என் மலர்
நீங்கள் தேடியது "புஷ்பா 2"
- அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா 2.
- இப்படத்தில் ரப்பா ரப்பா நறுகுதம் என்ற வசனம் மிகவும் பிரபலமானது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா 2. இப்படத்தில் ரப்பா ரப்பா நறுகுதம் என்ற வசனம் மிகவும் பிரபலமானது.
இந்த வசனத்தினால் தற்பொழுது ஆந்திரா அரசவையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவின் முதலமைச்சரின் பொதுக்குழு சந்திப்பில் தொண்டர் ஒருவர் புஷ்பா 2 வசனத்தில் இடம்ப்பெற்ற ரப்பா ரப்பா நறுகுதம் என்ற பெயர் பதாகையை ஏந்தியபடி இருந்தார். இந்த வசனத்திற்கு ஒரு ஒரு தலையாக வெட்டப்படும் என்ற அர்த்தமாகும்.
இந்த பெயர் பலகை ஏதிய தொண்டரை காவல் அதிகாரிகள் கைது செய்தனர். இதற்கு சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ரெட்டி பதிலளித்துள்ளார். அதில் அவர் ' புஷ்பா வசனத்தை சொல்ல கூட இந்த நாட்டில் சுதந்திரம் இல்லையா, புஷ்பா வசனம் கூறினால் தப்பு, புஷ்பா போல் செய்கை காட்டினால் தப்பு, இது என்ன நியாயம், எங்கு சுதந்திரம் இருக்கிறது? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு நாயுடு "அவர்கள் பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள்," என்றும்
நாயுடுவின் மகனும் தெலுங்கானா அமைச்சருமான நாரா லோகேஷும் திரு. ரெட்டியை கடுமையாக சாடி, அவரது "மனப்பான்மை ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது" என்றார்.
"நீங்கள் அவர்களை ஆடுகளைப் போல படுகொலை செய்வீர்களா? உங்கள் ரசிகரின் மொழியைப் பாதுகாப்பதன் அர்த்தம் என்ன? உங்கள் அணுகுமுறை ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது," என்று அவர் X இல் பதிவிட்டு, திரு. ரெட்டியைக் குறியிட்டார்.
- சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் கடந்தாண்டு வெளியானது
- அதிகம் வசூலித்த இந்திய திரைப்படங்கள் பட்டியலில் புஷ்பா 2 இடம் பெற்றுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி பெரும் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இதுவரை அதிகம் வசூலித்த இந்திய திரைப்படங்கள் பட்டியலில் புஷ்பா 2 இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் தெலுங்கானா கௌரவ விருதான கட்டார் விருதை அல்லு அர்க்ஜுன் வென்றுள்ளார். அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான விருதை வென்றது குறிப்பிடத்தக்கது. இதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கானா அரசுக்கும், படத்தின் இயக்குநர் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் நன்றி தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
- அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.
- இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

புஷ்பா
இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில் இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதம் இரண்டாவது வாரம் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 'புஷ்பா' முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புஷ்பா-தி ரூல்'.
- இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

புஷ்பா
இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

புஷ்பா
இந்நிலையில், இப்படத்தின் புதிய செய்தி ஒன்று இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. அதன்படி, 'புஷ்பா-தி ரூல்' படத்தின் கிளிம்ஸ் வீடியோ வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
- இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புஷ்பா-தி ரூல்'.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சமந்தா ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

புஷ்பா
இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

புஷ்பா
இந்நிலையில் புஷ்பா-தி ரூல் படத்தில் மேலும் ஒரு நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகை சாய் பல்லவி இணைந்துள்ளதாகவும் இதற்காக அவர் 10 நாட்கள் தனது கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் புஷ்பா-தி ரூல் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
- இயக்குனர் சுகுமார் இயக்கி வரும் 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சமந்தா ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இப்படத்தில் நடிகை சாய் பல்லவி இணைந்துள்ளதாகவும் இதற்காக அவர் 10 நாட்கள் தனது கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

