என் மலர்
நீங்கள் தேடியது "வெப் தொடர்"
- பல OTT பிளாட்ஃபார்ம்கள் பல்வேறு வகையான வெப் தொடர்களை வழங்கி, ரசிகர்களை கட்டிப்போட்டன.
- பல ஜானர்களில் வெளியான வெப் தொடர்கள் சுவாரசியமான கதைகளால் பிரபலமடைந்தன.
2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமா உலகில் ஓடிடி தளங்களின் ஆதிக்கம் மேலும் வலுப்பெற்றது. அமேசான் பிரைம், ஜியோ ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ், ஆஹா, சோனி லிவ் போன்ற பிளாட்ஃபார்ம்கள் பல்வேறு வகையான வெப் தொடர்களை வழங்கி, ரசிகர்களை கட்டிப்போட்டன.
கிரைம் திரில்லர், ரொமான்டிக் டிராமா, காமெடி, ஸ்போர்ட்ஸ் என பல ஜானர்களில் வெளியான தொடர்கள், சிறந்த நடிப்பு மற்றும் சுவாரசியமான கதைகளால் பிரபலமடைந்தன.
இந்த ரீவைண்டில், 2025இன் டாப் 10 தமிழ் ஓடிடி வெப் தொடர்களைப் பார்ப்போம். இவை ரசிகர்களின் பாராட்டுகளையும், விமர்சகர்களின் புகழையும் பெற்றவை.
இந்த லிஸ்டில் சூழல் 2, ஆபிஸ், ஓம் காளி ஜெய் காளி, மதுரை பையனும் சென்னை பொண்ணும், ஹார்ட் பீட், நடு சென்டர், வேடுவன், குற்றம் புரிந்தவன், போலீஸ் போலீஸ், குட் வைஃப் ஆகியவை அடங்கும்.
இவை அனைத்தும் உணர்ச்சி, சஸ்பென்ஸ், ஹ்யூமர் கலந்து ரசிகர்களை ஈர்த்தன. வாருங்கள், ஒவ்வொன்றையும் விரிவாகப் பார்ப்போம்!

1. சூழல்: தி வோர்டெக்ஸ் சீசன் 2:
2022 ஆம் ஆண்டு வெளியான சூழல் வெப் தொடர் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அத்தொடரின் இரண்டாவது சீசன் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.
அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இந்த தொடர், மர்மமான ஊரில் நிகழும் கிரைம், உணர்ச்சி மோதல்களை விவரிக்கிறது. இப்படத்தின் கதை, ரகசியங்கள், சஸ்பென்ஸ் கலந்து ரசிகர்களை பதட்டத்தில் ஆழ்த்தியது. கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆர். பார்த்திபன் போன்றோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர். இந்த தொடர் ஓடிடி பிரியர்களை அதிகம் ஈர்த்தது.

2. ஓம் காளி ஜெய் காளி:
விமல், புகழ், கஞ்சா கருப்பு, பவானி ரெட்டி நடிப்பில், ஜெகநாத் இயக்கத்தில் ஓம் காளி ஜெய் காளி வெப் தொடர் வெளியானது.
ஜியோ ஹாட்ஸ்டாரில் மார்ச் 28ஆம் தேதி வெளியான இந்த தொடர், ரிவெஞ்ச் திரில்லர் ஜானரில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
3. ஆபிஸ்:
ஹாட்ஸ்டாரின் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடராக ஆபிஸ் வெளியானது. குரு லக்ஷ்மன், கவிதா பாரதி, ஷிவா அரவிந்த் உட்பட பல சின்னத்திரை பிரபலங்கள் இந்த தொடரில் நடித்துள்ளனர். பிராங்க்ஸ்டர் ராகுல் இயக்கத்தில் வெளியான இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

4. மதுரை பையனும் சென்னை பொண்ணும்:
ஆஹாவில் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியான இந்த தொடர், வேறுபட்ட உலகங்களில் இருந்து வரும் இருவரின் லவ் ஸ்டோரியை ஹார்ட்வார்மிங்காக சொல்கிறது.
கன்னா ரவி, ஏஞ்சலின், குரேஷி நடிப்பில், விக்னேஷ் பழனிவேல் இயக்கத்தில் வெளியான இத்தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.
