search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hockey Competition"

    • பெண்கள் பிரிவில் ராணி அண்ணா கல்லூரி அணி வெற்றிக்கோப்பையை தட்டிச்சென்றது.
    • அகில இந்திய பல்கலைக்கழக ஆக்கி வீரர் ரமேஷ் வெற்றிக் கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

    நெல்லை:

    பாளை அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 26-ந்தேதி தொடங்கிய கருவேலம் கோப்பைக்கான ஆக்கி போட்டி இன்று காலையுடன் முடிவு பெற்றது. ஆண்கள் பிரிவில் பாளை லெவன் ஆக்கி அணியும், பெண்கள் பிரிவில் ராணி அண்ணா கல்லூரி அணியும் வெற்றிக்கோப்பைகளை தட்டிச்சென்றனர். முன்னதாக இன்று காலையில் இறுதி போட்டிகளை முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு முன்னாள் அகில இந்திய பல்கலைக்கழக ஆக்கி வீரர் ரமேஷ் தலைமை தாங்கி வெற்றிக் கோப்பைகளையும், தனி பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆக்கி கழகம் சேவியர் ஜோதி சற்குணம், முருகேசன், பீர் அலி, ஜான்சன், மங்கை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • போட்டியில் மாவட்டம் முழுவதுமிருந்து 16 அணிகள் கலந்து கொண்டன.
    • போட்டிகளை துணை போலீஸ் கமிஷனர் (கிழக்கு)ஆதர்ஸ் பச்சிரா தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    பாளை அண்ணா விளையாட்டரங்கில் இன்று முதல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) வரை கருவேலம் கோப்பைக்கான நெல்லை மாவட்ட அளவிலான ஆக்கி போட்டிகள் நடைபெறுகிறது. இதில் மாவட்டம் முழுவதுமிருந்து 16 அணிகள் கலந்து கொண்டன. இப்போட்டியின் தொடக்கவிழா இன்று காலை தொடங்கியது.

    இதனை மாநகர துணை போலீஸ் கமிஷனர் (கிழக்கு)ஆதர்ஸ் பச்சிரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வீரர்-வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்று போட்டிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ணன் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை ஆக்கி யூனிட் ஆப் நெல்லை தலைவர் சேவியர் ஜோதி சற்குணம் தலைமையில் செய்து வருகின்றனர்.

    • லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த 18-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • நேற்று இரவு நடைபெற்ற 3-வது காலிறுதி போட்டியில் நியூ டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணியும், பெங்களூரு கனரா வங்கி அணியும் மோதின.

    கோவில்பட்டி:

    கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த 18-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    காலிறுதி போட்டிகள்

    8-ம் நாளான நேற்று காலை தொடங்கிய முதல் காலிறுதி போட்டியில் நியூ டெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், கோவில்பட்டி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆப் எக்ஸலன்ஸ் எஸ்டிஏடி அணியும் மோதின.

    இதில் இரு அணிகளும் தலா இரு கோல்கள் போட்டு சமநிலை பெற்றன, பின்னர் வெற்றியை தீர்மானிக்க ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் 4:3 என்ற கோல் கணக்கில் ஷூட் அவுட் முறையில் நியூ டெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    மாலையில் நடைபெற்ற இரண்டாவது காலிறுதி போட்டியில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணியும், சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியும் மோதின.

    இதில் 4:3 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி வெற்றிப் பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    3,4-வது காலிறுதி போட்டிகள்

    நேற்று இரவு நடைபெற்ற 3-வது காலிறுதி போட்டியில் நியூ டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணியும், பெங்களூரு கனரா வங்கி அணியும் மோதின.

    இதில் 4:0 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி, பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி வெற்றிப பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    இரவு 9 மணிக்கு நடைபெற்ற 4-வது காலிறுதி போட்டியில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணியும், சென்னை ஜிஎஸ்டி-சென்ட்ரல் எக்ஸைஸ் அணியும் மோதின.

    இதில் 5:1 என்ற கோல் கணக்கில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணி வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    நாளை அரையிறுதி போட்டிகள்

    நாளை ( சனிக்கிழமை) மாலை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், நியூ டெல்லி, பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணியும் மோதுகின்றன.

    2-வது அரையிறுதி போட்டியில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணியும், செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணியும் மோதுகின்றன.

    • நேற்று இரவு தொடங்கிய 21-வது லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை இந்தியன் வங்கி அணி வெற்றிப்பெற்றது.
    • இன்று மாலை நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்னை மற்றும் நிஸ்வாஸ் ஆக்கி அணி, ஒடிசா ஆகிய அணிகள் மோதுகின்றன.

    கோவில்பட்டி:

    கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த 18-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று இரவு தொடங்கிய 21-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு, கனரா வங்கி மற்றும் சென்னை இந்தியன் வங்கி ஆகிய அணிகள் மோதின. இதில் 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை இந்தியன் வங்கி அணி வெற்றிப் பெற்றது.

