search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Record"

    • படம் வெளியாகி முதல் நாளிலயே 7.5 கோடி இந்தியாவில் வசூலித்துள்ளது
    • இப்படத்தில் வரும் ஒரு காட்சிக்காக மூன்று நாட்கள் பட்டினி கிடந்து நடித்திருக்கிறார்.

    கடந்த சில மாதங்களாகவே மலையாள சினிமாவின் புகழ் உச்சியில் இருக்கிறது. அதை தொடரும் விதமாக மார்ச் 28 ஆம் தேதி பிளெஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ் , அமலாபால் நடிப்பில் வெளிவந்த படம் ஆடு ஜீவிதம். இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியது. படத்தை பார்த்துவிட்டு பலப் பிரபலங்கள் படத்தை பாராட்டி வருகின்றனர்.

    பிருத்விராஜ் இப்படத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்துள்ளார் மேலும் இப்படத்தில் வரும் ஒரு காட்சிக்காக மூன்று நாட்கள் பட்டினி கிடந்து நடித்திருக்கிறார். ஆடு ஜீவிதம் படம் மலையாள சினிமாவில் நீண்ட நாட்கள் எடுக்கப்பட்ட படமாகும் . இதற்கெல்லாம் சேர்த்து பலனாக படத்தின் வெற்றி உச்சத்திற்கு சென்றிருக்கிறது.

    படம் வெளியாகி முதல் நாளிலயே 7.5 கோடி இந்தியாவில் வசூலித்துள்ளது. மலையாளத் திரையுலகில் இதுவரை அதிகமாக வசூலித்த படங்களின் பட்டியலில் 6 வது இடத்தை பெற்று இருக்கிறது ஆடு ஜீவிதம்.

    மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த ஆர்.டி.எக்ஸ், நேரு, பீஷ்மபரவம் போன்ற படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் ஆடு ஜீவிதம் படம் 7 நாட்களில் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தை படக்குழுவினர் நேற்று இந்தி சினிமாவின் முக்கிய பிரபலங்களுக்கும், முக்கிய இயக்குனர்களுக்கும் திரையிட்டனர். படத்தைப் பார்த்த பிரபலங்கள் ஆடு ஜீவிதம் படக்குழுவினரிடம் பாராட்டு மழையை பொழிந்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
    • சேதம் விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    பசிபிக் பெருங்கடலில் உள்ள பப்புவா நியூ கினியா தீவு நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள கிழக்கு செபிக் மாகாணத்தின் தலைநகர் வெவாக்கிலிருந்து 88 கிமீ தென்மேற்கில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. சேதம் விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    • உறைபனியால் வாகனங்களை இயக்குவதிலும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இருந்தது.
    • பல இடங்களில் காஷ்மீரை போன்று பனி கட்டி, கட்டியா படர்ந்து காணப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

    ஆனால் இந்த ஆண்டு சற்று தாமதமாக ஜனவரி மாத தொடக்கத்திலேயே உறைபனியின் தாக்கம் ஆரம்பித்தது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே உறைபனியின் தாக்கம் உள்ளது. உறைபனியுடன் அவ்வப்போது நீர்ப்பனியும் சேர்ந்து கொட்டி வந்தது.

    இதுதவிர காலை நேரங்களிலேயே மேக கூட்டங்கள் அதிகளவில் திரண்டு காலை 11 மணி வரை பகல் நேரமே இரவாக காட்சியளிக்கிறது. அதன்பிறகு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

    மாலையில் மீண்டும் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விடுகிறது. இப்படி தினந்தோறும் காணப்படும் உறைபனியால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஊட்டியில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கடுமையான உறைபனி காணப்பட்டது. காந்தல், தலைகுந்தா, பிங்கர் போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    உறைபனி காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள புல்தரைகள், குதிரை பந்தய சாலையில் உள்ள புல் தரைகள் மற்றும் சாலையோரங்களில் உள்ள செடிகள், கொடிகள், புல் தரைகள் மீதும் உறைபனி படர்ந்து காணப்பட்டது.

