என் மலர்
நீங்கள் தேடியது "former president"
- வைர நெக்லஸ் மற்றும் விலையுயர்ந்த ஹேண்ட் பேக்குகள் உட்பட சுமார் 80 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை லஞ்சமாக பெற்றார்.
- தென்கொரிய வரலாற்றிலேயே ஒரு முன்னாள் அதிபர் மற்றும் அவரது மனைவி ஒரே நேரத்தில் சிறை தண்டனை பெறுவது இதுவே முதல் முறையாகும்.
தென்கொரியாவில் 2022 முதல் 2025 ஏப்ரல் வரை அதிபராக இருந்தவர் யூன் சுக்-இயோல். இவரது மனைவி கிம் கியோன் ஹீ.
யூன் சுக்-இயோல் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் கிம் கியோன் ஹீ தென் கொரியாவின் முதல் பெண்பணியாக இருந்தார்.
2022 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில், Unification Church என்ற அமைப்பிடமிருந்து வைர நெக்லஸ் மற்றும் விலையுயர்ந்த ஹேண்ட் பேக்குகள் உட்பட சுமார் 80 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை அவர் லஞ்சமாகப் பெற்றதாக வழக்கு நடந்து வந்தது.
இந்த வழக்கில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பளித்த நீதிபதி, கிம் தனது பதவியைத் தனிப்பட்ட லாபத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி 20 மாத சிறை தண்டனை விதித்தார். மேலும், 12.85 மில்லியன் டாலர் பணத்தைத் திருப்பிச் செலுத்தவும், வைர நெக்லசை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.

முன்னாள் அதிபர் யூன் சுக்-இயோல் ஏற்கனவே கடந்த ஆண்டு தென் கொரியாவில் அவசர நிலையை அமல்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.
தென்கொரிய வரலாற்றிலேயே ஒரு முன்னாள் அதிபர் மற்றும் அவரது மனைவி ஒரே நேரத்தில் சிறை தண்டனை பெறுவது இதுவே முதல் முறையாகும்.
- உடல் நலக்குறைவு காரணமாக பிரதீபா பாட்டில், மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- பிரதீபா பாட்டில் உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
புனே:
இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் (வயது 89). 2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவி வகித்தார்.
இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பிரதீபா பாட்டில், மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் மற்றும் மார்பு தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் பிரச்சினையால் செலவின மசோதா செனட் சபையில் நிறைவேறுவதில் சிக்கல் நீடிப்பதால் அமெரிக்காவில் பல்வேறு அரசுத்துறைகள் முடங்கி உள்ளன. இதனால் ஆயிரக்கணக்கானோர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு உள்ளனர். மேலும் பலர் ஊதியம் இன்றி வேலை பார்த்து வருகிறார்கள்.

இது தொடர்பாக ஜார்ஜ் புஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ‘பீட்சா’ வழங்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “நமக்கு ஆதரவு அளிக்கும் நம்முடைய சக மனிதர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும்” என தெரிவித்துள்ளார். #GeorgeWBush #Pizza
இந்தியாவில் நீண்ட காலமாக எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முறைகேடு நடப்பதாகவும் மீண்டும் ஓட்டு சீட்டு முறைக்கே மாற வேண்டும் என்று பல எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இப்போது இதே போன்ற கோரிக்கை அமெரிக்காவிலும் எழுந்துள்ளது. 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டொனால்டு டிரம்பும், முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர். தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார் என்று கருத்து கணிப்புகள் கூறின. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவதை விரும்பாத ரஷியா ஓட்டுப்பதிவு கம்ப்யூட்டர்களை ஹேக்கிங் செய்து ஓட்டுகளை டிரம்புக்கு ஆதரவாக மாற்றிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதை ரஷியா மறுத்துள்ளது. ஆனாலும் சந்தேகம் நீடித்து வருகிறது.
அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. அங்கு நாடு முழுவதும் ஒரே முறையில் தேர்தல் நடத்தப்படுவது இல்லை. தேர்தலை எப்படி நடத்துவது என்பது குறித்து அந்தந்த மாகாணங்களே முடிவு செய்து கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
இதன்படி சில மாகாணங்களில் ஓட்டு சீட்டு முறை உள்ளது. சில மாகாணங்களில் ஓட்டு எந்திரங்களை பயன்படுத்துகிறார்கள். இன்னும் சில மாகாணங்களில் கம்ப்யூட்டர் மூலம் இணையதளம் வழியாக ஓட்டு பதிவு செய்யும் நடைமுறையை பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு 30 மாகாணங்களில் கம்ப்யூட்டர் ஓட்டுப்பதிவு முறை நடைபெற்றது. இதில் தான் 21 மாகாணங்களில் கம்ப்யூட்டரில் வைரஸ்களை அனுப்பி ஹேக்கிங் செய்து மோசடி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
எனவே இந்த மோசடி நடக்காமல் இருக்க மீண்டும் ஓட்டு சீட்டு முறைக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
முன்னாள் அதிபர் பில்கிளிண்டனும் இப்போது அந்த கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார். அவர் இதுபற்றி கூறியதாவது:-
எலக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் ஓட்டுப்பதிவு செய்வதில் பாதுகாப்பு உள்ளது என்பதை உறுதி செய்ய முடியாத நிலைமை இருக்கிறது. அதில் தவறு நடப்பதற்கு பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன.
எனவே தவறே நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் ஓட்டு சீட்டு முறைதான் சிறந்தது. எனவே அதற்கு அனைத்து மாகாணங்களும் மாற வேண்டும். தேர்தல் சரியான முறையில் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
ஏற்கனவே எலக்ட்ரானிக் ஓட்டு முறைக்கு மாறி இருந்த விர்ஜினியா மாகாணம் இனி ஓட்டு சீட்டு முறையை பயன்படுத்தப்போவதாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.






