என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருள்நிதி"

    அருள்நிதி, மம்தா மோகன் சகோதரன், சகோதரியாக நடிக்கின்றனர்.

    பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்டுமைன்ஸ் சேர்ந்து தயாரிக்கும் படம் மை டியர் சிஸ்டம். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு சகோதரியாக மம்தா மோகன் நடிக்கிறார்.

    இது ஒரு கலகலகப்பான குடும்ப பொழுதுபோக்கு மற்றும் எமோசன் படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை பிரபு ஜெயராம் இயக்கி வருகிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.

    தனியார் மருத்துவமனையில் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்.

    தமிழ் சினிமாவில் வம்சம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அருள்நிதி. வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    இவர் நடித்த டிமான்டி காலனி, டிமான்டி காலனி 2 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடித்த ராம்போ படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.

    இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், எதற்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டார் என்பது தகவல் கொடுக்கப்படவில்லை.

    • ஆயிஷா இந்த படத்தின் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமாகி உள்ளார்.
    • மலையாள நடிகர் ரஞ்சித் சஜீவ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

    அருள்நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'ராம்போ' படத்தை, கொம்பன், குட்டிப்புலி, புலிக்குத்தி பாண்டி, விருமன் போன்ற அழுத்தமான கிராமப்புற கமர்ஷியல் படங்களைத் தந்த, புகழ் பெற்ற இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார். தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி, இம்முறை நகர வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள "ராம்போ" நகர பின்னணியில் ஒரு அதிரடி ஆக்சன் கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.

    ஒரு தைரியமான இளம் குத்துச்சண்டை வீரன், ஒரு பெண்ணுக்கு (தன்யா ரவிச்சந்திரன்) உதவ முயற்சிக்கும் போது தொடங்கும் கதை, அதன்பின் அவன் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. முத்தையாவின் இயக்கத்தில், உணர்வுப்பூர்வமான அம்சங்களுடன், அதிரடி, ஆக்சன் நிரம்பிய அழுத்தமான படமாக இப்படம் வெளிவரவுள்ளது.

    படம் குறித்து இயக்குநர் முத்தையா கூறியதாவது.., "இந்தப் படம் எனது பாணியிலிருந்து மாறுபட்டு, ஒரு புதிய கதையை வேறு பாணியில் சொல்லும் வாய்ப்பை எனக்கு வழங்கியது. அருள்நிதியுடன் இணைந்து பணிபுரிந்தது உற்சாகமான அனுபவமாக இருந்தது. 'ராம்போ' படத்தை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்."

    பிக் பாஸ் புகழ் ஆயிஷா இந்த படத்தின் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமாகி உள்ளார். மேலும் மலையாள நடிகர் ரஞ்சித் சஜீவ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். ஹரீஷ் பேரடி மற்றும் VTV கணேஷ் முக்கியமான வேடங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

    பிரபல ஒளிப்பதிவாளர் R.D. ராஜசேகர் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார், முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நகரப் பின்னணியில் ஆக்சன், அதிரடி மற்றும் உணர்ச்சிரமான பொழுதுபோக்கு படமாக "ராம்போ" உருவாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தை வீட்டிலிருந்தபடியே அனுபவிக்க, வருகிற 10-ந்தேதி தேதி முதல் 'ராம்போ' படத்தை சன் நெக்ஸ்ட் தளத்தில் பார்த்து ரசியுங்கள்...


    அருள்நிதி நடித்துள்ள ராம்போ திரைப்படம் வரும் 10ம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருள் நிதி, வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    இவர் நடித்து சமீபத்தில் வெளியான டிமான்டி காலனி 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், அருள்நிதி அடுத்ததாக ராம்போ என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கொம்பன் படத்தினை இயக்கிய முத்தையா இயக்கியுள்ளார்.

    அருள்நிதிக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும், அபிராமி, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வரும் 10ம் தேதி சன்நெக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.

    இந்நிலையில், ராம்போ படத்தின் டிரெயிலர் வெளியாகி உள்ளது.

    • இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழு மூன்றாம் பாகத்தை இயக்க திட்டமிட்டது.
    • பூஜை விழா இன்று சென்னை முருகன் கோவிலில் நடைப்பெற்றது.

    இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகத்தை படக்குழு வெளியிட்டது. இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. உலகளவில் இப்படம் 80 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

    இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழு மூன்றாம் பாகத்தை இயக்க  திட்டமிட்டது. படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து முடிந்த நிலையில் படப்பிடிப்பை இன்று படக்குழு பூஜை விழாவுடன் தொடங்கியுள்ளது. பூஜை விழா இன்று சென்னை முருகன் கோவிலில் நடைப்பெற்றது.

    இந்த பாகத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. 

    • இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'டிமான்ட்டி காலனி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

    2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'டிமான்ட்டி காலனி'. அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.


    டிமான்ட்டி காலனி

    அஜய் ஞானமுத்து அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து 'டிமான்ட்டி காலனி' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியானது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.


    டிமான்ட்டி காலனி -2

    சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டரை சமீபத்தில் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'டிமான்ட்டி காலனி -2' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • லைகா புரொடக்ஷன்ஸ் தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளது.
    • இந்நிறுவனத்தின் 24வது படத்தில் அருள்நிதி இணைந்துள்ளார்.

    தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ், மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்திருந்தது. தற்போது 'பொன்னியின் செல்வன் 2', 'இந்தியன் 2', 'லால் சலாம்' மற்றும் அஜித் 62 படத்தை தயாரித்து வருகிறது.


    திருவின் குரல்

    திருவின் குரல்

    இந்நிலையில் லைகா புரொடக்ஷன்ஸ் நிருவனத்தின் 24வது படத்தில் அருள்நிதி இணைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 'திருவின் குரல்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ஹரிஷ் பிரபு இயக்கவுள்ளார். மேலும் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். விக்ரம் வேதா படத்தின் மூலம் பிரபலமடைந்த சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

    அருள்நிதி தற்போது 'டிமான்ட்டி காலனி - 2' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • அருள்நிதி தற்போது சை.கௌதமராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான 'ராட்சசி' படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது 'கழுவேத்தி மூர்க்கன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார்.


    கழுவேத்தி மூர்க்கன் போஸ்டர்

    மேலும், இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




    • அருள்நிதி தற்போது திருவின் குரல் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகவுள்ளது.

    வம்சம், மௌனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் அருள்நிதி. இவர் தற்போது தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'திருவின் குரல்' படத்தில் நடித்து வருகிறார்.


    திருவின் குரல்

    திருவின் குரல்

    இப்படத்தை ஹரிஷ் பிரபு இயக்கவுள்ளார். மேலும் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். விக்ரம் வேதா படத்தின் மூலம் பிரபலமடைந்த சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.


    திருவின் குரல்

    திருவின் குரல்


    இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும் எனவும் இப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அருள்நிதி தற்போது 'டிமான்ட்டி காலனி - 2' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'திருவின் குரல்'.
    • இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    வம்சம், மௌனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் அருள்நிதி. இவர் தற்போது தமிழில் கத்தி, கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, டான் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'திருவின் குரல்' படத்தில் நடித்து வருகிறார்.


    இப்படத்தை ஹரிஷ் பிரபு இயக்கவுள்ளார். மேலும் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். விக்ரம் வேதா படத்தின் மூலம் பிரபலமடைந்த சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.


    இதையடுத்து இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது அதன்படி, இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 'திருவின் குரல்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘திருவின் குரல்’.
    • இப்படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் 'திருவின் குரல்'. இப்படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.


    இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து 'திருவின் குரல்' படத்தின் முதல் பாடலான 'அப்பா என் அப்பா' பாடலின் லிரிக் வீடியோ இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இந்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது.


    அப்பா மற்றும் மகனுக்கு இடையிலான பாசத்தை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.




    • அருள்நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் 'திருவின் குரல்' திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்திற்காக அருள்நிதி பிரத்யேகமாக மாலை மலருக்கு பேட்டியளித்தார்.

    இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள 'திருவின் குரல்' திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.


    மாலை மலருக்காக அருள்நிதி அளித்த பேட்டி

    மாலை மலருக்காக அருள்நிதி அளித்த பேட்டி

    இந்நிலையில் திருவின் குரல் படத்திற்காக நடிகர் அருள்நிதி மாலைமலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பாரதிராஜா அவர்களுக்கு உங்களின் நடிப்பு மிகவும் பிடிக்கும் என்றும் நீங்கள் அவருக்கு மிகவும் பிடித்த நபர் என்று தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    மாலை மலருக்காக அருள்நிதி அளித்த பேட்டி
    மாலை மலருக்காக அருள்நிதி அளித்த பேட்டி


    அதற்கு அருள்நிதி அளித்த பதில், பாரதிராஜா சார் என்கிட்ட சொன்னது, நீ நல்ல நடிகரையும் மீறி நல்ல மனிதர் அப்படினு சொன்னாரு. உங்ககிட்ட இருந்து இந்த மாதிரி வார்த்தை வருவது பெரிய விஷயம் சார். இந்த மாதிரி பெயர் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். எனக்கு பெருமையா இருக்கு அதேசமயம் அதை தக்க வச்சிக்கனும்னு நான் நினைக்கிறேன். கூடுதல் பொறுப்பு வந்திருக்கு அதை காப்பாத்துவேன் சார் அப்படினு அவரிடம் கூறினேன் என்றார். 



    ×