல்கள் படமாக்கபட உள்ளன
    • இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தை நடித்து முடித்துள்ள சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை சூர்யாவின் 2D நிறுவனமும் , கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் கதாநாயகியாக பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே இணைத்துள்ளார்.

     

    இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஷ்ரேயாஷ் கிருஷ்ணா, சண்டைப் பயிற்சியாளராக கேச்சா கம்பக், கலை இயக்குநராக ஜாக்கி, எடிட்டராக ஷபீக் முகமது அலி, ஆகியோர் இணைத்துள்ளனர். படத்தின் ரிலீஸுக்கு பின்னர் வரும் லாபத்தில் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இருவருக்கும் பங்கு இருப்பதனால் சம்பளமே வாங்காமல் சூர்யா நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியானது.

     

    தற்போது சூர்யா 44 படப்பிடிப்பு அந்தமானில் துவங்கி நடைபெற்று வருகிறது.  அங்குவைத்து சூர்யா - பூஜா ஹெக்டேவின் இரண்டு டூயட் பாடல்கள் படமாக்கபட உள்ளன அடுத்தாக ஊட்டியில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது வரும் ஜூலை 23 சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் போஸ்டரும் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூர்யா 44 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
    • இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. இத்துடன் படக்குழு வெளியிட்ட வீடியோவில் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற உள்ளது.

     


    இந்த நிலையில், சூர்யா 44 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சூர்யா 44 படத்தில் ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோரும் நடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அடுத்தடுத்து போஸ்டர்களை வெளியிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
    • முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற உள்ளது.

    நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. இத்துடன் படக்குழு வெளியிட்ட வீடியோவில் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற உள்ளது.

     


    இந்த நிலையில், சூர்யா 44 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளார். இப்படம் குறித்த இதர அப்டேட்கள் தொடர்ந்து வெளியிடப்படும் என்று தெரிகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார்.
    • இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சூர்யா 44 படத்திற்கு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள ஷஃபீக் முகமது அலி படத்தொகுப்பு செய்கிறார்.

    சண்டை பயிற்சி பணிகளை கெச்சா கம்பக்தீ மேற்கொள்கிறார், கலை இயக்க பணிகளை ஜாக்கியும், ஆடை வடிவமைப்பு பணிகளை பிரவீன் ராஜா மேற்கொள்கின்றனர்.

    சூர்யா 44 படத்தில் மலையாள நடிகரான ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதைதொடர்ந்து உறியடி விஜயகுமார் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் எனவும், மலையாள நடிகர் ஜெயராம் இப்படத்தில் நடிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×