    இதனால் அந்த பகுதிகள் முழுவதும் புற்கள் இருந்த தடமே மறைந்து வெள்ளை கம்பளிஆடை போர்த்தியது போன்று வெண்மை நிறத்தில் காட்சியளித்தன. இதுதவிர வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள், கார்கள் மீதும் உறைபனி கொட்டியிருந்தது. இதனை வாகன உரிமையாளர்கள் அகற்றினர். உறைபனியால் வாகனங்களை இயக்கு வதிலும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இருந்தது.

    காஷ்மீரில் தான் அதிகளவு குளிர் காணப்படும். ஆனால் தமிழகத்தில் உள்ள ஊட்டியிலும் தற்போது உறைபனியின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக கடுமையான குளிர் நிலவுகிறது. இதனால் ஊட்டி தற்போது மினி காஷ்மீராகவே மாறி காணப்பட்டது. பல இடங்களில் காஷ்மீரை போன்று பனி கட்டி, கட்டியா படர்ந்து காணப்பட்டது.

    உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்ததுடன் கடும் குளிரும் காணப்பட்டது இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியில் வர முடியாத நிலை காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் பொதுமக்கள் வீட்டிற்கு ள்ளேயே முடங்கினர். வீட்டிற்குள்ளும் குளிர் வாட்டியதால் தீ மூட்டி குளிர் காய்ந்தனர்.

    பள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகள் மற்றும் அதிகாலையில் வேலைக்கு செல்வோர், தேயிலை தோட்ட பணிக்கு செல்வோர் குளிரை தாங்கும் ஆடைகளை அணிந்து கொண்டு சென்றனர். சில இடங்களில் பொது மக்கள், ஆட்டோ, சுற்றுலா வாகன டிரைவர்கள் குளிரில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். ஊட்டியில் இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 23.2 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 0.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது.

    மேலும் மாவட்டத்தின் பல இடங்களில் காலை முதலே பனிமூட்டமும் காணப்படுகிறது. இதனால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை.

    வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகனத்தை இயக்கி செல்கின்றனர். தொடர்ந்து உறைபனியின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்வதால், தேயிலை, மலைக்காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களும் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • பெரம்பலூரில் நடன செவ்வியல் போட்டி நடைபெற்றது
    • தனலட்சுமி சீனிவாசன் பள்ளி மாணவி சாதனை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கலா உற்சவப் போட்டிகளான வாய்ப்பாட்டு இசைசெவ்வியல், நடனம் செவ்வியல், நாடகம், இசைக்கருவி தாளவாத்தியம், காண்கலை, இருபரிமாணம் காண்கலை, முப்பரிமாணம் நடனம், பாரம்பரிய நாட்டுப்புறவகை, உள்ளூர் தொன்மை பொம்மை விளையாட்டுகள் போன்ற பல்வேறு வகையான போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட சாரணர் கூட்ட அரங்கில் நடைபெற்றன.

    இதில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

    போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி வே.ஹாசினி நடன செவ்வியல் போட்டியில் பங்கேற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    மேலும் வருகின்ற 17-ந் தேதி சேலத்தில் வைஷ்யா கல்லூரியில் நடைபெறும் மாநில அளவிலான கலை பண்பாட்டு போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

    நடன செவ்வியல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    பள்ளியின் முதன்மை முதல்வர், துணை முதல்வர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    .

