search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "weightlifting"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சஞ்சிதா சானுவை சஸ்பெண்ட் செய்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி உத்தரவிட்டுள்ளது.
    • குற்றம் நிரூபிக்கப்பட்டால் தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கத்தை இழக்க நேரிடும்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி பளு தூக்கும் வீராங்கனைகளில் ஒருவர் சஞ்சிதா சானு. இவர் காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் வென்றுள்ளார். இந்த நிலையில் சானு ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளார். குஜராத்தில் கடந்த செப்டம்பர், அக்டோபரில் நடந்த தேசிய விளையாட்டு போட்டியின்போது அவரது சிறுநீர் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், சஞ்சிதா சானு தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி உத்தரவிட்டுள்ளது.

    இனி தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு ஏஜென்சியின் ஊக்கமருந்து தடுப்புக் குழுவின் முன்பு சஞ்சிதா ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பின்னர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நான்கு ஆண்டுகள் அவர் போட்டிகளில்பங்கேற்க முடியாதபடி சஸ்பெண்ட் செய்யப்படலாம். அத்துடன், அவர் தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கத்தையும் இழக்க நேரிடும்.

    மூத்த வீராங்கனை ஊக்கமருந்து வலையில் சிக்கியிருப்பது மிகவும் வருத்தம் அளிப்பதாக இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்தின் தலைவர் சஹ்தேவ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 75 கிலோ எடை பிரிவில் மொத்தம் 350 கிலோ பளு தூக்கி முதல் பரிசை வென்றார்.
    • மாநில அளவிலான பெண்கள் பளு தூக்கும் போட்டியில் முதல் பரிசு.

    பல்லடம் : 

    மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள க.அய்யம்பாளையத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ(வயது 38)என்ற வீராங்கனை 75 கிலோ எடை பிரிவில் மொத்தம் 350 கிலோ பளு தூக்கி முதல் பரிசை வென்றார். இதுகுறித்து ஜெயஸ்ரீ கூறியதாவது:- மதுரை அவனியாபுரம் எனது சொந்த ஊர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள க.அய்யம்பாளையத்தில் கணவர் விஜய் உடன் வசித்து வருகிறேன். சிறு வயதில் பளு தூக்கும் போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டேன். பின்னர் திருமணம் நடைபெற்றது. 12 மற்றும் 7 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவருடன் விசைத்தறி கூடத்தில் வேலை செய்து வருகிறேன். இந்தநிலையில் எனது பளுதூக்கும் ஆர்வத்தை கணவரிடம் தெரிவித்தேன். அவர் என்னை ஊக்குவித்தார். சென்ற வருடம் திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் பளு தூக்கும் போட்டியில் முதல் பரிசு பெற்றேன். இதையடுத்து தற்போது மத்திய பிரதேசம் குவாலியரில் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதேபோல ஆண்கள் பளு தூக்கும் போட்டியில் 60 கிலோ எடை பிரிவில் தாராபுரத்தை சேர்ந்த கார் வேந்தன்(28) என்பவர் முதல் பரிசு வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாலசுப்பிரமணியம் என்பவா் 75 கிலோ பிரிவில் தலா 4 தங்கப் பதக்கங்கள் பெற்றாா்.
    • வீரா்கள் இருவருக்கும் பொதுமக்கள் மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக அழைத்துச் சென்றனா்.

    அவினாசி :

    ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டி கோவை சரவணம்பட்டி குமரகுரு கல்லூரி வளாகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.

    இதில், அவிநாசி அருகே அவிநாசிலிங்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியம் என்பவா் 75 கிலோ பிரிவில் ஸ்குவாட், பெஞ்ச் பிரஸ், டெட் லிப்ட் ஆகிய உள் பிரிவுகளில் தலா 4 தங்கப் பதக்கங்கள் பெற்றாா்.

    அவிநாசி நாயக்கன்தோட்டம் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் 150 கிலோ பிரிவில் வெள்ளியும், ஸ்குவாட், பெஞ்ச் பிரஸ் ஆகிய உள்பிரிவுகளில் தங்கம், டெட் லிப்ட் பிரிவில் வெண்கலம் என 4 பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தாா்.அவிநாசிக்கு வந்த வீரா்கள் இருவருக்கும் பொதுமக்கள் மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக அழைத்துச் சென்று, பாராட்டுத் தெரிவித்தனா்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தாராபுரம் சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
    • 150 கிலோ எடையுள்ள பளுதூக்கி தன்னுடைய சாதனையை தானே முறியடித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூரைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஆதித்யா தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். உடற்பயிற்சியின் மீது அதிக ஆர்வம் கொண்ட அவர் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று வருகிறார் .

    இந்நிலையில் பளுதூக்குதலில் ஏற்கனவே கோவையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 135 கிலோ பளு தூக்கி நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை நிகழ்த்தியுள்ள நிலையில் அதனை முறியடிக்கும் வகையில் 140 கிலோ பளு தூக்கி அதனை நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்கு அனுப்பி உள்ளார் .அது அங்கீகாரம் பெற்று இன்று கோவையில் நடைபெறும் விழாவில் அங்கீகார சான்றிதழ் பெற உள்ளார்.

    இந்நிலையில் தன்னுடைய 140 கிலோ சாதனையை முறியடிக்கும் வகையில் இன்று 150 கிலோ எடையுள்ள பளுதூக்கி தன்னுடைய சாதனையை தானே முறியடிதுள்ளார். இதனையும் உலக சாதனை அங்கீகாரம் பெற அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்திய பளுதூக்கும் வீரர் ஜெர்மி லால்ரினுங்கா தங்கம் வென்றார். இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.#YouthOlympics2018 #JeremyLalrinnunga
    பியூனஸ் அயர்ஸ்:

    மூன்றாவது இளையோர் ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. 206 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் இந்தியா சார்பில் 47 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

    நேற்று இரவு 62 கிலோ எடைப்பிரிவு ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் இளம் விரர் ஜெர்மி லால்ரினுங்கா (வயது 15) மொத்தம் 274 கிலோ பளு தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். இளையோர் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும்.



    இப்போட்டியில் துருக்கி வீரர் டாப்தாஸ் கானர் (263 கிலோ) வெள்ளிப் பதக்கமும், கொலம்பியாவின் வில்லார் எஸ்டிவன் ஜோஸ் (260 கிலோ) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

    மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த ஜெர்மி லால்ரினுங்கா, இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இளையோர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், ஜூனியர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார். இரண்டு தேசிய சாதனைகளையும் முறியடித்தது குறிப்பிடத்தக்கது. #YouthOlympics2018 #JeremyLalrinnunga
    ×