பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி-துணை போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்

போட்டியில் மாவட்டம் முழுவதுமிருந்து 16 அணிகள் கலந்து கொண்டன.போட்டிகளை துணை போலீஸ் கமிஷனர் (கிழக்கு)ஆதர்ஸ் பச்சிரா தொடங்கி வைத்தார்.
பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி-துணை போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்
Published on

நெல்லை:

பாளை அண்ணா விளையாட்டரங்கில் இன்று முதல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) வரை கருவேலம் கோப்பைக்கான நெல்லை மாவட்ட அளவிலான ஆக்கி போட்டிகள் நடைபெறுகிறது. இதில் மாவட்டம் முழுவதுமிருந்து 16 அணிகள் கலந்து கொண்டன. இப்போட்டியின் தொடக்கவிழா இன்று காலை தொடங்கியது.

இதனை மாநகர துணை போலீஸ் கமிஷனர் (கிழக்கு)ஆதர்ஸ் பச்சிரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வீரர்-வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்று போட்டிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ணன் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை ஆக்கி யூனிட் ஆப் நெல்லை தலைவர் சேவியர் ஜோதி சற்குணம் தலைமையில் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com