search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pa Vijay"

    கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கையில் மிகுந்த சிரமங்களுக்கிடையே முதல் முறையாக பிரபுதேவா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.
    கொல்லிமலைப் பகுதியில் அதிகம் இதுவரை சினிமா படப்பிடிப்புகள் நடந்ததில்லை. அதிலும் குறிப்பாக கொல்லிமலையின் சிறப்புமிக்க, பிரசித்தி பெற்ற இடம் என்றால் அது ஆகாய கங்கை என்கிற 1500 அடி உயரமுள்ள அருவியாகும்.

    சாதாரணமாக சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கே மிகவும் சிரமப்பட்டுத் தான் இந்த அருவிக்கரையை அடைய முடியும். மலையிலிருந்து எங்கிருந்து பார்த்தாலும் இந்த அருவி கண்களுக்குப் புலப்படாது. மிக ரகசியமாக 1250 செங்குத்தான படிகளில் வலிகளை பொருட்படுத்தாமல் இறங்கினால் மாத்திரமே கடைசிப் படி இறங்கி திரும்பினால் அருவி முழுத் தோற்றம் கண்களுக்குத் தெரியும் வகையில் இயற்கையாகவே அமைந்துள்ள ரகசிய பிரமாண்டமாகும் இந்த ஆகாய கங்கை அருவி. 

    கொல்லிமலை பகுதி

    இந்த ஆகாய கங்கையில் முதல்முறையாக எம்.எஸ்.மூவிஸ் கே.முருகன் தயாரிப்பில், பா.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும்  புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு முறையான அனுமதி பெற்று நடந்துள்ளது. ஆகாயகங்கை அருவிக்கரைக்கு செல்வதற்கு படப்பிடிப்பு குழுவினர் அதிகாலை சுமார் 5 மணியில் இருந்தே டோலி மூலமும் உள்ளூர் மக்கள் உதவிகளைப் பெற்றும் நடிகர், நடிகைகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கீழே இறங்க ஆரம்பித்து, பல கற்பாறைகள், மழை, காற்று இவற்றையெல்லாம் சமாளித்து தொழில்நுட்ப கருவிகளை மிகவும் சிரமப்பட்டு சுமந்துகொண்டு அருவிக்கரையை பதினொரு மணிக்கு அடைந்துள்ளனர். அதன் பிறகு ஏராளமான வலிகளையும் சிரமங்களையும் தாங்கி முதல்முறையாக ஆகாயகங்கை பகுதியில் பிரபுதேவா, மகிமா நம்பியார் உட்பட பல நடிகர்கள் மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளனர்.
    சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை மையப்படுத்தி பா.விஜய் இயக்கி, நடித்திருக்கும் `ஆருத்ரா' படத்தின் விமர்சனம். #AaruthraReview #PaVijay
    ஞானசம்பந்தம், பா.விஜய் இணைந்து சிற்பம் உள்ளிட்ட கலைப்பொருட்களை செய்து விற்கும் கடை வைத்திருக்கிறார்கள். அத்துடன் சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். 

    இதற்கிடையே சமூகத்தில் சில பெரிய மனிதர்கள் கடத்தப்பட்டு வேறு மாநிலங்களில் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். மர்மமான முறையில் நடக்கும் இந்த கொலைகள் குறித்து விசாரிக்க தனியார் துப்பறியும் நிபுணரான பாக்யராஜ், காவல்துறையால் நியமிக்கப்படுகிறார். அவரது உதவியாளராக மொட்டை ராஜேந்திரன் வருகிறார். விசாரணையில் அவரது வீட்டு மாடியில் குடியிருக்கும் பா.விஜய் தான் குற்றவாளி என்பது தெரிய வருகிறது. அவரை கைது செய்து விசாரிக்கையில் அதற்கான காரணங்கள் தெரிய வருகிறது. 



    அதன்படி பா.விஜய் ஏன் குற்றவாளி ஆனார்? சமூகத்தின் முக்கிய மனிதர்களை கொலை செய்வது ஏன்? அவர் குடும்பம் என்ன ஆனது? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை. 

    சிறுமிகளை சீரழிக்கும் சில மனித மிருகங்களை அழிக்க கதாநாயகன் எடுக்கும் அவதாரமே ஆருத்ரா. பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கும் அவர்களை பாலியல் கொடுமைக்கு ஆளாக்குபவர்களுக்கும் தர வேண்டிய தண்டனை என்ன? என்பதை கூறியிருக்கிறார் இயக்குனர் பா.விஜய். பா.விஜய் படத்தை இயக்கியதோடு கதாநாயகனாகவும் தயாரிப்பாளராகவும் ஒட்டுமொத்த படத்தையும் தோளில் தாங்கி இருக்கிறார். நடிப்பில் எந்த குறையும் வைக்கவில்லை. குடும்பத்தின் மீதும், தங்கை மீதும் பாசம் காட்டும்போதும், சிவாவாக வில்லன்களிடம் ஆவேசம் காட்டும்போதும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 



    ரொமான்ஸ் காட்சி இல்லாமல் திரைக்கதை அமைத்தது சாமர்த்தியத்தை காட்டுகிறது. இருப்பினும் திரைக்கதை, படத்தொகுப்பில்  கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். கதையை ஆங்காங்கே பாதியில் விட்டுச் செல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. தக்‌ஷிதா, சஞ்சனா சிங், சோனி சரிஷ்டா என்று 3 கதாநாயகிகள் இருந்தாலும், யாருக்குமே பெரிய வேலை இல்லை. சிறுமிகளுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிரான கதையில் பெண்கள் முகம் சுளிக்கும் சில வசனங்களை தவிர்த்து இருக்கலாம். முதல் பாதி கிரைம் திரில்லராகவும் இரண்டாம் பாதி குடும்ப படமாகவும் இருக்கிறது. அழுத்தமான வசனங்கள் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கின்றன.



