என் மலர்
நீங்கள் தேடியது "வெப் தொடர்"
- வெளியான முதல் மூன்று மாதங்களில் நெட்பிளிக்ஸில் 140 மில்லியன் பார்வைகளைப் பெற்றது.
- சக பள்ளி மாணவியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜேமி என்ற கதாபாத்திரத்தில் 15 வயதான இளம் நடிகர் ஓவன் கூப்பர் நடித்திருந்தார்.
ஸ்டீபன் கிரஹாம், ஜாக் தோரேன் இணைந்து இயக்கிய 'Adolescence' என்ற நெட்பிலிப்ஸ் தொடர் உலகம் முழுவதும் பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது.
இந்தத் தொடர், வெளியான முதல் மூன்று மாதங்களில் நெட்பிளிக்ஸில் 140 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. இதன் ஒவ்வொரு எபிசோடும் ஒரே தொடர்ச்சியான ஷாட்டில் படமாக்கப்பட்டது.
லண்டனில் நடக்கும் 'Adolescence' தொடர் கதைக்களத்தில் சக பள்ளி மாணவியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜேமி என்ற கதாபாத்திரத்தில் 15 வயதான இளம் நடிகர் ஓவன் கூப்பர் நடித்திருந்தார்.

இந்நிலையில் அவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற எம்மி விருதுகள் விழாவில் அவர் விருது வென்றுள்ளார். எம்மி விருது வரலாற்றில் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்ற இளைய நடிகர் என்ற சாதனையை ஓவன் கூப்பர் படைத்துள்ளார்.
திரைப்படங்களுக்கு ஆஸ்கார் போல தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு எம்மி விருதுகள் ஆகும்.
இந்த வருட எம்மி விழாவில், 'Adolescence' தொடர் பல முக்கிய விருதுகளை வென்றது.
சிறந்த தொடர், சிறந்த இயக்கம், சிறந்த எழுத்து, சிறந்த நடிகர் (ஸ்டீபன் கிரஹாம்) மற்றும் சிறந்த துணை நடிகை (எரின் டோஹெர்ட்டி) ஆகிய பிரிவுகளிலும் விருதுகளை அள்ளியது.
- Mediacorp சிங்கப்பூர் தேசிய தொலைக்காட்சி மற்றும் the media நிறுவனத்தின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள வரலாற்று நெடுந்தொடர் சண்டமாருதம்.
- தமிழர்கள் சிங்கப்பூருக்கு எப்படி வந்தார்கள், சிங்கப்பூர் தேசிய இனங்களில் தமிழர்களும் இணைந்து, தமிழ் மொழி தேசிய மொழிகளில் ஒன்றாக எப்படி அங்கீகரிக்கப்பட்டது
சிங்கப்பூரில் தமிழர்களின் வரலாற்றை மையமாகக் கொண்டு, Mediacorp சிங்கப்பூர் தேசிய தொலைக்காட்சி மற்றும் the media நிறுவனத்தின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள வரலாற்று நெடுந்தொடர் சண்டமாருதம்.
தமிழர்கள் சிங்கப்பூருக்கு எப்படி வந்தார்கள், சிங்கப்பூர் தேசிய இனங்களில் தமிழர்களும் இணைந்து, தமிழ் மொழி தேசிய மொழிகளில் ஒன்றாக எப்படி அங்கீகரிக்கப்பட்டது போன்ற வரலாற்று உண்மைகளின் பின்னணியில், நாராயண பிள்ளை, முன்ஷி அப்துல்லா, ராஃபில்ஸ் போன்ற நிஜ கதாபாத்திரங்களை வைத்து புனையப்பட்ட கற்பனை கதை இது.
கதைக்களம்
1820-களில், ஆங்கிலேயர்கள் தமிழர்களின் நெசவுத் தொழிலை சீரழித்து, இங்கிலாந்தில் இருந்து துணியை இறக்குமதி செய்ய முயன்றதால், பாரம்பரிய நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இங்கிருந்து கதை தொடங்குகிறது.
