என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "paper ballot system"

    • புத்திசாலத்தனமான யோசனைகளை எப்படி பெறுகிறீர்கள்?
    • மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.

    இந்தியாவில் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இயந்திரங்களை பயன்படுத்தாமல் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற உத்தரவிட வேண்டும் என்று கே.ஏ. பால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவில், சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி போன்ற அரசியல் தலைவர்கள் கூட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு குறித்து கேள்வி எழுப்பி இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த மனுவை விக்ரம் நாத் மற்றும் பி.பி. வரலே அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. விசாரணையின் போது, இது போன்ற புத்திசாலத்தனமான யோசனைகளை எப்படி பெறுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியதோடு, மனுவை தள்ளுபடி செய்வது உத்தரவிட்டது.

    மேலும், "சந்திரபாபு நாயுடுவோ அல்லது ஜெகன் மோகன் ரெட்டியோ தேர்தலில் தோல்வியுற்றால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதாக சொல்கிறார்கள், ஆனால் வெற்றி பெற்றால் முறைகேடு இருப்பதாக கூறுவதில்லை. இதை எப்படி பார்க்க முடியும்? நாங்கள் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம், இதை வாதாடும் இடம் இதுவல்ல," என்று நீதிபதிகள் கூறினர்.

    விசாரணையின் போது ஆஜரான மனுதாரர் பால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்று வாதிட்டார். மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக காகித வாக்கு சீட்டு முறையை பயன்படுத்தும் அமெரிக்கா போன்ற நாடுகளின் நடைமுறைகளை இந்தியா பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

    இதோடு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என எலான் மஸ்க் போன்ற முக்கிய பிரமுகர்கள் கூட மின்னணு வாக்குப் பதிவு இயந்திர முறைகேடு குறித்து கவலை தெரிவித்துள்ளதாக மனுதாரர் பால் கூறினார்.

    முறைகேடுகளை தடுப்பதற்காக ஓட்டு சீட்டு மூலம் தேர்தலை நடத்த வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் கூறியுள்ளார்.
    வாஷிங்டன்:

    இந்தியாவில் நீண்ட காலமாக எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முறைகேடு நடப்பதாகவும் மீண்டும் ஓட்டு சீட்டு முறைக்கே மாற வேண்டும் என்று பல எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

    இப்போது இதே போன்ற கோரிக்கை அமெரிக்காவிலும் எழுந்துள்ளது. 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டொனால்டு டிரம்பும், முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர். தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார் என்று கருத்து கணிப்புகள் கூறின. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

    ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவதை விரும்பாத ரஷியா ஓட்டுப்பதிவு கம்ப்யூட்டர்களை ஹேக்கிங் செய்து ஓட்டுகளை டிரம்புக்கு ஆதரவாக மாற்றிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதை ரஷியா மறுத்துள்ளது. ஆனாலும் சந்தேகம் நீடித்து வருகிறது.

    அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. அங்கு நாடு முழுவதும் ஒரே முறையில் தேர்தல் நடத்தப்படுவது இல்லை. தேர்தலை எப்படி நடத்துவது என்பது குறித்து அந்தந்த மாகாணங்களே முடிவு செய்து கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

    இதன்படி சில மாகாணங்களில் ஓட்டு சீட்டு முறை உள்ளது. சில மாகாணங்களில் ஓட்டு எந்திரங்களை பயன்படுத்துகிறார்கள். இன்னும் சில மாகாணங்களில் கம்ப்யூட்டர் மூலம் இணையதளம் வழியாக ஓட்டு பதிவு செய்யும் நடைமுறையை பயன்படுத்துகின்றனர்.

    இவ்வாறு 30 மாகாணங்களில் கம்ப்யூட்டர் ஓட்டுப்பதிவு முறை நடைபெற்றது. இதில் தான் 21 மாகாணங்களில் கம்ப்யூட்டரில் வைரஸ்களை அனுப்பி ஹேக்கிங் செய்து மோசடி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

    எனவே இந்த மோசடி நடக்காமல் இருக்க மீண்டும் ஓட்டு சீட்டு முறைக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    முன்னாள் அதிபர் பில்கிளிண்டனும் இப்போது அந்த கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார். அவர் இதுபற்றி கூறியதாவது:-

    எலக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் ஓட்டுப்பதிவு செய்வதில் பாதுகாப்பு உள்ளது என்பதை உறுதி செய்ய முடியாத நிலைமை இருக்கிறது. அதில் தவறு நடப்பதற்கு பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன.

    எனவே தவறே நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் ஓட்டு சீட்டு முறைதான் சிறந்தது. எனவே அதற்கு அனைத்து மாகாணங்களும் மாற வேண்டும். தேர்தல் சரியான முறையில் நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    ஏற்கனவே எலக்ட்ரானிக் ஓட்டு முறைக்கு மாறி இருந்த விர்ஜினியா மாகாணம் இனி ஓட்டு சீட்டு முறையை பயன்படுத்தப்போவதாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
    ×