5. ஹார்ட் பீட் சீசன் 2:
ஜியோ ஹாட்ஸ்டாரில் மே 22ஆம் தேதி ஹார்ட் பீட் சீசன் 2 வெளியானது. தீபா பாலு, அனுமோல், சாருகேஷ், அமித் பார்கவ், யோகலக்ஷ்மி நடிப்பில், தீபக் சுந்தர்ராஜன் மற்றும் அப்துல் கபீஸ் உருவாக்கத்தில் வெளியான இந்த தொடர் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

6. நடு சென்டர்:
ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான இந்த தொடர், ஸ்கூல் பாஸ்கெட்பால் டீம் உருவாக்கும் போராட்டத்தை சித்தரிக்கிறது. டீன் ஏஜ் பள்ளி மாணவர்களுக்கிடையே நடக்கும் கதைக்களம் ஓடிடியில் சினிமா ரசிகர்களை அதிகம் ஈர்த்தது.

7. வேடுவன்:
வேடுவன் வெப் தொடர் ஜீ5இல் வெளியானது. கண்ணா ரவி, ஜீவா ரவி, ரேகா நாயர் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன் வெப் தொடர் வெளியானது. கிரைம், சைக்காலஜிக்கல் தொடராக வெளியான வேடுவன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

8. குற்றம் புரிந்தவன்:
சோனி லிவ்வில் வெளியான குற்றம் புரிந்தவன் தொடர், சிறு ஊரில் சிறுமி காணாமல் போன பின்பு நடக்கும் ரகசியங்களை அவிழ்க்கும் கதையாகும். பசுபதி, விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டென்ஸ் நாரேடிவ், ட்விஸ்ட்கள், சஸ்பென்ஸ்ஃபுல், சைக்காலஜிக்கல் என கிரைம் ரசிகர்களுக்கு விருந்தாக இந்த தொடர் அமைந்தது.

9. போலீஸ் போலீஸ்:
ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான போலீஸ் போலீஸ் வெப் தொடர், போலீஸ் அதிகாரிகளின் வாழ்க்கை , கிரைம், கரப்ஷன். இன்வெஸ்டிகேஷன், ஹை-ஸ்டேக்ஸ் ஆக்ஷன் தொடராக அமைந்தது. இத்தொடர் ஓடிடி பிரியர்களால் அதிகம் லைக் செய்யப்பட்டு வருகிறது.

10. குட் வைஃப்:
பிரியாமணி நடிப்பில் வெளியான வெப் தொடர் 'குட் வைஃப்'. திரில்லர் கோர்ட் டிராமா கதைக்களத்தில் வெளிவந்த இந்த வெப் தொடரின் முதல் சீசன் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
முடிவுரை:
இந்த ஆண்டு, தமிழ் வெப் தொடர்களில் கிரைம் திரில்லர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தினாலும், ரொமான்ஸ், காமெடி, ஸ்போர்ட்ஸ் என அனைத்தும் ரசிகர்களை ஈர்த்தன. 2025 தமிழ் ஓடிடி உலகின் பொன்னான ஆண்டு. அடுத்த ஆண்டு என்ன கொண்டு வரும்? காத்திருப்போம்!
- சிறந்த கொரிய வெப் தொடர்களின் பட்டியலை உலகப் புகழ்பெற்ற TIME இதழ் வெளியிட்டுள்ளது.
- 'Way Back Love' 2 வெப் தொடர் 2 ஆம் இடம் பிடித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு கொரிய சினிமா ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாக அமைந்தது. இந்தாண்டு வெளியான சிறந்த கொரிய வெப் தொடர்களின் பட்டியலை உலகப் புகழ்பெற்ற TIME இதழ் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்த தொடர்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1. When Life Gives You Tangerines (Netflix)
நெட்ப்ளிக்சில் வெளியான When Life Gives You Tangerines வெப் தொடர் இந்த ஆண்டின் டாப் ஸ்பாட்டை பிடித்தது. 1960களில் இருந்து இன்று வரை நடக்கும் காலகட்டங்களில் கதாபாத்திரங்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் இந்த வெப் தொடர் எடுக்கப்பட்டுள்ளது.
