search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jagan Reddy"

    ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று கவர்னரை சந்தித்து ஆந்திராவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
    ஐதராபாத்:

    ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த மாதம் 11-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.  

    இந்நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட புதிய எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் ஆந்திரா தலைநகர் அமராவதியில் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஆந்திரா மாநில சட்டசபையின் ஆளும் கட்சி தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    இதையடுத்து, ஜெகன்மோகன் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் ஐதராபாத் சென்று, கவர்னர் நரசிம்மனை சந்தித்து ஆந்திராவில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    கவர்னருடனான சந்திப்புக்கு பிறகு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை ஜெகன் மோகன் ரெட்டி சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
    ஆந்திராவின் நிடாடவூலு பகுதியில் பாதயாத்திரை சென்று கொண்டிருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தேனீக்கள் கொட்டியதில் லேசான காயமடைந்தார்.
    அமராவதி:

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூர பாதயாத்திரையை தொடங்கினார். இந்நிலையில், பாதயாத்திரையின் ஒரு பகுதியாக நிடாடவூலு தொகுதிக்கு உள்பட்டுள்ள கனுரு கிராமத்தில் நடந்த கூட்டத்தில் பொதுமக்களிடையே பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது, அங்குள்ள மரத்தில் இருந்த தேனீக்கள் கூட்டத்தை யாரோ கலைத்து விட, தேனிக்கள் கலைந்து அங்குள்ளவர்களை கொட்ட ஆரம்பித்தது. இதில், ஜெகன் மோகனும் தப்பவில்லை. அவரை தொண்டர்கள் துணிகளை கொண்டு மறைக்க பின்னர் அங்கிருந்து அவரை அப்புறப்படுத்திச் சென்றனர்.

    தேனீக்கள் கொட்டியதில் ஜெகன் மோகன் ரெட்டி லேசான காயமும், பலர் பலத்த காயமும் அடைந்தனர். இதனை அடுத்து, அவர் மருத்துமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துவிட்டு தனது வீட்டுக்கு திரும்பினார்.
    ×