என் மலர்
நீங்கள் தேடியது "சீன அதிபர் ஜி ஜின்பிங்"
- அமெரிக்காவிடம் சோயாபீன்ஸ் வாங்க சீனா ஒப்புதல் அளித்துள்ளது.
- அரிய பூமி தாதுக்களை அமெரிக்காவுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்ய சீனா சம்மதம்
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பிற நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், சீன பொருட்களுக்கு எதிராக கூடுதல் வரி விதித்தார். இதனால் அமெரிக்கா- சீனா இடையே சலசலப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், தென்கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப்- சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில், அமெரிக்காவிடம் சோயாபீன்ஸ், சோளம் போன்ற விவசாய பொருட்களையும், கச்சா எண்ணெயையும் வாங்க சீனா ஒப்புதல் அளித்துள்ளது.
அதே சமயம் அரிய பூமி தாதுக்களை அமெரிக்காவுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்ய சீனா சம்மதம் தெரிவித்துள்ளது.
முன்னதாக முக்கிய வர்த்தகப் பிரச்னைகளைத் தீர்க்க இருநாடுகளும் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியிருந்த நிலையில், சீனா மீதான வரியை 57%லிருந்து 47%ஆக குறைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சீனா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.
- உலகின் 2 முன்னணி பொருளாதாரங்களுக்கு இடையே அவ்வப்போது உராய்வுகள் இருப்பது இயல்பு.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பிற நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், சீன பொருட்களுக்கு எதிராக கூடுதல் வரி விதித்தார். இதனால் அமெரிக்கா- சீனா இடையே சலசலப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், தென்கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப்- சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையில் பரஸ்பர வரி விதிப்புகள், அரிய வகை கனிம ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் சீனா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே டிரம்ப் உடனான சந்திப்பின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசுகையில், சீனாவும் அமெரிக்காவும் கூட்டாளிகளாகவும், நண்பர்களாகவும் இருக்க வேண்டும் என்று பலமுறை பொதுவெளியில் கூறியுள்ளேன்.
உலகின் 2 முன்னணி பொருளாதாரங்களுக்கு இடையே அவ்வப்போது உராய்வுகள் இருப்பது இயல்பு. இருப்பினும் இரு நாடுகளின் வளர்ச்சிக்கு ஒரு நல்ல சூழலை உருவாக்க டிரம்புடன் தொடர்ந்து பணியாற்ற தயாராக உள்ளேன் என்றார்.
- தென் கொரியாவில் ஆசிய-பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு 29-ந் தேதி தொடங்குகிறது.
- மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
வாஷிங்டன்:
தென் கொரியாவில் ஆசிய-பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு 29-ந் தேதி தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த மாநாட்டில் டிரம்ப் உரையாற்ற இருக்கிறார். மறுநாள் (30-ந்தேதி )அவர் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச இருப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்து உள்ளார். அதிபர் டிரம்ப் இன்று இரவு (வெள்ளிக்கிழமை) மலேசியா செல்வார் என்றும் அதன்பிறகு ஜப்பான் மற்றும் தென்கொரியா செல்ல இருக்கிறார் என அவர் கூறி இருக்கிறார்.
அமெரிக்காவி வர்த்தக போருக்கு மத்தியில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின்போது டிரம்ப்பும், ஜின்பிங்கும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச உள்ளனர்.
- ஒத்துழைப்பின் பரப்பளவை விரிவுபடுத்தி, ஒவ்வொரு நாட்டின் வளத்தையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
- ஷாங்காய் அமைப்பை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு செல்ல சீனா, அமைப்பில் உள்ள அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயல்படும்.
மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர நன்மை, சமத்துவம், ஆலோசனை, நாகரிகங்களின் பன்முகத் தன்மைக்கு மரியாதை மற்றும் பொதுவான வளர்ச்சியைப் பின் தொடர்தல் போன்றவற்றுக்காக இது தொடங்கப்பட்டது.
நாங்கள் சட்ட அமலாக்கம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை சீராக ஊக்குவித்தோம். வேறுபாடுகளை முறையாக நிர்வகித்து தீர்த்துக் கொண்டோம். வெளிப்புற தலையீட்டை சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்த்தோம். நாங்கள் எப்போதும் சர்வதேச நியாயம் மற்றும் நீதியின் பக்கம் நிற்கிறோம்.
மேலாதிக்கத்தையும் அதிகார அரசியலையும் எதிர்க்கிறோம். சவால்கள் மற்றும் மாற்றங்கள் நிறைந்த உலகில் ஷாங்காய் உணர்வை நாம் முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். நமது அமைப்பின் திறனை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும். வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு பொதுவான நிலையைத் தேட வேண்டும்.
ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். ஒத்துழைப்பின் பரப்பளவை விரிவுபடுத்தி, ஒவ்வொரு நாட்டின் வளத்தையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பிராந்திய பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்த அமைப்பை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு செல்ல சீனா, அமைப்பில் உள்ள அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயல்படும். ஷாங்காய் அமைப்பை மேலும் வலுப்படுத்துவோம்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுடனான சீனாவின் ஒட்டுமொத்த வர்த்தகம் 2.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ந்து வரும் உலகளாவிய செல்வாக்கு, உறுப்பு பொருளாதாரங்கள் ஒருங்கிணைந்த 30 டிரில்லி யன் அமெரிக்க டாலர்களை நெருங்கி வருகிறது. உறுப்பு நாடுகளில் சீனாவின் முதலீடுகள் ஏற்கனவே 84 பில்லியன் அமெரிக்க டா லர்களைத் தாண்டிவிட்டன.
பிராந்திய சவால்களை எதிர்கொள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மேம்பாட்டு வங்கி மற்றும் ஒரு புதிய பாதுகாப்பு மையத்தை கூடிய விரைவில் உருவாக்க அழைப்பு விடுக்கிறேன்.
உலக ஒழுங்கில் கொடு மைப்படுத்தும் நடத்தையை நாம் எதிர்க்க வேண்டும். நியாயம் மற்றும் நீதியைக் கடைப்பிடிக்க வேண்டும். பனிப்போர் மனநிலை, மோதல் மற்றும் கொடு மைப்படுத்தும் நடத்தையை தலைவர்கள் எதிர்க்க வேண்டும்.
உறுப்பு நாடுகளின் வாழ் வாதாரத்தை மேம்படுத்த 100 சிறிய அளவிலான திட்டங்களின் ஒத்துழைப் பில் சீனாவின் பங்களிப்பை உறுதி செய்கிறேன். அனைத்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்களும் நண்பர் கள் மற்றும் கூட்டாளிகள் ஆவார்கள். நமது ஒற்று மையை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விபத்து ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
- விபத்துக்கு பிறகு அந்த விளையாட்டு மையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
சீனாவின் ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த மக்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 35 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 43 பேர் காயமடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர். இந்த விபத்துக்கு பிறகு அந்த விளையாட்டு மையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் குற்றவாளி சட்டத்தின்படி தண்டிக்கப்படுவர் என்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
சீன மக்கள் விடுதலை இராணுவம் ஏற்பாடு செய்திருந்த ஜுஹாய் ஏர்ஷோவுக்கு ஒரு நாள் முன்னதாக இந்த சம்பவம் நடந்துள்ளது.