ஜெஜு தீவில் ஏழ்மையான குழந்தையாக வளரும் Ae-sun-ன் போராட்டங்களையும், அவரது குழந்தைப் பருவ நண்பரும் கணவருமான Gwan-sik உள்ளிட்ட சாதாரண மனிதர்களின் வாழ்வையும் அழகாக நமக்கு கூறியது. இந்த வெப் தொடரின் காதல் காட்சிகள் ரசிகர்களை உருக வைத்தன.
நமது முந்தைய தலைமுறைகளுக்கு அஞ்சலி செலுத்தும் உணர்ச்சி நிறைந்த கதைசொல்லல் ரசிகர்களை உருக வைத்தது. இதன்மூலம் ஆண்டின் சிறந்த டிவி சீரிஸ் என்ற புகழ் பெற்றது!

2. Way Back Love (Viki)
இந்த பட்டியலின் இரண்டாவது இடத்தை, Kim Min-ha மற்றும் Gong Myung-ன் உணர்ச்சிகரமான நடிப்பில் வெளியான Way Back Love வெப் தொடர் பிடித்துள்ளது.
இந்த வெப் தொடர் நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்த முதல் காதலன் Kim Ram-woo-வின் நினைவில் தவிக்கும் Jeong Hee-wan-ன் கதையை விவரிக்கிறது.
வாழ்க்கை மீதான விருப்பத்தை இழந்த 24 வயதுப் பெண், சமூகத்திலிருந்து விலகி வாழ்கிறாள். அவள் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அவளுடைய பால்யவயது நண்பனும் முதல் காதலனுமான ராம் வூ அவளுக்கென்று ஒரு பக்கெட் லிஸ்ட் தயார் செய்து அவளை மகிழ்விப்பதே இந்த வெப் தொடராகும். ரசிகர்களை கண்கலங்க வாய்த்த இந்த வெப் தொடர் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

3. Squid Game Season 3 (Netflix)
இப்பட்டியலில் மூன்றாவது இடத்தில உலகப் புகழ் பெற்ற Squid Game-ன் இறுதி சீசன் இடம்பிடித்துள்ளது. ஏழைகளை வைத்து பணக்காரர்கள் விளையாடும் விளையாட்டு மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த வெப் தொடர் உலகளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. Squid Game-ன் இறுதி சீசன் நவீன முதலாளித்துவத்தின் கொடூரங்களை வெளிப்படுத்தியது.
பிரமிப்பூட்டும் ஆக்ஷன், சஸ்பென்ஸ், சமூக விமர்சனம் என அனைத்தும் கலந்து, இந்த ஃபிரான்சைஸ்க்கு சிறந்த முடிவை வழங்கியது.

4. Tempest (Hulu)
இப்பட்டியலில் நான்காவது இடத்தில், Jun Ji-hyun மற்றும் Gang Dong-won-ன் கெமிஸ்ட்ரி மிளிரும் ஸ்பை த்ரில்லரான Tempest இடம்பிடித்துள்ளது.
அரசியல் பிரச்சாரம், பன்னாட்டு சதி, ஜியோபாலிடிகல் டென்ஷன்கள் என கலந்த இந்தத் தொடர், முதிர்ச்சியான காதல் கதையை மையமாகக் கொண்டுள்ளது.
இப்படத்தின் ரொமான்ஸும்கெமிஸ்ட்ரியும் சிகர்களை கட்டிப்போட்டது. நவீன உலக பிரச்சினைகளை தைரியமாக தோட்ட இந்த வண தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

5. Our Unwritten Seoul (Netflix)
இப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் Park Bo-young இரட்டை வேடங்களில் நடித்த Our Unwritten Seoul வெப் தொடர் இடம் பிடித்துள்ளது.
ஒரே தோற்றம் கொண்ட இரட்டை சகோதரிகள் தங்களது வாழ்க்கையை மாற்றிக்கொள்கின்றனர். இதனால் ஏற்படும் பிரச்சனைகள் தான் இந்த வெப் தொடரின் கதை. இந்த தொடரின் கதை ரசிகர்களை நெகிழ வைத்தது.