சுதந்திரப் போராட்டக் காலத்தில், ஆங்கிலேயர்கள் தமிழர்களை மனிதர்களாகக் கருதாமல், விலங்குகளைப் போல கப்பல்களில் ஏற்றி, அன்றைய மலாயாவுக்கு (இன்றைய மலேசியா) கூட்டங் கூட்டமாக அனுப்பினர். அங்குள்ள மழை காடுகளை திருத்தி ரப்பர் தோட்டங்களை உருவாக்க நம் தமிழர்களின் உழைப்பும் வேர்வையும் ரத்தம்மும் கலந்த நிலங்கள் உருவானது.
இப்படத்தில் தென்னரசு, செங்கோடன், மதுவதனி, வேலு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இவர்களுடன் சிங்கப்பூர் நடிகர்களான புரவலன், லிங்கம், நிஷா குமார், மலேசிய நடிகர்களான கோவிந்த் சிங், வினோசன், மற்றும் தமிழக நடிகர்களான மோகன் ராம், மதுமிதா, காதல் சுகுமார் ஆகியோரும் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழ் நடிகை கோகிலா மற்றும் "கிழக்குச் சீமையிலே" புகழ் அஸ்வினி ஆகியோர் அம்மா கதாபாத்திரங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாராயண பிள்ளை என்ற உண்மையான கதாபாத்திரத்தில் ப்ருத்திவி ராஜ் மற்றும் முன்ஷி அப்துல்லா கதாபாத்திரத்தில் கோவிந்த் சிங் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப அம்சங்கள்
இந்தத் தொடரின் செட் வடிவமைப்புகள் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. உடை வடிவமைப்பு உலகக்தரத்தில் உள்ளது,
1820-களின் தமிழகத்தை நம் கண்முன்னே நிறுத்தியுள்ளனர். ஒலி-ஒளி அமைப்பு, பின்னணி இசை அனைத்தும் அந்த காலத்துக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன.
இயக்குனர் முகமது அலி இப்படி ஒரு கதையை எழுதி இயக்கியதற்கு சிறப்புப் பாராட்டுகள் தேவை.
இந்தத் தொடர் இந்தியா, மலேசியா, இந்தோனேசியா எனப் பல நாடுகளின் கடல்களைக் கடந்து படமாக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான நெடுந்தொடர். சிங்கப்பூர் தேசிய தொலைக்காட்சியில் வாரம் தோறும் ஒளிபரப்பப்படுகிறது.
தமிழக மக்கள் இதை YouTube-லும் கண்டுகளிக்கலாம். சண்டமாருதம் ஒரு முக்கியமான வரலாற்று ஆவணம்.
- இந்தி நடிகைகளான வாணி கபூர், சர்வீன் சாவ்லா மற்றும் ஸ்ரீயா பில்கானகார் இணைந்து நடித்துள்ள வெப் தொடர் மண்டலா மர்டர்ஸ்.
- இத்தொடரை YRF எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தி நடிகைகளான வாணி கபூர், சர்வீன் சாவ்லா மற்றும் ஸ்ரீயா பில்கானகார் இணைந்து நடித்துள்ள வெப் தொடர் மண்டலா மர்டர்ஸ். இத்தொடரை YRF எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரிக்க கோபி புத்ரன் இயக்கியுள்ளார். தொடர் வரும் ஜூலை 25 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இதனை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. தொடரில் ரகுபிர் யாதவ், குல்லாக் புகழ் வைபஜ் ராஜ் குப்தா மற்றும் ஜமீல் கான் நடித்துள்ளனர்.
இது ஒரு திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
- இவர் இயக்கி இருக்கும் வெப் தொடரான ஹீரமண்டி : தி டயமண்ட் பசார் நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
- பீரியட் டிராமாக்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி
ராஜா காலக்கட்டத்து கதைகள் எனப்படும் பீரியட் டிராமாக்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் இயக்கும் கதையின் கண்ணோட்டம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். அதற்கு சாட்சியான படங்கள் பஜிராவ் மஸ்தானி, பத்மாவத். இவர் இயக்கும் எல்லாப்படங்களிலும் ஒரு பிரமாண்ட நடனப் பாடல் காட்சி இடம் பெற்றிருக்கும்.