    இன்று மாலை நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்னை மற்றும் நிஸ்வாஸ் ஆக்கி அணி, ஒடிசா ஆகிய அணிகள் மோதுகின்றன. 23-வது லீக் ஆட்டத்தில் சவுத் சென்ட்ரல் ரயில்வே, செகந்திராபாத் மற்றும் கஸ்டம்ஸ், புனே ஆகிய அணிகள் மோதுகின்றன. 24-வது லீக் ஆட்டத்தில் ஜிஎஸ்டி - சென்ட்ரல் எக்ஸைஸ், சென்னை மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆப் இந்தியா ட்ரைனிங் சென்டர், பெங்களூரு ஆகிய அணிகள் மோத உள்ளன.

    • சென்னை ஜிஎஸ்டி சென்ட்ரல் எக்ஸைஸ் அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது.
    • இன்று மாலை 19-வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது.

    கோவில்பட்டி:

    கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில் கே.ஆர். கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல், இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்று வருகிறது.

    5-ம் நாளான நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய 16-வது லீக் ஆட்டத்தில் சென்னை, ஜிஎஸ்டி சென்ட்ரல் எக்ஸைஸ் மற்றும் தமிழ்நாடு போலீஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் 3:1 என்ற கோல் கணக்கில் சென்னை ஜிஎஸ்டி சென்ட்ரல் எக்ஸைஸ் அணி வெற்றிப் பெற்றது.

    17-வது லீக் ஆட்டத்தில் புது டெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி மற்றும் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய அணிகள் மோதின. இதில் 8:2 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி, பஞ்சாப் நேஷனல் பாங்க் அணி வெற்றிப் பெற்றது. 18-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு கனரா வங்கி மற்றும் புனே கஸ்டம்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் 2:1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு கனரா வங்கி அணி வெற்றிப் பெற்றது.

    இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் 19-வது லீக் ஆட்டத்தில் மும்பை யூனியன் வங்கி அணி மற்றும் ஹூப்ளி சவுத் வெஸ்டர்ன் ெரயில்வே அணிகள் மோதுகின்றன. 20-வது லீக் ஆட்டத்தில் புதுடெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு மற்றும் பெங்களூரு ஸ்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆப் இந்தியா ட்ரைனிங் சென்டர் ஆகிய அணிகள் மோதுகின்றன. 21-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு கனரா வங்கி மற்றும் சென்னை இந்தியன் வங்கிஆகிய அணிகள் இரவு மோதுகின்றன.

    • 11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
    • இன்று மாலை நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் ஜி.எஸ்.டி. செ ன்ட்ரல் எக்ஸைஸ் சென்னை மற்றும் தமிழ்நாடு போலீஸ் சென்னை ஆகிய அணிகள் மோதுகின்றன.

    கோவில்பட்டி:

    கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்ட ளையின் சார்பில், கே.ஆர். கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல், இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்று வருகிறது.

    11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். 5-ம் நாளான இன்று (திங்கள்கிழமை) நடை பெற்ற 15-வது லீக் ஆட்டத்தில் ெரயில் வீல் பேக்டரி பெங்களூர் அணி மற்றும் பாம்போஷ் நிஸ்வாஸ் ஆக்கி அணி ஆகிய அணிகள் காலை 7 மணிக்கு மோதின. இதில் 4:2 என்ற கோல் கணக்கில் நிஸ்வாஸ் ஆக்கி அணி பாம்போஷ் வெற்றிப் பெற்றது.

    இன்று மாலை நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் ஜி.எஸ்.டி. செ ன்ட்ரல் எக்ஸைஸ் சென்னை மற்றும் தமிழ்நாடு போலீஸ் சென்னை ஆகிய அணிகள் மோதுகின்றன. 17-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் நேஷனல் பேங்க் புதுடெல்லி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் சென்னை ஆகிய அணிகள் மோதுகின்றன. 18-வது லீக் ஆட்டத்தில் கனரா பேங்க் பெங்களூரு மற்றும் கஸ்டம்ஸ் புனே ஆகிய அணிகள் மோது கின்றன.

    நாளை (23-ந்தேதி) 19-வது லீக் ஆட்டத்தில் யூனி யன் பேங்க் மும்பை மற்றும் சவுத் வெஸ்டர்ன் ெரயில்வே ஹூப்ளி ஆகிய அணிகள் மோதுகின்றன. 20-வது லீக் ஆட்டத்தில் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு புது டெல்லி மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆப் இந்தியா ட்ரைனிங் செ ன்டர் பெங்க ளூரு ஆகிய அணிகள் மோதுகின்றன. 21-வது லீக் ஆட்டத்தில் கனரா பேங்க் பெங்களூரு மற்றும் இந்தியன் பேங்க் சென்னை ஆகிய அணிகள் மோதுகின்றன.

    • போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது.
    • 12-வது லீக் ஆட்டத்தில் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு மற்றும் சென்ட்ரல் எக்ஸைஸ் சென்னை அணிகள் இன்று மாலை 5 மணிக்கு மோதுகின்றன.

    கோவில்பட்டி:

    கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்ட ளையின் சார்பில் கே.ஆர். கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த 18-ந்தேதி முதல் கோவில் பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாடு அணி வெற்றி

    11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறு கிறது.