முடிவுரை:
இந்த டாப் 5 தொடர்கள், 2025-ஐ K-டிராமாவின் தங்க ஆண்டாக மாற்றின. உணர்ச்சி, ஆக்ஷன், ரொமான்ஸ் என வெரைட்டி நிறைந்தவை. TIME-ன் பட்டியல் சொல்வது போல, இவை உலக சினிமாவின் சிறந்த உதாரணங்கள் ஆகும்.
- வெளியான முதல் மூன்று மாதங்களில் நெட்பிளிக்ஸில் 140 மில்லியன் பார்வைகளைப் பெற்றது.
- சக பள்ளி மாணவியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜேமி என்ற கதாபாத்திரத்தில் 15 வயதான இளம் நடிகர் ஓவன் கூப்பர் நடித்திருந்தார்.
ஸ்டீபன் கிரஹாம், ஜாக் தோரேன் இணைந்து இயக்கிய 'Adolescence' என்ற நெட்பிலிப்ஸ் தொடர் உலகம் முழுவதும் பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது.
இந்தத் தொடர், வெளியான முதல் மூன்று மாதங்களில் நெட்பிளிக்ஸில் 140 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. இதன் ஒவ்வொரு எபிசோடும் ஒரே தொடர்ச்சியான ஷாட்டில் படமாக்கப்பட்டது.
லண்டனில் நடக்கும் 'Adolescence' தொடர் கதைக்களத்தில் சக பள்ளி மாணவியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜேமி என்ற கதாபாத்திரத்தில் 15 வயதான இளம் நடிகர் ஓவன் கூப்பர் நடித்திருந்தார்.

இந்நிலையில் அவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற எம்மி விருதுகள் விழாவில் அவர் விருது வென்றுள்ளார். எம்மி விருது வரலாற்றில் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்ற இளைய நடிகர் என்ற சாதனையை ஓவன் கூப்பர் படைத்துள்ளார்.
திரைப்படங்களுக்கு ஆஸ்கார் போல தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு எம்மி விருதுகள் ஆகும்.
இந்த வருட எம்மி விழாவில், 'Adolescence' தொடர் பல முக்கிய விருதுகளை வென்றது.
சிறந்த தொடர், சிறந்த இயக்கம், சிறந்த எழுத்து, சிறந்த நடிகர் (ஸ்டீபன் கிரஹாம்) மற்றும் சிறந்த துணை நடிகை (எரின் டோஹெர்ட்டி) ஆகிய பிரிவுகளிலும் விருதுகளை அள்ளியது.
- Mediacorp சிங்கப்பூர் தேசிய தொலைக்காட்சி மற்றும் the media நிறுவனத்தின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள வரலாற்று நெடுந்தொடர் சண்டமாருதம்.
- தமிழர்கள் சிங்கப்பூருக்கு எப்படி வந்தார்கள், சிங்கப்பூர் தேசிய இனங்களில் தமிழர்களும் இணைந்து, தமிழ் மொழி தேசிய மொழிகளில் ஒன்றாக எப்படி அங்கீகரிக்கப்பட்டது
சிங்கப்பூரில் தமிழர்களின் வரலாற்றை மையமாகக் கொண்டு, Mediacorp சிங்கப்பூர் தேசிய தொலைக்காட்சி மற்றும் the media நிறுவனத்தின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள வரலாற்று நெடுந்தொடர் சண்டமாருதம்.
தமிழர்கள் சிங்கப்பூருக்கு எப்படி வந்தார்கள், சிங்கப்பூர் தேசிய இனங்களில் தமிழர்களும் இணைந்து, தமிழ் மொழி தேசிய மொழிகளில் ஒன்றாக எப்படி அங்கீகரிக்கப்பட்டது போன்ற வரலாற்று உண்மைகளின் பின்னணியில், நாராயண பிள்ளை, முன்ஷி அப்துல்லா, ராஃபில்ஸ் போன்ற நிஜ கதாபாத்திரங்களை வைத்து புனையப்பட்ட கற்பனை கதை இது.