இவர் இயக்கிய கங்குபாய் கத்தியவடி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்க்கை பயணத்தை மிகவும் உணர்ச்சிகரமாக எடுத்து இருப்பார். இத்திரைப்படம் தேசிய விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு இவரே இசையமைக்கவும் செய்து இருந்தார்.
அடுத்ததாக இவர் இயக்கி இருக்கும் வெப் தொடரான ஹீரமண்டி : தி டயமண்ட் பசார் நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி ஓடிடித் தளத்திற்காக இயக்குவது இதுவே முதல்முறை. மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த சீரிஸ் மே 1 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.
சோனாக்சி சின்ஹா, மனிஷா கொய்ராலா, ஷர்மின், அதிதி ராவ், ரிச்சா சாதா, சஞ்சீதா ஷேக் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.' சுதந்திரம் பெற ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய 1940களில் நகரும் இக்கதை, லாஹோரில் இருக்கும் ஹீரமண்டியின் தவைஃப்களை மற்றும் பாலியல் தொழிலாலிகளை மையப்படுத்தியுள்ளது. தவைஃப்கள் என்பவர்கள், ஆடல், பாடலில் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'ஒருநாள் கூத்து' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நிவேதா பெத்துராஜ்.
- சமீபத்தில் நிவேதா பெத்துராஜ், போலீசாரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியானது.
'ஒருநாள் கூத்து' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நிவேதா பெத்துராஜ். 'டிக் டிக் டிக்', 'திமிரு பிடிச்சவன்', 'சங்கத்தமிழன்', 'பொன் மாணிக்கவேல்', 'பார்ட்டி' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பல தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பாகவும் பேசப்பட்டார்.
சமீபத்தில் நிவேதா பெத்துராஜ், போலீசாரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியானது. அதில், போலீசார் நிவேதா பெத்துராஜின் காரை சோதனையிட வேண்டும் என கேட்க, அதற்கு அவர் அனுமதி மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
நிவேதா பெத்துராஜ் போலீசாரிடம் மாட்டிக்கொண்டு விட்டாரா? காரை சோதனையிட ஏன் அனுமதிக்கவில்லை? காருக்குள் அப்படி என்ன வைத்திருக்கிறார்? என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்தநிலையில், அந்த வீடியோ பற்றிய உண்மை வெளியாகி இருக்கிறது. அது 'பருவு' என்ற வெப் தொடருக்காக எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரியவந்துள்ளது. இதனால் அத்தனையும் நடிப்பா? என ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
பருவு வெப் தொடரில் பவன் சதினேனி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இந்த தொடரை சித்தார்த் நாயுடு எழுதி இயக்கியுள்ளார். இத்தொடர் வரும் ஜூன் 14 ஆம் தேதி Zee 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த தொடரை சிரஞ்சீவி மகளான சுஷ்மிதா கொனிடெலா கோல்ட் பாக்ஸ் எண்டர்டெயின்மண்ட் சார்பில் தயாரித்துள்ளார்.
ஆணவ படுகொலையை மையமாக எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொடரின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. நிவேதா பெத்துராஜும் அவரது கணவனான பவன் சதினேனி எதிர்பாராத விதமாக ஒரு கொலையை செய்கின்றனர். கொலை செய்த நபரின் உடலை காருக்கும் மறைத்து வைத்து அதை எப்படி யாருக்கும் தெரியாமல் மறைக்க பெரும் முயற்சிகளை எடுப்பது போன்ற காட்சிகள் டிரைலரில் அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராஜா காலக்கட்டத்து கதைகள் எனப்படும் பீரியட் டிராமாக்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி.
- இந்த தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாகியதில் இருந்து பலரும் அதிகமாக பார்க்கப்பட்ட வெப் சீரிஸாக ஹீரமண்டி தொடர் இடம் பெற்றுள்ளது.
