search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sa chandrasekhar"

    • நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
    • இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


    விஜய்

    தற்போது, வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருவதாகவும் அதற்காக விஜய் ஐதராபாத் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரின் பிறந்த நாள் மற்றும் ஆயுஷோமம் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொள்ளாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


    எஸ்.ஏ. சந்திர சேகர்

    இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கம் வலுவிழந்து விட்டது என்பதை விஜய் சிந்திக்க வேண்டும் என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார்.

    மேலும், விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைக்கப்படுவார்கள் என்றும் நிர்வாகிகளை மீண்டும் இணைப்பது குறித்து பலமுறை விஜய்யிடம் பேசியுள்ளேன் என்றும் எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் குறித்து விமர்சனம் செய்த எஸ்.ஏ. சந்திரசேகருக்கு பா.ஜ.க.வினர் காவி வேட்டி அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர்:

    சென்னையில் கடந்த 21-ந் தேதி நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பேசும் போது தேர்தல் முடிவுக்கு முன் வெளியான கருத்து கணிப்பை வைத்து தமிழகத்தை பொறுத்தவரை தப்பித்து கொள்வோம்.

    ஆனால் வெளியில் பொறுத்தவரை கண்டிப்பாக தவறு செய்திருப்போம். மக்கள் அனைவரும் காவி வேட்டி கட்டி கொண்டு அலைய போவதாக பாரதீய ஜனதாவை மறைமுகமாக விமர்சித்து இருந்தார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றி வெற்றி பெற்றதை தொடர்ந்து திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா இளைஞரணி சார்பில் எஸ்.ஏ. சந்திரசேகரக்கு காவி வேட்டி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த காவி வேட்டி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலிருந்து பதிவு தபால் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா இளைஞரணி நிர்வாகிகள் கூறியதாவது-

    ஆன்மீகத்தை அடிப்படையாக கொண்டது பாரதநாடு. இனி வரும் நாட்களில் நாட்டில் காவியே பிரதானமாக இருக்கும்.


    டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர் காவியை குறிப்பிட்டு பேசியதாலும், பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பெரும் வெற்றி பெற்றதாலும் அவருக்கு காவி வேட்டியை அனுப்பி உள்ளோம்.

    மாதந்தோறும் தொடர்ந்து அவருக்கு காவி வேட்டி எங்கள் சார்பில் அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழர்களின் உணர்வு என்னவென்றால், மோடி மீண்டும் வரக்கூடாது என்பதுதான். அதில் எல்லோரும் தெளிவாக இருக்கிறோம் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார். #sachandrasekhar #pmmodi #vijay #parliamentelection

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடக்கன்குளத்தில் நடிகர் விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் 40 வருடமாக சினிமா தொழிலில் இருந்து வருகிறேன். அப்போது நாணயம் இருந்தது. தற்போது தமிழ் ராக்கர்ஸ் படத்தை போட்டி போட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் தான் சினிமா அழிந்து வருகிறது. சமீப காலமாக சினிமாவில் வியாபாரிகள் வந்து விட்டனர்.

    மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து முயற்சித்தால் தான் தமிழ் ராக்கர்சை ஒழித்து, சினிமாவை காப்பாற்ற முடியும். யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்று கணிக்க முடியவில்லை. யார் வந்தால் நன்றாக இருக்கும் என்றுகூட புரிய முடியவில்லை. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது. அதற்குள் மக்கள் தெளிவாகி விடுவார்கள்.


    பாராளுமன்ற தேர்தலில் தமிழர்களின் உணர்வு என்னவென்றால், மோடி மீண்டும் வரக்கூடாது என்பதுதான். அதில் எல்லோரும் தெளிவாக இருக்கிறோம். தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் எல்லோரும் மிகவும் பயந்து கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் யாருக்கு ஆதரவு என்று கேட்கிறீர்கள். அதை விஜய்யிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்.

    கூலித்தொழிலாளி, டாக்டர், வக்கீல் என யார் வேண்டுமானும் அரசியலுக்கு வரலாம். இவர்தான் அரசியலுக்கு வர வேண்டும் என பட்டயம் தீட்டி கொடுக்கவில்லை. சமூகத்துக்கு நல்லது செய்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். சினிமா நடிகரால் முடியும் என்றால் வரட்டும்.