கதைக்களம்
1820-களில், ஆங்கிலேயர்கள் தமிழர்களின் நெசவுத் தொழிலை சீரழித்து, இங்கிலாந்தில் இருந்து துணியை இறக்குமதி செய்ய முயன்றதால், பாரம்பரிய நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இங்கிருந்து கதை தொடங்குகிறது.
சுதந்திரப் போராட்டக் காலத்தில், ஆங்கிலேயர்கள் தமிழர்களை மனிதர்களாகக் கருதாமல், விலங்குகளைப் போல கப்பல்களில் ஏற்றி, அன்றைய மலாயாவுக்கு (இன்றைய மலேசியா) கூட்டங் கூட்டமாக அனுப்பினர். அங்குள்ள மழை காடுகளை திருத்தி ரப்பர் தோட்டங்களை உருவாக்க நம் தமிழர்களின் உழைப்பும் வேர்வையும் ரத்தம்மும் கலந்த நிலங்கள் உருவானது.
இப்படத்தில் தென்னரசு, செங்கோடன், மதுவதனி, வேலு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இவர்களுடன் சிங்கப்பூர் நடிகர்களான புரவலன், லிங்கம், நிஷா குமார், மலேசிய நடிகர்களான கோவிந்த் சிங், வினோசன், மற்றும் தமிழக நடிகர்களான மோகன் ராம், மதுமிதா, காதல் சுகுமார் ஆகியோரும் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழ் நடிகை கோகிலா மற்றும் "கிழக்குச் சீமையிலே" புகழ் அஸ்வினி ஆகியோர் அம்மா கதாபாத்திரங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாராயண பிள்ளை என்ற உண்மையான கதாபாத்திரத்தில் ப்ருத்திவி ராஜ் மற்றும் முன்ஷி அப்துல்லா கதாபாத்திரத்தில் கோவிந்த் சிங் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப அம்சங்கள்
இந்தத் தொடரின் செட் வடிவமைப்புகள் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. உடை வடிவமைப்பு உலகக்தரத்தில் உள்ளது,
1820-களின் தமிழகத்தை நம் கண்முன்னே நிறுத்தியுள்ளனர். ஒலி-ஒளி அமைப்பு, பின்னணி இசை அனைத்தும் அந்த காலத்துக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன.
இயக்குனர் முகமது அலி இப்படி ஒரு கதையை எழுதி இயக்கியதற்கு சிறப்புப் பாராட்டுகள் தேவை.
இந்தத் தொடர் இந்தியா, மலேசியா, இந்தோனேசியா எனப் பல நாடுகளின் கடல்களைக் கடந்து படமாக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான நெடுந்தொடர். சிங்கப்பூர் தேசிய தொலைக்காட்சியில் வாரம் தோறும் ஒளிபரப்பப்படுகிறது.
தமிழக மக்கள் இதை YouTube-லும் கண்டுகளிக்கலாம். சண்டமாருதம் ஒரு முக்கியமான வரலாற்று ஆவணம்.
- இந்தி நடிகைகளான வாணி கபூர், சர்வீன் சாவ்லா மற்றும் ஸ்ரீயா பில்கானகார் இணைந்து நடித்துள்ள வெப் தொடர் மண்டலா மர்டர்ஸ்.
- இத்தொடரை YRF எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தி நடிகைகளான வாணி கபூர், சர்வீன் சாவ்லா மற்றும் ஸ்ரீயா பில்கானகார் இணைந்து நடித்துள்ள வெப் தொடர் மண்டலா மர்டர்ஸ். இத்தொடரை YRF எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரிக்க கோபி புத்ரன் இயக்கியுள்ளார். தொடர் வரும் ஜூலை 25 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இதனை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. தொடரில் ரகுபிர் யாதவ், குல்லாக் புகழ் வைபஜ் ராஜ் குப்தா மற்றும் ஜமீல் கான் நடித்துள்ளனர்.
இது ஒரு திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
- இவர் இயக்கி இருக்கும் வெப் தொடரான ஹீரமண்டி : தி டயமண்ட் பசார் நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
- பீரியட் டிராமாக்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி
ராஜா காலக்கட்டத்து கதைகள் எனப்படும் பீரியட் டிராமாக்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் இயக்கும் கதையின் கண்ணோட்டம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். அதற்கு சாட்சியான படங்கள் பஜிராவ் மஸ்தானி, பத்மாவத். இவர் இயக்கும் எல்லாப்படங்களிலும் ஒரு பிரமாண்ட நடனப் பாடல் காட்சி இடம் பெற்றிருக்கும்.