    4-ம் நாளான இன்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் சென்னை மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆப் இந்தியா ட்ரைனிங் சென்டர் பெங்களூரு அணிகள் மோதின. இதில் 3:2 என்ற கோல் கணக்கில் சென்னை தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றிப் பெற்றது.

    நாளைய ஆட்டம்

    12-வது லீக் ஆட்டத்தில் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு மற்றும் சென்ட்ரல் எக்ஸைஸ் சென்னை அணிகள் இன்று மாலை 5 மணிக்கு மோதுகின்றன. 13-வது லீக் ஆட்டத்தில் காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா, புது டெல்லி மற்றும் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆப் எக்ஸலன்ஸ் எஸ்.டி.ஏ.டி., கோவில்பட்டி அணிகள் மாலை 6.45 மணிக்கு மோதுகின்றன. 14-வது லீக் ஆட்டத்தில் சவுத் சென்ட்ரல் ெரயில்வே, செகந்திராபாத் மற்றும் இந்தியன் பேங்க் சென்னை அணிகள் இரவு 8.15 மணிக்கு மோதுகின்றன.

    நாளை ெரயில் வீல் பேக்டரி – பெங்களூர், நிஸ்வாஸ் ஆக்கி அணி – பாம்போஷ் அணிகள் காலை 7 மணி போட்டியில் மோது கின்றன. ஜி.எஸ்.டி., செ ன்ட்ரல் எக்ஸைஸ் சென்னை - தமிழ்நாடு போலீஸ் – சென்னை அணிகள் மாலை 5 மணிக்கு மோதுகின்றன. பஞ்சாப் நேஷனல் பாங்க் - புது டெல்லி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் - சென்னை அணிகள் மாலை 6.45 மணிக்கு மோதுகின்றன. கனரா பாங்க் – பெங்களூரு- கஸ்டம்ஸ், புனே அணிகள் இரவு 8.15 மணிக்கு மோதுகின்றன.

    • போட்டிகளின் தொடக்கவிழா இன்று மாலை 5.15 மணி நடைபெறுகிறது.
    • 11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை எ, பி, சி, டி. என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி கிருஷ்ணா நகர் அரசு செயற்கை புல்வெளி மைதானத்தில் கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை பகல், இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற உள்ளது.

    தினமும் 4 போட்டிகள்

    போட்டிகளின் தொடக்கவிழா இன்று மாலை 5.15 மணி நடைபெறுகிறது. புது டெல்லி ஆக்கி இந்தியா மூலம் தேசிய மற்றும் சர்வதேச நடுவர்கள் நியமிக்கப்பட்டு தினமும் காலை 6.30, மாலை 4.30, 6.30 மற்றும் இரவு 8.15 என மொத்தம் 4 போட்டிகள் நடைபெற உள்ளன.

    11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை எ, பி, சி, டி. என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    முதல் பரிசு ரூ. 1 லட்சம்

    ஏ பிரிவில் புது டெல்லி பஞ்சாப் நேஷனல் பாங்கு அணி, பெங்களூர் ெரயில் வீல் பேக்டரி, மும்பை நிஸ்வாஸ் ஆக்கி அணி, சென்னை இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் அணியும், பி பிரிவில் புதுடெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி, மும்பை யூனியன் பாங்க் அணி, ஹூப்பள்ளி சவுத் வெஸ்டர்ன் ெரயில்வே அணி, கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி. எக்ஸலன்ஸ் அணி, சி பிரிவில் சவுந்திராபாத் சவுத் சென்ட்ரல் ெரயில்வே அணி, பெங்களூரு கனரா பாஙக் அணி, புனே கஸ்டம்ஸ் அணி, சென்னை இந்தியன் பாங்க் அணி, டி பிரிவில் புதுடெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் பிரோமோஷன் போர்டு அணி, சென்னை சென்ட்ரல் எக்ஸிஸ் அணி, பெங்களூரு சாய் எஸ்.டி.சி. அணி, சென்னை தமிழ்நாடு போலீஸ் ஆகிய அணிகள் விளையாட உள்ளன.

    சுழற்கோப்பை

    போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரையில் லீக் முறையிலும், கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது. போட்டிகளில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ. 1 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு

    ரூ. 75 ஆயிரமும், 3-வது இடம் பெறும் அணிக்கு ரூ. 50 ஆயிரமும், 4-வது இடம் பெறும் அணிக்கு ரூ. 30 ஆயிரமும், லட்சுமி அம்மாள் நினைவு சுழற்கோப்பையுடன் வழங்கப்பட உள்ளது.

    மேலும் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் 4 அணிகளுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ. ரூ. 25 ஆயிரம் வீதம் வழங்கப்பட

    உள்ளது. நடுவர்களால் தேர்வு செய்யப்படும் சிறந்த முன்கள ஆட்டக்காரர், பின்கள ஆட்டக்காரர், நடுகள ஆட்டக்காரர் மற்றும் சிறந்த தடுப்பாளர் விருதுகள் தனி நபர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

    இத்தகவலை நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் எஸ்.சண்முக வேல் தெரிவித்துள்ளார்.

    ×