search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lyca Productions"

    • 'லைகா புரொடக்சன்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் இயக்குனராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாக உள்ளார்
    • லைகாவில் வாய்ப்பு கிடைத்து உள்ளது பற்றி சினிமா உலகம் மிகுந்த வியப்பு அடைந்து உள்ளது.

    பிரபல நடிகர் விஜய். இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். தற்போது GOAT படத்தில் நடித்து வருகிறார். மேலும் தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் படிப்பை முடித்து உள்ளார். சினிமா தொடர்பான படிப்புகளும் அவர் படித்து உள்ளார்.சினிமா இயக்குவதில் ஆர்வமாக உள்ளார்.

    இதை யொட்டி 'லைகா புரொடக்சன்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் இயக்குனராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாக உள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில் அந்த நிறுவனத்துடன் அவர் கையெழுத்திட்டு உள்ளார்.




    லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் 2.0, பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்து உள்ளது. மேலும் லைகா தயாரிப்பில் கத்தி படத்தில் விஜய் நடித்து உள்ளார்.

    மேலும் அதுபோல விஜய் மகனுக்கும்லைகாவில் வாய்ப்பு கிடைத்து உள்ளது பற்றி சினிமா உலகம் மிகுந்த வியப்பு அடைந்து உள்ளது.

    இந்தப்படம் 'கிரிக்கெட்' மையமாக கொண்ட கதையாகும். அது தொடர்பான 'ஸ்க்ரிப்ட்' உருவாக்கும் பணியில் சஞ்சய் தற்போது தீவிரமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • ரஜினிகாந்த் சமீபத்தில் ஐதராபாத் புறப்பட்டு சென்றார்.
    • ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.

    இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் சமீபத்தில் ஐதராபாத் புறப்பட்டு சென்றார்.

    வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

     


    இந்த நிலையில், ரஜினி நடிக்கும் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான சஜித் நதியத்வாலா ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை தயாரிக்க இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

    அதில், "ரஜினிகாந்த் உடன் இணைந்து பணியாற்ற இருப்பது உண்மையில் பெருமைக்குரிய விஷயம். இந்த மறக்க முடியாத பயணத்தை ஒன்றாக தொடங்குவதற்கு தயாராகும் போது எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது," என தெரிவித்துள்ளார்.



    • அருள்நிதி தற்போது திருவின் குரல் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகவுள்ளது.

    வம்சம், மௌனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் அருள்நிதி. இவர் தற்போது தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'திருவின் குரல்' படத்தில் நடித்து வருகிறார்.


    திருவின் குரல்

    திருவின் குரல்

    இப்படத்தை ஹரிஷ் பிரபு இயக்கவுள்ளார். மேலும் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். விக்ரம் வேதா படத்தின் மூலம் பிரபலமடைந்த சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.


    திருவின் குரல்

    திருவின் குரல்


    இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும் எனவும் இப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அருள்நிதி தற்போது 'டிமான்ட்டி காலனி - 2' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், உள்ளிட்ட பல படங்களை தயாரித்த நிறுவனம் லைகா புரொடக்ஷன்ஸ்.
    • இந்நிறுவனத்தின் அடுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ், மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்திருந்தது. தற்போது கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்' மற்றும் அஜித்தின் ஏகே 62 போன்ற படங்களை தயாரித்து வருகிறது.


    லைகா நிறுவனம் வெளியிட்ட போஸ்டர்

    இந்நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனம் புதிய அப்டேட் ஒன்று நாளை காலை 10.30 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதற்கு ரசிகர்கள் அஜித்தின் ஏகே62 படத்தின் அறிவிப்பாக இருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • லைகா புரொடக்ஷன்ஸ் தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளது.
    • இந்நிறுவனத்தின் 24வது படத்தில் அருள்நிதி இணைந்துள்ளார்.

    தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ், மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்திருந்தது. தற்போது 'பொன்னியின் செல்வன் 2', 'இந்தியன் 2', 'லால் சலாம்' மற்றும் அஜித் 62 படத்தை தயாரித்து வருகிறது.


    திருவின் குரல்

    திருவின் குரல்

    இந்நிலையில் லைகா புரொடக்ஷன்ஸ் நிருவனத்தின் 24வது படத்தில் அருள்நிதி இணைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 'திருவின் குரல்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ஹரிஷ் பிரபு இயக்கவுள்ளார். மேலும் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். விக்ரம் வேதா படத்தின் மூலம் பிரபலமடைந்த சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

    அருள்நிதி தற்போது 'டிமான்ட்டி காலனி - 2' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி ஒப்பந்தமாகி இருக்கிறார்.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 3 மாதங்கள் அங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 29-ந் தேதி தொடங்க உள்ளது.

