என் மலர்
விளையாட்டு

வில்வித்தை உலகக் கோப்பை: இந்திய பெண்கள் அணி தங்கம் வென்று சாதனை
- துருக்கி அணியை 232-226 என வீழ்த்தி தங்கம் வென்றது.
- ஏற்கனவே இரண்டு முறை தங்கம் வென்ற நிலையில், தொடர்ந்து 3-வது முறையாக தற்போது தங்கம் வென்றுள்ளது.
தென்கொரியாவில் வில்வித்தை உலகக் கோப்பை (ஸ்டேஜ்-2) நடைபெற்று வருகிறது. இதில் மூன்று பேர் கொண்ட இந்திய பெண்கள் அணி துருக்கி அணியை 232-226 என புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.
உலகின் நம்பர் ஒன் காம்பவுண்ட் பிரிவு பெண்கள் அணியாக திகழும் ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி ஸ்வாமி ஆகியோர்தான் இந்த தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கவுர், அதிதி ஸ்வாமி ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை ஸ்டேஜ்-1ல் தங்கம் வென்றனர். கடந்த ஆண்டு இறுதியில் பாரிஸ் நகரில் நடைபெற்ற போட்டியிலும் தங்கம் வென்று அசத்தியிருந்தனர்.
அமெரிக்காவில் நடைபெறும் கலப்பு அணியில் ஜோதி, பிரியான்ஷ் தங்கத்திற்கான போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஆண்களுக்கான காம்பவுண்ட் பிரிவில் பிரதாமேஷ் புஜ் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.
Next Story






