கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு பளு தூக்குதல், களரிபட்டில் தமிழகத்துக்கு வெள்ளி

ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியின் 67 கிலோ உடல் எடை பிரிவில் தமிழக வீரர் பி.ஆகாஷ் வெள்ளிப் பதக்கம் பெற்றார். தமிழக அணி 26 தங்கம், 16 வெள்ளி, 26 வெண்கலத் துடன், மொத்தம் 68 பதக்கம் உள்பட தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு பளு தூக்குதல், களரிபட்டில் தமிழகத்துக்கு வெள்ளி
Published on

சென்னை:

6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

வருகிற 30-ந்தேதியுடன் போட்டிகள் முடிகிறது. 31-ந் தேதி நிறைவு விழா நடக்கிறது.

8-வது நாள் முடிவில் தமிழ்நாடு 26 தங்கம், 13 வெள்ளி, 23 வெண்கலத் துடன் 62 பதக்கம் பெற்று இருந்தது. நேற்றைய 9-வது நாளில் தமிழக அணிக்கு மேலும் 6 பதக்கம் கிடைத்தது.

பளுதூக்குதலில் 2 வெள்ளி, 1 வெண்கலமும், களரிபட்டு பந்தயத்தில் 1 வெள்ளியும், நீச்சல், சைக்கிள் போட்டிகளில் தலா 1 வெண்கலமும் தமிழக வீரர், னுராவ் அணிகள் பெற்றன.

ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியின் 67 கிலோ உடல் எடை பிரிவில் தமிழக வீரர் பி.ஆகாஷ் வெள்ளிப் பதக்கம் பெற்றார். அவர் மொத்தம் 242 கிலோ தூக்கினார். 73 கிலோ பிரி வில் வசந்தகுமார் 246 கிலோ தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார். பெண்களுக்கான 55 கிலோ உடல் எடை பிரிவில் தமிழக வீராங்கனை கனிகாஸ்ரீ (168 கிலோ) வெண்கலம் பெற்றார்.

களரிப்பட்டு பந்தயத்தில் தமிழக வீரர் சுர்ஜித்துக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. நீச்சலில் ஜாய்ஸ்ரீயும் (100 மீட்டர் பிரஸ்டிரோக் பிரிவு) சைக்கிளிங்கில் ஸ்ரீமதியும் (60 கிலோ மீட்டர் தூரம்) வெண்கல பதக்கம் பெற்றனர்.

தமிழக அணி 26 தங்கம், 16 வெள்ளி, 26 வெண்கலத்துடன், மொத்தம் 68 பதக்கம் உள்பட தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது.

மராட்டியம் 27 தங்கம் பெற்று 94 பதக்கத்துடன் முதல் இடத்திலும், அரி யானா 26 தங்கம், 15 வெள்ளி, 34 வெண்கலம், ஆகமொத்தம் 75 பதக்கத்து டன் 3-வது இடத்திலும் உள்ளன. 

X

Maalai Malar
www.maalaimalar.com