    இந்த படத்தில் ரஜினிகாந்த் மும்பையை கலக்கும் ரவுடிகளை சுட்டுத்தள்ளும் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மற்றொரு வேடத்திலும் வருகிறார். அதை ரகசியமாக வைத்துள்ளனர். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினிகாந்தின் முந்தைய படங்களான காலாவில் நானா படேகரும், 2.0 படத்தில் அக்‌ஷய்குமாரும் வில்லனாக நடித்திருந்தனர்.



    அந்த வகையில் தர்பார் படத்தில் பிரதிக் பாபர், தலிப் தாஹில், சுமன், ஆனந்தராஜ் ஆகியோர் வில்லத்தனமான வேடங்களில் வருவதாக கூறப்பட்டது. இப்போது இன்னொரு முக்கிய வில்லனாக பிரபல இந்தி நடிகர் சுனில் ஷெட்டி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் ‘12பி’ படத்தில் நடித்துள்ளார்.

    15 ஆண்டுகளுக்கு முன்பு ஷாருக்கானின் ‘மெய்ன் ஹூன் நா’ என்ற இந்தி படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். அதன்பிறகு தர்பார் படத்தில்தான் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தர்பார் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் சுனில் ஷெட்டி கலந்து கொள்வார் என்றும், அப்போது ரஜினிகாந்துடன் அவர் மோதும் காட்சிகள் படமாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தில் ரஜினிக்கு இரண்டு வேடங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்மைபயில் நடந்து முடிந்தது. தனது காட்சிகளை முடித்து சென்னை திரும்பிய ரஜினி அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக விரைவில் மும்பை செல்லவிருக்கிறார். இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வருகிற மே 29-ந் தேதி தொடங்க இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு ஆகியோர் நடிக்கிறார்கள்.

    படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் உறுதியானது. ரஜினி இந்த படத்தில் சமூக சேவகர், அதிரடி போலீஸ் அதிகாரி என இரட்டை வேடத்தில் நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்த நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவல்படி, அவர் என்கவுண்டர் சிறப்பு போலீசாக நடிப்பது தெரியவந்துள்ளது. படப்பிடிப்பு நடந்த கல்லூரியிலேயே குற்றவாளிகளை விசாரிக்கும் சிறப்பு அறையை செட் போட்டு படம்பிடித்துள்ளனர். ரஜினி குற்றவாளியை விசாரிப்பது போன்ற காட்சியை எடுத்துள்ளார்கள்.



    மற்றொரு கதாபாத்திரத்தில் ரஜினி தாதாவாக நடிப்பதாக கூறப்படுகிறது. எனினும் படக்குழு இதனை உறுதிப்படுத்தவில்லை.

    தாதா ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியான ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா வருகிறார். தற்போது என்கவுண்ட்டர் போலீஸ் காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தில் ரஜினி என்கவுண்டர் போலீசாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். மும்பையில் நடைபெற்ற முதல்கட்ட படப்பிடிப்பில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட்டு ரஜினி சென்னை திரும்பி உள்ளார்.

    படத்தில் ரஜினி போலீசாக நடிப்பது போஸ்டர் மூலம் வெளியான நிலையில் அவர் என்கவுண்டர் சிறப்பு போலீசாக நடிப்பது தெரியவந்துள்ளது. படப்பிடிப்பு நடந்த கல்லூரியிலேயே குற்றவாளிகளை விசாரிக்கும் சிறப்பு அறையை செட் போட்டு படம்பிடித்துள்ளனர்.



    ரஜினி குற்றவாளியை விசாரிப்பது போன்ற காட்சியை எடுத்துள்ளார்கள். படப்பிடிப்பில் ரஜினி மற்ற தொழிலாளர்களுடன் ஒரே மேஜையில் அமர்ந்து சாப்பிட்டு ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். மேலும் ரம்ஜான் விரதம் அனுசரிக்கப்படுவதால் படப்பிடிப்பில் கலந்துகொண்ட இசுலாமிய பணியாளர்களுக்கு சிறப்பு இப்தார் விருந்து அளித்தும் சிறப்பித்து இருக்கிறார்.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படம் பற்றி பரவி வந்த வதந்திக்கு பிரபல மலையாள நடிகர் செம்பன் விளக்கம் அளித்துள்ளார். #Darbar #Rajinikanth #Nayanthara
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. 3 மாதங்கள் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்த உள்ளனர். ரஜினிகாந்துடன் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

    மேலும் பாலிவுட் நடிகர்கள் பிரதிக் பாபர், சிராக் ஜனி, ஜத்தின் சர்னா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில், பிரபல மலையாள வில்லன் நடிகர் செம்பன் வினோத் ஜோஸ், தர்பார் படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியானது.