    • புன்னம் சத்திரத்தில் 2 மணி நேரம் சிலம்பு சுற்றி மாணவ, மாணவிகள் உலக சாதனை படைத்தனர்
    • மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் , சான்றிதழ் மற்றும் கேடயங்கள், மரக்கன்றுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் பொன்னும் சத்திரம் சேரன் பள்ளி வளாகத்தில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 92 -வது பிறந்த நாளை முன்னிட்டு சிலம்பத்தில் உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பாரதம் சிலம்பம் பயிற்சி பள்ளியின் நிறுவனர் கிருஷ்ணராஜ் தலைமை வகித்து சிலம்பு சுழற்றும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.இதில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஐந்து வயதுக்கு மேல் உள்ள 550-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்ஐஸ் கட்டி மீது நின்று சிலம்பம் சுற்றுவது, சைக்கிளில் சுற்றிக்கொண்டு சிலம்பம் சுற்றுவது, கண்ணை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றுவது, பானையின் மீது நின்று கொண்டு சிலம்பம் சுற்றுவது, முட்டை அட்டியின் மேல் நின்று சிலம்பம் சுற்றுவது, ஸ்கேட்டிங் செய்து கொண்டே சிலம்பம் சுற்றுவது என சுமார் 2 மணி நேரம் தொடர் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பதக்கம், சான்றிதழ், கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட சிலம்பம் சங்கத்தின் தலைவர் சுரேஷ், கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் தலைவர் கார்த்திக், எக்ஸ்போ பிரைட் கிளை மேலாளர் சிவக்குமார் , கரூர் மாவட்ட விளையாட்டு வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் வீரதிருப்பதி, பாரதம் சிலம்பம் பயிற்சி பள்ளியின் ஆசான் சௌந்தரராஜன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் , சான்றிதழ் மற்றும் கேடயங்கள், மரக்கன்றுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

    • சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பள்ளி
    • பள்ளி மாணவி சாதனை

    பெரம்பலூர்,

    பெரம்பலூ ர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி மாணவி மத்திய அரசின் என்சிஇடி தேர்வில் வெற்றிப்பெற்று

    அகில இந்திய அளவில் தரவரிசையில் இடம் பிடித்து சாதனை படைத்து ள்ளார்.  பெரம்பலூரை சேர்ந்த சக்திவேல் - ராஜேஸ்வரி தம்பதியின் மகள் மதுரா. இவர் சிறுவாச்சூர் ஆல்மை ட்டி வித்யாலயா பள்ளியில் 2016ம் ஆண்டு நடந்த ஒலிம்பியாட் தேர்வில் அதிக மார்க் பெற்று இலவச

    கல்வியில் சேர்க்கை பெற்று 6ம்வகு ப் பு முதல் 1 2 ம் வகுப்பு வரை படித்தார்.  மத்திய அரசின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆ ப் டெக்னாலஜி (என்சிஇடி) 2023 ஆண்டு தேர்வினை எழுதிய மாணவி மதுரா அதிக மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் தரவரிசையில் இடம் பிடித்தார். இதையடுத்து மதுராவிற்கு ஒடிசா மாநி லத்தில் உள்ள மத்தி ய அரசின் கல்வி நிறுவனமான ஐஐடியில் ஐடிஇபி 4 ஆண்டு கோர்ஸ் கல்வி பயில இடம் கிடைத்து சேர்ந்துள்ளார். என்சிஇடி தேர்வில் அகில இந்திய அளவில் தர வரிசையில் இடம் பிடித்து சாதனை படைத்த மாணவி மதுராவை ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி த ாளாளர் ரா ம்கு மா ர் , அகடமி இயக்குநர் கார்த்திக், பள்ளி முதல்வர் தீபா ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர். பெரம்பலூர் மாவட்டத்தில் மத்தி ய அரசின் என்சிஇடி தேர்வில் வெற்றிப்பெற்று அகில இந்திய அளவில் தரவரி சையில் இடம் பிடித்த சாதனை படைத்த முதல் மாணவி என்பது குறிப்பி டத்தக்கது.

    • கரூர் குறுவட்ட அளவிலான நடைபெற்ற தடகளப் போட்டிகளில் புஞ்சை தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை
    • சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள்,அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினார்கள்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் குறுவட்ட அளவிலான நடைபெற்ற தடகளப் போட்டிகளில் புஞ்சை தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 17 வயதிற்கு உட்பட்ட கோலூன்றித் தாண்டுதல் பிரிவில் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அருள் முருகன் 2-ம் இடமும் , நிஷ்வன் 3-ம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர் . மேலும் முதல் இடம் பெற்றுள்ள புகழூர்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் விஷ்ணுவும் கடந்த ஆண்டு புஞ்சை தோட்டக்குறிச்சி உயர்நிலைப் பள்ளியில் 10 -ம் வகுப்பு முடித்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. கோலூன்றி தாண்டுதல் பிரிவில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள்,அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினார்கள்.

