என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
- தேசிய திறனறி தகுதி தேர்வில் வெற்றிபெற்றவர்கள்
- வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் செவ்வாய்ப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் தேசிய திறனறி தகுதி தேர்வு எழுதினர். இதில் 5 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இதே போல் புதுக்கோட்டைவிடுதி, பாப்பாபட்டி, நைன் கொள்ளை, இலைகடிவிடுதி, முதலிபட்டி ஆகிய ஊர்களில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவியர்கள் 18 பேர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் மாணவி சிவனேகா மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை வட்டார கல்வி அலுவலர், வள மைய மேற்பார்வையாளர், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் ஆகியோர் வாழ்த்தினர்.
Next Story