search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "loksabha elections"

    • பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி நட்டா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    • அதில் பாராளுமன்ற தேர்தலுக்காக பல்வேறு மாநிலங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி பல்வேறு மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்களை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி நட்டா இன்று அறிவித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:

    தமிழகம்: அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி

    அந்தமான் நிகோபார்: சத்யகுமார்

    அருணாசலபிரதேசம்: அசோக் சிங்கால்

    பீகார்: வினோத்தாவ்டே,தீபக்பிரகாஷ் எம்.பி

    சண்டிகார்: விஜய்பாய்ரூபனி எம்.எல்.ஏ.

    டாமன்-டையூ: புர்னேஷ் மோடி எம் எல்.ஏ.,துஷ்யந்த்பட்டேல்

    கோவா: ஆஷிஷ்சூட்

    அரியானா: பிப்லாப்குமார் தேவ் எம்.பி.,சுரேந்திரசிங் நாகர் எம்.பி.

    இமாசல பிரதேசம்: ஸ்ரீகாந்த் சர்மா,சஞ்சய் தாண்டன்

    ஜம்மு காஷ்மீர்: தரூண் ஷுக், ஆஷிஸ்சூட்

    லடாக்: தருண் ஷுக்

    ஜார்க்கண்ட்: லட்சுமிகாந்த் பாஜ்பாய்

    கர்நாடகா: ராதாமோகன்தாஸ் அகர்வால் எம்.பி.,சுதாகர் ரெட்டி,

    கேரளா: பிரகாஷ் ஜவடேகர்

    லட்சத்தீவு: அரவிந்த் மேனன்

    மத்திய பிரதேசம்: மகேந்திரகுமார் சிங், சதீஷ் உபாத்யாய

    ஒடிசா: விஜய்பால் சிங் தோமர் எம்.பி,லதா உசேந்தி எம்.எல்.ஏ.

    புதுச்சேரி: நிர்மல்குமார் சுரானா

    பஞ்சாப்: விஜய்பாய் ரூபானி எம்.எல்.ஏ,நரேந்திரசிங்,

    சிக்கிம்: திலீப் ஜெய்ச்வால்

    உத்தர பிரதேசம்: பாய்ஜெயந்த் ஜெய்பாண்டே

    உத்தரகாண்ட்: துஷ்யந்த்குமார் கவுதம்

    மேற்கு வங்காளம்: மங்கல்பாண்டே, அமித் மல்வியா, ஆஷா லக்ரா

    பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகும் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதற்கு இலங்கை, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபரின் மகள் டிரம்பின் மகள் இவாங்கா இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘பாராளுமன்ற தேர்தலில் பெரிய வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள். இந்தியாவின் மக்களுக்கு ஆனந்தமான நேரம் இதுவாகும்’ என தெரிவித்துள்ளார்.
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி நிறுவனரான முலாயம் சிங்கும், அவரது மகனும், முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவும் வெற்றி பெற்றுள்ளனர்.
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி நிறுவனரான முலாயம் சிங்கும், அவரது மகனும், முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவும் வெற்றி பெற்றுள்ளனர்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் மெயின்புரி தொகுதியில் போட்டியிட்ட முலாயம் சிங் 5,24,926 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரேம் சிங் ஷாக்யா 4,30, 537 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் முலாயம் சிங் 94,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

    உபியின் அசம்கார் தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், 6,21,578 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரான தினேஷ் லால் யாதவ் நிராஹுவா 361704 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் அகிலேஷ் யாதவ் 2 லட்சத்து 59 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

    இதேபோல், இலங்கை, பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு தலைவர்களும் பிரதமர் மோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

    இதேபோல், தனக்கு வாழ்த்து தெரிவித்த உலக தலைவர்களுக்கும் பிரதமர் மோடி தனது நன்றியை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
    பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகும் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
     வாஷிங்டன்:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதற்கு இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள் 
    வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.வினருக்கு வாழ்த்துக்கள். இந்தியாவுக்கான எங்கள் பங்களிப்பு தொடரும்’ என தெரிவித்துள்ளார்.
    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் தி.மு.க. போட்டியிட்டது. இதில் புதுச்சேரி உள்ளிட்ட மொத்தமுள்ள 39 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி 37 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. 