    • ராமச்சந்திரன் டிரைவர்கள் அமர்ந்திருக்கும் கலையரங்கத்தில் அமர்ந்திருந்தார்.
    • சிலர் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 32) டிரைவர். இவர் சம்பவத்தன்று தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே உள்ள கார், வேன் வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் அமர்ந்திருக்கும் கலையரங்கத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த பெரியமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் மகன் ராஜா (27), பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் மகன் தமிழ்ச்செல்வன் (27), மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கல்வராயன் மகன் ருத்திரன் (25) உள்ளிட்ட மற்றும் சிலர் அங்கு வந்து ஏற்கனவே மதியம் எங்களிடம் ஏன் பிரச்சனை செய்தாய் எனக் கூறி ராமச்சந்திரனை ஆபாசமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

    இதே போல் தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரில் நானும் எனது நண்பர் ராஜாவும் தனியார் நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் வேலை பார்த்து வருவதாகவும், வேலை முடித்துவிட்டு தியாகதுருகம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் பின்புறம் உள்ள காலி மனையில் உணவு அருந்திய போது அங்கே வந்த வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (47), அதே கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (43) மற்றும் மடம் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (40) உள்ளிட்ட சிலர் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து இரு தரப்பினர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் ராஜா, தமிழ்ச்செல்வன், ருத்திரன் மற்றும் சுதாகர், சக்திவேல், ரஞ்சித் குமார் ஆகிய 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார்.
    • சிறுமிக்கு அவார்டு, மெடல் மற்றும் சர்டிபிகேட் ஆகியவை வழங்கி பாராட்டினர்.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்து கருவலூரை சேர்ந்தவர்கள் விக்னேஷ் -ரோகினி. இவர்களது மகள் இனியா (வயது 5).

    இவர் அவினாசியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார் .இந்த நிலையில் சீர்காழியில் நடந்த ஜாக்கி புக் ஆப் வோல்டு ரெக்கார்ட நிறுவனம் நடத்தும் 10நிமிட சவால் நிகழ்ச்சியில் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டு 10 நிமிடத்தில் 135 திருக்குறள் ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார். இதனைப் பாராட்டி ஜாக்கி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட் நிறுவனம் சிறுமிக்கு அவார்டு, மெடல் மற்றும் சர்டிபிகேட் ஆகியவை வழங்கி பாராட்டினர்.

    • திருச்சியில் பாரத மண்ணே நீ வாழ்க பாடலுக்கு நடனம் ஆடினர்
    • ஆன்லைனிலும் இணைந்த பரத கலைஞர்கள்

    திருச்சி,

    இந்தியா மற்றும் உலகின் பல நாடுகளை சேர்ந்தவர்கள் 6 நிமிடங்கள் 6 வினாடிகள் பாரத மண்ணே நீ வாழ்க என்ற பாடலுக்கு பரதநாட்டியம் ஆடும் நிகழ்ச்சி திருச்சியில் ஆன்லைன் வாயிலாக நடந்தது. இதில் 12,345 மாணவர்கள், பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு நடனம் ஆடினர்.இந்த சாதனை நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கோவை ஆல் இந்தியா என்டர்டைன்மென்ட் பவுண்டேஷன் மற்றும் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஏ.ஐ.எப். பைன் ஆர்ட்ஸ் குழுக்கள், 555 டான்ஸ் அகாடமிகள் இணைந்து நடத்தின.மேற்கண்ட பரதநாட்டிய நிகழ்ச்சிகள் திருச்சி, கோயம்புத்தூர், நாகர்கோவில், சென்னை, சேலம், திருப்பூர், திண்டுக்கல், விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, ராணிப்பேட்டை, தருமபுரி, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, ஈரோடு, தூத்துக்குடி, ஓசூர் பல்வேறு மாவட்டங்களிலும்,புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், கேரளா, புதுடெல்லி, கொல்கத்தா ஆகிய வெளி மாநிலங்களிலும், அமெரிக்கா, கனடா , மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் நடந்தது. ஆன்லைன் வாயிலாக நடந்த நேரலை நிகழ்ச்சிகளை ஜெட்லீ புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இயக்குனர் டிராகன் ஜெட்லி உலக சாதனையாக பதிவு செய்தார்.

