search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "weightlifting"

    • பளு தூக்கும் பயிற்சியை ஆண்கள் தான் பெரும்பாலும் மேற்கொள்வார்கள்.
    • பெண்களும் பளு தூக்கும் பயிற்சி செய்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

    `வெயிட் லிப்டிங்' எனப்படும் பளு தூக்கும் பயிற்சியை ஆண்கள் தான் பெரும்பாலும் மேற்கொள்வார்கள். அதிக எடை கொண்டிருப்பதும், கடினமான பயிற்சியாக கருதப்படுவதும் அதற்கு முக்கிய காரணமாகும். ஆண்களுக்கு போட்டியாக பெண்களும் பளு தூக்கும் பயிற்சி செய்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். அது உடலை வலிமையாக்கும் பயிற்சியாக கருதப்பட்டாலும் பெண்களை பொறுத்தவரை உடல் எடையை அதிகரிக்க செய்துவிடும், ஆண்மைக்கான உடல்கட்டுக்கு வழிவகுத்துவிடும் என்ற கருத்து நிலவுகிறது. அது தொடர்பான கட்டுக்கதைகள் குறித்தும், உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம்.

    கட்டுக்கதை:

    பளு தூக்குவது பெண்களுக்கு காயங்களை ஏற்படுத்திவிடும்.

    உண்மை:

    பளு தூக்குவது மட்டுமல்ல, பொதுவாகவே விளையாட்டில் ஈடுபடும்போது காயங்கள் ஏற்படுவது இயல்பானது. பளு தூக்கும்போது யாருடைய உதவியையும் நாடாமலோ, பயிற்சியாளர் மேற்பார்வையின்றி பயிற்சி செய்ய முயற்சித்தாலோ காயங்கள் ஏற்படலாம். ஒருவர் தன் உடல் ஒத்துழைக்கும் தன்மையை தாண்டி அதிக எடையை தூக்குவதாலும் காயம் உண்டாகலாம். உடல் தகுதிக்கு ஏற்ப சரியான அளவிலும், கவனச்சிதறல் இல்லாமலும் பளு தூக்கினால் காயம் ஏற்படாது. எலும்புகள், மூட்டுகள், தசைகளை வலுவடையச் செய்து உடலை வலிமையாக்குவதற்கு பளு தூக்கும் பயிற்சி உதவும்.

    கட்டுக்கதை:

    பெண்கள் உடல் எடையை குறைக்க கார்டியோ பயிற்சியை தேர்வு செய்ய வேண்டும்.

    உண்மை:

    எந்தவொரு உடற்பயிற்சியும் உடல் எடையை குறைக்கும் முயற்சிக்கு 20 சதவீதம் மட்டுமே உதவும். போதிய ஓய்வு, ஆழ்ந்த தூக்கம், ஊட்டச்சத்துக்களை தேர்ந்தெடுத்து உண்பது, கலோரிகளை கட்டுக்குள் வைத்திருப்பது உள்ளிட்ட வாழ்வியல் முறைகள்தான் உடல் எடையை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

    கட்டுக்கதை:

    கர்ப்பிணி பெண்கள் கடினமான பயிற்சிகளை செய்யக்கூடாது.

    உண்மை:

    பல ஆண்டுகளாக தொடர்ந்து பளுதூக்குதல் போன்ற கடினமான, வலிமை பயிற்சிகளை செய்து வரும் பெண்கள் கர்ப்ப காலத்தில் ஓய்வு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் மருத்துவர்கள், உடற்பயிற்சி நிபுணர்களின் அறிவுரையின்படியே செயல்பட வேண்டும்.

    அதற்கேற்ப உடல் தன்மை இருக்கிறதா? எத்தகைய பயிற்சிகளை செய்ய வேண்டும்? என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இத்தகைய பயிற்சிகளுக்கு பதில் இடுப்பு பகுதியை வலிமைப்படுத்தும் பயிற்சிகளை உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனை பெற்று மேற்கொள்ளலாம்.

     கட்டுக்கதை:

    பளு தூக்குவது போன்ற கடினமான பயிற்சிகள் பெண்மை தன்மையை இழக்கச் செய்யும்.

    உண்மை:

    பளு தூக்கும் ஆணின் தசைகளில் ஏற்படும் மாற்றங்கள் பெண்களின் தசைகளிலும் வெளிப்படும் என்று நீங்கள் நம்பினால், அது நடைமுறையில் சாத்தியமற்றது. ஏனெனில் பருமனான தசைகள் கொண்ட உடல் அமைப்பைக் கட்டியெழுப்பும் அளவுக்கு டெஸ்டோஸ்டிரோனை பெண்ணின் உடல் உருவாக்க முடியாது. எனவே, பளு தூக்குவதால் பெண்மையில் மாற்றம் வெளிப்படும் என்பதில் உண்மை இல்லை.

    கட்டுக்கதை:

    மாதவிடாய் காலத்தில் பெண்கள் பளு தூக்குதல் போன்ற வலிமை பயிற்சிகளை செய்யக்கூடாது.