ராஜா காலக்கட்டத்து கதைகள் எனப்படும் பீரியட் டிராமாக்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் இயக்கும் கதையின் விஷ்வல்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். அதற்கு சாட்சியான படங்கள் பஜிராவ் மஸ்தானி, பத்மாவத்.
இவர் இயக்கிய கங்குபாய் கத்தியவடி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக இவர் இயக்கி இருக்கும் வெப் தொடரான ஹீரமண்டி : தி டயமண்ட் பசார் நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் மே 1 ஆம் தேதி வெளியாகியது. சஞ்சய் லீலா பன்சாலி ஓடிடித் தளத்திற்காக இயக்குவது இதுவே முதல்முறை. மிகப் பெரிய பொருட்செலவில் இந்த நெப் சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது. சீரிஸ் வெளியாகி மக்களிடையே நல்லம் வரவேற்பை பெற்றது.
சோனாக்சி சின்ஹா, மனிஷா கொய்ராலா, ஷர்மின், அதிதி ராவ், ரிச்சா சாதா, சஞ்சீதா ஷேக் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.' சுதந்திரம் பெற ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய 1940களில் நகரும் இக்கதை, லாஹோரில் இருக்கும் ஹீரமண்டியின் தவைஃப்களை மற்றும் பாலியல் தொழிலாலிகளை மையப்படுத்தியுள்ளது. தவைஃப்கள் என்பவர்கள், ஆடல், பாடலில் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாகியதில் இருந்து பலரும் அதிகமாக பார்க்கப்பட்ட வெப் சீரிஸாக ஹீரமண்டி தொடர் இடம் பெற்றுள்ளது. 43 நாடுகளில் ஹீரமண்டி தொடர் அதிகமாக மக்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து ஹீரமண்டி சீசன் -2 வை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவுள்ளார். லாஹுரில் இருந்து வெளியேறிய பெண் திரைத்துறை உலகத்திற்கு வருகிறாள். லாஹூர் பிரிவினைக்கு பிறகு பஸாரில் உள்ள பெரும்பாலான பெண்கள் மும்பை மற்றும் கொல்கத்தா திரைத்துறைக்குதான் வந்தடந்தனர், இங்கு நவாபுகளுக்கான ஆடிய பெண்கள் திரைத்துறையில் தயாரிப்பாளர்களுக்காக ஆடினார்கள் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை அதனால் அதை மையமாக வைத்து ஹீரமண்டி சீசன் 2 வை இயக்கவுள்ளதாக சஞ்சய் கூறியுள்ளார். இதனால் ஹீரமண்டி தொடரின் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கலைஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு ஆசை.
- படமாக எடுப்பதை விட வெப் தொடராக எடுத்தால் சரியாக இருக்கும்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜீவா. ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெகன் மோகன் ரெட்டியாக நடித்திருக்கிறார்.
இந்நிலையில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் கலைஞர் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது. கண்காட்சியை நடிகர் ஜீவா பார்வையிட்டார். தொடர்ந்து நடிகர் ஜீவா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கலைஞரை பற்றி சினிமாவில் நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். கண்காட்சியை பார்க்கும் போது சினிமாவை தாண்டி முதல்-அமைச்சராக அவர் செய்துள்ளதை கண்டு வியந்து போனேன்.
கலைஞர் வரலாறு படமாக்கப்பட்டால் கலைஞர் கதாபாத்திரத்தில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜீவா, "நிச்சயமாக அந்த படத்தில் நடிப்பது எனக்கு பெருமை. கலைஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு ஆசை. கலைஞர் வரலாற்றை படமாக எடுப்பதை விட வெப் தொடராக எடுத்தால் சரியாக இருக்கும். அதை பா.விஜய் இயக்குவார் என நினைக்கிறேன்" என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2008 ஆம் ஆண்டு கரன் அனுஷ்மான், குர்மீத் சிங் இயக்கத்தில் வெளிவந்தது மிர்சாபூர் வெப் தொடர்.
- வெப் சீரிஸான மிர்சாபூர்' தொடரின் 3 ஆவது சீசன் வரும் ஜூலை 5-ம் தேதி வெளியாக உள்ளது.
