என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லையில் 6-ந் தேதி நில அளவை பதிவேடுகள் சார்நிலை பணிக்கான எழுத்து தேர்வு - 14 மையங்களில் நடக்கிறது
- அளவையர், உதவி வரைவாளர் பதவிக்கான எழுத்து தேர்வு வருகிற 6-ந் தேதி நடக்கிறது
- தேர்வினை 14 மையங்களில் 3,860 தேர்வர்கள் எழுத உள்ளனர்
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் நில அளவை பதிவேடு சார்நிலை பணியில் அடங்கிய நில அளவையர், வரைவாளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலை பணியில் அடங்கிய அளவையர், உதவி வரைவாளர் பதவிக்கான எழுத்து தேர்வு வருகிற 6-ந் தேதி நடக்கிறது.
இந்த தேர்வு நெல்லை மாவட்டத்தில் 14 மையங்க ளில் காலை மற்றும் மாலை நேரங்களில் நடத்தப்படுகிறது. இதனை 3,860 தேர்வர்கள் எழுத உள்ளனர். பேட்டை காமராஜர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, டவுன் கல்லணை மேல் நிலைப்பள்ளி, சாப்டர் பள்ளி உள்ளிட்ட 14 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
தேர்வுக்கு உரிய பணிகள் மேற்கொள்ள தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நிலையில் 7 சுற்றுக்குழு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வின் நடவடிக்கை களை பதிவு செய்ய 15 வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு நபர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்