    உண்மை:

    ஒவ்வொருவரின் உடலும் வித்தியாசமானது. ஹார்மோனின் அளவுகளும், செயல்பாடுகளும் நபருக்கு நபர் மாறுபடும். உடல் ஒத்துழைப்பதற்கு ஏற்பவே பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. திட்டமிட்டபடி பயிற்சி செய்ய முடியவில்லை என்றால் ஓய்வு எடுப்பதுதான் சரியானது.

    • ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியின் 67 கிலோ உடல் எடை பிரிவில் தமிழக வீரர் பி.ஆகாஷ் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
    • தமிழக அணி 26 தங்கம், 16 வெள்ளி, 26 வெண்கலத் துடன், மொத்தம் 68 பதக்கம் உள்பட தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது.

    சென்னை:

    6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    வருகிற 30-ந்தேதியுடன் போட்டிகள் முடிகிறது. 31-ந் தேதி நிறைவு விழா நடக்கிறது.

    8-வது நாள் முடிவில் தமிழ்நாடு 26 தங்கம், 13 வெள்ளி, 23 வெண்கலத் துடன் 62 பதக்கம் பெற்று இருந்தது. நேற்றைய 9-வது நாளில் தமிழக அணிக்கு மேலும் 6 பதக்கம் கிடைத்தது.

    பளுதூக்குதலில் 2 வெள்ளி, 1 வெண்கலமும், களரிபட்டு பந்தயத்தில் 1 வெள்ளியும், நீச்சல், சைக்கிள் போட்டிகளில் தலா 1 வெண்கலமும் தமிழக வீரர், னுராவ் அணிகள் பெற்றன.

    ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியின் 67 கிலோ உடல் எடை பிரிவில் தமிழக வீரர் பி.ஆகாஷ் வெள்ளிப் பதக்கம் பெற்றார். அவர் மொத்தம் 242 கிலோ தூக்கினார். 73 கிலோ பிரி வில் வசந்தகுமார் 246 கிலோ தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார். பெண்களுக்கான 55 கிலோ உடல் எடை பிரிவில் தமிழக வீராங்கனை கனிகாஸ்ரீ (168 கிலோ) வெண்கலம் பெற்றார்.

    களரிப்பட்டு பந்தயத்தில் தமிழக வீரர் சுர்ஜித்துக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. நீச்சலில் ஜாய்ஸ்ரீயும் (100 மீட்டர் பிரஸ்டிரோக் பிரிவு) சைக்கிளிங்கில் ஸ்ரீமதியும் (60 கிலோ மீட்டர் தூரம்) வெண்கல பதக்கம் பெற்றனர்.

    தமிழக அணி 26 தங்கம், 16 வெள்ளி, 26 வெண்கலத்துடன், மொத்தம் 68 பதக்கம் உள்பட தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது.

    மராட்டியம் 27 தங்கம் பெற்று 94 பதக்கத்துடன் முதல் இடத்திலும், அரி யானா 26 தங்கம், 15 வெள்ளி, 34 வெண்கலம், ஆகமொத்தம் 75 பதக்கத்து டன் 3-வது இடத்திலும் உள்ளன. 

    • சஞ்சிதா சானுவை சஸ்பெண்ட் செய்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி உத்தரவிட்டுள்ளது.
    • குற்றம் நிரூபிக்கப்பட்டால் தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கத்தை இழக்க நேரிடும்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி பளு தூக்கும் வீராங்கனைகளில் ஒருவர் சஞ்சிதா சானு. இவர் காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் வென்றுள்ளார். இந்த நிலையில் சானு ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளார். குஜராத்தில் கடந்த செப்டம்பர், அக்டோபரில் நடந்த தேசிய விளையாட்டு போட்டியின்போது அவரது சிறுநீர் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், சஞ்சிதா சானு தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி உத்தரவிட்டுள்ளது.

    இனி தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு ஏஜென்சியின் ஊக்கமருந்து தடுப்புக் குழுவின் முன்பு சஞ்சிதா ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பின்னர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நான்கு ஆண்டுகள் அவர் போட்டிகளில்பங்கேற்க முடியாதபடி சஸ்பெண்ட் செய்யப்படலாம். அத்துடன், அவர் தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கத்தையும் இழக்க நேரிடும்.

    மூத்த வீராங்கனை ஊக்கமருந்து வலையில் சிக்கியிருப்பது மிகவும் வருத்தம் அளிப்பதாக இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்தின் தலைவர் சஹ்தேவ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    • 75 கிலோ எடை பிரிவில் மொத்தம் 350 கிலோ பளு தூக்கி முதல் பரிசை வென்றார்.
    • மாநில அளவிலான பெண்கள் பளு தூக்கும் போட்டியில் முதல் பரிசு.