இவர் இயக்கிய கங்குபாய் கத்தியவடி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்க்கை பயணத்தை மிகவும் உணர்ச்சிகரமாக எடுத்து இருப்பார். இத்திரைப்படம் தேசிய விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு இவரே இசையமைக்கவும் செய்து இருந்தார்.
அடுத்ததாக இவர் இயக்கி இருக்கும் வெப் தொடரான ஹீரமண்டி : தி டயமண்ட் பசார் நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி ஓடிடித் தளத்திற்காக இயக்குவது இதுவே முதல்முறை. மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த சீரிஸ் மே 1 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.
சோனாக்சி சின்ஹா, மனிஷா கொய்ராலா, ஷர்மின், அதிதி ராவ், ரிச்சா சாதா, சஞ்சீதா ஷேக் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.' சுதந்திரம் பெற ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய 1940களில் நகரும் இக்கதை, லாஹோரில் இருக்கும் ஹீரமண்டியின் தவைஃப்களை மற்றும் பாலியல் தொழிலாலிகளை மையப்படுத்தியுள்ளது. தவைஃப்கள் என்பவர்கள், ஆடல், பாடலில் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'ஒருநாள் கூத்து' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நிவேதா பெத்துராஜ்.
- சமீபத்தில் நிவேதா பெத்துராஜ், போலீசாரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியானது.
'ஒருநாள் கூத்து' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நிவேதா பெத்துராஜ். 'டிக் டிக் டிக்', 'திமிரு பிடிச்சவன்', 'சங்கத்தமிழன்', 'பொன் மாணிக்கவேல்', 'பார்ட்டி' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பல தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பாகவும் பேசப்பட்டார்.
சமீபத்தில் நிவேதா பெத்துராஜ், போலீசாரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியானது. அதில், போலீசார் நிவேதா பெத்துராஜின் காரை சோதனையிட வேண்டும் என கேட்க, அதற்கு அவர் அனுமதி மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
நிவேதா பெத்துராஜ் போலீசாரிடம் மாட்டிக்கொண்டு விட்டாரா? காரை சோதனையிட ஏன் அனுமதிக்கவில்லை? காருக்குள் அப்படி என்ன வைத்திருக்கிறார்? என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்தநிலையில், அந்த வீடியோ பற்றிய உண்மை வெளியாகி இருக்கிறது. அது 'பருவு' என்ற வெப் தொடருக்காக எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரியவந்துள்ளது. இதனால் அத்தனையும் நடிப்பா? என ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
பருவு வெப் தொடரில் பவன் சதினேனி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இந்த தொடரை சித்தார்த் நாயுடு எழுதி இயக்கியுள்ளார். இத்தொடர் வரும் ஜூன் 14 ஆம் தேதி Zee 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த தொடரை சிரஞ்சீவி மகளான சுஷ்மிதா கொனிடெலா கோல்ட் பாக்ஸ் எண்டர்டெயின்மண்ட் சார்பில் தயாரித்துள்ளார்.
ஆணவ படுகொலையை மையமாக எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொடரின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. நிவேதா பெத்துராஜும் அவரது கணவனான பவன் சதினேனி எதிர்பாராத விதமாக ஒரு கொலையை செய்கின்றனர். கொலை செய்த நபரின் உடலை காருக்கும் மறைத்து வைத்து அதை எப்படி யாருக்கும் தெரியாமல் மறைக்க பெரும் முயற்சிகளை எடுப்பது போன்ற காட்சிகள் டிரைலரில் அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராஜா காலக்கட்டத்து கதைகள் எனப்படும் பீரியட் டிராமாக்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி.
- இந்த தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாகியதில் இருந்து பலரும் அதிகமாக பார்க்கப்பட்ட வெப் சீரிஸாக ஹீரமண்டி தொடர் இடம் பெற்றுள்ளது.
