என் மலர்
நீங்கள் தேடியது "High Fares"
- ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மக்களால் தினந்தோறும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- சரியான காரணமின்றி பயணிகள் பயணத்தை ரத்து செய்தாலும் இதே அபராத கட்டணம் விதிக்கப்படும்.
ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகள் பெருநகரங்களில் மக்களால் தினந்தோறும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் பீக் ஹவர்ஸ் நேரங்களில் 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
வாடகை வாகன நிறுவனங்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது
அதில், ஓலா, ஊபர் நிறுவனங்கள் பீக் ஹவர்ஸ் நேரங்களில் கட்டணம் வசூலிப்பதற்கான உச்சவரம்பு 1.5 மடங்காக இருந்த நிலையில், தற்போது 2 மடங்காக மத்திய அரசு உயர்த்தியுள்ளது
மேலும், சரியான காரணமின்றி பயணம் ரத்து செய்யப்பட்டால், ஓட்டுநர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் 10 சதவீத அபராதத்தை, அதிகபட்சமாக ரூ.100 ஆக நிர்ணயிக்க போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. சரியான காரணமின்றி பயணிகள் பயணத்தை ரத்து செய்தாலும் இதே அபராத கட்டணம் விதிக்கப்படும்.
- ஏழை, எளிய மக்களுக்காக இந்திய ரெயில்வே துறையால் இயக்கப்பட்டு வரும் ரெயிலாகும்.
- சென்னை செல்ல வேண்டும் என்றால் அதிக கட்டணம் கொடுத்து பஸ்களில் செல்கின்றனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகி ப்பாளர்கள் சங்க தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் மத்திய ரெயில்வே மந்திரி, ரெயில்வே வாரிய தலைவர், தென்னக ரெயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.அதில் கூறியிருப்பதாவது:-
அந்த்யோதயா ரெயிலானது முன்பதிவு இல்லா பெட்டி களுடன் ஏழை, எளிய மக்களுக்காக இந்திய ரெயில்வே துறையால் இயக்கப்பட்டு வரும் ரெயிலாகும்.
இந்த ரெயில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் இயக்கப்பட வில்லை என்பது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த குறையாக உள்ளது.
இதனால் அந்த மக்கள் சென்னை செல்ல வேண்டும் என்றால் அதிக கட்டணம் கொடுத்து பஸ்களில் செல்கின்றனர்.
எனவே, அப்பகுதி மக்கள் மிக குறைந்த கட்டணத்தில் சென்னை செல்ல ஏதுவாக திருநெல்வேலியில் இருந்து பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வழியாக சென்னைக்கு அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