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தி.மு.க தலைவர், மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மாவ் நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, கொல்கத்தாவில் சேதப்படுத்தப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என உறுதியளித்தார்.
    லக்னோ:

    வெள்ளையர்கள் இந்தியாவை ஆட்சி செய்தபோது வங்காளம் என்றழைக்கப்பட்ட பெரும்பகுதியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் ஈஷ்வர் சந்திரா வித்யாசாகர். சிறந்த கல்வியாளராகவும், தத்துவவாதி மற்றும் மொழிபெயர்ப்பாளராகவும், பேராசிரியராகவும், பெரும் கொடையாளராகவும் திகழ்ந்த இவரை மேற்கு வங்காளம் மற்றும் வங்காள தேசத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் சமூக சீர்திருத்தவாதியாக போற்றி, மதித்து வருகின்றனர்.
     
    இதற்கிடையே, கொல்கத்தா நகரில் பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியின்போது அக்கட்சியினருக்கும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் இடையில் மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் இருந்த ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது.



    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மாவ் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொல்கத்தாவில் சேதப்படுத்தப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என உறுதியளித்தார்.
    பிரதமர் மோடி அவர்களே, உங்களுக்கான நேரம் முடிந்து விட்டது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். #RahulGandhi #NYAY #Modi
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் ஐந்து கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும்  2 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.மீதமுள்ள இரண்டு கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று, பிரதமர் மோடி அவர்களை உங்களுக்கான நேரம் முடிந்து விட்டது என குறிப்பிட்டுள்ளார்.



    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் உறுதியளிப்பு திட்டம் (நியாய்) தொடர்பான விழிப்புணர்வு நாடு முழுவதும் பரவியுள்ளது. இதனால் கடந்த 5 கட்டமாக நடைபெற்ற தேர்தல்களில் முதியோர் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் உற்சாகத்துடன் வாக்களித்து உள்ளனர். எனவே, பிரதமர் மோடி அவர்களே, உங்களுக்கான நேரம் முடிந்து விட்டது என பதிவிட்டுள்ளார்.

    பிரதமர் மோடியை திருடன் என கூறியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ள ராகுல் காந்தி, இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் புதிய பிரமாண பத்திரத்தை இன்று தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. #RahulGandhi #NYAY #Modi
    அரியானாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, ஆணவத்தால் அழிந்தவன் துரியோதனன் என மோடிக்கு எச்சரிக்கை விடுத்து குறிப்பிட்டார். #LokSabhaElections2019 #PriyankaGandhi #Modi #Duryodhana
    சண்டிகர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை, நம்பர் ஒன் ஊழல்வாதி என்று பிரதமர் மோடி சமீபத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். இது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அரியானா மாநிலம் அம்பாலாவில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொது செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:



    மத்தியில் உள்ள பாஜகவினர் பேசுவதற்கு விஷயம் எதுவும் இல்லையென்றால் எனது குடும்பத்தை அவமதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    ஆணவத்தை இந்தியா ஒருபோதும் மன்னித்தது இல்லை. இதற்கு வரலாற்றில் பல்வேறு சான்றுகள் இருக்கின்றன. சிறந்த இதிகாசமான மகாபாரதத்திலும் இதற்கு ஆதாரங்கள் உள்ளன. கவுரவர்களின் அரசனான துரியோதனனிடம் ஆணவம் இருந்ததாலேயே அவர் அழிந்தார் என பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #PriyankaGandhi #Modi #Duryodhana
    வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக ஷாலினி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். #Loksabhaelections2019 #PMModi #ShaliniYadav
    வாரணாசி:

    பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு வருகிற 26-ந்தேதி மோடி வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

    வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ் வாடியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இதில் வாரணாசி தொகுதியில், சமாஜ்வாடி போட்டியிடுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக ஷாலினி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.