    வாக்காளர் எந்திரத்தில் ஒப்புகைச்சீட்டு என்பது நல்ல வி‌ஷயம். இதற்கு முன்பு எங்கு ஓட்டு போட்டோம். யாருக்கு ஓட்டு போட்டோம் என்று வாக்காளர்களுக்கு தெரியாமல் இருந்தது. தற்போது வாக்காளர் எந்திரத்தில் ஒப்புகைச்சீட்டு என்பது வரவேற்கத்தக்கது. வாக்காளர்களுக்கும் திருப்திகரமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #sachandrasekhar #pmmodi #vijay #parliamentelection

    சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை மையப்படுத்தி பா.விஜய் இயக்கி, நடித்திருக்கும் `ஆருத்ரா' படத்தின் விமர்சனம். #AaruthraReview #PaVijay
    ஞானசம்பந்தம், பா.விஜய் இணைந்து சிற்பம் உள்ளிட்ட கலைப்பொருட்களை செய்து விற்கும் கடை வைத்திருக்கிறார்கள். அத்துடன் சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். 

    இதற்கிடையே சமூகத்தில் சில பெரிய மனிதர்கள் கடத்தப்பட்டு வேறு மாநிலங்களில் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். மர்மமான முறையில் நடக்கும் இந்த கொலைகள் குறித்து விசாரிக்க தனியார் துப்பறியும் நிபுணரான பாக்யராஜ், காவல்துறையால் நியமிக்கப்படுகிறார். அவரது உதவியாளராக மொட்டை ராஜேந்திரன் வருகிறார். விசாரணையில் அவரது வீட்டு மாடியில் குடியிருக்கும் பா.விஜய் தான் குற்றவாளி என்பது தெரிய வருகிறது. அவரை கைது செய்து விசாரிக்கையில் அதற்கான காரணங்கள் தெரிய வருகிறது. 



    அதன்படி பா.விஜய் ஏன் குற்றவாளி ஆனார்? சமூகத்தின் முக்கிய மனிதர்களை கொலை செய்வது ஏன்? அவர் குடும்பம் என்ன ஆனது? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை. 

    சிறுமிகளை சீரழிக்கும் சில மனித மிருகங்களை அழிக்க கதாநாயகன் எடுக்கும் அவதாரமே ஆருத்ரா. பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கும் அவர்களை பாலியல் கொடுமைக்கு ஆளாக்குபவர்களுக்கும் தர வேண்டிய தண்டனை என்ன? என்பதை கூறியிருக்கிறார் இயக்குனர் பா.விஜய். பா.விஜய் படத்தை இயக்கியதோடு கதாநாயகனாகவும் தயாரிப்பாளராகவும் ஒட்டுமொத்த படத்தையும் தோளில் தாங்கி இருக்கிறார். நடிப்பில் எந்த குறையும் வைக்கவில்லை. குடும்பத்தின் மீதும், தங்கை மீதும் பாசம் காட்டும்போதும், சிவாவாக வில்லன்களிடம் ஆவேசம் காட்டும்போதும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 



    ரொமான்ஸ் காட்சி இல்லாமல் திரைக்கதை அமைத்தது சாமர்த்தியத்தை காட்டுகிறது. இருப்பினும் திரைக்கதை, படத்தொகுப்பில்  கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். கதையை ஆங்காங்கே பாதியில் விட்டுச் செல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. தக்‌ஷிதா, சஞ்சனா சிங், சோனி சரிஷ்டா என்று 3 கதாநாயகிகள் இருந்தாலும், யாருக்குமே பெரிய வேலை இல்லை. சிறுமிகளுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிரான கதையில் பெண்கள் முகம் சுளிக்கும் சில வசனங்களை தவிர்த்து இருக்கலாம். முதல் பாதி கிரைம் திரில்லராகவும் இரண்டாம் பாதி குடும்ப படமாகவும் இருக்கிறது. அழுத்தமான வசனங்கள் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கின்றன.



    தனியார் துப்பறியும் நிபுணராக பாக்கியராஜ் தனது பாணியில் கதையை கலகலப்பாக நகர்த்துவதோடு, முக்கிய திருப்பத்துக்கும் உதவுகிறார். எஸ்.ஏ.சந்திரசேகர், மீரா கிருஷ்ணன், ஞானசம்பந்தன் என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.

    வித்யாசாகர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பி.எல்.சஞ்சய் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. 

    மொத்தத்தில் `ஆருத்ரா' தேவையான தரிசனமே. #AaruthraReview #PaVijay

    ×