என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யூரேனியம்"

    • ஒரு அணு ஆயுதத்தை தயாரிக்க 42 கிலோகிராம் யுரேனியம் தேவைப்படும்.
    • தற்போதுகூட வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் ஆலைகள் நான்கு இடங்களில் இயங்கி வருகின்றன.

    47 அணு குண்டுகளை தயாரிக்க தேவையான, 2 டன் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வடகொரியா வைத்துள்ளதாக தென்கொரியா எச்சரித்துள்ளது.

    வட கொரியாவிடம் 47 அணு குண்டுகளை தயாரிக்க தேவையான, 2 டன் (2,000 கிலோகிராம்) அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருக்கலாம் என தென் கொரியா எச்சரித்துள்ளது.

    விஞ்ஞானிகள் கூட்டமைப்பு (FAS) உள்ளிட்ட நிபுணர்களின் மதிப்பீடுகளின்படி, வட கொரியா 90% அல்லது அதற்கு மேற்பட்ட சுத்தமான 2,000 கிலோகிராம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்திருப்பதாகக் தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு விவகார (unification) அமைச்சர் சுங் டோங்-யோங் தெரிவித்தார்.

    அணுசக்தி சர்வதேச முகமையின் (IAEA) கூற்றுப்படி, ஒரு அணு ஆயுதத்தை தயாரிக்க 42 கிலோகிராம் யுரேனியம் தேவைப்படும். அந்த வகையில், வட கொரியாவிடம் உள்ள 2,000 கிலோகிராம் யுரேனியம் மூலம் சுமார் 47 அணு குண்டுகளைத் தயாரிக்க முடியும்.

    தற்போதுகூட வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் ஆலைகள் நான்கு இடங்களில் இயங்கி வருகின்றன. ஏற்கனவே 50 அணு குண்டுகளை வடகொரியா வைத்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

    வட கொரியாவை தடுத்து நிறுத்த பொருளாதாரத் தடைகள் பயனுள்ளதாக இருக்காது என்றும், கொரியா அமெரிக்கா இடையேயான உச்சிமாநாடு மட்டுமே ஒரே தீர்வு என்று அமைச்சர் குறிப்பிட்டார். 

    அமெரிக்காவின் மிரட்டலுக்காக அணு ஆயுதத்தை கைவிட முடியாது என்றும் தங்கள் இருப்பை நிலைநாட்ட அது மிகவும் முக்கியம் என்றும் வட கொரியா அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

    அணுசக்திக்கு தேவையான யூரேனியத்தை செறிவூட்டும் நிலையத்தை செயல்படுத்தி அதிகமான உற்பத்தியை தொடங்கவுள்ளதாக சர்வதேச முகமையிடம் ஈரான் தெரிவித்துள்ளது.
    டெஹ்ரான்:

    எண்ணை வளம்மிக்க நாடான ஈரானுக்கும் அமெரிக்கா. பிரான்ஸ், பிரிட்டன், சீனா, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் இடையில் முன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அணுசக்திக்கு தேவையான யுரேனியம் என்னும் மஞ்சள் நிற தாதுவை செறிவூட்டும் விவகாரம் தீவிரமாக ஆராயப்பட்டது.

    இதில் யூரேனியம் செறிவூட்டலை 20 சதவீத அளவுக்கு கீழ் மட்டுப்படுத்த வலியுறுத்தப்பட்டது. ஆனால் 5 சதவீத அளவோ அல்லது 20 வீத அளவோ யூரேனியத்தை செறிவூட்டுவது ஈரானிய மக்களுடைய உரிமை என்று ஈரானுக்கான அணு செயற்பாடு தொடர்பான பேச்சாளர் சயீட் ஜலீல் வலியுறுத்தி இருந்தார். அணு ஆயுதம் தயாரிப்பதற்கு யூரேனியத்தை 20 சதவீத அளவுக்கு செறிவூட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா சமீபத்தில் விலகிய பின்னர், ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா பரிந்துரைத்தது. இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியபோதும், தொடர்ந்து இதில் நீடிப்பதாக பிறநாடுகள் அறிவித்துள்ளன.


    இந்நிலையில், அணுசக்திக்கு தேவையான யூரேனியத்தை செறிவூட்டும் நிலையத்தை செயல்படுத்தி அதிகமான உற்பத்தியை தொடங்கவுள்ளதாக சர்வதேச முகமையிடம் ஈரான் தெரிவித்துள்ளது.

    இஸ்பஹான் மாகாணத்தில் உள்ள நட்டான்ஸ் பகுதியில் உள்ள அணு உலையில் யூரேனியம் செறிவூட்டும் பணிகளை தொடங்குவதாக சர்வதேச அணு சக்தி முகமைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஈரான் அணு சக்தி முகமையின் தலைவர் அலி அக்பர் சாலே இன்று தெரிவித்துள்ளார்.

    சந்தர்ப்பம் சாதகமாக அமைந்தால் நாளை இரவில் இருந்து இந்த அணு உலை செயல்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    ×