    இதுகுறித்து செம்பன் கூறுகையில், தர்பார் படத்தில் நான் நடிப்பதாக செய்திகள் பரவி வருவதை நானும் பார்த்தேன். ஆனால் தர்பார் படக்குழு என்னை தொடர்பு கொள்ளவே இல்லை என்பது தான் உண்மை. எனினும் அந்த வதந்தி உண்மையானால் மகிழ்ச்சி தான் என்று கூறியிருக்கிறார்.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். #Darbar #Rajinikanth #Nayanthara #ChembanVinodJose

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெறும் நிலையில், பாலிவுட் நடிகர்கள் பலர் படக்குழுவில் இடம்பிடித்து வருகின்றனர். #Darbar
    பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தி நடிகர் ஜத்தின் சர்னா தர்பார் படக்குழுவில் இணைந்துள்ளார்.

    ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஜத்தின் சர்னா மிகச்சிறிய வேடமாக இருந்தாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல இந்தி நடிகர் பிரதிக் பப்பர் வில்லனாக நடிக்கிறார்.



    காப்பான் படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடித்துள்ள சிராக் ஜனியும், ‘தர்பார்’ படத்தில் நடித்துள்ளார். கத்தி படத்தில் நீல் நிதின் முகேஷ், துப்பாக்கியில் வித்யுத் ஜம்வால் என ஏ.ஆர்.முருகதாஸ் வித்தியாசமான நடிகர்களை வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க வைத்திருந்தார்.

    இப்படத்திற்கு அகில இந்திய அளவில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற வேண்டும் என்ற நோக்கில் பல இந்தி நடிகர்கள் படக்குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் பணிபுரிகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். #Darbar#Rajinikanth #JithinSarna #PrathikBaber #ChiragJani

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ’தர்பார்’ படத்தில் ரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு நடிப்பதாக கூறப்படுகிறது. #Darbar #Rajinikanth
    ரஜினியின் 167-வது படமான ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. ரஜினி நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் `தர்பார்’ படத்தின் தகவல்கள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா நேற்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

    ’தர்பார்’ படத்தில் நிவேதா தாமஸ் ரஜினியின் மகளாக நடிக்கிறார் என்கிற செய்தி வெளியாகி இருக்கிறது. தர்பார் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.



    இதில் படப்பிடிப்பு நடைபெறும் இடம் மருத்துவமனை போல உள்ளது. அங்கிருந்து நிவேதா தாமஸ் மற்றும் யோகிபாபு இருவருடன் ரஜினி நடந்து வருகிறார். யோகிபாபுவின் காஸ்டியூம் பார்க்கும்போது, அவர் ரஜினியின் அசிஸ்டன்டாக நடிக்கலாம் என தோன்றுகிறது. 

    இதற்கிடையே ரஜினிகாந், நயன்தாரா நடிக்கும் காட்சிகளின் புகைப்படங்களும் வெளியாகி படக்குழுவுக்கு அதிச்சியை அளித்துள்ளது. #Darbar #Rajinikanth #Nayanthara #YogiBabu

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படப்பிடிப்பில் நயன்தாரா நேற்று கலந்துகொண்ட நிலையில், படப்பிடிப்பு தள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Darbar
    ஏ. ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 
    சந்திரமுகி, குசேலன், சிவாஜி படங்களுக்கு பிறகு ரஜினியின் ‘தர்பார்’ படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். 

    நேற்று மும்பை சென்ற நயன்தாரா, ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தார். ரஜினியையும், நயன்தாராவையும் காண படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் திரண்டார்கள். அவர்களை பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தினர்.



    தர்பார் படத்தில் நயன்தாரா 30 நாட்கள் தொடர்ந்து நடிப்பார் என்று தெரிகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக வருகிறார். சமூக சேவகராக இன்னொரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    நேற்று படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் இருப்போருக்கு ஏ.ஆர்.முருகதாஸ் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.



    மும்பையில் 3 மாதங்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படம் 2020 பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Darbar #Rajinikanth #Nayanthara

    ×