ராஜா காலக்கட்டத்து கதைகள் எனப்படும் பீரியட் டிராமாக்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் இயக்கும் கதையின் விஷ்வல்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். அதற்கு சாட்சியான படங்கள் பஜிராவ் மஸ்தானி, பத்மாவத்.
இவர் இயக்கிய கங்குபாய் கத்தியவடி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக இவர் இயக்கி இருக்கும் வெப் தொடரான ஹீரமண்டி : தி டயமண்ட் பசார் நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் மே 1 ஆம் தேதி வெளியாகியது. சஞ்சய் லீலா பன்சாலி ஓடிடித் தளத்திற்காக இயக்குவது இதுவே முதல்முறை. மிகப் பெரிய பொருட்செலவில் இந்த நெப் சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது. சீரிஸ் வெளியாகி மக்களிடையே நல்லம் வரவேற்பை பெற்றது.
சோனாக்சி சின்ஹா, மனிஷா கொய்ராலா, ஷர்மின், அதிதி ராவ், ரிச்சா சாதா, சஞ்சீதா ஷேக் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.' சுதந்திரம் பெற ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய 1940களில் நகரும் இக்கதை, லாஹோரில் இருக்கும் ஹீரமண்டியின் தவைஃப்களை மற்றும் பாலியல் தொழிலாலிகளை மையப்படுத்தியுள்ளது. தவைஃப்கள் என்பவர்கள், ஆடல், பாடலில் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடர் நெட்பிளிக்ஸில் வெளியாகியதில் இருந்து பலரும் அதிகமாக பார்க்கப்பட்ட வெப் சீரிஸாக ஹீரமண்டி தொடர் இடம் பெற்றுள்ளது. 43 நாடுகளில் ஹீரமண்டி தொடர் அதிகமாக மக்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து ஹீரமண்டி சீசன் -2 வை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவுள்ளார். லாஹுரில் இருந்து வெளியேறிய பெண் திரைத்துறை உலகத்திற்கு வருகிறாள். லாஹூர் பிரிவினைக்கு பிறகு பஸாரில் உள்ள பெரும்பாலான பெண்கள் மும்பை மற்றும் கொல்கத்தா திரைத்துறைக்குதான் வந்தடந்தனர், இங்கு நவாபுகளுக்கான ஆடிய பெண்கள் திரைத்துறையில் தயாரிப்பாளர்களுக்காக ஆடினார்கள் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை அதனால் அதை மையமாக வைத்து ஹீரமண்டி சீசன் 2 வை இயக்கவுள்ளதாக சஞ்சய் கூறியுள்ளார். இதனால் ஹீரமண்டி தொடரின் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கலைஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு ஆசை.
- படமாக எடுப்பதை விட வெப் தொடராக எடுத்தால் சரியாக இருக்கும்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜீவா. ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெகன் மோகன் ரெட்டியாக நடித்திருக்கிறார்.
இந்நிலையில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் கலைஞர் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது. கண்காட்சியை நடிகர் ஜீவா பார்வையிட்டார். தொடர்ந்து நடிகர் ஜீவா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கலைஞரை பற்றி சினிமாவில் நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். கண்காட்சியை பார்க்கும் போது சினிமாவை தாண்டி முதல்-அமைச்சராக அவர் செய்துள்ளதை கண்டு வியந்து போனேன்.
கலைஞர் வரலாறு படமாக்கப்பட்டால் கலைஞர் கதாபாத்திரத்தில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜீவா, "நிச்சயமாக அந்த படத்தில் நடிப்பது எனக்கு பெருமை. கலைஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு ஆசை. கலைஞர் வரலாற்றை படமாக எடுப்பதை விட வெப் தொடராக எடுத்தால் சரியாக இருக்கும். அதை பா.விஜய் இயக்குவார் என நினைக்கிறேன்" என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2008 ஆம் ஆண்டு கரன் அனுஷ்மான், குர்மீத் சிங் இயக்கத்தில் வெளிவந்தது மிர்சாபூர் வெப் தொடர்.
- வெப் சீரிஸான மிர்சாபூர்' தொடரின் 3 ஆவது சீசன் வரும் ஜூலை 5-ம் தேதி வெளியாக உள்ளது.