புஷ்பா
இந்நிலையில் 'புஷ்பா-தி ரூல்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் ஹைதராபாத் மற்றும் வைசாக் படப்பிடிப்பு முடிந்ததாகவும், அடுத்த கட்டப் படப்பிடிப்பு பெங்களூருவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- இயக்குனர் சுகுமார் இயக்கி வரும் 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இப்படத்தின் டீசர் வெளியாகவுள்ள தேதி குறித்த புதிய தகவல் இணையத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

புஷ்பா
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் ஹைதராபாத் மற்றும் வைசாக் படப்பிடிப்பு முடிந்ததாகவும், அடுத்த கட்டப் படப்பிடிப்பு பெங்களூருவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

புஷ்பா
இந்நிலையில் 'புஷ்பா-தி ரூல்' படத்தின் டீசரை அல்லு அர்ஜுனின் பிறந்தாளான வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி வெளியிடவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த டீசர் படத்தின் கதைக்களத்தை உணத்தும் விதத்தில் மூன்று நிமிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
- இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘புஷ்பா -2’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

புஷ்பா
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் புஷ்பாவாக மாறிய புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

டேவிட் வார்னர் பதிவு
அதாவது, டேவிட் வர்னர், 'புஷ்பா -2' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரில் உள்ள அல்லு அர்ஜுன் புகைப்படத்திற்கு பதிலாக தனது புகைப்படத்தை பதிவிட்டு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவை தற்போது அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
டேவிட் வார்னர் தனது இணையப் பக்கத்தில் அடிக்கடி இவ்வாறு பல புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புஷ்பா -2'.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

புஷ்பா
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தில் நடிகர் பகத் பாசில் காட்சிகள் நிறைவு பெற்றுள்ளதாக இயக்குனர் சுகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து , இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் நடந்து வந்தது. அப்போது படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, அதில் நடித்த துணை நடிகர்கள், பேருந்து ஒன்றில் ஹைதராபாத் திரும்பினர். விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் நார்க்கட்பள்ளி என்ற இடத்துக்கு வந்தபோது, சாலையோரத்தில் நின்ற அரசு பேருந்து மீது நடிகர்கள் வந்த பேருந்து மோதியதாக கூறப்படுகிறது. இதில் பேருந்தில் இருந்த 2 நடிகர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பிரபல நடிகை அனசுயா பரத்வாஜ் தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார்.
- இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் அனசுயா பரத்வாஜ், சின்னத்திரையில் இருந்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். பல படங்களில் பிசியாக நடித்து வரும் அனசுயா, கடந்த 2021ம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் சில தினங்களுக்கு முன்பு தமிழில் வெளியான மைக்கல் படத்தில் நடித்து கவனம் பெற்றார். தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார்.

அனசுயா பரத்வாஜ்
அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் அனசுயா, தற்போது கோடை விடுமுறைக்காக கணவர் மற்றும் குழந்தைகளுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பிகினி உடையில் வலம் வரும் அனசுயா தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

கணவருடன் அனசுயா பரத்வாஜ்
இந்நிலையில் வெள்ளை நிற பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அனசுயா, தனது கணவர் மீதான காதலை வெளிப்படுத்தும் விதமாக லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
- அல்லு அர்ஜுன் நடிப்பில் ’புஷ்பா 2’ திரைப்படம் உருவாகி வருகிறது.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தில் நடிகர் பகத் பாசில் காட்சிகள் நிறைவு பெற்றுள்ளதாக இயக்குனர் சுகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'புஷ்பா 2' படத்தின் சண்டைக்காட்சிகளுக்கான படப்பிடிப்பின் ஒரு நாள் செலவு ரூ.80 லட்சம் வரை ஆகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- ’புஷ்பா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
- சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

புஷ்பா 2 போஸ்டர்
இந்நிலையில், 'புஷ்பா -2' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Mark the Date ❤️?❤️?
— Mythri Movie Makers (@MythriOfficial) September 11, 2023
15th AUG 2024 - #Pushpa2TheRule Grand Release Worldwide ??
PUSHPA RAJ IS COMING BACK TO CONQUER THE BOX OFFICE ??
Icon Star @alluarjun @iamRashmika @aryasukku #FahadhFaasil @ThisIsDSP @SukumarWritings @TSeries pic.twitter.com/LWbMbk3K5c