    பல்லடம் : 

    மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள க.அய்யம்பாளையத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ(வயது 38)என்ற வீராங்கனை 75 கிலோ எடை பிரிவில் மொத்தம் 350 கிலோ பளு தூக்கி முதல் பரிசை வென்றார். இதுகுறித்து ஜெயஸ்ரீ கூறியதாவது:- மதுரை அவனியாபுரம் எனது சொந்த ஊர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள க.அய்யம்பாளையத்தில் கணவர் விஜய் உடன் வசித்து வருகிறேன். சிறு வயதில் பளு தூக்கும் போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டேன். பின்னர் திருமணம் நடைபெற்றது. 12 மற்றும் 7 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவருடன் விசைத்தறி கூடத்தில் வேலை செய்து வருகிறேன். இந்தநிலையில் எனது பளுதூக்கும் ஆர்வத்தை கணவரிடம் தெரிவித்தேன். அவர் என்னை ஊக்குவித்தார். சென்ற வருடம் திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் பளு தூக்கும் போட்டியில் முதல் பரிசு பெற்றேன். இதையடுத்து தற்போது மத்திய பிரதேசம் குவாலியரில் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதேபோல ஆண்கள் பளு தூக்கும் போட்டியில் 60 கிலோ எடை பிரிவில் தாராபுரத்தை சேர்ந்த கார் வேந்தன்(28) என்பவர் முதல் பரிசு வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாலசுப்பிரமணியம் என்பவா் 75 கிலோ பிரிவில் தலா 4 தங்கப் பதக்கங்கள் பெற்றாா்.
    • வீரா்கள் இருவருக்கும் பொதுமக்கள் மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக அழைத்துச் சென்றனா்.

    அவினாசி :

    ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டி கோவை சரவணம்பட்டி குமரகுரு கல்லூரி வளாகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.

    இதில், அவிநாசி அருகே அவிநாசிலிங்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியம் என்பவா் 75 கிலோ பிரிவில் ஸ்குவாட், பெஞ்ச் பிரஸ், டெட் லிப்ட் ஆகிய உள் பிரிவுகளில் தலா 4 தங்கப் பதக்கங்கள் பெற்றாா்.

    அவிநாசி நாயக்கன்தோட்டம் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் 150 கிலோ பிரிவில் வெள்ளியும், ஸ்குவாட், பெஞ்ச் பிரஸ் ஆகிய உள்பிரிவுகளில் தங்கம், டெட் லிப்ட் பிரிவில் வெண்கலம் என 4 பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தாா்.அவிநாசிக்கு வந்த வீரா்கள் இருவருக்கும் பொதுமக்கள் மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக அழைத்துச் சென்று, பாராட்டுத் தெரிவித்தனா்.

    • தாராபுரம் சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
    • 150 கிலோ எடையுள்ள பளுதூக்கி தன்னுடைய சாதனையை தானே முறியடித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூரைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஆதித்யா தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். உடற்பயிற்சியின் மீது அதிக ஆர்வம் கொண்ட அவர் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று வருகிறார் .

    இந்நிலையில் பளுதூக்குதலில் ஏற்கனவே கோவையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 135 கிலோ பளு தூக்கி நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை நிகழ்த்தியுள்ள நிலையில் அதனை முறியடிக்கும் வகையில் 140 கிலோ பளு தூக்கி அதனை நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்கு அனுப்பி உள்ளார் .அது அங்கீகாரம் பெற்று இன்று கோவையில் நடைபெறும் விழாவில் அங்கீகார சான்றிதழ் பெற உள்ளார்.

    இந்நிலையில் தன்னுடைய 140 கிலோ சாதனையை முறியடிக்கும் வகையில் இன்று 150 கிலோ எடையுள்ள பளுதூக்கி தன்னுடைய சாதனையை தானே முறியடிதுள்ளார். இதனையும் உலக சாதனை அங்கீகாரம் பெற அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்திய பளுதூக்கும் வீரர் ஜெர்மி லால்ரினுங்கா தங்கம் வென்றார். இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.#YouthOlympics2018 #JeremyLalrinnunga
    பியூனஸ் அயர்ஸ்:

    மூன்றாவது இளையோர் ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. 206 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் இந்தியா சார்பில் 47 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

    நேற்று இரவு 62 கிலோ எடைப்பிரிவு ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் இளம் விரர் ஜெர்மி லால்ரினுங்கா (வயது 15) மொத்தம் 274 கிலோ பளு தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். இளையோர் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும்.



    இப்போட்டியில் துருக்கி வீரர் டாப்தாஸ் கானர் (263 கிலோ) வெள்ளிப் பதக்கமும், கொலம்பியாவின் வில்லார் எஸ்டிவன் ஜோஸ் (260 கிலோ) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

    மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த ஜெர்மி லால்ரினுங்கா, இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இளையோர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், ஜூனியர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார். இரண்டு தேசிய சாதனைகளையும் முறியடித்தது குறிப்பிடத்தக்கது. #YouthOlympics2018 #JeremyLalrinnunga
    ×