2008 ஆம் ஆண்டு கரன் அனுஷ்மான், குர்மீத் சிங் இயக்கத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான பாலிவுட் வெப் தொடரான 'மிர்சாபூர்' மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதில், பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல், ஸ்வேதா திரிபாதி ஷர்மா, ரசிகா துகல், விஜய் வர்மா, இஷா தல்வார், அஞ்சும் ஷர்மா, ராஜேஷ் தைலாங், ஷீபா சதா, மேக்னா மாலிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து
2020 ஆம் ஆண்டு வெளியான இந்த தொடரின் 2-வது சீசனும் மக்களிடையே வரவேற்பை பெற்று அடுத்த பாகத்திற்கு மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
பாலிவுட் வெப் சீரிஸான மிர்சாபூர்' தொடரின் 3 ஆவது சீசன் வரும் ஜூலை 5-ம் தேதி வெளியாகும் என அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் சில நாட்களுக்கு முன் அறிவித்து இருந்தது. இந்நிலையில் டிரைலர் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த சீசன் 3 மீது ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- முன்னணி நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்கள்.
- வெப் தொடருக்கு ரக்தபீஜ் என்று பெயர் வைத்துள்ளனர்.
முன்னணி நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்கள். சமந்தாவும் பேமிலிமேன் 2, சிட்டாடல்: ஹனி பன்னி ஆகிய இந்தி வெப் தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது இன்னொரு வெப் தொடரில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த தொடரில் ஆதித்ய ராய்கபூர் நாயகனாக நடிக்கிறார். ராஜ், டி.கே ஆகியோர் டைரக்டு செய்கிறார்கள். தொடருக்கு ரக்தபீஜ் என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்த தொடருக்காக நடிகர்-நடிகைகள் படப்பிடிப்புக்கு முன்பே கதாபாத்திரங்களை மெருகேற்ற நடிப்பு பயிற்சி எடுக்க உள்ளனர்.
இயக்குனர்கள் ராஜ், டி.கே ஆகியோர் தற்போது பேமிலி மேன் 3-ம் பாகத்தை எடுத்து வருகிறார்கள். அது முடிந்ததும் ஆகஸ்டு மாதம் சமந்தா, ஆதித்ய ராய் கபூர் நடிக்கும் வெப் தொடருக்கான படப்பிடிப்பு தொடங்கும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2016 ஆம் ஆண்டு மமூட்டி நடிப்பில் வெளிவந்த கசாபா திரைப்படத்தை நித்தின் ரென்ஜி பானிக்கர் இயக்கினார்.
- நாகேந்திரன்ஸ் ஹனிமூன் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு மமூட்டி நடிப்பில் வெளிவந்த கசாபா திரைப்படத்தை நித்தின் ரென்ஜி பானிக்கர் இயக்கினார். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
அதற்கடுத்து சுரேஷ் கோபி மற்றும் ரெஞ்சி பானிக்கர் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான காவல் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன் ரீதியாகவும் நல்ல பாராட்டை பெற்றது.
தற்பொழுது அடுத்ததாக நித்தின் , நாகேந்திரன்ஸ் ஹனிமூன் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இத்தொடரில் சூரஜ் வெஞ்சாரமூடு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் கிரேஸ் ஆண்டனி, கனி கஸ்தூரி, ஷ்வேதா மேனன், அல்ஃபி பஞ்சிகரன் மற்றும் நிரஞ்சனா அனூப் ஆகியோர் நடித்துள்ளனர்.
வெப் தொடர் டிஸ்னி பிளாஸ் ஹாட்ஸ்டாரில் வரும் ஜூலை 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் இன்று ஜூலை 6 வெளியானது.