    தனியார் துப்பறியும் நிபுணராக பாக்கியராஜ் தனது பாணியில் கதையை கலகலப்பாக நகர்த்துவதோடு, முக்கிய திருப்பத்துக்கும் உதவுகிறார். எஸ்.ஏ.சந்திரசேகர், மீரா கிருஷ்ணன், ஞானசம்பந்தன் என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.

    வித்யாசாகர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பி.எல்.சஞ்சய் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. 

    மொத்தத்தில் `ஆருத்ரா' தேவையான தரிசனமே. #AaruthraReview #PaVijay

    பா.விஜய் தாநாயகனாக நடித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கும் ‘ஆருத்ரா’ படத்தின் முன்னோட்டம். #Aaruthra
    வில் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் படம் ‘ஆருத்ரா’. இதில் கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக நடித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். மும்பை மாடல் அழகி திஷிதா, கொல்கத்தாவை சேர்ந்த மோகல், ஐதராபாத்தை சேர்ந்த சோனி ஆகியோர் கதாநாயகிகளாக அறிமுகமாகிறார்கள். ஒளிப்பதிவு- பி.எல். சஞ்சய், இசை- வித்யாசாகர், எடிட்டிங்- ஷான் லோகேஷ், கலை-ராம்பிரசாத், ஸ்டண்ட்-கணேஷ், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம்- பா.விஜய்.

    படம் பற்றி அவரிடம் கேட்ட போது....

    ‘‘ஸ்ட்ராபெரி’ படத்தை தொடர்ந்து எனது இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஆருத்ரா’. நான், தொன்மையான பொருட்களை விற்பனை செய்யும் நிறுவன ஊழியராக இதில் நடித்திருக்கிறேன். எனது தந்தையாக எஸ்.ஏ. சந்திர சேகரன் நடிக்கிறார். கே.பாக்யராஜும், மொட்டை ராஜேந்திரனும் துப்பறியும் நிபுணர்களாக நடித்திருக்கிறார்கள்.

    இதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்க வேண்டும்? என்ற முக்கிய செய்தியை சொல்லி இருக்கிறோம்.

    ‘ஆருத்ரா’ திரைப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாக இருக்கிறது.
    நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் உருவாகி இருக்கிறது என்று பாடலாசிரியர் பா.விஜய், பட விழாவில் கூறியிருக்கிறார். #Aaruthra #PaVijay
    பாடலாசிரியர் பா.விஜய் எழுதி இயக்கி, தயாரித்து நடித்துள்ள படம் ‘ஆருத்ரா’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பாக்யராஜ், பேராசிரியர் ஞான சம்பந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    நிகழ்ச்சியில் பேசிய பா.விஜய், “இந்தப் படத்திற்கு சென்சார் வாங்குவதற்குள் திகில் அனுபவமாகி விட்டது. முதலில் படத்தைப் பார்த்தவர்கள் இந்தப் படத்திற்கு என்ன சான்றிதழ் தருவதென்றே தெரியவில்லை எனக் கூறி ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி விட்டார்கள். அங்கிருந்த அதிகாரிகளும் படத்தைப் பார்த்து விட்டு, சுமார் ஒரு மணி நேரம் விவாதித்தார்கள். 

    பின்னர் சில வன்முறைக் காட்சிகளை நீக்கச் சொல்லிவிட்டு, யு/ஏ சான்றிதழ் வழங்கினார்கள். ஆனால் படத்தை வெகுவாக அவர்கள் பாராட்டினார்கள். அவசியமான பதிவு எனக் கூறினார்கள். நிர்பயா பலாத்கார சம்பவத்தின் தாக்கத்தினாலேயே இப்படத்தை நான் உருவாக்கினேன். தற்போது நிகழ்ந்து வரும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு சவுக்கடியாக இப்படம் இருக்கும். 



    ஒரு குழந்தையை பாதுகாப்பது அவரது பெற்றோர்களின் பொறுப்பு. ஆனால் நம் தமிழகத்தில் பெற்றோர்கள், குழந்தைகளைப் பார்க்காமல் செல்போனை பார்த்தபடியே இருக்கிறார்கள். தமிழகமே தலை குனிந்தபடி வாட்ஸ் அப் பார்த்தபடி உள்ளது. இவற்றிற்கெல்லாம் தீர்வு சொல்லும் வகையில், பெற்றோர்கள் குழந்தைகளை எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் படமாக ஆருத்ரா இருக்கும்“ என தெரிவித்தார்.
    ×