2008 ஆம் ஆண்டு கரன் அனுஷ்மான், குர்மீத் சிங் இயக்கத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான பாலிவுட் வெப் தொடரான 'மிர்சாபூர்' மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதில், பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல், ஸ்வேதா திரிபாதி ஷர்மா, ரசிகா துகல், விஜய் வர்மா, இஷா தல்வார், அஞ்சும் ஷர்மா, ராஜேஷ் தைலாங், ஷீபா சதா, மேக்னா மாலிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து
2020 ஆம் ஆண்டு வெளியான இந்த தொடரின் 2-வது சீசனும் மக்களிடையே வரவேற்பை பெற்று அடுத்த பாகத்திற்கு மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
பாலிவுட் வெப் சீரிஸான மிர்சாபூர்' தொடரின் 3 ஆவது சீசன் வரும் ஜூலை 5-ம் தேதி வெளியாகும் என அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் சில நாட்களுக்கு முன் அறிவித்து இருந்தது. இந்நிலையில் டிரைலர் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த சீசன் 3 மீது ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- முன்னணி நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்கள்.
- வெப் தொடருக்கு ரக்தபீஜ் என்று பெயர் வைத்துள்ளனர்.
முன்னணி நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்கள். சமந்தாவும் பேமிலிமேன் 2, சிட்டாடல்: ஹனி பன்னி ஆகிய இந்தி வெப் தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது இன்னொரு வெப் தொடரில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த தொடரில் ஆதித்ய ராய்கபூர் நாயகனாக நடிக்கிறார். ராஜ், டி.கே ஆகியோர் டைரக்டு செய்கிறார்கள். தொடருக்கு ரக்தபீஜ் என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்த தொடருக்காக நடிகர்-நடிகைகள் படப்பிடிப்புக்கு முன்பே கதாபாத்திரங்களை மெருகேற்ற நடிப்பு பயிற்சி எடுக்க உள்ளனர்.
இயக்குனர்கள் ராஜ், டி.கே ஆகியோர் தற்போது பேமிலி மேன் 3-ம் பாகத்தை எடுத்து வருகிறார்கள். அது முடிந்ததும் ஆகஸ்டு மாதம் சமந்தா, ஆதித்ய ராய் கபூர் நடிக்கும் வெப் தொடருக்கான படப்பிடிப்பு தொடங்கும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2016 ஆம் ஆண்டு மமூட்டி நடிப்பில் வெளிவந்த கசாபா திரைப்படத்தை நித்தின் ரென்ஜி பானிக்கர் இயக்கினார்.
- நாகேந்திரன்ஸ் ஹனிமூன் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு மமூட்டி நடிப்பில் வெளிவந்த கசாபா திரைப்படத்தை நித்தின் ரென்ஜி பானிக்கர் இயக்கினார். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
அதற்கடுத்து சுரேஷ் கோபி மற்றும் ரெஞ்சி பானிக்கர் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான காவல் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன் ரீதியாகவும் நல்ல பாராட்டை பெற்றது.
தற்பொழுது அடுத்ததாக நித்தின் , நாகேந்திரன்ஸ் ஹனிமூன் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இத்தொடரில் சூரஜ் வெஞ்சாரமூடு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் கிரேஸ் ஆண்டனி, கனி கஸ்தூரி, ஷ்வேதா மேனன், அல்ஃபி பஞ்சிகரன் மற்றும் நிரஞ்சனா அனூப் ஆகியோர் நடித்துள்ளனர்.
வெப் தொடர் டிஸ்னி பிளாஸ் ஹாட்ஸ்டாரில் வரும் ஜூலை 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் இன்று ஜூலை 6 வெளியானது.
வேலை இல்லாத நாகேந்திரன் வெவ்வேறு பெயர்களில் 5 பெண்களை திருமணம் செய்கிறார். இவர் எதற்காக இப்படியெல்லாம் செய்கிறார் என்பதை டிரைலர் காட்சிகள் வெளிப்படுத்தவில்லை. முற்றிலும் ஒரு நகைச்சுவை தொடராக நித்தின் இதை இயக்கியுள்ளார். தொடரின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இத்தொடர், மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மராத்தி, பெங்காலி மொழிகளில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






