என் மலர்
நீங்கள் தேடியது "Netflix OTT"
- அதிக சந்தை மதிப்பை கொண்ட தளமாக இந்தியா இருக்கிறது.
- நெட்பிளிக்ஸ் ஐதராபாத்தில் தனது புது அலுவலகத்தை திறந்துள்ளது.
தென்னிந்திய திரைப்படங்களை அதிக தொகை கொடுத்து வாங்கும் முடிவை நெட்பிளிக்ஸ் கைவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்குபதில் நல்ல கதையம்சம் கொண்ட இணைய தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை சொந்தமாக தயாரிக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மற்ற OTT நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது நெட்பிளிக்ஸ் நல்லவிலை கொடுத்து படத்தை வாங்குவதால் இந்த முடிவு பல தமிழ் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நெட்பிளிக்ஸின் இந்த மாற்றம் தயாரிப்பாளர்கள் அதிக பட்ஜெட் படங்களை தவிர்க்கவும், உச்ச நட்சத்திரங்களின் சம்பளத்தை குறைக்கவும் வழிவகுக்கும்.
அதிக பார்வையாளர்களை கொண்ட தளமாக இந்தியா இருந்தாலும் சந்தைப்போட்டி, ஒரு பயனருக்கான சராசரி வருவாய் குறைவாக வருவது (ARPU) போன்றவை இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தென்னிந்திய திரைப்படங்களை இரட்டிப்பு மூதலீட்டை போட்டு வாங்கும் முன்னணி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாக நெட்பிளிக்ஸ் உள்ளது.
இருப்பினும் படங்களைவிட இணையத்தொடர்கள் நல்ல வரவேற்பை பெறுவதால், செலவை குறைத்து தங்கள் சந்தை மதிப்பை கூட்ட இந்த முடிவை கையில் எடுத்துள்ளது. தற்போது ஐதராபாத்திலும் தனது அலுவலகத்தை விரிவுப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- புஷ்பா-2 படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
- டிசம்பர் 6 ஆம் தேதி திரைக்கு வரும் புஷ்பா திரைப்படம் திரைக்கு வருகிறது.
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து புஷ்பா-2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது.
நடிகர் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், புஷ்பா 2 திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய வியாபாரம் 1000 கோடி ரூபாயை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
அனைத்து மொழிகளிலும் இத்திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமை 660 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.220 கோடிக்கும் வட இந்தியாவில் ரூ.200 கோடிக்கும் தமிழ்நாட்டில் ரூ.50 கோடிக்கும் கர்நாடகாவில் ரூ.30 கோடிக்கும் கேரளாவில் ரூ.20 கோடிக்கும் வெளிநாடுகளில் 140 கோடிக்கும் புஷ்பா படத்தின் திரையரங்க உரிமை விற்பனையாகியுள்ளது.
புஷ்பா 2 படத்தின் சாட்லைட் உரிமை ரூ.85 கோடிக்கும் இசை உரிமை ரூ.65 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை ரூ.275 கோடி கொடுத்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
டிசம்பர் 6 ஆம் தேதி திரைக்கு வரும் புஷ்பா 2 திரைப்படம் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஓடிடி தளங்களில் நெட்பிலிக்ஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது.
- புதுப்படங்கள் கூட தற்போது நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கொரோனா லாக்டவுன் சமயத்தில் அசுர வளர்ச்சி கண்ட ஒரே பிசினஸ் என்றால் அது ஓடிடி தளங்கள் மட்டும் தான். வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மக்களுக்கு பொழுதைக்கழிக்க பெரிதும் உதவியாக இருந்தன இந்த ஓடிடி தளங்கள். தற்போது புதுப்படங்கள் கூட நேரடியாக இந்த ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.
ஓடிடி தளங்களில் நெட்பிலிக்ஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்களும் இதில் இருப்பதனால் மக்கள் விரும்பி பார்க்கும் தளமாகவும் நெட்பிலிக்ஸ் இருந்து வருகிறது. இருப்பினும் அந்நிறுவனம் கடந்த மூன்று மாதங்களில் சுமார் 9 லட்சத்து 70 ஆயிரம் சந்தாதாரர்களை இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பயனர்கள் தங்களின் பாஸ்வோர்டை பிறருக்கு பகிர்ந்து உதவ முடியாத படி பாதுகாப்பு அம்சத்தை அந்நிறுவனம் அதிகரித்ததே இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அடுத்த காலாண்டில் இதனை சரிசெய்ய மைரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு முயற்சிகளை நெட்பிலிக்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அது அந்நிறுவனத்துக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.