    இவர் பாராளுமன்ற மேல்-சபையின் முன்னாள் துணை சபாநாயகர் ஷியாம்லால் யாதவின் மருமகள் ஆவார். காங்கிரசில் இருந்து ஷாலினி யாதவ் சமீபத்தில் விலகி அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்.

    இதுபற்றி ஷாலினி யாதவ் கூறும் போது, எங்களது கட்சி தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையின் கீழ் பணியாற்றுவேன். அவரது வழி காட்டுதலின்படி செயல்படுவேன் என்றார். #Loksabhaelections2019 #PMModi #ShaliniYadav
    தமிழின படுகொலைக்கு காரணமாக இருந்த தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார். #LokSabhaElections2019 #PremalathaVijayakanth
    விழுப்புரம் :

    விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து நேற்று விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், திறந்த வேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அமைந்த ஒரு ராசியான கூட்டணிபோல் தற்போது இந்த பாராளுமன்ற தேர்தலிலும் ராசியான கூட்டணி அமைந்துள்ளது. இது மெகா கூட்டணி. மோடி மீண்டும் வெற்றி பெற்று பிரதமராக ஆட்சி அமைக்கப் போவது உறுதி.



    நம்மை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மக்களால் புறக்கணிக்கப்பட்ட கூட்டணி. தமிழின படுகொலைக்கு காரணமாக இருந்த தி.மு.க., காங்கிரசுக்கு ஒட்டுமொத்த மக்களும் ஓட்டுப்போட மாட்டார்கள். நம் தொப்புள்கொடி உறவுகளின் இனப்படுகொலைக்கு காரணமாக இருந்தது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி என்பதை தமிழக மக்கள் மறக்கவில்லை. இந்த தேர்தலில் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.

    தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி என்றாலே ஊழல் கூட்டணி. 2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் இப்படி அனைத்திலும் ஊழல் செய்த கூட்டணி. விஜயகாந்தை தொட்டவர்களின் கதி என்னவென்று துரைமுருகனை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் செஞ்சி நான்குமுனை சந்திப்பில் ஆரணி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை ஆதரித்து திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், பெண்கள் நன்றாக இருக்க வேண்டும். பெண்கள் நல்லா இருந்தால் இந்த வீடு நல்லா இருக்கும். மேலும் ஆரணி தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற செஞ்சி ஏழுமலைக்கு இரட்டை சிலை சின்னத்தில் வாக்களித்து அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்றார். #LokSabhaElections2019 #PremalathaVijayakanth
    நடிகையும் பாஜக வேட்பாளருமான ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆசம் கானுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. #AazamKhan #LokSabhaElections2019
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா, காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    பொதுக்கூட்டத்தில் ஜெயப்பிரதா பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசிய ஆசம் கான், “இங்கு 10 வருடங்கள் ஒருவர் மக்கள் பிரதிநிதியாக இருந்தார் . ராம்பூர் மக்கள், உத்தர பிரதேச மக்கள் மற்றும் இந்திய மக்கள் அவரை புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்துகொண்டேன்” என்றார்.



    ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆசம் கானின் கருத்து மிகவும் அருவருப்பான அவமானகரமான கருத்து என பாஜக செய்தித் தொடர்பாளர் சந்திர மோகன் கண்டித்தார். இதைவிட தரம் தாழ்ந்த அரசியல் இருக்க முடியாது என்றும், சமாஜ்வாடி கட்சியின் உண்மையான முகத்தை இது காட்டுவதாகவும் அவர் கூறினார்.

    ஆசம் கானின் கருத்தை தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும் கண்டித்துள்ளார். சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆசம் கானுக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் கூறினார்.

    ஆனால், காக்கி என்று ஆசம் கான் குறிப்பிட்டது, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அணியும் அரைக்கால் சட்டை என சமாஜ்வாடி கட்சி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #AazamKhan #LokSabhaElections2019
    ×