வேலை இல்லாத நாகேந்திரன் வெவ்வேறு பெயர்களில் 5 பெண்களை திருமணம் செய்கிறார். இவர் எதற்காக இப்படியெல்லாம் செய்கிறார் என்பதை டிரைலர் காட்சிகள் வெளிப்படுத்தவில்லை. முற்றிலும் ஒரு நகைச்சுவை தொடராக நித்தின் இதை இயக்கியுள்ளார். தொடரின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இத்தொடர், மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மராத்தி, பெங்காலி மொழிகளில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ் மற்றும் தெலுங்கு முன்னணி நட்சத்திர கதாநாயகியாக இருப்பவர் நடிகை திரிஷா
- தக் லைஃப் , விடா முயற்சி , கோட் ஆகிய டாப் ஹீரோ திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு முன்னணி நட்சத்திர கதாநாயகியாக இருப்பவர் நடிகை திரிஷா. தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கடந்த 22 வருடங்களாக தக்க வைத்துள்ளார் என்பது பெருமைக்குறியது.
கடந்தாண்டு வெளியான லியோ மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் திரிஷா, இந்த இரண்டு திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெற்றது.
தற்பொழுது தக் லைஃப் , விடா முயற்சி , கோட் ஆகிய டாப் ஹீரோ திரைப்படங்களில் தற்பொழுது நடித்து வருகிறார். இந்நிலையில் திரிஷா நடித்து இருக்கும் பிருந்தா எனும் வெப் தொடர் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
திரிஷா ஓடிடி தொடரில் நடிப்பது இதுவே முதல்முறை, தொடர்ரின் டீசர் தற்பொழுது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இத்தொடரை சூர்யா வங்களா இயக்கியுள்ளார். இது ஓடிடி தளமான சோனி லைவில் வெளியாகவுள்ளது.
சஸ்பன்ஸ் திரில்லர் கதைக்களத்துடன் அமைந்திருக்கும் இக்கதையில் இந்திரஜித் சுகுமாரன், ஜெய பிரகாஷ், ஆமானி, ரவிந்திர விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷக்திகாந்த் கார்த்திக் இசை அமைத்துள்ளார். இத்தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி மற்றும் பெங்காலி மொழிகளில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமன்னா நடித்த அரண்மனை-4 படம் பெரிய வெற்றியை பெற்று ரூ.100 கோடி வசூலையும் குவித்தது.
- லஸ்ட் ஸ்டோரீஸ்-2 படத்தின் விருந்தில் தமன்னாவிடம் காதலை கேட்டேன்.
தமிழ், இந்தி, தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தமன்னா. சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா நடித்த அரண்மனை-4 படம் பெரிய வெற்றியை பெற்று ரூ.100 கோடி வசூலையும் குவித்தது.
தமன்னா லஸ்ட் ஸ்டோரீஸ்-2 என்ற வெப் தொடரில் நடித்த போது சக நடிகரான விஜய்வர்மாவுடன் காதல் உருவானது. இந்த தொடரில் படுக்கையறை காட்சிகளில் இருவரும் நெருக்கமாக நடித்திருந்தனர்.

தொடர்ந்து தமன்னாவும், விஜய் வர்மாகவும் பல்வேறு இடங்களில் டேட்டிங் செய்து வந்த நிலையில் கடந்த மாதம் தங்கள் காதலை உறுதி செய்தனர். தமன்னாவுடனான காதல் பற்றி விஜய் வர்மா கூறியதாவது:-

காமக்கதைகளுக்கு பிறகு எங்கள் உறவு தொடங்கியது. முதலில் நாங்கள் சக நடிகராக சந்தித்தோம். லஸ்ட் ஸ்டோரீஸ்-2 படத்தின் விருந்தில் தமன்னாவிடம் காதலை கேட்டேன். 2005-ம் ஆண்டு நான் ஐதராபாத்தில் இருந்து வெளியேறி மும்பை வந்தேன். தமன்னா மும்பையில் இருந்து ஐதராபாத் வந்தார். ஐதராபாத்தில் நிலை நிறுத்திய மும்பை பெண். நான் ஐதராபாத் பையன். தமன்னா தமிழ், தெலுங்கு சரளமாக பேசுகிறார் என்றார். திருமணம் குறித்து தமன்னா கூறும்போது, "திருமணம் ஒரு பெரிய பொறுப்பு. அது ஒரு விருந்து அல்ல" என கூறினார்.






