search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Land Surveyor"

    • அளவையர், உதவி வரைவாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நெல்லையில் 14 மையங்களில் இன்று நடைபெற்றது.
    • 2 கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்வை எழுத 3,831 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் நில அளவை பதிவேடு சார்நிலை பணியில் அடங்கிய நில அளவையர், வரைவாளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலை பணியில் அடங்கிய அள வையர், உதவி வரைவாளர் பதவிக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.

    நெல்லையில் பேட்டை காமராஜர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, டவுன் கல்லணை மேல் நிலைப்பள்ளி, சாப்டர் பள்ளி உள்பட 14 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.

    காலை, மதியம் என 2 கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்வை எழுத 3,831 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    காலையில் தொடங்கிய தேர்வை 2,332 பேர் எழுதினர். இது 60.87 சதவீதம் ஆகும். 1,499 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.

    தேர்வுகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நிலையில் 7 சுற்றுக்குழு அலுவலர்கள் தேர்வினை கண்காணித்தனர்.

    • நில அளவையர், வரைவாளர் பணிக்கான எழுத்து தேர்வு மதுரையில் இன்று நடந்தது.
    • இதற்காக 47,623 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    மதுரை

    தமிழகத்தில் 789 நில அளவையர், 236 வரைவாளர் உள்பட 1089 காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டது. இதற்காக 47,623 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு இன்று மாநிலம் முழுவதும் எழுத்து தேர்வு நடந்தது.

    மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் கல்லூரி, நரிமேடு நாய்ஸ் மெட்ரிகு லேஷன் மேல்நிலைப்பள்ளி, நாராயணபுரம் எஸ்.இ.வி மேல்நிலைப்பள்ளி, விஸ்வநாத புரம் பாலமந்திரம் மேல்நிலைப்பள்ளி, சின்ன சொக்கிகுளம் லேடி டோக் கல்லூரி, கோரிப்பாளையம் மீனாட்சி அரசினர் கல்லூரி, திருப்பாலை யாதவா பெண்கள் மற்றும் ஆண்கள் கல்லூரி, புதூர் சி.எஸ்.ஐ. கல்லூரி, நோபிலி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, அல் அமீன் மேல்நிலைப்பள்ளி, கே.கே. நகர் அருள்மலர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் இன்று எழுத்து தேர்வு நடந்தது. இதில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

    மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொழில்நுட்பம் சாராத 'மல்டி டாஸ்கிங்' பணிகளுக்கான ஸ்டாப் செலக்சன் கமிஷன் 2-ம் நிலை தேர்வு நடந்தது. இதில் 465 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

    • அளவையர், உதவி வரைவாளர் பதவிக்கான எழுத்து தேர்வு வருகிற 6-ந் தேதி நடக்கிறது
    • தேர்வினை 14 மையங்களில் 3,860 தேர்வர்கள் எழுத உள்ளனர்

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் நில அளவை பதிவேடு சார்நிலை பணியில் அடங்கிய நில அளவையர், வரைவாளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலை பணியில் அடங்கிய அளவையர், உதவி வரைவாளர் பதவிக்கான எழுத்து தேர்வு வருகிற 6-ந் தேதி நடக்கிறது.

    இந்த தேர்வு நெல்லை மாவட்டத்தில் 14 மையங்க ளில் காலை மற்றும் மாலை நேரங்களில் நடத்தப்படுகிறது. இதனை 3,860 தேர்வர்கள் எழுத உள்ளனர். பேட்டை காமராஜர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, டவுன் கல்லணை மேல் நிலைப்பள்ளி, சாப்டர் பள்ளி உள்ளிட்ட 14 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

    தேர்வுக்கு உரிய பணிகள் மேற்கொள்ள தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நிலையில் 7 சுற்றுக்குழு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தேர்வின் நடவடிக்கை களை பதிவு செய்ய 15 வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு நபர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×