    • திருச்சியில் உலக சாதனைக்காக நடத்தப்பட்டது
    • 390 மாணவிகள் சுழற்சி முறையில் சிலம்பம் சுற்றினர்

    திருச்சி,

    திருச்சி அரவிந்த் கல்வி மற்றும் தற்காப்பு கலைக்கூடம் சார்பில் முப்பெரும் உலக சாதனை நிகழ்ச்சி திருச்சி புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. விழாவை கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமை தாங்கி சாதனை நிகழ்வையும் தொடங்கி வைத்தார்.முதலாவதாக தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 390 மாணவ, மாணவிகள் சுழற்சி முறையில் 23 மணி நேரம் 23 நிமிடம் 23 வினாடி சிலம்பம் சுற்றி சாதனை புரிந்தனர். இரண்டாவதாகஅரவிந்த் கல்வி மற்றும் தற்காப்பு கலைக்கூட மாணவர்கள் 9 பேர் தொடர்ந்து 7 மணி நேரம் 7 நிமிடம் 7 வினாடிகள் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர். 3-வதாக ஆசான் உமா குணசேகரன் 23 நிமிடங்களில் 23 விதமான சிலம்ப ஆயுதங்களை பயன்படுத்தி சிலம்பம் சுற்றி சாதனை புரிந்தார்.அதைத் தொடர்ந்து சிறப்பாக சிலம்பம் சுற்றிய மாணவ மாணவிகளுக்கு நவல்பட்டு போலீஸ் பயிற்சி பள்ளியின் ஓய்வு பெற்ற கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு திருச்சி கோவிந்தசாமி பரிசுகள் வழங்கினார்.இதில் சிறப்பு விருந்தினர்களாக திருநெல்வேலி மாயன் பில்டர்ஸ் டி.டி.ரமேஷ், ஓய்வு பெற்ற திருச்சி ரோட்டரி சங்க தலைவர் வளர்மதி குமரேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.மேற்கண்ட 3 சாதனை நிகழ்வுகளையும் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஜெட்லி நேரில் பார்வையிட்டு உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்தார். மேலும் இச்சாதனை ஆசியா மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்துக்கு பதிவு செய்து அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரவிந்த் கல்வி மற்றும் தற்காப்பு கலைக்கூட ஆசான்கள் முத்துராமலிங்கம், கீதா , சுதாகர் மற்றும் அரவிந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

    மனைவியை அடித்து உதைத்த கணவன், கள்ளக்காதலி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள வனிச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தரம்(வயது37) இவரது மனைவி ரேவதி (27).  சுந்தரம் டெம்போ டிரைவராக வேலை செய்து வருகிறார் .

    இந்நிலையில் சுந்தரத்திற்கு பவளத்தானுர் பகுதியில் பழக்கடை வைத்து இருக்கும் கண்ணம்மா (35) என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் சுந்தரம் கண்ணம்மாளின் பழக்க–டையில் இருந்து கொண்டு தனது வீட்டிற்கு செல்வதை தவிர்த்து வந்துள்ளார் .

    இந்நிலையில் ரேவதி கணவர் சுந்தரத்தை பல முறை கண்டித்துள்ளார்.இருந்தும் சுந்தரம், கண்ணம்மாள் இருவருக்கும் இடையே பழக்கம் நீடித்து வந்துள்ளது.இதனால் ஆத்திரம் அடைந்த ரேவதி  கணவரை தேடி பவளத்தா–னுர் பகுதிக்கு வந்துள்ளார்.

    அப்போது சுந்தரமும் ,கண்ணம்மாளும் பழக்கடை–யில் ஒன்றாக வியாபாரம் செய்துகொண்டு இருந்ததை பார்த்த ரேவதி இருவரையும் கண்டித்துள்ளார் .இதனால் ஆத்திரமடைந்த கணவர் சுந்தரமும் கண்ணம்மாளும் இங்கு எதற்கு வந்தாய் என்றுகூறி ரேவதியை அடித்து உதைத்துள்ளனர்.

    இதுபற்றி ரேவதி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் சுந்தரம் மற்றும் கண்ணம்மாள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ×